Friday, January 13, 2023

அ,ம்மாஎனும் லெஜெண்ட்

 

AMMA THE LIVING LEGEND


                               அம்மா என்றழைக்காத உயிரும் உண்டோ
                               ----------------------------------------------------------








பிறந்ததிலிருந்தே எனக்கு கடவுளின் திருநாமங்களில் ஒரு அதீத ஈர்ப்பு இருந்தது. அதுவே என்னை எப்பொழுதும் ஆண்டவனின் திருநாமத்தை அனவரதமும் , ஒவ்வொரு மூச்சின் இடைவெளியிலும், எங்கிருந்தாலும் , என்ன செய்து கொண்டிருந்தாலும் உச்சரிக்கச் செய்யும்.இந்த இடைவிடாத, அன்பும் பக்தியுடனுமான  கடவுளின் நினைவு ஆத்ம அறிவுக்கும் புரிதலுக்கும் ( DIVINE REALIZATION) வழி வகுக்கும்
                                  ( மாதா அம்ருதானந்தமயி)




உலகம் முழுவதும் அம்மா என்று அறியப் படுபவரைப் பற்றி பார்ப்பதற்கு முன்--- கேரளத்தில்  கொயிலோன் மாவட்டத்தில் ஆலப்பாடு பஞ்சாயத்தில் பரயக் கடவு என்னும் ஒரு கிராமம்., மேற்குக் கடலோரத்திய மீனவ கிராமம். தங்களைப் பராசர முனிவரின் வழித்தோன்றல்கள் என்று கூறிக்கொள்கின்றனர்.கடவுளர்களின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடம் என்று பெருமைப் படுகின்றனர். அதில் ஒன்று......

சிவன் பார்வதி முன்னிலையில் சுப்பிரமணியர்  ஏதோ தவறு செய்து விட
சிவனார் கோபமுற்று  சுப்பிரமணியரை மீனாகப் பிறக்கச் சாபம் கொடுத்து விட்டார். மகனுக்குப் பரிந்து பேச வந்த பார்வதியும் செம்படவப் பெண்ணாகப் பிறக்கக் கடவது என்ற சாபம் பெற்றார். சற்றைக்கெல்லாம் கோபம் தெளிந்த ஈசன் தகுந்த நேரத்தில் தானே அவர்களுக்குச் சாப விமோசனம் தருவதாகக் கூறி ஆசிர்வதித்தார். சாபப்படி சுப்பிரமணியர், ஆலப்பாடு கடற் கரையில் ஒரு பெரிய மீனாக உருவம் கொண்டார். மீனவர்களின் வலைகளை அறுத்து அவர்கள் மீன் பிடிக்கக் கடலில் போவதையே அஞ்சும் அளவுக்குப் பயமுறுத்தினார். மீனவர்கள் பயந்து கடலுக்குப் போகாததால் வாழ்வாதாரத்தையே இழக்கத் துவங்கினர். அரசனிடம் முறையிட்டார். அரசனும் ஏதும் செய்வதறியாமல் , மீனைப் பிடிப்பவருக்கு நிறைய வெகுமதியுடன் அரச குமாரியையும் கை பிடித்துத் தருவதாக அறிவித்தார். நிலைமை இப்படி இருக்க அந்த ஊருக்கு ஒரு வயதான புதியவர் ஒருவர் வந்தார். அவர் பல செடியின் கொடிகளைக் கட்டி வலைபோல் செய்து கடலில் வீசி மீன் வரும்போது அவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தைக் கூறி மீனை இழுக்கச் சொன்னார். அதன்படியே நடந்து வலையில் சிக்கிய மீன் கரையில் வந்ததும் காணாமல் போயிற்று. முதியவர் அரசனிடம் வாக்களித்தபடி அரச குமாரியைத் தரக் கேட்டார். அரசனுக்கு இக்கட்டான நிலை. அரச குமாரியே முன் வந்து அரசன் சொல் காப்பாற்றப் பட வேண்டும் என்று கூறி முதியவரின் பின் சென்றாள். அவர்களைப் பின் தொடர்ந்த மக்கள் எந்த ஊருக்குப் போகிறீர்கள் என்று முதியவரிடம் கேட்க அவர் எங்களுக்கு என்று ஊர் எதுவும் கிடையாது “ செல்லுன்ன ஊரே” ஊர் என்றாராம். அவர் சென்ற ஊர்தான் மருவி ” செங்கண்ணூர்” ஆனதாகக் கதை. அந்த ஊரை அடைந்ததும் முதியவரும் அரச குமாரியும் முறையே கிழக்கையும்  மேற்கையும் பார்த்து நின்றனராம் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு கோயில் எழுப்பப்பட்டதாம் அபிஷேகத்துக்கு நீர் கொண்டு வரும்போது ஒரு வினோத நிகழ்ச்சி ஏற்படுமாம், அபிஷேக நீரில் மீன் இருக்குமாம் பிரசன்னம் வைத்துப் பார்த்ததில் முதியவருக்கு முறையாக அரசகுமாரியைத் திருமணம் செய்யாததன் விளைவு இது என்று தெரிந்ததாம். சோதிடப் பரிகாரப் படி ஆலப்பாடிலிருந்து ஒரு செம்படவப் பெண் திருமணத்துக்குத் தேவையான பரிசுப் பொருள்களுடன் செங்கண்ணூர் வந்து திருமண ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் சொல்லப் பட்டது. இன்றும் அவ்வழக்கப்படி ஆலப்பாட்டு மக்கள் செங்கண்ணூர் வந்து திருமணம்
 நடத்துவது ஒரு விழாவாகவே நடக்கிறதாம். நடுவில் சிலருக்கு “ இவ்வளவு தூரத்தில் இருந்து செங்கண்ணூர் போய் நாம் ஏன் விழா நட்க்கச் செய்ய வேண்டும் “ என்ற எண்ணம் தோன்றி விழா நடக்க முடியாதபடி செய்தனராம்.
ஈசன் சிலையை தாங்கி வரவிருந்த அலங்கரிக்கப்பட்ட யானை ஓரடி கூட நடக்காமல் நின்று விட்டதாம். ஆலப்பாடில் அம்மை நோயின் அறிகுறிகள் தெரிய வந்ததாம் . இது ஒரு தெய்வக் குற்றம் என்று தெளிந்த மக்கள் பழையபடி சடங்குகளைத் தொடர எல்லாம் நல்ல படியாயிற்றாம்.

ஆலப்பாடு பஞ்சாயத்தில் பரயக் கடவு ஒரு மீனவ கிராமம் இடமன்னெல் என்பது ஒரு குடும்பத்தவர்..மீன்பிடிப்பது அவர்கள் தொழில் பக்தியுடையவர்கள்.. விரத அனுஷ்டானங்கள் பல செய்பவர்.மீன் பிடித்து வந்ததும் முதலில் சில மீன்களைத் தானமாகக் கொடுத்த பின்னரே விற்பனை செய்வர்.கிடைக்கும் பணத்திலும் கைநிறையக் காசுகள் சிலவற்றை சிறார்களுக்குக் கொடுப்பார்கள். இத்தகைய குடும்பத்தில் உதித்தவர் சுகுணானந்தன்.  பண்டரத்துருத்தூ என்னும் அடுத்த கிராமத்துப் பெண் தமயந்தி என்பவரைத் திருமணம் முடித்தார். இந்தத் தம்பதிகளுக்குப் பிறந்த பதிமூன்று குழந்தைகளில் நான்கு பிறந்ததும் இறந்தும் ஒன்று சில நாட்கள் கழித்து இறந்தும் போயின. மீதமிருந்த எண்மரில்  சுதாமணி என்ற பெண்ணே உலகம் முழுவதும் மாதா அம்ருதானந்தமயி என்று அறியப் படுபவர்.

சுதாமணி கர்ப்பத்தில் இருக்கும்போதே சுகுணானந்தன் கனவிலும் தமயந்தியின் கனவிலும் சிவனும் கிருஷ்ணரும் வர இவர்கள் ஏனென்று தெரியாமல் தவித்தனர். மீன் பிடிக்கப் போகவர என்று கடலோரத்தில் குடிசையில் இருந்தனர். சுதாமணியைப் பிரசவிக்க நேரம் நெருங்கி விட்டது தெரிந்ததும் தமயந்தி இடமன்னெல் வீட்டுக்குப் போயிருக்கிறாள பாயை விரித்து தயாராகும் போதே திடீரெனப் பிரசவம் நிகழ்ந்து விட்டது. நிகழ்ந்த
நாள் 27-09-1953. பிறந்த குழந்தை பெண். பிறக்கும் போதும் பிறந்த பின்னும் குழந்தையின் நிறம் கரு நீலம். பிறந்த குழந்தை பத்மாசனத்தில் சின்முத்திரை காட்டி பிறந்ததாம் பிறக்கும்போதுஇருந்த நிறமும் , உடலின் இருப்பும் விவ்ரிக்கத் தெரியாத ஏதோ வியாதியோ என்று அவர்களை அச்சமடையச் செய்தது. மருத்துவர்களிடம் காண்பிக்க அவர்கள் குழந்தையை ஆறு மாதங்கள் குளிப்பாட்ட வேண்டாம் என்று கூறினராம்.....! ஆறு மாதங்களாயும் குழந்தையின் நிறம் மாறவில்லையாம். அது கிருஷ்ணனோ காளியோ என்று நினைக்க வைத்ததாம் பிறகு மெதுவாக நிறம் கருப்பாயிற்றாம். இருந்தாலும் குழந்தை கிருஷ்ண பக்தியில் மூழ்கும் போது கரு நீலமாக மாறுமாம். இன்றும் அம்மா ஆழ்ந்த பக்தியில் கிருஷ்ணனைக் கூப்பிடும்போது நிறம் மாறுகிறது(?)
என்கிறார்கள். இந்த நிறமே குழந்தை மீது ஒரு வித வெறுப்புணர்ச்சியாக மாறி அவரை இளவயதில் பல இன்னல்களுக்கு ஆளாக்கியது எனலாம். குழந்தைகள் பிறந்தபின் கவிழுதல் நீந்துதல் முட்டுக் குத்துதல் உட்காருதல் என்று படிப்படியாக செய்வதே முறை. ஆனால் சுதாமணி ஆறு மாதங்கள் ஆனஒரு பொழுதில் நேராகவே நிறகத் துவங்கினதும் இல்லாமல் சில நாட்களில் நடக்கவும் ஓடவும் துவங்கினாராம். ஆறு மாத முதற்கொண்டே பேச ஆரம்பித்தாராம். இரண்டு வயதுக்குள் கிருஷ்ணன் மேல் பாடத் துவங்கினாராம். விளையும் பயிர் முளையிலேயே தெரிந்ததோ. ?

                                   
அம்மா குழந்தையுடன்
     
அம்மா மூதாட்டியுடன்




அம்மாவின் தொண்டு பற்றியும் தேவைப் படுபவருக்கு உதவுவது பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம். இந்த மாதிரியான ஒரு பக்திக்குக் காரணம் என்ன,?ஒரு நிகழ்வு பகிருகிறேன். என் உறவினர் ஒருவரின் மகனுக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவ மனையில் சேர்த்திருந்தார். காரணம் தெரியாத தலைவலி. மகன் மயக்கத்தில் இருந்தான் தந்தையையும்  ( அவரும் ஒரு டாக்டர்) அனுமதிக்காமல் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய நம்பிக்கை இழந்த நிலையில் திருவனந்தபுரம் மருத்துவ மனையில் இருந்து கொச்சியில் இருந்த அமிர்தானந்தமயியின் மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த மருத்துவ் வளாகத்தை நெருங்கியதும் மகனின் உடலில் முன்னேற்றம் கண்டது. மருத்துவ மனையில் சேர்த்து சில தினங்களில் பூரண குணம் கிடைத்தது. அந்த மருத்துவம் படித்த M.D. டாக்டர் அது அம்மாவின் அருள என்கிறார்.

பெங்களூரில் அம்மா  வந்திருந்த போது பார்த்திருக்கிறேன். இருந்த இடம் விட்டு எழாமல் மணிக்கணக்கில் காண வரும்  பக்தர்களை ஆரத்தழுவி தரிசனம் கொடுப்பார். ஒரு கடலோரக் கிராமத்தில் பிறந்து இளமையில் பல இன்னல்களை அனுபவித்து வளர்ந்தவர் இன்று உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை கவர்கிறார் என்றால் SHE MUST BE SOME ONE SPECIAL.!     
  

6 comments:

  1. அறிந்தவை ஆயினும் மீண்டும் படித்துக் கொண்டேன்.

    ReplyDelete
  2. மாதா அம்ருதானந்தமயி சிறப்புடையவர், பல ஆன்மீக குருக்கள் போல.

    நல்லவேளை, முதலில் செங்கணூர் பெயர்க்காரணம் எழுதிய நீங்க, ஞாபகமா, இது கட்டுக்கதை, மூடப்பழக்கம்ன்னுலாம் எழுதலை..

    ReplyDelete
  3. மாதா அம்ருதானந்தமயி பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். அவரைப்பற்றி மேலும் பல தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  4. தமிழர் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. மாதா அம்ருதானந்தமயி பற்றி அறிந்து கொண்டோம் .



    ReplyDelete