சனி, 1 பிப்ரவரி, 2014

பதிலறியாக் கேள்விகள் நடுவே.......


                      பதிலறியாக் கேள்விகள் நடுவே.....
                      ---------------------------------------------


சில நிகழ்வுகள் பார்த்தது படித்தது அனுபவித்தது மனசில் என்னவெல்லாமோ சலன்ங்களை ஏற்படுத்துகிறது. இம்மாதிரி சலனங்களின் அழுத்தம் நம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே என்னும் கையாலாகத்தனத்தால் இன்னும் கூடுகிறது.

பாலு, என் மச்சினன் மணம் செய்து கொள்ள விரும்புகிறான். உனக்கு ஏதாவது நல்ல இடம் தெரிந்தால் சொல்லு.

இந்த மச்சினனுக்கு வயது நாற்பதுக்கும் மேலிருக்கும். மிகவும் சாதாரணக் குடும்பப் பின்னணியில் இருந்து பெண் எடுத்திருந்த நண்பனின் வேண்டுகோள். அப்போது இவன் குடும்பம் முழுவதும் அமெரிக்கா போய் செட்டில் ஆகி இருந்தது. நண்பனின் மாமியாரும் இந்தமூத்தமச்சினனும்மட்டும்தான் இந்தியாவில்தொடர்ந்துஇருந்தார்கள்இவர்களையும்எப்படியாவதுஅமெரிக்காவுக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்பது நண்பனின் எண்ணம். ஆனால் இவர்களுக்கு அங்கே போய் செட்டில் ஆவதில் விருப்பம் இருக்கவில்லை பல.விதமான தூண்டுதல்களுக்குப் பிறகு அமெரிக்கா போய் வர சம்மதம் தெரிவித்தார்கள். ஒரு முறை அங்கு வந்தால் தொடர்ந்து அங்கு இருக்க சம்மதம் தெரிவிக்க வாய்ப்பு உண்டு என்று நினைத்து அவர்களை அமெரிக்காவுக்குக்கூட்டிச் சென்றார்கள்.ஆனால் இவர்களுக்கு அமெரிக்கா பிடிக்கவில்லை. நான்கைந்து மாதங்களில் திரும்பிவிட்டனர், இந்த சமயத்தில்தான் மேற்கண்ட நண்பனின் வேண்டுகோள். மச்சினன் ரயில்வேயில் வேலையிலிருந்தான். சகோதரிகள் திருமணம் சகோதரர் படிப்பு என்பதிலேயே கவனமாயிருந்த மச்சினன் மணம் செய்து கொள்ளவில்லை. மாமியாரும் அதிகம் படித்திராத கட்டுப் பெட்டிப் பெண்மணி. அமெரிக்கா போய் வந்த பிறகு மச்சினன் திருமணத்துக்கு ஒப்புதல் கொடுத்திருந்தான். நாற்பது வயது தாண்டியவனுக்கு வரன் கிடைப்பது எளிதாயிருக்கவில்லை. இரண்டு சகோதரிகள் இரண்டு சகோதரர்கள் வேலையாகி திருமணம் முடிந்து அயல் நாட்டில் குடிபுகுந்த பிறகு மச்சினனுக்கு திருமணம் பற்றியப் பேச்சு வந்தது. இவர்கள்குடியிருந்தவீடுபெரிதாக்கப்பட்டது;புதுப்பிக்கப்பட்டது.ஒருநாள்,வேலையில் இருந்த மச்சினன் திடீரென்று பக்கவாதம் தாக்கிக் கீழே விழுந்திருக்கிறான். ரெயில்வே மருத்துவமனையில் சேர்ப்பிக்கப் பட்டான். அவனது தாயாருக்குச்செய்தி தெரிவிக்கப்பட்டது. ஒருவாறு எப்படியோ மகள்களுக்கும் மகன்களுக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது.

உடனே ஓடிவரும் நிலையில் யாரும் இருக்கவில்லை. அவனது சகோதரியின் கணவன்   ( என் நண்பன் )இரண்டு நாள் கழித்து வந்தான். ஆனால் வந்தவன் முதலில் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்.ரெயில்வே மருத்துவர்கள் அங்கு நாள்பட வைத்து சிகிச்சை அளிக்கத் தயங்கினார்கள். ஆனால் நண்பனுக்கு என்ன செலவானாலும் பரவாயில்லை.ஒரு நல்ல மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்தார்கள். மனைவியின் தம்பி. மூத்த மச்சினன். செலவுக்குப் பணம் தருவதாகச் சொல்லும் அவனது உறவுகள். சென்னையில் ஒரு பிரபல மருத்துவ மனையில் சேர்த்தான். வயதான மாமியார் ஒத்தாசைக்கு என்று முன் வர யாரும் இல்லை. என்ன செய்வது என்று மனமொடிந்து போனான் நண்பன். விஷயம் கேள்விப்பட்டு நானும் அவன் மச்சினனைப் போய்ப் பார்த்தேன். அவர்களது குடும்பத்தார் அனைவரையும் அறிவேன். நான் அங்கு சென்று பார்த்தபோது மனம் ஒடிந்து போயிற்று. நண்பனின் மச்சினனுக்கு உடல் முழுவதும் செயல் இழந்திருந்தது. எந்த ஒரு உறுப்பும் அவனது கட்டுப்பாட்டில் இல்லை. கோமா நிலைக்குப் போயிருந்தாலாவது அவனது நிலைமை குறித்து அவனுக்குத் தெரிந்திருக்காது. ஆனால் கொடுமை என்ன வென்றால் அவனது மூளை நன்கு செயல் பட்டு சுற்றி நடப்பது எல்லாம் அறிந்து கொண்டு இருந்தது. கண்கள் மட்டும் அங்கும் இங்கும் அலை பாயும். வந்தவர் யாரென்று நன்கு தெரியும் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வரும் ட்யூப் வழியே உணவு செலுத்தப் பட்டது. நாம் அவனைப் பார்த்து ஆற்றாமையால் கலங்கினால் மேலும் அவனது மனம் சங்கடப்படக்கூடும். என் நண்பன் தினமும் காலையில் மருத்துவ மனைக்குச் செல்வான். அவனருகில் அமர்ந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு எல்லாம் சரியாகிவிடும் என்று அடிக்கடிக் கூறி கையைத் தடவிக் கொடுப்பான். மருத்துவர்கள் ஏதும் சொல்ல முடியாது என்றனர். தேறிவரலாம் , தேறாமலேயே போகலாம்  என்றார்கள். அப்போது எனக்குத் தோன்றியது என்னவென்றால் ‘நல்ல வேளை .இவனுக்குத் திருமணம் ஆகவில்லை ஆயிருந்தால் இவனைக் கல்யாணம் செய்த பாவத்துக்கோ புண்ணியத்துக்கோ அந்தப் பெண் கஷ்டப் பட வேண்டி இருந்திருக்கும்

என்னதான் செலவு செய்து மருத்துவம் பார்த்தாலும் ஒரு நாளா இரண்டு நாளா வாரமா மாதமா தெரியாது. செலவு ஏறிக்கொண்டே போய் ஒரு நிலையில் ச்சே என்று ஆகிவிடுகிறது. அமெரிக்காவிலிருந்த வந்த நண்பன் ஒரு மாதம் முடிந்தவுடன் அவன் பிழைப்பைப் பார்க்க வேண்டாமா. அவன் சென்று விட்டான். படிப்பறியாத் தாய் தினமும் தூரத்திலிருந்து மருத்துவமனைக்கு வந்து போய்க் கொண்டிருக்க முடியுமா. சில நாட்கள் கழித்து நண்பனின் இன்னொரு மச்சினன் வந்தான் அவனும் ஓரிரு வாரங்களில்  திரும்ப வேண்டியதாயிற்று,

இதற்கு நடுவில் வீட்டில் இருந்த முக்கிய தாஸ்தாவேஜுகள் பற்றின சேதி யாருக்கும் தெரியவில்லைதெரிந்தநண்பனின் மச்சினனும் ஏதும் செய்ய இயலாத நிலையில். முக்கிய பேப்பர்கள் வைத்துள்ள இடம்தெரிய மருத்துவ மனையில் இருந்தோர் அவனிடம் communicate  செய்ய ஒரு வழியைக் கண்டனர். பேசுவது புரிந்து கொள்ளும் அவனிடம் ஒரு அட்டையில் எழுத்துக்களையும் எண்களையும் காட்டி இவர்கள் கேட்க விரும்புவதை வாய்மொழியில் கேட்டு பதிலை சொல்ல விரும்பும் வார்த்தையின் spelling ஆக கூற ஒவ்வொரு எழுத்தையும் ஆம் என்றால் கண்களை மூடித்திறக்கக் கூற பயிற்சி அளித்தனர். இவ்வாறு கேள்வி கேட்டு பதில் தெரிந்து கொண்டனர். தெரிந்து கொண்ட பதில் மூலம் விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இது எழுதியது போல் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா.?வயாதான தாயை என்னென்னவோ சொல்லி அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். இவனை மருத்துவ மனையின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு ஆகும் செலவுகளை அமெரிக்காவிலிருந்து கொண்டே செய்தனர். இந்த மாதிரியான ஒரு வாழ்க்கையை அவன் வாழ்ந்தது ஏறத்தாழ ஐந்து வருடங்கள் இருக்கும். கடைசியில் ஒரு நாள் அவன் இவ்வுலகை விட்டு நீத்தான் எல்லோரும் இருந்தும் யாருமற்றவனாக இறந்தான்

உறவினருக்கு தங்களால் ஆனதைச் செய்த திருப்தி. அவ்வளவு செலவும் வைத்தியமும் பலனளிக்கவில்லை. இந்தக் கேஸ் இப்படி என்றால் நான் முன்பொரு முறை  ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும் என்று பதிவு செய்திருந்த கேஸ் (அவசியம் பார்க்க ) அண்மையில் அப்பாதுரை எழுதி இருந்த ‘கோமதி என்றொரு அழகி ( அதுவும்  கற்பனையாய் இருந்தாலும்) மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது. பணம் இருப்பவர் வைத்தியம் பார்த்தோம் முடியவில்லை என்ன செய்வது என்று இருக்கலாம். ஆனால் என்ன செய்தாலும் எதுவும் எதிர்பார்க்கும் பலனளிக்காது என்று தெரிந்தும் ஏதோ ஒரு உந்துதலால் எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு தொடரும் வாழ்க்கை ....
சில நேரங்களில் இதனால் ஏற்படும் விரக்தி வெறுப்பையே வளர்க்கும் வாய்ப்புண்டு. காரண காரியங்களை ஆராயப் போனால் பதிலேதும் கிடைப்பதில்லை. ஆனால் நம்மை நாமே சமாதானப் படுத்த ஒரு காரணமும் தேவைப் படுகிறது. பதில் சொல்லத் தெரியாக் கேள்விகள். தெரிகின்றமாதிரி ஏற்றுக்கொண்டு காலத்தைத் தள்ள வைக்கும் சில பதில்கள்.



இதை சற்றே ஊன்றி படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ஐந்து வருடம் மருத்துவ மனையில் இருந்து உயிர் விட்ட நண்பனின் மச்சினன் இன்னும் சில வருடங்கள் உயிருடன் இருந்திருந்தால்,..... மருத்துவச் செலவு அவர்கள் கைகளையும் மீறிப் போயிருந்தால்.....இவன் இப்படி ஒரு vegetative state-ல் இருந்து கஷ்டப் பட வேண்டிய காரணம்......என்ன நினைப்பில் தொடர்ந்து வைத்தியம் பார்க்க வைக்கிறது. . இதனால் யாருக்கு என்ன லாபம். .... மருத்துவமனையில் இருந்தவனின் மனநிலை.... சிந்தித்துப் பாருங்கள். விருப்பு வெறுப்பு இல்லாமல் பதில் சொல்லவோ செயல்படவோ முடிகிறதா?.


இதிலாவது நண்பனின் மச்சினன் ஐந்து வருட மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு இறந்து விட்டான் இருக்கும் வரை முடிந்த அளவு செலவு செய்து மருத்துவம் பார்த்துவிட்டோம் என்று மனதை தேற்றிகொள்ளலாம். மருத்துவம் பார்க்க முடியாமல் போயிருந்தால் குற்ற உணர்ச்சி அவர்களை வாட்டி எடுக்குமா?. நான் குறிப்பிட்டு இருக்கும் பதிவில் வரும் ஜாக்கி மணியின் இரு மகன்களும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் படுக்க வைத்த மரம் போல் இன்னும் இருக்கிறார்களே. மணிக்கும் வயதாகிறது இயலாமை தெரிகிறது. அவரது காலத்துக்குப் பின் அவரது மகன்கள் என்னாவார்கள்......?பக்கவாதத்தால் ஏதும் செய்ய இயலாத கணவன். எதையும் தானாகச் செய்ய முடியாத இரு மகன்களுடன் அல்லல்படும் பெண்மணியை இயக்குவது எது.?அவளுக்கு வாழ்வில் ருசிக்க என்ன இருக்கிறது. ?அவளது உந்து சக்தி எது..? 



தெய்வக் குழந்தைகள் என்று மனம் தேற்றி எதையும் தானாகச் செய்ய முடியாத குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களின் மனநிலை என்ன.?அந்தக் குழந்தைகள் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்காவது தேறினால் போதும் என்று நினைக்கும் பலரைப் பற்றிப் படித்தும் கேட்டும் இருக்கிறேன். இந்த மாதிரி இருக்கும் உயிர் பிணங்களுக்கு ( வார்தை கடுமையாய் இருந்தாலும் அதுதானே நிஜம் ) அவர்களைப் போஷிக்கும் தாய் தந்தையரின் காலத்துக்குப் பின் ( எல்லோரும் சாசுவதமா என்ன ?)என்னாகும். மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப் பட்டு எப்படியோ உயிர் பிழைத்து வந்து எதையும் செய்ய இயலாத நிலையில் மீண்டுமொரு கைக்குழந்தையாய் மனைவியால் பராமரிக்கப் படும் அவல நிலையும் தெரிந்து இருக்கிறேன். அந்த மனைவியின் காலத்துக்குப் பின் அவர் கதி என்ன?. அன்பும் ஆசையும் மட்டும் போதுமா.? கூடவே இருந்த பராமரிக்கும் எண்ணமும் தேவை அல்லவா.?நாம் பெற்றவற்றிடமிருந்து அதை எதிர் நோக்குவோம். அவர்களுக்கும் இந்தப் பராமரிப்பால் என்ன லாபம்.? மனம் வெறுத்துப் போய் விடாதா.? கேள்விகள்....கேள்விகள்....கேள்விகள்.....பதில் அறியாக் கேள்விகள் இருந்துவிட்டுப் போனால் பரவாயில்லையே. நாளை நமக்கும் இந்த மாதிரியான நிலை வராது என்று நிச்சயமாகச் சொல்ல முடியுமா. ஊழ் என்றும் விதி என்றும் சமாதானப் படுத்திக்கொள்ள முடியுமா. ? விலங்குகள் இந்த மாதிரி சூழ்நிலையை எவ்வாறு அணுகுகின்றன. ? விலங்கு நிலையே தேவலாமா.?இல்லாத ஒன்றையோ அறியாத ஒன்றையோ துணை நாடி தேற்றிக் கொள்ள வேண்டுமா.?அறியத் துடிக்குது மனசு. அறியாமையே எங்கும் விரவிக் கிடக்கிறது. பதிலறியாக் கேள்விகள் நடுவே.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது பராமரிக்க இயலாமல் கைவிடப் பட்டவர்களுக்கு உறுதுணையாய் ஒரு காப்பகம் நடத்தி காத்துவரும் என் நண்பன் மதுசூதனனின் செயல் எனக்கு மிகுந்த ஆச்சரியம் அளிப்பதோடு வணஙக வைக்கவும் செய்கிறது.இந்த எண்ணங்களே என்னை “அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள் “ எனும் பதிவை எழுத வைத்தது.உதவ எண்ணம் தெரிவித்தவர்கள் “நன்றே செயினும் இன்றே செய்கஎன்றபடி உடனே உதவ வேண்டுகிறேன். என் கடந்த பதிவில் முகவரி தொலைபேசி எண் போன்றவற்றைக் கொடுத்திருக்கிறேன். 
Please follow up your donations with a e.mail so that they can know who has sent them and accordingly acknowledge Thanks. 


-------------------------------------------------------------------
 

 













.

.
      .  









.

.

வியாழன், 30 ஜனவரி, 2014

காக்கைகளும் குஞ்சுகளும்


                           காக்கைகளும் குஞ்சுகளும்.
                           --------------------------------------



என் நண்பர் தம்பதிகள் ஒரு நாள் என் வீட்டுக்கு வந்திருந்தனர்.கையில் ஒரு பெண்கைக்குழந்தை. பெங்களூர் சற்றுக் குளிர் அதிகமான ஊர் என்பதால் தரையில் கால் வைத்தால் சில்லென்று இருக்கும். இந்தப்பிரச்சனையைத் தவிர்க்க என் வீட்டு ஹாலில் லினோலியம் கார்ப்பெட் மாதிரி போட்டு வைத்திருக்கிறேன். எப்போதும் கைக் குழந்தைகளை கையில் வைத்திருக்க முடியாது. மேலும் அம்மாதிரிக் குழந்தைகள் தரையில் அமரவோ முட்டுக்குத்தவோ நீச்சல் அடிக்கவோ ஏதுவாய் இருக்கும். குறிப்பிட்ட நண்பரின் குழந்தை ஆறு மாதத்திலேயே பிரசவமான ஒரு ப்ரிமசூர் குழந்தை. ஏறத்தாழ ஆறு வாரங்கள் இன்குபேட்டரில் வைத்திருந்தார்களாம். பிறந்து ஆறு மாதமான அக்குழந்தையை லினோலியம் கார்பெட்டில் மல்லாக்கப் படுக்க வைத்தார்கள். இடனே அக்குழந்தை கவிழ்ந்து தரையில் நீச்சல் அடித்து இம் என்பதற்குள் அறையின் மறுகோடிக்கு வந்தது. எங்களுக்கு இது மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. மீண்டும் அறையின் ஓரத்தில் கிடத்தினார்கள்.கிடத்தித் திரும்பிவதற்குள் குழந்தை மறு கோடிக்கு வந்து விட்டது. Such an hyperactive child…! பொதுவாகவே இம்மாதிரிக் குழந்தைகள் சற்று அதிகச் சுற்சுறுப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பதிவு அதற்காக அல்ல. ஒரு நாள் என் உறவினர் ஒருவர் அவர்கள் வீட்டுக் குழந்தையுடன் வந்திருந்தார்கள் பேச்சுவாக்கில் நாங்கள் அந்த ப்ரிமசூர் குழந்தையைப் பற்றிச் சொன்னோம். வந்திருந்தவர்கள் கையிலும் ஒரு குழந்தை வயது சுமார் இரண்டு இருக்கலாம். இடுப்பிலேயே வைத்துக் கொண்டிருந்தார்கள், “ ச்சே. .! இதென்ன பிரமாதம் ....  இவன் ஆறுமாதத்திலேயே எழுந்து நடந்து ஓட ஆரம்பித்துவிட்டானாக்கும்...!என்றார்கள். அந்தக் குழந்தையானால் இடுப்பைவிட்டு இறங்கவே மறுத்து விட்டது. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதான் .... இருந்தாலும் இப்படியா.? நம் வீட்டுக் குழந்தை நன்றாகப் படிக்கிறது என்று சொல்லிவிட்டாலே போதும் அவர்கள் குழந்தையும் பள்ளியிலேயே முதன்மைக் குழந்தையாய் இருக்கும். ஒரு முறை ஒரு தாத்தா பாட்டி அவர்கள் பேரக் குழந்தையுடன் வந்திருந்தார்கள் “அங்கிளுக்கும் ஆண்டிக்கும் ரைம் சொல்லிக் காண்பி ? என்று அக்குழந்தையைப் பாடாய்ப் படுத்தினார்கள். அது ஏன் சொல்கிறது.?பல மிட்டாய்கள் சாக்கலேட்டுகளுக்குப் பின் அது அழுது கொண்டே ரெயின் ரெயின் கோஅவே என்று அழுதது. தங்கள் வீட்டுக் குழந்தையின் புத்திசாலித்தனத்தை பறை சாற்றுவதில் பெற்றோரை விட அவற்றின் தாத்தா பாட்டிகளுக்கே அதிக முனைப்பு. வீட்டுக்கு யாராவது வருவதானால் சில குழந்தைகள் வந்தவர்களின் கையையோ பையையோதான் பார்க்கும்/ நாம் ஏதும் எடுத்துக்கொண்டு போயிருக்காவிட்டால் “ வருகிறவர் போகிறவர் எல்லாம் ஏதாவது கொடுக்க வேண்டுமா என்ன ?” என்று குழந்தைகளிடம் கடுமையாகப் பேசுவார்கள்.
சில வீடுகளில் குழந்தைகளுக்குப் புகட்டப் படும் முதல் பாடமே “மாமாவுக்கு டாட்டா சொல்லு. வருகிறவரை வரவேற்கக் குழந்தைக்ளுக்குப் போதிக்கிறோமோஇல்லையோ முதலில் வழியனுப்பச் சொல்லிக் கொடுக்கிறோம் இது ஒருவிதம் என்றால் அயல்நாடுகளில் வசிக்கும் தங்கள் பேரன் பேத்திகளுக்கு ஈடே கிடையாது என்று சூடம் ஏற்றிச் சத்தியம் செய்யாத குறையாகப் பேசுபவர்களையும் சந்திக்கத்தானே செய்கிறோம். என் நான்கு வயது பேத்தி ( பேரன் )க்கு கம்ப்யூட்டரில் தெரியாதது ஏதும் இல்லை. நல்லது. ஆனால் இதை சொன்ன உடனே எதிரிலிருப்பவர் உடனே தன் பங்குக்கு தங்கள் வீட்டுக் குழந்தைகள் புராணம் சொல்லி ஓய மாட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன.?இப்போதையக் குழந்தைகள் எல்லாம் நம் காலத்தைவிட புத்திசாலிகள்தான் ஒப்புக்கொள்ள வேண்டும். நான் மூன்று வயதாக இருக்கும்போது நிலைக்கண்ணாடி முன் நின்று சீப்பால் தலை வாரிக் கொள்வேனாம். அது என் பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சி தரக் கூடியதாய் இருந்திருக்கும். இப்போதைய குழந்தைகள் அதிலெல்லாம் இருந்து எங்கோ முன்னேறி வந்து விட்டன.
குழந்தைகளை அவர்களுக்குப் பிடிக்காததைச்செய்யச் சொல்லி வற்புறுத்துவது சரியல்ல என்று தோன்றுகிறது. மேலும் குழந்தைகள் ஒன்றும் காட்சிப் பொருட்களில்லையே. பெற்றோர்களே , அவர்களையும் பெற்றோர்களே...! குழந்தைகள் நம் மனதுக்கு இதம் தருபவர்கள். சில குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை ரசிக்கலாம். ஏன்... நானும் என் பேரன் பற்றிய பதிவுகள் எழுதி இருக்கிறேன். திருமதி .கீதமஞ்சரி நிலா சிறுமியாய் தன் பாட்டியுடன் கோவிலுக்குச் சென்று மூன்று சுற்றுக்குப்பதில்  அதிகமாய் சுற்றியதைக் கழிக்க எதிர் திசையில்சுற்றட்டுமா என்றுகேட்டதாக எழுத்யது நினைவுக்கு வருகிறது குழந்தைகள் என்ன மாதிரி சிந்திக்கிறார்கள் என்று எண்ணி ரசித்திருக்கிறேன் தங்கள் வீட்டுக் குழந்தைகள் குறித்த மகிழ்ச்சி பகிரும்படியாக இருக்கலாம் . ஒப்பிட்டு தங்கள் குழந்தைகளே மேல் என்று எண்ணுவது சரியா, முதலில் நான் சொன்னது போல் காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு பிற குழந்தைகளை மட்டம் தட்டிப் பேசுவதையோ அதைவிட தங்கள் குழந்தையே சிறந்தது என்று எண்ணுவதையோ தவிர்க்கலாமே.

 

என் முந்தையப் பதிவில் காருண்யா இல்லம் பற்றி எழுதி இருந்தேன். உதவ முன் வருபவர்கள் நண்பனின் கடிதத்தில் கொடுத்திருக்கும் இணைய தளத்துக்குச் சென்று தொகை அனுப்ப வேண்டிய முகவரி முதலிய விவரங்களையும் அவசியம் பார்க்கவும். நன்றி.
All donations to Palakad Alzheimers’ Charitable Trust are exempted from payment of Income Tax under section 80G – Cert.No.CIT/TCR/TECH/80G-36/2009-10.
Our Account No. is with Union Bank of India, Chandranagar Branch, Palakad. Act.No.SB.339602100008103 - Palakkad Alzheimers’ Charitable Trust. IFSC Code : UBIN 0533963. 

Please  contact Sri. P Madhusudhan   Tel.Mob. 9447408252
                                                                      Landline  0491/2571090
E mail   madhu37@gmail.com       
 

புதன், 29 ஜனவரி, 2014

அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்


                            அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்
                             -------------------------------------------------------------


இந்த என் பதிவு சற்றே வித்தியாசமானது. எனக்கென்று நான் யாரையும் இதுவரை அண்டியதில்லை. ஆனால் ஒரு நல்ல செயலுக்குத் துணைபோக எல்லோரிடமும் வேண்டி எழுதுகிறேன். இதற்கு முன்பாக 2012-ல் ஒரு பதிவு எழுதியது கடிதம் , கடிதம் அல்லஎழுதியிருந்தேன். அதில் நினைவலைகள் தவறியவர்களுக்கென்று என் நண்பன் ஏற்று நடத்தும் இல்லம் பற்றி எழுதி இருந்தேன். பலரும் உதவும் எண்ணம் இருப்பதாகக் கூறி இருந்தனர். இப்போது இத்துடன் அந்த நண்பன் எழுதியுள்ள கடிதத்தின் நகலை இத்துடன் இணைக்கிறேன் வலையுலக நண்பர்கள் தாராளமாக உதவுவார்கள் என்னும் நம்பிக்கையுடன் வேண்டி உதவ அழைக்கிறேன் அந்த இல்லத்தின் இணைய தளத்தையும் காணுங்கள் முந்தைய பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும் 


Hi all !

Please visit our new website "www.karunyagcc.org"

I am on a mission to find 1000 well wishers of Karunya who will
contribute just.Rs.1000/- each
for my Medicl Clinic Building construction. With around 20 old people
in Karunya, giving an injection or giving a bottle of Glucose has
become an urgent need.  If we have a Medical Unit of our own we can
avoid running to Govt.Hospital at night times.

The foundation of the Clinic Building (Around 1200 Sq.Ft)  is ready
there and I am raising funds for the super structure - construction to
start in May June 20`14 during Monsoon as there is shortage of water
otherwise.

So, please forward this message to at least 10 friends of yours whom
you can  confidently ask to contribute.  OK ?  May God Bless you and
your families always !
 


 
.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

வாழ்வியலில் ஒரு பாடம்


                               வாழ்வியலில் ஒரு பாடம்
                                -----------------------------------


ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்தார்.என்ன பாடம் நடத்தப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பில் மாணவர்கள். ஆசிரியர் மேசைக்கு அருகே நின்று  ஒரு கண்ணாடி பாட்டிலை வைத்தார். அதற்குள் கால்ஃப் பந்துகளைப் போட்டு நிரப்பினார். மாணவர்களிடம் கண்ணாடி பாட்டில் நிரம்பிவிட்டதா எனக் கேட்டார். மாணவர்கள் ஆமோதித்தனர். அதன் பின் சில கூழாக்கற்களை கண்ணாடி ஜாரில் போட அவை கால்ஃப்பந்துகளுக்கிடையில் இருந்த காலி இடங்களுக்குள்  போய் அமர்ந்து கொண்டன. இப்போது ஜார் நிரம்பிவிட்டதா என்று கேட்டார். மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆம் என்றனர். பிறகு ஆசிரியர் ஒரு பையில் இருந்த மணலை பாட்டிலுக்குள் இட்டார். மணல் சரிந்து கொண்டு ஜாரில் இருந்த வெற்று இடங்களை நிரப்பியது. இப்போது ஜார் நிரம்பி விட்டதா எனக் கேட்டார். எல்லோரும் கோரசாக ஆம் என்றனர். இன்னும் என்ன செய்யப் போகிறாரோ என்னும் ஆவல் அவர்கள் கண்களில். ஆசிரியர் அவர் கோட்டுப் பைக்குள் இருந்து ஒரு பாட்டில் சாக்கலேட் பானத்தை ஜாரில் விட்டார். ஜாரும் அந்தபானத்தை ஏற்றுக் கொண்டது.  ....





எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. அதில் இருப்பதை பகிர்ந்து கொள்கிறேன். முதலில் விளக்க மாக எழுதலாம் என்று எண்ணினேன். ஆனால் என்னதான் எழுதினாலும் இந்தக் காணொளி விளக்குவது போல் இருக்காது. மனம் மாறி அந்தக் காணொளியை அப்படியே பகிர்கிறேன்.


 ஒரு நிழலாட்டம் என்னவெல்லாம் சொல்கிறது.REALLY INCREDIBLE.!






வெள்ளி, 24 ஜனவரி, 2014

ZUKO- வைக் காணப் போனோமே.


                       ZUKO-வைக் காணப் போனோமே
                       -----------------------------------------------


ஆங்கிலப் புத்தாண்டுச் சிந்தனைகள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதன் பிறகு முன்பே எழுதி வைத்திருந்த இரண்டு பதிவுகள் வெளியிட்டேன். அதன் பின் தையலே தைப் பெண்ணே என்று எழுதினேன். பதிவுகள் எழுத உடலும் உள்ளமும் ஒத்துழைப்பதில்லை. என்னதான் நம்பிக்கையோடு இருந்தாலும் உள்ளம் அடிக்கடி உடல் உபாதையை சுட்டிக்காட்டுகிறது. சுவர் இருந்தால்தானே சித்திரம்.?இருந்தாலும் நான் நலமாக இருக்கிறேன் என்று எனக்கு நானே தேற்றிக் கொள்ள இதை எழுதுகிறேன்
.
ஜனவரி 12-ம் நாள் என் மச்சினனின் பெண் திருமணம் இனிதே நடந்தது. இந்தப் பெண்பற்றி sky dive  என்று முன்பே எழுதி இருந்தேன்.ஊரார் உற்றார் முன் கொட்டியது மேளம் கட்டினான் தாலி,கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிய பெண்ணின் கை பிடித்து வரனிடம் பொறுப்பை ஒப்படைத்தான் என் மச்சினன்.திருமணம் முடிந்த கையோடு மாலை என் மனைவியின் அக்காள் மகள் வீட்டுக்குக் கூட்டிப்போனார்கள்.அவர்கள் இல்லத்துக்குச் சென்று நாட்கள் பல ஆகி இருந்தன. இந்த முறை எங்கள் விஜயம் முக்கியமாக ZUKO வைப் பார்ப்பதற்கென்று இருந்தது. என் இளைய பேரனின் வற்புறுத்தலும் ஒரு காரணம் zuko யாரென்று சொல்ல வில்லையே. “எங்களைப் பார்க்க என்று யாரும் வருவதில்லை. ஆனால் zuko வைப் பார்க்க மட்டும் எல்லோரும்வருகிறார்கள் என்று அங்கலாய்த்துக் கொண்டார்கள் ZUKO ஒரு சைபீரியன் ஹஸ்கி நாய்.  நாய் என்று சொன்னால் நம்பமுடியாது. நரி மாதிரி இருக்கிறது. ஆறு வார ஆண் நாய்க் குட்டி. சுமார் 40,000/ ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். என் பேரனுக்கு அதேபோல் ஒரு நாய் வாங்கி வளர்க்க வேண்டுமாம் . நாய் நம் வீட்டைக் காக்கும் என்பதைவிட நாம்தான் இம்மாதிரி நாய்களைக் காபந்து செய்ய வேண்டும் . ஏமாந்துஇருந்தால் நாயையே லவட்டிக் கொண்டு போய் விடுவார்கள். பனிப்பிரதேசத்தில் sledge வண்டியை இழுக்க உபயோகமாகும் நாய். நம் நாட்டு தட்ப வெட்பத்துக்குப் பழக்கமான pedigree  இது. குரைப்பதில்லை. ஊளையிடுகிறது.

செல்லி என்று பெயருடன் நாங்கள் வளர்த்த cocker spaniel  நாய்க்குப் பிறகு செல்லப் பிராணி வளர்ப்பையே தவிர்த்து வருகிறோம். அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் நாய் வளர்ப்பது பலருக்கும் இடைஞ்சலாகும். என் பேரன் பிடிவாதமாய் இருக்கிறான். சாதக பாதகங்களை அலசி நாய் வாங்கி வளர்ப்பதில் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார்கள் மகனும் மருமகளும். பார்ப்போம். எது வெல்கிறது என்று. அறிவா உணர்வா.?.

சொகுசாக சூகோ பீன் இருக்கையில்

அரவணைப்பில்  சூகோ

இப்படியிருக்கும்வளர்ந்தால்

நாயா நரியா.?
 இந்த நாயைப் பற்றிய செய்திகளுக்கு பார்க்கவும் 

http://en.wikipedia.org/wiki/Siberian_Husky

http://en.wikipedia.org/wiki/Balto 

இரண்டாவது சுட்டி பால்டோ என்னும் நாயைப் பற்றியது. கடுங்குளிரிலும் உயிர் காக்கும் மருந்தை ஸ்லெட்ஜ்  வண்டி மூலம் கொண்டு சென்ற  பால்டோவுக்கு சிலை யெழுப்பி நன்றி தெரிவித்திருக்கின்றனர். 





.

.

      

திங்கள், 13 ஜனவரி, 2014

தையலே தைப் பெண்ணே வருக வருக.

நான் வரைந்த கண்ணாடி ஓவியம்
                                                             ஸ்ரீ காயத்ரி தேவி
                                                                   ---------------   
              தையலே தைப் பெண்ணே வருக வருக...
               -----------------------------------------------------

 
               பொங்கல் வாழ்த்துக்கள்.
               ----------------------------------

          மார்கழிப் பனி விலக
          பாவையர் நோன்பு முற்ற,
          தையலே தைப் பெண்ணே-வருக
          உன் வரவால் வழி பிறக்க

          முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
          கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
          புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
          பொங்கலாக்கிப் படைத்திடவே

          பகலவனும் பாதை மாறிப்
          பயணம் செய்யத் துவங்கும்
          இந்நாளில் பொங்கும் மங்களம்
          எங்கும் தங்க வணங்குகிறோம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
----------------------------------------------------------.
    

வெள்ளி, 10 ஜனவரி, 2014

சும்மா சிரிச்சிட்டுப் போங்க...!


                                    சும்மா சிரிச்சிட்டுப் போங்க.....!
                                    --------------------------------------



நான் ஒரு சீரியஸ் மனிதன். என்னால் பிறரை சிரிக்க வைக்க முடிவதில்லை. இந்த என் குறை எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு நகைச் சுவை உணர்வு கிடையாது என்று அர்த்தமல்ல. நன்கு ரசிப்பேன். என் ரசிப்பின் வெளிப்பாடு என் இதழோரப் புன்னகையில் மட்டுமே தெரியும். அப்படி நான் அண்மையில் ரசித்த சில கடி ஜோக்ஸ் ( உபயம்-என் நண்பர்) உங்கள் பார்வைக்கு.முடிந்தால் இவற்றின் தரத்தை வரிசைப் படுத்துங்களேன்.

சே!சே! வர வர செல்போனை எதெதுக்குத்தான் யூஸ் பண்றதுன்னே இல்லாம போயிடுச்சு!
ஏன் என்ன சலிப்பு உனக்கு?
கல்யாணம் ஒண்ணுல பந்தியில கடைசில உக்காந்துருக்கறவரு முதல்ல ஒக்காந்தவருக்கு ஃபோன் பண்ணி பாயசம் அங்கேயே தீந்துடுமா இல்ல கடைசி இலை வரைக்கும் வருமான்னு கேக்கறாரு

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.



காதலி:      நாளைக்கு என் பொறந்த நாள்.. எனக்கு ஒரு ரிங் தருவியா?
காதலன்:  ஓ! லேண்ட்லைன்லயா.. செல்ஃபோன்லயா?

என்னதான் பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.  இதுதான் உலகம்.

இளநீர்லயும் தண்ணி இருக்கு., பூமிலயும் தண்ணி இருக்கு., அதுக்காக இளநீர்ல போர் போடவும் முடியாது., பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.  என்ன நா சொல்றது சரிதானே.

ஓடுற எலி வாலை புடிச்சா நீ கிங்கு…  ஆனா தூங்குற புலி வாலை நீ மிதிச்சா  உனக்கு சங்கு’.
.

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னாட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?   இல்ல………. பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும் அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி நாம ஓடலாம்.  ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நாம நிக்க முடியாது.

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்.  அதுக்காக  மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்.. இதுதான் உலகம்.

குதிரை தெரிகிறதா கண்டு பிடியுங்கள்