விஜயவாடா நினைவுகள்
------------------------------------
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “ஹலோ, அங்கிள், நேனு சலபதி ராவ் மாட்லாடுதானு, விஜயவாடலின்சி. குர்த்து ஒஸ்துந்தா.?”எனக்கு யார் என்று பிடிபடவேயில்லை. அடுத்து என் மகன் பேசினான். அவன் அங்கு வேலை நிமித்தமாகச் சென்றவன் அவனுடைய மலரும் நினைவுகளால் உந்தப்பட்டு நாங்கள் 1976-/ முதல் 1980-/ வரை வாழ்ந்த வீட்டையும் அருகில் இருந்த அவனது நண்பர்களை காணவும் சென்றிருக்கிறான். அந்தக் காலத்தைய அவனுடைய நண்பனின் அழைப்புதான் நான் முதலில் குறிப்பிட்டது. நாங்கள் அங்கிருந்தபோது என் மகனின் வயது பத்து தொடங்கி பதிநாலு வரை.
ஏற்கனவே என் நேரம் பழைய நினைவுகளை அசைபோடுவதில் செலவாகிறது. இந்த தொலைபேசி அழைப்பு என் விஜயவாடா நினைவுகளைக் கிளரி விட்டது. நான் BHEL-ல் இருந்தபோது என்னை புதியதாகக் கட்டவிருந்த விஜயவாடாதெர்மல் பவர் ஸ்டேஷன் கட்டுமானப் பணிகளைத் துவக்க இடமாற்றம் செய்து அனுப்பினார்கள் .இடமாற்றத்தில் எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இருக்கவில்லை. நான் செய்து கொண்டிருந்த பணிக்கும் அங்கு எனக்கிருக்கப்போகும் பணிக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. ஆரம்பமுதல் நான் அவ்வேலையைக் கற்று பொறுப்புகளை முடிக்க வேண்டும். பேசாமல் வேலையை ராஜினாமா செய்து ஏதாவது பெட்டிக்கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்று தீவிரமாக யோசனை செய்தேன். மேலும் என் பிள்ளைகளின் படிப்பும் பாதிக்கப் படுமோ என்ற அச்சமும் எனக்கிருந்தது. ஆனால் எனக்குள் இருந்த போராடும் குணம், எதுவும் என்னால் முடியும் என்ற நம்பிக்கை என்னுள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. அப்போது துணை பொது மேலாளராக இருந்த திரு. K.P.ராஜ்குமார் அவர்கள் என்னை கூப்பிட்டு அனுப்பினார். அவருக்கும் இட மாற்றம் என்றும் என் மன நிலை அவருக்குப் புரிவதாகவும் சொல்லி ஒரு கதையும் சொன்னார்.
விஜயவாடாவில் பென்ஸ் சர்கிள் அருகே ஆஃபீஸ் அமைந்திருந்தது அருகேயே வீடு பார்த்தேன். படமட்டாவில் NSM PUBLIC SCHOOL நல்ல பள்ளி என்றறிந்து அங்கே சென்றேன். அது மாண்ட்ஃபோர்ட் குழுமத்தாரால் நடத்தப் படுவது என்று தெரிந்தது நான் கூனூரில் படித்த பள்ளியும் அவர்கள் நிர்வாகத்துக்குட்பட்டதே. என்னை அந்த ப்ரின்ஸிபாலிடம் அறிமுகப் படுத்திப் பேசிக் கொண்டிருந்தபொது, அவர் கூனூரில் அதே பள்ளியில் எனக்கு மூன்று வருடம் ஜூனியர் என்று தெரிந்தது. பள்ளியில் பிள்ளைகளுக்கு இடம் கொடுத்தால் பள்ளிக்கு நாங்கள் என்ன செய்வோம் என்று அவர் பேரம் பேசினார். அந்த மாநிலத்துக்கே மின்சாரம் தரப்போகும் அனல் மின் நிலையம் நாங்கள் தருவோம் என்றெல்லாம் கூறி பள்ளியின் முன்னேற்றத்துக்கு எங்களிடமிருந்து கணிசமான உதவி எதிர் பார்க்கலாம் என்று கூறி வரப்போகும் ஊழியர்களின் பிள்ளைகள் படிப்புக்கு உத்தரவாதம் பெற்றுத் திரும்பினேன்.
பெஜவாடா என்று முன் காலத்தில் அழைக்கப்பட்ட விஜயவாடா ஒரு ப்ளேஸ்வாடா (BLAZEVAADA) அதாவது அதிக உஷ்ணமான இடம்.,வெயில் காலத்தில் சர்வசாதாரணமாக உஷ்ணமானி 115 டிக்ரி முதல் 118 டிகிரி ஃபாரன்ஹீட் வரை காண்பிக்கும். இரவில் ரேடியேஷன் சூட்டால் வெப்பம் குறைய வாய்ப்பேயில்லை. திருச்சிக்கும் விஜயவாடாவுக்கும் நிறையவே ஒற்றுமைகள் உண்டு. திருச்சி உச்சி பிள்ளையார் கோயில் மாதிரி மலையில் கனகதுர்கா கோயில். காவிரி நதி மாதிரி அங்கே கிருஷ்ணா நதி. கல்லணைபோல் கிருஷ்ணா பராஜ். இரண்டும் விவசாய நிலங்கள் சூழ்ந்த வியாபார மையம். இந்திய ரெயில்வேயின் முக்கிய ஜங்ஷன்கள். ஃப்ளோட்டிங் பாபுலேஷன் ( வந்து போகும் மக்களின் எண்ணிக்கை ) இப்படிக் கூறிக்கொண்டே போகலாம்.
------------------------------------
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “ஹலோ, அங்கிள், நேனு சலபதி ராவ் மாட்லாடுதானு, விஜயவாடலின்சி. குர்த்து ஒஸ்துந்தா.?”எனக்கு யார் என்று பிடிபடவேயில்லை. அடுத்து என் மகன் பேசினான். அவன் அங்கு வேலை நிமித்தமாகச் சென்றவன் அவனுடைய மலரும் நினைவுகளால் உந்தப்பட்டு நாங்கள் 1976-/ முதல் 1980-/ வரை வாழ்ந்த வீட்டையும் அருகில் இருந்த அவனது நண்பர்களை காணவும் சென்றிருக்கிறான். அந்தக் காலத்தைய அவனுடைய நண்பனின் அழைப்புதான் நான் முதலில் குறிப்பிட்டது. நாங்கள் அங்கிருந்தபோது என் மகனின் வயது பத்து தொடங்கி பதிநாலு வரை.
ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். ஜனங்களால் மதிக்கப் பட்டவர். எந்த ஒரு நல்லது கெட்டதுக்கும் அவர் முன் நின்று வழி நடத்துவார். எந்த வீட்டில் இழவு நடந்தாலும் இவர் அங்குள்ளவர்களைத் தேற்றி ஆறுதல் கூறுவார். பெரும்பாலும் ஜனங்கள் ஆறுதல் அடைந்து அவர் சொல் கேட்டு நடந்து கொள்வார்கள். ஒரு முறை அந்தப் பெரியவர் வீட்டில் ஒரு இழப்பு நேரிட்டது. கண்ணீரை அடக்க முடியாமல் அவர் தேம்பித் தேம்பி அழுவது கண்டு கூட இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள் “நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர். எல்லோருக்கும் வழிகாட்டி. நீங்களேஇப்படி மனம் தளரலாமா?” என்று கூறி சமாதானப் படுத்த முயன்றனர்.அவரோ, “உங்களுக்கு இழப்பு வந்தபோது ஆறுதல் சொன்ன நான் எனக்கு அது நேரும்போதுதான் உங்கள் துயரம் புரிகிறது” என்றாராம்
இந்தக் கதை சொன்ன ராஜ்குமார், என் நிலை அவருக்குப் புரிகிறது என்று கூறி என்னை முதலில் விஜயவாடா சென்று நிலைமையை புரிந்து கொள்ளவும் இருக்க வீடு பார்க்கவும் பள்ளிகளில் பிள்ளைகளை ( இனி மாற்றலாகி வருபவருக்கும் சேர்த்து ) சேர்க்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யவும் பொறுப்புகளை கொடுத்து அனுப்பினார். எண்ணிப் பார்க்கவே மலைப்பாக இருந்தது.
விஜயவாடா சென்றதும் அனல் மின் நிலையம் கட்டப் படப் போகும் இடம் பார்க்கச் சென்றேன் கொண்டப்பள்ளி என்னும் ரயில் நிலையத்திலிருந்துதான் வந்து சேரும் கட்டுமானப் பொருட்கள் எடுத்துவரப் படவேண்டும் ஒரு சூபர்வைஸர் ஏற்கெனவே பணியில் இருந்தார். அவருக்கு நான் அங்கு வந்ததே பிடிக்கவில்லை. என்று சிறிது நேரத்திலேயே தெரிந்து விட்டது. எனக்குக் கீழே பதில் சொல்லும் நிலை அவருக்கு ரசிக்கவில்லை.
1976- / முதல் 1980-/ வரை ( நான்கு வருடங்கள்) அங்கிருந்தேன் இரண்டு 210MW சக்தியுள்ள அனல் மின் நிலையம் ஆரம்பத்திலிருந்து மின் உற்பத்தி துவங்கும் வரை அங்கு பணி ஆற்றினேன். திருச்சியில் கொதிகலன்கள் தயாரிக்கப் பட்டாலும் அங்கு ஒரு முழு கொதிகலனை யாராலும் பார்க்க முடியாது. அங்கு உற்பத்தியாகும் கட்டுமானப் பொருட்கள் தனித்தனியே அனுப்பப்பட்டு அனல் மின் நிலையத்தில் ஒருங்கிணைக்கப் படும். இவ்வாறு ஒருங்கிணைக்கப்ப்டும் ஒரு கொதிகலன் சுமார் பத்தாயிரம் டன்களுக்கும் கூடுதலாக இருக்கும். அங்கு பணி புரிந்த காலத்தில் ஆந்திராவில் கொடிய புயல் தாக்கி ஆயிரக் கணக்கானோர் மரண்மடைந்தனர், அந்த மாலை இன்றும் நினைவில் இருக்கிறது கட்டுமானப் பணியின் ஆரம்ப நிலை அது. மாலை காற்றடிக்கத் துவங்கி மழையும் வரத் தொடங்கவே சீக்கிரமே வீடு நோக்கித் திரும்பினோம் அன்று இரவு அடித்த காற்றில் கதவுகள் ஆடத் துவங்க அவற்றுக்கு கட்டில்களும் மேசைகளும் முட்டுக் கொடுத்து காற்றின் பயங்கர சப்தம் கேட்டு இரவு உறக்கம் இல்லாமல் கழித்தோம். மறு நாள் புயல் ஓய்ந்த பிறகு வெளியில் வந்து பார்த்தால் வெராந்தாவில் இருந்த ஒரு நீள மர பென்ச் காணவில்லை காற்று அதை தூக்கி முதல் மாடியிலிருந்து கீழே வீசியிருந்தது. கட்டுமான இடத்துக்குப் போகும் வழியெல்லாம் புயலின் கோர தாண்டவத்தின் அடையாளங்கள். சைட்டில் நாங்கள் ERECT செய்திருந்த STRUCTURAL COLUMNS எல்லாம் சரிந்து கீழே விழுந்திருந்தன. வாரக்கணக்கில் பாடுபட்டு செய்திருந்த பணிகள் எல்லாம் பாழாய்ப் போய் இருந்தன.
அங்கு எனக்குக் கிடைத்த அனுபவங்கள் எனக்கு எதையும் எதிர் கொள்ள வைக்கும் துணிச்சலை தந்திருந்தது. அவற்றில் ஒன்றிரண்டு சொல்லியே ஆக வேண்டும். நீளம் கருதி அதை பின்னொரு சமயம் தனி இடுகையாக பதிவிடுவேன்.
காலை ஏழு மணியளவில் விட்டை விட்டால் இரவு எப்போது திரும்புவோம் என்று தெரியாது வாரம் ஆறு நாட்கள் முழுநேரப் பணியும் ஞாயிறு மதியம் வரை பணியும் இருக்கும் . ஞாயிறு மாலைக்காக மனைவியும் மக்களும் காத்திருக்க சினிமா ஓட்டல் என்று கழியும். நான் விஜயவாடா பணியிலிருந்து மறுபடியும் திருச்சிக்கு கிளம்பும்போது VTPS –ன் SUPERINTENDING ENGINEER சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ரீங்கரிக்கிறது. அவர் சொன்னார்,” BALU WHENEVER I COME NEAR THESE MACHINES I WILL HEAR THEM CALL –BALU, -BALU” இருபது வருடங்களுக்குப் பிறகு 2001-ல்
நான் அந்த அனல் மின் நிலையம் சென்று என்னால் கட்டி முடிக்கப் பட்ட மெஷின்களின் அருகே நின்று புகைப் படம் எடுத்துக் கொண்டபோது எனக்கு அவை என்னை “ பாலு .பாலு “ என்று கூப்பிடுவதுபோல் இருந்தது.
--------------------------------------------
--------------------------------------------