Tuesday, December 30, 2014

நினைவடுக்குகளிலிருந்த பயணம்-4


                          நினைவடுக்குகளிலிருந்த  பயணம் -4
                          --------------------------------------------------------
(சில நாட்கள் கணினியிலிருந்து விடுபட்டிருப்பேன் என்று சென்றபதிவில் எழுதி இருந்தேன்.After a hectic two weeks  I am back. டிராஃப்டாக எழுதி இருந்த நினைவடுக்குகளில் இருந்த பயணம் -4 ஐ இப்போது பதிவிடுகிறேன் )

எங்களுக்கும் அண்ணா அண்ணிக்கும் கொடுக்கப் பட்ட இடங்கள் இரண்டு தளங்களில் இருந்தது என்று சென்ற பதிவில் முடித்திருந்தேன்
 இனி
அப்போது எங்களிடம் கைபேசிகள் இருக்கவில்லை. தினமும் எங்கள் நலன் குறித்து std பூத்துக்குப் போய் எங்கள் மக்களுக்கு ஃபோன் செய்து அறிவிப்போம். அன்று நாங்கள் அறையில் செட்டில் ஆனவுடன் விவரங்களுக்குஃபோன் செய்ய அருகில் இருந்த ஒர் std பூத்துக்குப் போனோம்  முதலில் நான் தொலை பேசிவிட்டு பிறகு அண்ணாவும் அண்ணியும் பூத்துக்குள் போய்ப் பேசினார்கள். பிறகு அறைக்குத் திரும்பினோம். அறையில் நுழையும்போது அண்ணா தன்னுடைய பர்ஸையும் சிறு பையையும் பூத்திலேயே விட்டு வந்ததாய்க் கூறினார். பயணக் களைப்புடன் அவருக்குக் கொஞ்சம் ஜுரமும் இருந்தது. பூத்தை விட்டு வெளியே வந்து கால் மணிநேரத்துக்கும் மேல் ஆகியிருக்கலாம். இப்போது போல் atm வசதி ஏதுமில்லை. பர்ஸ் நிறையப் பணம் வைத்திருந்தார். எங்கே போய் தொலை பேசினோம் என்பதே நிச்சயமாகத் தெரியவில்லை. புது இடம். பதறிப் போய்த் தேடினோம். நல்ல காலம் பூத்தில் அவரது பர்ஸும் பையும் பத்திரமாக இருந்தது. இந்தக் களேபரத்தில் அண்ணி அறைச் சாவியை எங்கள் அறையில் விட்டிருந்ததாகச் சாதிக்க ஆரம்பித்தார். மறதி நோயின் வெளிப்பாடு சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பித்திருந்தது. கடைசியில் அண்ணாவின் பையில் சாவி இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது

அருகில் இருந்த எந்த ஹோட்டலிலும் காப்பியோ நம்மூர் உணவோ கிடைக்கவில்லை. அண்ணி அடிக்கடி காப்பி குடிக்கும் பழக்கமுள்ளவர்.எப்படியோஅன்றைய பொழுது கழிந்தது. 


 மறு நாள் பொழுதை ஹரித்வார் நகரைச் சுற்றிப் பார்பதிலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் குறித்துத் தகவல் சேகரிப்பதிலும் கழித்தோம் அங்கே  சண்டிதேவி கோவில் மற்றும் மானசா தேவிக்கோவில் ஆகியவை குன்றுகளின் மேல் இருந்தன. அங்கே போய்வர கேபிள் கார் வசதி இருந்தது. முதன் முதலில் கேபிள் காரில் பயணம் த்ரில்லிங்காக இருந்தது. சண்டிதேவி கோவிலில் குரங்குகளின் தொல்லை அதிகம். அவை நம்மைத் தொந்தரவு செய்யாமப் இருக்க போகும் பாதையில்சுற்றிலும் கம்பி வலைகள் வேயப் பட்டிருந்தது. மாலையில் ஹரித்வார் கங்கைக் கரைக்குச் சென்றோம். அடுத்து வர இருந்த அர்த் கும்பாபிஷேகத்துக்கு தயாராக சில கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அருகில் இருக்கும் கோவில்களுக்குச் சென்றோம். கங்கைக்கு எடுக்கும் அஹா ஆரத்தியைக் கண்டோம். அருகில் கடைகளுக்குச் சென்று ஸ்படிக மாலைகளும் ருத்திராட்ச மாலைகளும் வாங்கினோம். அருகே இருந்த ஒரு ருத்திராட்ச மரத்தையும் கண்டோம். என்னதான் சுற்றினாலும் வயிற்றுக்குத் திருப்தியாக உணவு கிடைக்கவில்லை. ஹரித்வார் சாலைகளில்குதிரை வண்டி மற்றும் சைக்கிள் ரிக்‌ஷா பிரயாணம் வித்தியாசமாக இருந்தது. அங்கு இருந்ததை விட chaotic  ட்ராஃபிக் எங்காவது இருக்குமா தெரியவில்லை.மறு நாள் ரிஷிகேஷ் சென்றுவர பஸ்ஸுக்கு முன் பதிவு செய்து கொண்டோம். சில புகைப் படங்களை இணைக்கிறேன்.
ஹரித்வாரில் அர்த் கும்பமேளாவுக்காக சில கட்டுமானப் பணிகள்
  
ஹர்த்வார் சண்டி கோவிலில் இருந்து ஒரு காட்சி.
 
சண்டி தேவி கோவிலில் ஒரு பக்த குடும்பம்
 
கேபிள் காரில்

ஹரி-கி பௌடி ஒரு தோற்றம்.
 
ஹர்த்வார் ஹரி-கி-பௌடி
 
எல்லாவற்றையும் நினைவிலிருந்தே எழுதுவதால் அவை கோர்வையாக வருவதில்லை. அப்போது இதுபற்றி எல்லாம் எழுதுவேன் என்று நினைத்திருந்தால் ஒவ்வொரு நிகழ்வையும் இடத்தையும் பதிவு செய்து வைத்திருப்பேன்.

ஹர்த்வாரிலிருந்து பஸ்ஸில் புறப்பட்டோம். இமைய மலையின் அடிவாரத்துக்குப் போகிறோம் என்னும் நினைப்பே த்ரில் ஆக இருந்தது. இரு பெரிய பாலங்கள்  கட்டி இருக்கிறார்கள் அவற்றை லக்க்ஷ்மண் ஜூலா என்றும் ராம் ஜூலா என்றும் கூறுகிறார்கள் நிறையவே யாத்ரிகர்கள் வருகிறார்கள் எங்கு சென்றாலும் இந்த உணவு விஷயம் படுத்துகிறது. இருந்தாலும் அங்கு நான் ஓரளவுக்கு நன்கு சாப்பிட்டேன். கோவில்கள் எல்லாமே வடக்கில் அமைப்பில் வேறு பட்டுஇருக்கிறது. ஒரு வேளை அவர்களுக்குஆகம விதிகள் என்று ஏதுமில்லையோ.? எப்போது பேரூந்து புறப்பட்டு விடுமோ என்னும் கவலை இருந்து கொண்டே இருந்தது. அங்கு ஆற்றில் கை வைத்தால் சில்லென்றிருக்கிறது. பொதுவாக ஆறுகள் என்றால் எனக்கு அங்கு குளிக்கும் ஆசை வரும். எவ்வளவுதான் நினைவு படுத்த முயன்றாலும் அங்கு நான் குளித்தேனா என்பது நினைவுக்கு வருவதில்லை. அங்கு பெரும்பாலும் ஷாப்பிங் என்பது மாலைகளும் மணிகளும் மட்டுமே. நாங்களும் சிலவற்றை வாங்கிக் கொண்டொம் சில நினைவுகளைப் புகைப் படங்கள் மூலம் புதுப்பிக்க வேண்டி உள்ளது. ரிஷிகேஷிலிருந்து திரும்பி வரும் போது ஹர்த்வாரில் சில கோவில்களுக்குக் கூட்டிச் சென்றார்கள். அங்கு அளவில் பெரிய கோவில் ஒன்றைக்கண்டோம். வைஷ்ணவி கொவிலுக்குள் செல்வது போல் ஒரு குகைப் பாதை மாதிரி அமைத்திருக்கிறார்கள். அங்கு தவழ்ந்து சென்றே கோவிலின் தேவியை தரிசிக்க வேண்டி இருந்தது.மாதா லால் தேவி என்று புகைப் படத்தின் பின்னே எழுதி வைத்திருக்கிறேன் ராமாயணக் கதை மாந்தர்களின் சிலைகள் கலர் கலராக இருக்கின்றன

ஹர்த்வாரிலிருந்து ரிஷிகேஷ்  ஓடும் பஸ்ஸிலிருந்து
, .                                  .                                    
  
ராம் ஜூலா
.
லக்ஷ்மண் ஜூலாவில்
.
லக்ஷ்மண் ஜூலாவில் என் மனைவி.

. 
மாதா லால் தேவி கோவில்

கோவிலின் ஒரு தோற்றம்.


அடுத்தநாள் ஹர்த்வாரிலிருந்து புது டெல்லி. அங்கு என் அண்ணாவின் இரண்டாவது மகள்  இருந்தாள். அவரது மாப்பிள்ளை எங்களை டெல்லியில் மெட்ரோ ரயிலில் கூட்டிச் சென்றார் அங்கே இந்திரா காந்தி சுடப்பட்ட இடத்துக்கும் கூட்டிச் சென்றார்.  ஒரு நாள் ஓய்வுக்குப் பின் பெங்களூர் போகும் ரயிலில் திரும்பினோம். இந்த வட இந்திய யாத்திரையின் போது ஏறத்தாழ எல்லாவித ட்ரான்ஸ்போர்ட் மோடிலும் பயணித்தோம். அக்டோபர்
2-ம் தேதி துவங்கி 22-ம் தேதிவரை பயணித்தது அடிக்கடி நினைவில் வரும் இப்போது அதைப்பதிவாக்கி விட்டேன்                                  .                                    
சுடப் படும் முன் இந்திரா காந்தி நடந்து வந்த பாதை பின்னணியில்
  .                                                                             
இந்திரா காந்தி சுடப் பட்ட இடம் அருகே     (பயண நினைவுகள் முற்றும்)

30 comments:

  1. வணக்கம் ஐயா வீட்டு பணிகள் முடிந்து மீண்டும் வலைப்பூ வந்தது கண்டு மகிழ்ச்சி பயணக்கட்டுரையில் நிறைய விடயங்கள் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete

  2. ஐயா தமிழ் மணம் இணைத்து விட்டேன் ஆனால்? வாக்கு அளிக்க முடியவில்லையே....

    ReplyDelete
  3. பெரும்பாலும் வட இந்திய பயணம் எனில் நம்மவர்கள் உணவு விஷயத்தில் ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். இங்கேயும் வந்து இட்லி தோசை, சாதம் என்று தேடினால், சில இடங்களில் கிடைக்கும் - ஆனால் நன்றாக இருக்காது.

    சில வாரங்கள் கழித்து நானும் இன்று தான் வலைப்பக்கம் வருகிறேன். சில காரணங்களால் வலையுலகில் அதிகம் உலவ இயலவில்லை!

    நினைவுகளிலிருந்து பயணம் பற்றிய குறிப்புகள் நன்று.

    ReplyDelete
  4. பயணங்கள் சுகமானவை. எனவே அதைப்பற்றி பற்றிய பகிர்வும் சுவாரஸ்யமாயிருப்பதில் ஆச்சரயமில்லை.

    ReplyDelete
  5. வீட்டு வேலைகள் முடிந்தது பற்றி மகிழ்ச்சி. குடியிருந்து கொண்டே வீடு ரிப்பேர் செய்வது மிகவும் தொல்லை பிடித்த சமாச்சாரம்.

    வெங்கட் நாகராஜ் குறிப்பிட்டது போல் வட இந்தியாவில் சப்பாத்தி சாப்பிட முடியாவிட்டால் உணவு விஷயம் கஷ்டம்தான். நான் சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவேன்.அதுவும் எண்ணை போடாதது அல்லது தந்தூரி சப்பாத்தி நன்றாகவே இருக்கும்.

    கில்லர்ஜி தமிழ்மணம் திரட்டியில் உள்ள நுணுக்கத்தைக் கவனிக்கவில்லை. அதாவது வெப் அட்ரசில் blogger.in என்று இருந்தால் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை வேலை செய்யாது. blogger.com என்று இருக்கவேண்டும். இந்த மாற்றத்தை கொண்டுவர என் பதிவுகளில் விளக்கம் கூறி இருக்கிறேன்.

    ReplyDelete
  6. #பொதுவாக ஆறுகள் என்றால் எனக்கு அங்கு குளிக்கும் ஆசை வரும். #எனக்கும் ஆசைதான் ,நீங்கள் சொன்ன இதே இடத்தில் ஆறுமாதம் முன்பு குளிக்க நினைத்தேன் ,புனித கங்கை என்கிறார்கள் ,மனிதக் கழிவுகள் மிதந்து வருவதைப் பார்த்ததும் ....ஊவாக்:)

    ReplyDelete
  7. நினைவடுக்குகளில் இருந்து அற்புதமான பயணம்ஐயா
    நன்றி

    ReplyDelete

  8. பழனி கந்தசாமி ஐயா அவர்களின் விளக்கத்திற்க்கு நன்றி.

    ReplyDelete

  9. @ கில்லர்ஜி
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்தமிழ் மணத்தில் இணைத்தமுனைப்புக்கும் நன்றி. நான் சில முறை என் பதிவுகளில் என் பதிவுகளை யாரும் தமிழ் மணத்தில் இணைக்க வேண்டாமென்றும் நேரம் பார்த்து நானே இணைத்துக் கொள்கிறேன் என்றும்சொல்லி இருக்கிறேன் இருந்தும் சில அன்பர்கள் இணைத்து விடுகிறார்கள். வேண்டாமே.தமிழ்மண ஓட்டுப்பட்டை பற்றி நான் கவலை கொள்வதில்லை.

    ReplyDelete

  10. @ வெங்கட் நாகராஜ்
    இந்த உண்வுப் பிரச்சினை என் அண்ணிக்கு மட்டுமே இருந்தது.மற்ற நாங்கள் சமாளித்துக் கொண்டோம். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  11. @ ஸ்ரீ ராம்
    வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  12. @ டாக்டர் கந்தசாமி.
    ஏறத்தாழ 15 நாட்கள் போதுமடா சாமி என்றிருந்தது. ஒரு வழியாய் முடிந்தது. இந்த வீட்டை 1985-ல் நான் கட்ட செலவு செய்தது ரூ. ஒன்றரை லட்சம். இப்போது தரையில் டைல்ஸ் மாற்றி பெயிண்ட் அடிக்கவும் சில சில்லரை வேளைகளுக்காகவும் அதற்கும் மேல் செலவாகி விட்டது.
    தமிழ்மண ஓட்டுப்பட்டை பற்றி நான் எப்போதும் கவலைப் பட்டதில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  13. @ பகவான் ஜி
    புனித கங்கையில் குளித்தால் மனக் கசமலங்கள் போகும் என்கிறார்கள். அதை மனித மலக் கழிவுகளும் போகுமிடம் என்று நினைக்கிறார்கள் போலும்.கங்கையில் மனித சடலங்கள் நாங்கள் படகில் போகும்போது பார்த்தோம்ஹரித்வார் ரிஷிகேசத்தில்கங்கை அவ்வளவாக மாசுபடவில்லை என்றே தோன்றுகிறது.வருகைக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  14. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  15. நல்லது ஐயா இனி செய்யமாட்டேன் தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  16. ஒரு மாதம் இந்த இடங்களில் சுற்ற வேண்டும் என்ற ஆசை அப்படியே... பத்திரமாக இருக்கிறது.

    வைஷ்ணவி கோவிலுக்குள் தவழ்ந்தாவது வந்து தரிசித்தே ஆக வேண்டும் என்ற தீவிரமா!!

    ReplyDelete

  17. தங்களின் நினைவடுக்களிலிருந்த பயணத்தைப் படிக்கும்போது, நான் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் 1976 ஆம் ஆண்டு சென்றது நினைவுக்கு வருகிறது. அப்போதெல்லாம் லக்ஷ்மண் ஜூலா மட்டுமே இருந்தது. ராம் ஜூலா இல்லை. அந்த ஊஞ்சல் பாலத்தில் செல்வதே ஒரு தனி அனுபவம் தான். பயண அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!!

    ReplyDelete
  18. அதற்குள் முடித்து விட்டீர்களே... அருமையான பயணம் ஐயா...

    ReplyDelete
  19. அய்யா வணக்கம்,
    எனக்கென்னமோ பயணக்கட்டுரைகளை நினைவிலிருந்து இது போல எழுதுவதுதான் அதன் ,இயல்பில் இருக்கும் என்று தோன்றுகிறது அய்யா!
    குறிப்புகள் எடுப்பது என்று நானும் முயன்றிருக்கிறேன்.
    ஆனால் அது படு செயற்கையாய்ப் போய்விட்டது.
    தங்களோடு பயணித்த உணர்வு!
    நன்றி அய்யா!

    ReplyDelete
  20. சிறப்பான நினைவலைகள்! பகிர்வுக்கு நன்றி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  21. @ A Durai
    ஆசையை செயல் படுத்த வேண்டியதுதானே. சொல்லுங்கள் முடிந்தால்நானும் கூட வருகிறேன் வைஷ்ணவி கோவிலில் தவழ்ந்தே தரிசிப்பதும் ஒரு அனுபவமாக இருக்கும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  22. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

    வலைப் பூ நண்பரே / சகோதரியே!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspoty.fr

    ReplyDelete
  23. @ வே.நடனசபாபதி
    வருகைக்கு நன்றி ஐயா. ராம்ஜூலாஅண்மைக் காலத்ததா. யாரும் இதுவரை சொல்லவில்லையே

    ReplyDelete
  24. @ திண்டுக்கல் தனபாலன்
    பயணம் முடிந்தது.அது சார்ந்த நினிவுகளும் பதிவாகிவிட்டன. அவ்வளவுதான் டீடீ.வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  25. @ ஊமைக் கனவுகள்
    வருகைக்கு நன்றி ஐயா.நினைவிலிருந்து எழுதும்போது சில நேரங்களில் தவறுகள் நேருகின்றன. எனக்கும் நேர்ந்தது. பதிவுலக வாசகர்கள் இருவர் சரி செய்தனர். ( என் முந்தைய பதிவில்)

    ReplyDelete
  26. @ தளிர் சுரேஷ்
    வருகை தந்து கூடப் பயணித்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  27. @ யாதவன் நம்பி
    உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்ஐயா.

    ReplyDelete
  28. சுகமான பயணங்கள், இனிமையான பயணங்கள். அனுபவங்கள் பல கற்றுத் தந்து பாடங்களு புகட்டும் பயணங்கள்! நல்ல குறிப்புகள்!

    ReplyDelete
  29. உங்கள் பயண அனுபவங்கள் எல்லாம் மிக அருமை. நாங்களும் நீங்கள் சென்று வந்த இடங்களுக்கு எல்லாம் சென்று வந்தோம்.

    வீட்டுவேலைகள் எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டதா?

    ReplyDelete
  30. //கோவில்கள் எல்லாமே வடக்கில் அமைப்பில் வேறு பட்டுஇருக்கிறது. ஒரு வேளை அவர்களுக்குஆகம விதிகள் என்று ஏதுமில்லையோ.? //

    தென்னாட்டில், குறிப்பாய்த் தமிழகத்தில் மட்டுமே ஆகம முறைப்படியான கோயில்கள் காணப்படும். கர்நாடகம், ஆந்திராவிலும் சில இடங்களில் ஆகமக் கோயில்களைக் காணலாம். கேரளப் பாணி தனிப்பட்டது

    ReplyDelete