உபாதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் --4
-----------------------------------------------------------------------------------
என் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வருபவர்களுக்கு
ஒன்று தெரிந்திருக்கலாம் என் பல பதிவுகள் அனுபவத்தின் அடிப்படையில் எழுந்தவையே . உடல் என்று ஒன்று இருக்கும்போது
உபாதை என்ற ஒன்றும் கூடவே இருக்கும் என்வாழ்வில்
பல உடல் உபாதைகளை சந்தித்து விட்டேன் அவற்றினை
ஒரு தொடராகவும் எழுதி வந்தேன்
முந்தைய பதிவுகளைப் படிக்க சொடுக்கவும்
அனுபவ
உபாதைகளை விளக்குவதன் காரணமே பலருக்கும் ஒரு
விழிப்புண்ர்வு ஊட்டவும் மனம் தைரியத்துடன்
இருக்கவும்தான் 2010 ம் ஆண்டு எனக்கு ஒரு மைல்ட்
ஹார்ட் அட்டாக் வந்து இதயத்தில் ஒரு குழாய் நோய் வாய்ப்பட்டு இருந்ததால் எனக்கு ஆஞ்சியோப்லாஸ்டி செய்தார்கள் என்று எழுதி இருக்கிறேன் நான் நலமுடன் தொடர பல மாத்திரைகளை
எழுதிக் கொடுத்தார்கள்
அதில்
ஒன்று asa என்று சொல்லப்படும் ஒரு மாத்திரையும்
அடக்கம் ஆனால் கடந்தஒருமாதமாக அந்த மாத்திரை எங்கும் கிடைக்க வில்லை நான் அதில்லாமலேயே
இருந்தாலும் பாதகமில்லை என்று கூறிவந்தேன் ஆனால் மருத்துவர் சொன்ன ,மாத்திரையை சாப்பிடாமல்
இருக்கக் கூடாது என்பதில் என்மனைவியும் மகன்களும் குறியாய் இருந்தனர் எனக்கு சிகிச்சை
செய்த கார்டியாலஜிஸ்டிடம் அப்பாயின்ட் மென்ட் கிடைப்பதுகஷ்டமாக இருந்ததால் அதே மருத்துவ மனையில் இருந்த வேறு கார்டியாலஜிஸ்டிடம் விஷயத்தை கூறினேன் அவர் கொடுத்த மாற்று மருந்து டோசேஜ் அதிகமாய் இருக்கவே அதை தெரிவித்துஅதன் பக்க விளைவுகள் பற்றியும் அவரிடம் கூறினேன் அவர் கொடுத்த மருந்தை உட்கொள்ளவும் தொந்தரவு ஏற்பட்டால் அவரை மீண்டும் பார்க்கவும்
கூறினார் அந்தபதில் எனக்கு உடன் பாடில்லாமல் இருந்தது என் மக்களுக்கு நான் மருந்து உட்கொள்ளவேண்டும் என்னும் கட்டாயவிருப்பம் இருந்தது எப்படியோ எனக்கு
முதலில் சிகிச்சை கொடுத்த அதே மருத்துவரிடம் எப்படியோ அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினார்கள் நானும் சென்று பார்த்து விளக்கினேன் அவருக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும் சுமார் பத்து வித மாத்திரைகளை குறைத்து மூன்றே மாத்திரைகள்
போதும் என்றார் அவரிடம் சொல்லலாமா வேண்டாமா
என்று நினைத்து பின் கூறி விட்டேன் என் தொப்புழ் பக்கம் சிறிய வலி என்றும் சற்று வித்தியாசமாக
தெரிகிறதென்றும் கூறிக் காண்பித்தேன் அதைப் பார்த்ததும் அவர் என்னை அங்கிருந்த ஒரு சர்ஜனை பார்க்கக் கூறி அவருடன் தொடர்பு கொண்டு பார்க்கவும் ஏற்பாடு செய்தார் அப்போதே அவரிடம்சொன்னேன் சர்ஜன் என்றால் உடனே அறுவைதானே என்று
அந்த
அறுவைச் சிகிச்சை நிபுணர் நான் எதிர்பார்த்தபடி
உடனேயே ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்றார்
IRREDUCIBLE obstructive UMBLICAL HERNIA என்றும் உடனே
ஆப்பரேஷன் செய்யாவிட்டால் அது சிறு குடலை
strangulate செய்யும் வாய்ப்பு இருக்கிறது
என்றும் கூறினார்
இத்தனை விளக்கமாக எழுதக் கூடாதோ என்ன செய்ய என் வழக்கம் கூடவே சிலபுகைப்படங்கள்
பிறகென்ன ஒரு சுப முஹூர்த்தம் எல்லாம்பார்த்து அட்மிட் ஆகவில்லை என் ஒரே கவலை
செலவு பற்றியது என்மகனிடம் ஆப்பரேஷன் மைனரா
மேஜரா என்று கேட்கச் சொன்னேன் என் வயதில் எல்லா ஆப்பரேஷனுமே மேஜர்தான் என்னும் விடை
கிடைத்தது பி எச் இ எல் மருத்துவ மனையில் பெர்மிஷன்வாங்கி அட்மிட் ஆனேன் செலவில் நான்
முதலில் 20 சதம் கட்ட வேண்டும் மீதியை பி எச்
இ எல் நிறுவனம் கட்டும் அதுவே ஒரு பெரிய ரிலீஃப்
அறுவை சிகிச்சைக்கு முன்பாக பல டெஸ்டுகள் எடுத்தார்கள் ஒரு வழியாய் என்னை ஆப்பரேஷன் தியேட்டருக்கு
கொண்டு சென்றார்கள் மனதில் இன்னும் எல்லோரையும் பார்ப்போமா என்று இருந்தது நிஜம். அப்படியே ஏதாவது ஆனாலும் கவலைப்பட்டு பிரயோசனம் இல்லை என்று தோன்றியதுசிகிச்சை முடிய சுமார் ஒன்றரை
மணிநேரம் ஆயிற்று பிறகு போஸ்ட் ஆப்பரேடிவ் வார்டில்
எனக்கு நினைவு வரும்வரை கிடத்தி இருக்கிறார்கள்
மெள்ள எனக்கு தெளிவு ஏற்பட்ட போது கண்களை சுழல விட்டு இருக்கும் இடம் இதுதான்
என்று உறுதிப் படுத்திக் கொண்டேன் முதலில் நினைவு வந்து தோன்றிய எண்ணமெ நான் பிழைத்து விட்டேன்
இறக்க வில்லை என்பதுதான் தெளிவு வந்ததும் என் மக்களையும் மனைவியையும் பார்க்க வேண்டும் என்றேன் அவர்களும் வந்தார்கள் சிறிது நேரத்தில் வார்டுக்கு கொண்டு வந்தார்கள் ஆப்பரேஷன் முடிந்த
நாள் எனக்கு பச்சைத் தண்ணீர்கூட கொடுக்க வில்லை நாக்கு வறண்டு தாகம் தாகமாய் இருந்தது
சிறிது பஞ்சில் நீர் தெளித்து வாயில் ஒப்பினார்கள் அன்று இரவு கொஞ்சம் இளநீர் பருகக் கொடுத்தார்கள்
பிறகு இர்ண்டு நாட்களுக்கு உப்பு சப்பில்லாத நீர்த்த உணவு என்று ஏதோ கொடுத்தார்கள்வயிற்றில்
பெல்டுடன் தான் இருக்க வேண்டுமாம் மூன்றாம் நாளே டிஸ்சார்ஜ்
செய்தார்கள் அறுவை செய்த இடத்தில் staple செய்திருந்தார்கள் 24ம் தேதி அதைக் கட் செய்து பிரித்தார்கள் அதன் மேல் ஏதோ ப்ளாஸ்டர் போல போட்டிருந்தார்கள் வாட்டர் ப்ரூஃபாம் அதன் விலை
ரூ 280/ - இன்னும் மூன்று மாதங்கள் நான்பெல்டுடந்தான்
இருக்க வேண்டுமாம் ஒரு வழியாய் அறுவைச் சிகிச்சை
முடிந்தது அந்தப்ளாஸ்டர் மேல் சிறிது ரத்தக் கசிவு இருந்தது உடனே டாக்டரிடம் கூட்டிப்
போனார்கள் அது ஒன்று பாதக மில்லை என்று டாக்டர்
கூறினார் ஒரு வழியாய் நலமாகவீட்டுக்கு வந்து
விட்டேன் கணினியில் என் வேலை தொடரும் எத்தனையோ
உபாதைகளிலிதுவும் ஒன்று கடந்து போயாகிவிட்டது என் மேல் அக்கறை கொண்டு விசாரித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி இத்தனை விளக்கமாக எழுதக் கூடாதோ என்ன செய்ய என் வழக்கம் கூடவே சிலபுகைப்படங்கள்
![]() |
| அறுவைக்குப் பின் வார்டில் |
![]() |
| அறுத்த இடம் stapled |
![]() |
| தையல் பிரித்தபின் |


