சம்பிரதாய புத்தாண்டு வாழ்த்துகள்
நாளும்தான் இரவுக்குப் பின் பகல் விடிகிறது.
இன்று மட்டும் இது என்ன புதிதா.?
பல்லெல்லாம் தெரியக் காட்டி முகமெல்லாம்
புன்னகை கூட்டி கைகுலுக்கி வரும் ஆண்டு
பிரகாசிக்க வாழ்த்துக்கள் கூறுகிறோம்
சற்றே சிந்தித்துப் பார்க்கிறோமா.
சம்பிரதாய முகமன்கள் ஒரு புறம் இருக்கட்டும்
இந்தபுத்தாண்டு எந்த விதத்தில் வித்தியாசம்
ஒரே போல் நேற்றையது போல்தானே
அதே இரவும் பகலும் ஏதோ
நம்பிக்கை எல்லாம்
புதிது போல்
நம்பிக்கைகள்
வாழ்வின் கட்டாய ஊன்றுகோல்
ஆண்டொன்று போக அகவை ஒன்று கூடுகிறது.
அனுபவங்களும் கூடத்தானே வேண்டும்
அனுபவங்கள் தரும் படிப்பினைகள் சிந்திக்கிறோமா,
வினாடி நிமிடம் மணி நாள் வாரம் மாதம் வருடம்
எல்லாம் காலத்தின் குறியீடுகள் –இவற்றின்
ஒவ்வொரு நொடியும் புதிதாய்ப் பிறப்பதே-அதேபோல்
நாளும் நொடியும் நாமும் புதிதாய்ப் பிறக்கிறோம்
இந்நொடியில் நிகழ்வதே நிதரிசனம் . அடுத்து
நிகழப்
போவது யாரே அறிவார். –யாரும் யாரையும்
காணவோ முகமன் கூறவோ உறுதி சொல்ல முடியுமா
புத்தாண்டை எப்படி வரவேற்கிறோம்--முன் இரவு
கூடிக்களித்து சோமபானம் அருந்தி சீயர்ஸ் சொல்லி
வாழ்த்துதல் ஒரு சம்பிரதாயமாகே மாறுகிறது......
பிரதிக்ஞைகள் பல பலரும் எடுக்கிறார்கள்-(
இருமுடி
எடுக்கும் ஐயப்ப பகதர்கள் பலரும் விரதம்
இருத்தல்போல்
விரதகாலம் முடிந்ததும் தொடரும் பழைய பலவீனங்கள்
).
பிரதிக்ஞைகள் பெயரளவில்மட்டும் இருந்தால்
போதுமா.?.
கடந்து வந்தபாதை கற்பித்தது என்ன, பட்டியல்
வேண்டாமா.?.
இன்று நாம் காண்பவரை அடுத்த நாள்---நாளென்ன
அடுத்தத் நொடி
காண்பதே நிச்சயமில்லை....காணும்போதும்
பழகும்போதும்
அன்பு செய்வோம், ஆறுதல் அளிப்போம்,
தோள்கொடுப்போம்
ஆக என்றும் நல்லவராக வாழ பிரதிக்ஞை எடுப்போம்
இன்றுபோல் என்றும் மனித நேயம் பழக அன்பர்களே
அனைவருக்கும் சம்பிரதாய புத்தாண்டு
வாழ்த்துக்கள்