Tuesday, August 31, 2010

ennaththariyil

     எண்ணத்  தறியில்  எழில்  நினைவுப் பின்னிப்
                பிணைந்திழையோட  இழையோட
     கன்னக்குழியில்   வண்ணக்குமிழ்  கொப்பளிக்க 
                பைந்தமிழ்   மொழிபேசி   மொழிபேசி
     மின்னலிடையில்   மனந்திளைத்த  எனைப் 
                 புன்னகை    ஒளிவீசி   ஒளிவீசி
      இன்னலிடை  யின்றவள்   மீட்டாள்
                 காதல்   பண்பாடி  பண்பாடி  |
   
     கொஞ்சும்  விழிகள்  வேல்போல்  தாக்க
      எஞ்சிய  உறுதியும்  காற்றில்  பறக்க
     தஞ்சமேனப்புகு   என  மனமும்  நினைக்க
     மிஞ்சியதென்னில்  அவள்  திருஉருவம்  |
               அன்ன நடையழகி ஆடிஎன்முன்  நிற்க
                பின்னிய  கருங்குழல்  அவள்   முன்னாட
                என்ன  நினைததனோ  அறியேன்   அறிவேன்
                பின்னர்  நிகழ்ந்தது   அதனைக்  கூறுவன்  கேளீர்  |
      இருமன   மொன்றாய்  இணைய _அதனால்
      இறுகிப் பதித்த   இதழ்கள்  கரும்பினுமினிக்க
      இன்சுவை  உணர   ஊறி  கிடந்தேன்
      இறுதியில்  உணர்ந்தேன்  கனவெனக்  கண்டது
                  கண்ட  கனவு  நனவாக  இன்று
                   காரிகையே   அழைக்கின்றேன் ; அன்புக்
                  கயிற்றால்   பிணைக்கின்றேன்;  கண்ணே
                  கட்டும்  பிணைப்பும்  பிரியாது  உறுதி  |         



     



               
     
  
 



1 comment: