Friday, October 8, 2021

கேசாதி பாதம் கண்ணன்

 காதலியின் கேசாதி பாதம் வர்ணித்து எழுதிய நான் கண்ணனை கேசதி பாதம் வர்ணித்து  எழுதியது நாராயணியத்துக்கு நன்றி 

 கண்டேன் நான் கண்ணனைகார்மேக வண்ணனைக்

குருவாயூர் கோவில் நடையில்

 

கருநிறம் சுருட்டைமுடி

ரத்தினம் பதித்த தலையணி

மயில் பீலி செருக

வெண்ணிறப் பிறை நெற்றி ,

மேல்நோக்கி இடப் பெற்ற

குறியுடன் முடியும்

நெற்றியும் கண்ணாரக்

( கண்டேன் நான் கண்ணனை )

 

விபுவே.!அசைகின்ற புருவங்கள்

அடியில் அருள்தரும் உன் கண்கள்

ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்

( கண்டேன் நான் கண்ணனை )

 

எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்

சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,

ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்

நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்

( கண்டேன் நான் கண்ணனை )

 

இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க

செந்தளிர் விரல்கள் மீட்ட

வேணுகானம் காற்றில் தவழ

நாத கீதந்தனில் எனை மறந்து

( கண்டேன் நான் கண்ணனை )

 

மென் கழுத்தில் மணிமாலைகள்

மலர்மாலைகள் தொங்க

நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்

( கண்டேன் நான் கண்ணனை )

 

சந்தண மணம் பரப்பும் உன்

திருமேனியில் உலகமே  ஒன்றியிருந்தும்

மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்

கதிர் பரப்பும் மணி அரைஞாணின்

சலங்கைகள் சல சலக்கக் கண்டு

நீலவண்ணக் கண்ணா எனை மறந்து

( கண்டேன் நான் கண்ணனை )

 

 

அழகு தொடை இரண்டும் பருத்தவை

அழகுடன் உறுதியும் கலந்தவை

மனம் மயக்கும் கலங்கடிக்கும்

எனவே பட்டாடை மறைத்தனவோ

காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்

( கண்டேன் நான் கண்ணனை )

 

உன் கழலடி தொழலே இன்பம்

அறியாமையில் மூழ்கியவர்களை

மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு

ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்

அடைக்கல மடைந்த  என் அறியாமை

துன்பங்கள் களைய வேண்டியே

( கண்டேன் நான் கண்ணனை )

 

குருவாயூரின் தலைவனே அருட்கடலே

கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே

சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து

பற்றவே வந்த எனைக் காத்தருளக்

( கண்டேன் நான் கண்ணனை.)

 

 

          

                       

 

 
       

 

14 comments:

  1. கண்ணனைக் கண்டேன். சிறப்பு ஐயா.

    ReplyDelete
  2. கண்ணனை நானும் கண்டேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நான் எ ழுதியது போலவா

      Delete
  3. கண்ணனின் காட்சி... ஒவ்வொன்றிலும்...

    ReplyDelete
  4. நன்றாக இருக்கிறது சார். முன்பே நீங்கள் பகிர்ந்திருக்கீங்க இல்லையா..இரண்டையும் ஒப்பிட்டும் கூட..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இப்போது மெ ருகு குறை கிறதா

      Delete
  5. அருமையாக இருக்கிறது சார்.

    துளசிதரன்

    ReplyDelete