நினைவுகள் அசைபோட லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் அசைபோட லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 மார்ச், 2017

மறக்க மனம் விடுவதில்லையே


                       மறக்க மனம்  விடுவதில்லையே
                       ----------------------------------------------


நேற்று என்னவோ மனசே சரியாயிருக்கவில்லை.  காரணம்தெரியாத ஒரு சஞ்சலம் அப்போதுதான்  என் மனைவி சொன்னாள்  இது மார்ச் இரண்டாம் தேதியின்  இஃபெக்டாக இருக்கலாம் என்று. இருக்கலாம்தான்  அது ஆயிற்று  அறுபது ஆண்டுகள் அவர் இருந்திருந்தால் 108 வயது முடிந்திருக்கும்   நினைவுகள் நினைவுகள்  நினைவுகள் ஆண்டுகள் எத்தனை போனால் என்ன அப்பாவின்  நினைவுகளுக்குக் குறைவில்லை அவரை ஒரு ஹீரோவாக, நண்பனாக,  காரியவாதியாக ரசிகராக முன் எச்சரிக்கை மிகுந்தவராக என்று பல பரிமாணங்களில் பார்த்திருக்கிறேன்   என்  மேல் அலாதி அன்பு செலுத்தியவர் என்னை மேல் படிப்பு படிக்க முடியாமல் போன கையாலாகதவராக மிகவும்  ஃபீல் செய்திருக்கிறார் அப்போது நீலகிரியில் கல்லூரி ஏதும்  இருக்கவில்லை கல்லூரி போகவேண்டுமென்றால்  கோவைக்குத்தான் போக வேண்டும் ஹி குட் நாட் அஃப்ஃபோர்ட் தட்

. அவரை ஒரு அசடனாகச் சித்தரிப்பதில் என்  தாய் வீட்டுக்காரர்களுக்கு  ஒரு குஷி.திருமணம்  முடித்தபோது அப்பாவுக்குக் குடுமி இருந்ததாம் முதன்  முதலில் கால்களுக்கு ஷூ அணிந்த போது கால்கள் மாற்றிப் போட்டுக் கொண்டாராம்
ஆனால் அவர்களுடைய மூக்கை தகுந்த நேரத்தில் உடைத்தவர் அவர்.  என் தாயார் இறந்தபோது என் சித்தியையே மறுமணம் செய்ய வேண்டினார்கள் ஆனால் அவருக்கென்று ஒரு மனம்  இருக்கத்தானே செய்தது தன்  தங்கையை தன்  மச்சினனுக்கே திருமணம் செய்வித்து அது முடிந்ததும் தான் இஷ்டப்பட்ட வேறோர் பெண்ணை மணம் முடிந்து அவர்கள் எண்ணங்களைத் தகர்த்தவர்
அவர் ஒரு நாள் மிகவும்  வருத்தத்தில் இருந்தார் காரணம் என்  தம்பி யாரிடமும்  சொல்லிக் கொள்ளாமல் எங்கோ ஓடிவிட்டான்  வெல்லிங்டனிலும் கூனூரிலும் தேடினார்  ஒரு ஹோட்டல் விடாமல் எல்லா இடங்களுக்கும்  சென்று விசாரித்திருக்கிறார்  அப்போதெல்லாம் எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்ல வேண்டிய கட்டாயம்  ஒரு வேளை ஊட்டிக்குச் சென்றிருப்பானோ என்னும்  சந்தேகம் இருந்தது ஊட்டி நாங்கள் இருந்த வெல்லிங்டனில் இருந்து சுமார் இருபது கி மீ க்கும்  மேல் இருந்தது  அடுத்தநாள் அங்கும்  சென்று அலைந்து திரிந்து ஏமாற்றத்துடன் திரும்பினார் உணவு செல்லவில்லை உறக்கம்  வரவில்லை இரண்டு நாளில் மிகவும்  நலிந்து விட்டார் என்ன செய்வது என்று தெரியவில்லை இப்போது போல் தகவல் தொடர்புகள் எளிதல்ல. எங்கே போனானோ என்ன செய்கிறானோ  என்றே கவலையிலாழ்ந்தார் அவனிடம் யாராவது கடுமையாக நடந்து கொண்டார்களா  என்று அடிக்கடி விசாரித்துக் கேட்டுக் கொண்டார் இவ்வாறு மூன்று நான்கு நாட்கள் கழிந்தது ஐந்தாவது நாள் என்று நினைக்கிறேன்  அப்பாவுக்கு என் மாமா ஒருவரிடமிருந்து ஒரு கார்ட் வந்தது  அதில் என் தம்பி பாலக் காட்டில் மாமாவின் அத்தைமகள் வீட்டுக்கு வந்து போனதாக தகவல் இருந்தது முன்பெல்லாம் கடிதங்கள் எழுதினால் ஓரிரு நாட்களில் வந்து விடும் ( அது அந்தக் காலம் )  என் அப்பா பாலக்காட்டுக்குப் பயணமானார் அங்கு என்  அம்மாவின் (சித்தி) வீட்டில் அவனைக் கண்டு பிடித்தார் என்  அம்மாவின்  உறவு அவர் எங்களுடன்  அரக் கோணத்தில் இருந்தவர்  என் தம்பிக்குப் பிடித்தமானவர்
 பிறகென்ன அவனைக் கூட்டிக் கொண்டு வந்தார்
எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம் இவனிடம்  காசு ஏதும் இருக்கவில்லை பின்  எப்படி பாலக்காடு சென்றான்  அவன்  சொன்னதைக் கேட்டபோது நம்பமுடியவில்லை ஆச்சரியமாக இருந்தது  வீட்டில் போர் அடித்ததால் மேட்டுப்பாளையம்  வரை ( சுமார் முப்பது கிமீ/ )தண்டவாளங்களிலேயே நடந்து சென்றானாம்  பின்  அங்கிருந்து டிக்கட் வாங்காமல் பாலக் காடு வரைப் பயணம் நினைத்துப் ,பார்க்கும் போது இன்றும்  ஆச்சரியம் வருகிறது ப்ராடிகல் சன்   என்று படித்ததுண்டு. அப்பா அவனிடம் கோபித்துக் கொள்ளாமல் செல்லம்  கொஞ்சியது அதை விட ஆச்சரியம்
   








   

புதன், 17 ஜூன், 2015

ஓ....அந்தக் காலம்......! 3..


                                     ஓ....அந்தக்காலம்.......! ( 3)
                                      -----------------------------------
ஏரோ எஞ்சின் டிவிஷன் துவங்கப் பட்ட இடம் காடாக இருந்திருக்க வேண்டும் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. HAL MAIN FACTORY-ல் செக்யூரிடி பிரிவில் ஒருவர் இருந்தார். பெயரெல்லாம் மறந்து விட்டது எங்காவது பாம்புகள் தென்பட்டால் உடனே அவருக்குச் செய்தி போகும் அவர் வருவார். பாம்பினைப் பிடிப்பார். அதை எடுத்துக் கொண்டு மேலதிகாரிகளிடம் காட்டினால் அவருக்கு ஒரு தொகை (ரூ10/என்று நினைக்கிறேன்) கொடுக்கப் படும். ஒரு முறை இவர் தான் பிடித்திருந்த பாம்புடன் அப்போதைய ஜெனரல் மேனேஜர் அறைக்குள் நுழைந்து பாம்பைக் காட்டி இஎருக்கிறார். ஜெனரல் மேனேஜர் ஒரு விமானப் படை உயர் அதிகாரி. பாம்பைப் பார்த்தவுடன் தனது கன்னை எடுத்து சுட்டுவிடுவேன் என்று பயமுறுத்த அந்த செக்யூரிடி அதிகாரி வெலவெலத்துப் போய் விட்டார் என்று கேள்வி.
ஏரோஎஞ்சின் தயார் செய்ய ப்ரிஸ்டல் சிடெலி எனும் கம்பனியுடன் ஒப்பந்தம் ஆகி இருந்தது. ஒபந்தப்படி நிறைய ஆங்கிலேயர்கள் வந்திருந்தனர் அவர்களுக்கெல்லாம் இந்தியா என்றால் சாலையில் மாடு. பாம்பாட்டிகள் இருக்கும் ஊர், கழைக்கூத்தாடிகளுக்கும் மேஜிக் காரர்களுக்கும் குறைவில்லாத இடம் என்ற ஓர் எண்ணம் இருந்தது. அவற்றை எல்லாம் ஊர்ஜிதப் படுத்தும் விதமாக ஏரோஎஞ்சின் டிவிஷன் தொடங்கிய பொழுதில் நிறையவே பாம்புகள் தொழிற்சாலைக்குள் தலைக்காட்டும் தொலை பேசி அழைப்பு போகும் . செக்யூரிடி அதிகாரி வருவார். பிடித்த பாம்பைக் காண அந்த வெள்ளையர்களுக்கெல்லாம் ஒரு குஷி பிறக்கும் நம் செக்யூரிடி அதிகாரி லேசுப்பட்டவர் அல்ல. பாம்பைக் காட்டியே கணிசமான தொகை கறந்து விடுவார்.சில பாம்புகள் நீளம் ஒரு அடிக்கும் குறைவாக இருக்கும் . ஆனால் அவை தாவித்தாக்கும்  அந்த வகைப் பாம்பு கிடைத்துவிட்டால் செக்யூரிடி அதிகாரி அவற்றை தொப்பியால் சீண்டி ஜம்ப் செய்ய வைப்பார்.ஒவ்வொரு சீண்டலுக்கும் அவருக்கு தொப்பியில் நிறையவே பணம் சேரும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளத் தெரிந்த செக்யூரிடி அவர். இந்தியா பற்றி யார் என்ன நினைத்தால் என்ன . அவருக்குப் பணம் வரும்
 இதை எழுதி முடித்த்பின் எனக்கு ஒரு செய்தியும் புகைப்படமும் வந்தது. என் மனைவியின் அக்காள் மகள் வீட்டில் ஒரு குட்டிப்பாம்பு வந்திருக்கிறது அதை அவர்கள் ஒரு பாட்டிலில் போட்டு விட்டனர் படம் கீழே 
குட்டியானாலும் படம் எடுக்கும் பாம்பு  பாட்டிலில்

உற்பத்தி தொடங்க பல விதமான மெஷின்கள் இம்போர்ட் செய்யப்பட்டன. அவற்றில் வெர்டிகல் டர்ரெட் என்னும் ஒரு வகை. பெரிய மெஷின் அவை ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து  இறக்குமதி ஆனவை.BERTHIEZ MAKE உதிரி பாகங்களாக வந்தவற்றை ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்ய அந்தக் கம்பனியிலிருந்து ANDRE என்னும் பெயர் கொண்ட ஃப்ரென்ச்சுக்காரர் வந்திருந்தார். அவருக்குச்சுட்டுப்போட்டாலும் ஆங்கிலம் வராது.அது மட்டுமல்லாமல் ஆங்கிலேயர் என்றாலே கோபம் பொத்துக் கொண்டு வரும் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்குவது தெரியும் அவருடன் சேர்ந்து பணிச்செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பேச்செல்லாம் கிடையாது எல்லாமே செய்கைகள் தான் விளக்குவது சிரமம் என்று தோன்றினால் படம் போட்டுக் காண்பிப்பார். அவருடன் இருந்த காலத்தில் ஒரு சில ஃப்ரென்ச் வார்த்தைகள் கற்றேன். ஏன் ஆங்கிலேயரிடம் அவ்வளவு பகை என்று கேட்டதற்கு அவர் ஒரு EX NAVY MAN என்றும் இரண்டாம் உலகப்போரின் போது நேசப்படைகளில் ஒன்றான ஃப்ரான்ஸ் படையினரை முன்னுக்கு அனுப்பிவிட்டு அந்த ஆங்கிலேயர்கள் சதி செய்தனர் என்றும் கூறுவார் ஒரு முறை ஒரு ஸ்பானரோ ஏதோ இல்லாததால் வெள்ளையர்களிடம் கேட்கலாமா என்று கேட்டதற்கு அப்படிக்கேட்டால் தான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன் என்று கூறினார்( அந்தக்கால நினைவுகள் தொடரும்) 

செவ்வாய், 7 மே, 2013

IGNORANCE IS BLISS.


                                     அறியாமை எனும் வரம்.
                                       --------------------------------  


இன்று மே மாதம் ஏழாம் நாள். சில நாட்கள் மறக்க முடியாதவை.அந்த நாளின் நினைவுகள் மனதில் மோதி ஒரு introspection-க்கு வழி வகுக்கிறது.என் இரண்டாம் மகன் பிறந்த நாள். நாங்கள் அப்போது BHEL  குடியிருப்பில் இருந்தோம்.அன்று விடியற்காலை சுமார் நான்கு மணி இருக்கும். என் மனைவி எழுந்து குளித்து அறையில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள். நான் விழித்துக் கொண்டு என்ன ஆயிற்று என்று கேட்டேன். பிரசவ நேரம் நெருங்கி விட்டது போல் தெரிகிறது என்றாள். நானும் என் நண்பனும் ( அவன் அப்போது என்னுடன் தங்கிக் கொண்டிருந்தான்)தயாராகி BHEL மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றோம். அது எங்கள் வீட்டில்

இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். நான் ஒரு புறமும் அவன் மறுபுறமும் நடந்து வர அவளைக் காலையில் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றோம். அவளது நிலையைப் பரிசோதித்த டாக்டர் அவளை நேராக லேபர் வார்டில் அட்மிட் செய்தார். அவ்வளவு தூரம் நடந்து வந்தீர்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அட்மிட் செய்த ஒரு மணி நேரத்தில் என் இரண்டாம் மகனைப் பிரசவித்தாள்.


இப்பொழுதும் ஏதாவது பேச்சின் ஊடே “ என்னைப் பிரசவத்துக்கு நடத்திச் சென்றீர்களே . ஏதாவது ஏடாகூடமாய் நடந்திருந்தால் “ என்று சொல்லிக் காட்டுவாள். என்ன செய்வது. ? சில நேரங்களில் IGNORANCE IS BLISS என்று நினைத்துக் கொள்வேன். அவளை அன்று லேபர் வார்டில் பார்த்தபோது அவள் முகத்தில் தெரிந்த வலியின் வேதனையைக் கண்டு  தீர்மானம் செய்தேன்..இதற்கு மேல் குழந்தைகள் வேண்டாம். இவள் இந்த அவஸ்தைக்கு இனி உள்ளாகக் கூடாதுஎன்று. இரண்டாவது குழந்தை பெண்ணாக இருக்க விரும்பினாலும் ஆணாகப் பிறந்தாலும் மூன்றாவது குழந்தை என்னும் பேச்சுக்கே இடம் கொடுக்கவில்லை.

என்னவாயிருந்தாலும் அவளுக்கு என் அறியாமையை ( அலட்சியம் என்பாள் அவள் ) சுட்டிக்காட்ட அது ஒரு வாய்ப்பாக இருக்கிறது (இன்றும்)