Monday, April 11, 2011

பாம்பென்றால்...........

பாம்பென்றால்............
---------------------
        சித்ராவின் பதிவு, அமெரிக்காவின் நஞ்சுபுரம் படித்தபோது 
பாம்பைப்  பற்றிய பல நினைவுகள் நெஞ்சில் படமாக ஓடத்
துவங்கியது. பாம்புக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அது என்ன 
ஏழாம்  பொருத்தம்.? எனக்கும்  பாம்புக்கும்  பொருத்தமே இல்லை,
ஆகவே ஆகாது. என் கையால் பரலோகம் அல்லது சிவபதவி 
அடைந்த பாம்புகளின் எண்ணிக்கை நாலைந்து இருக்கும். பாம்பு
களை  அடிக்கக்கூடாது கொல்லக் கூடாது, என்று நம்பும் நம் 
மக்களிடையே நான் பாம்புகளைக் கொன்றது, பயத்தாலும் தற்
காப்புக்காகவும்தான்.வசிக்கும் வீடுகளில் பாம்பு வந்து விட்டால் ,
அது  இருப்பவர்களைத் தீண்டித் தொலைத்து விட்டால், என்பன
போன்ற பல சந்தேகங்கள் சிந்திக்கக்கூட நேரம் கொடுக்காமல்,
அதனை அழிப்பதிலேயே மனம் சென்று விடும். சர்ப்ப தோஷம்
சும்மா விடாது என்று பயமுறுத்துபவர்கள் மத்தியில் ,இதுவரை
எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறேன். நான் பாம்புகளைக்
கொல்வதை நியாயப் படுத்தவில்லை. தற்காப்பால்  உந்தப்
பட்டு தற்செயலாகச் செய்யும் செயலே, வீட்டில் வந்த பாம்பு
களுக்கு முக்தி கொடுத்தது. பாம்புகள் வயல்களிலோ காடு
களிலோ சுற்றுச் சூழல் சமன்பாட்டுக்கு உதவும் வகையில் உலா
வந்தால், பாம்பை நான் ஏன் அடிக்கிறேன்.அவை நகரங்களில
வீட்டுக்குள்ளும்  தோட்டத்துக்குள்ளும் வரும்போது, அவைகளை
அமைதியாய் பிடித்து, எங்கோ கொண்டுவிட நான் கற்றுக்கொண்டு
இருக்கவில்லை.

        பாம்புகளை தெய்வமாக வழிபடும் பலரை நான் பார்க்கிறேன்.
எறும்புகளால் எழுப்பப்பட்ட புற்றுகளுக்குள் பாம்பிருப்பதாக நம்பி,
அந்தப் பாம்புகள் குடிக்கும் என்று எண்ணி, பாலைப் புற்றுக்குள்
ஊற்றும் ஜனங்களைக் காணும்போது, அறியாமையின் விளைவு
கள் அறியப்படாமலேயே போவது கண்டு மனம் வருந்துகிறது.
பாம்புகள் பால் குடிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்ட விஷயம்.
அந்தப் பாம்புகளுக்கு புற்றின் மேல் பால் ஊற்றி, பூவைத்து ,தூப,
தீபம் காட்டி எல்லாவற்றையும் விரயமாக்கும் மக்கள், கூடவே
தம் மக்களையும் அல்லவா சிந்திக்க விடாமல் வளர்க்கிறார்கள்.

        குழந்தை பிறவாமைக்கு நாக தோஷம் ஒரு காரணம் என்று
நினைத்து, சில கோயில்களில் நாகராஜாவைக் கல்லில்
பிரதிஷ்டை செய்தால் தோஷம் நீங்கி நலமுன்டாகும்  என்ற
நம்பிக்கையும் பரவலாக நம் நாட்டில் உண்டு.

         நாங்கள் ஒருமுறை திருச்சியிலிருந்து கர்நாடக மாநில
கோயில்களை தரிசிக்க காரில் பயணித்துக் கொண்டிருந்தோம்..
மாலை இருட்டிய நேரம். காட்டுப்பகுதி; நல்ல மழை பெய்து
கொண்டிருந்தது. திடீரென்று ட்ரைவர் காரை நிறுத்தி விட்டார்.
ஏனென்று கேட்க, காரின் முன்புறம், சாலையைக் காண்பித்தார்..
அங்கு சுமார் ஆறேழு அடிக்கும் மேலான பாம்பு பாதையில்
படுத்திருந்தது. " பாம்பால் காருக்கு சேதமிருக்காது; ஒட்டிக்
கொண்டு போங்கள் " என்றேன். ட்ரைவர் மறுத்துவிட்டார்.
பாம்பின் மேல்  காரேற்றினால், அதனால் பாதகங்கள் மிகவும்
அதிகமாகும் என்றார். பாம்பு நகர்ந்த பிறகு போகலாம் என்று
கூறி, ஹெட் லைட்டை ஆன்  ஆப  செய்தும் ஹாரன் அடித்தும்
ஒரு பதினைந்து நிமிடம் காத்திருந்த பிறகு, பாம்பு நகர்ந்து,
நாங்களும் பயணம் தொடர்ந்தோம்.

       கேரளத்தில் பாடங்களில் ( வயல்களில்)பாம்புகள் தாரளமாக
நடமாடும். விளையும் நெல்லைத் தின்ன எலிகள் செய்யும்
அட்டகாசங்கள் பாம்புகளால் ஓரளவுக்கு கட்ட்ப்படுத்தப்
படுவதாக கூறுவார்கள். கேரளத்தில் பாம்பு கோயில்கள் மிகப்
பிரசித்தம். மன்னார்சாலை என்னும் இடத்திலுள்ள பாம்பு
கோயிலுக்கு போய் பாம்பைக் காணமுடியுமா என்று தேடினால்
" அவர்கள் நம் கண்ணில் படமாட்டார்கள் " என்று மிகவும்
மரியாதையுடன்  பதில் தருகிறார்கள். அங்குள்ள " இல்லத்தில்"
(வீட்டில்" )இருக்கும் நம்பூதிரி மூதாட்டியை தரிசித்து, குங்குமம் ,
பஸ்மம் பெற்றுத் திரும்புகிறார்கள்.

      தமிழ் நாட்டில் நாகர்கோயிலில்  இருக்கும் நாகர்கோயிலுக்கு
நிறையபேர் வழிபாட்டுக்கு வருகிறார்கள். அந்த ஊரில்
குடும்பத்தில் ஒருவராவது நாகராஜன் என்ற பெயருடன்
இருப்பார்.

        பாம்பு பிடிக்கும் பலரை வியப்புடன் பார்த்திருக்கிறேன். அது
ஒரு லாகவமான செயல். பாம்பின் வால்  பகுதியைப் பிடிக்கும்
போது பாம்பு வளைந்து வரமுடியாமல் பிடிப்பார்கள்.அந்தக்
காலத்தில் HAL AERO ENGINE FACTORY துவக்கக் காலத்தில் அந்த 
இடத்தில் நிறைய பாம்புகள் இருந்தன. ஆங்கிலேயக் கூட்டு 
முயற்சியால் துவங்கப்பட்ட அந்த நிறுவனத்தில் ஆரம்ப 
காலத்தில் நிறைய வெள்ளையர்கள் இருந்தனர்/வருவார்கள். 
பாம்பு பிடிப்பதில் வல்லவராக ஒரு செக்யூரிட்டி அதிகாரி 
இருந்தார். பாம்பைப் பிடித்து தரையில் கிடத்தி, அதற்கு முன்
தன தொப்பியை அங்கும் இங்கும் ஆட்டி, கொபமூட்டுவார்.
பாம்பு சீறித் துள்ளி கொத்த வருவதை ஆங்கிலேயர்கள் பார்த்து
படம் பிடித்து மகிழ்வார்கள். ஒரு பாம்பு பிடித்து காண்பித்தால்,
அந்த செக்யூரிட்டி அதிகாரிக்கு, குறிப்பிட்ட ஒரு தொகை
வழங்கப்படும் பழக்கம் இருந்தது.

        இந்திய புராணக் கதைகளில், பாம்பு பற்றிய கதைகள் ஏராளம்
பாம்பு  சிவனின் தோளிலும்,கையிலும் கணபதியின் இடுப்பிலும்,
முருகனின் மயிலின் காலடியிலும் இருக்கும். பாம்பு  வழிபாடு,
இந்து, புத்த மதத்தினரிடையே மட்டுமல்ல, உலகின் எல்லா
பகுதிகளிலும் பாம்பு வழிபாடும் அது சார்ந்த கதைகளும் நிறைய
இருக்கின்றன.

         இந்து மதத்தில் புகழ் பெற்ற பாம்புகள் :-1.)சேஷா.(ஆதிசேஷா,
சேஷநாகா.அல்லது 1000 தலை கொண்ட பாம்பு.)உலகைத் தன்
தலைகளால் தாங்குவதாக நம்பப்படுவது. விஷ்ணுவின் படுக்கை 
யாக இருப்பது. கண்ணனை இடி, மின்னல் மழையிலிருந்து 
காக்க, குடையாக, வசுதேவருடன் யமுனையைக் கடந்தது. 
2.) வாசுகி:- மந்தார மலையைச் சுற்றி கயிறாகக் கட்டப்பட்டு 
அமுதம் கடைய உதவியது. 
3.) காலியா ( காளிங்கன்.) யமுனையை விஷமாக்க  கண்ணனால் 
அதன் தலைமேல் ஏறி அடக்கப்பட்டது. 
4.)மானசா அல்லது மா மானசா:-உலகின் தாயாகக் கருதப்படுவது.
5.)அனந்தன்:-இந்த புவியை சுற்றி இருப்பதாக கருதப்படுவது. 
6.)பத்மநாபா அல்லது பத்மாகா:-தென் திசையைக் காப்பதாக 
நம்பப்படுவது. 
பாம்பு பற்றிப் எழுதத் துவங்கினால் எழுதிக் கொண்டேபோகலாம்.

      பாம்பை ஒரு ஜீவ சக்தியாகக் கருதி, அதைக் கட்டுக்குள் 
கொண்டு வரும் முறையில் யோகா தவ யோகிகளால் பயிலப் 
படுகிறது, என்று நம்பப்படுகிறது. 

      பாம்பு துரத்தினால் நேராகவும் , யானை துரத்தினால் வளைந்து 
வளைந்து ஓடுவதுதான் தப்பிக்கச் சிறந்த வழி என்று சிறுவயதில் 
சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். இதுவரை எந்த அனுபவமும் 
ஏற்பட்டதில்லை. 

EEL எனப்படுவது பாம்பினமா, இல்லை மீனினமா.?எனக்குEEL 
தோலால் செய்யப்பட்ட ஒரு கைப்பை நண்பன் ஒருவனால் 
பரிசளிக்கப்பட்டது. அதனை என்னிடமிருந்து என் மகன் எடுத்துக் 
கொண்டு விட்டான். 

       பாம்பு பற்றிய உண்மை நிலைகள் நன்றாக அறியப்பட்ட இந்த 
காலத்தில் பாம்பை தின்பவர்களும் இருக்கிறார்கள், பாம்பை 
வழிபடுபவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் அவரவர் செளகரியம் 
மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயம். 

      கடைசியாக பாம்பு பற்றிய கவிதை ஒன்று. கவிதை வரிகள் 
நினைவுக்கு வரவில்லை. கருத்தினைக் கூறுகிறேன்.:- 
ஆலமரத்தில்  பாம்பு தொங்க, விழுதென்று குரங்கு தொட்டு 
பயந்தோடி உச்சாணி கிளையில் ஏறி தன் வால் பார்த்தும் 
பாம்பென்று பயப்ப்படுமாம்.
=====================================================   
.  










.

22 comments:

  1. ஒரு விக்கிப்பீடியாவுக்கும் அதிகப்படியான பாம்புத் தகவல்களாய் நிரப்பித் தள்ளிவிட்டீர்கள்.

    உங்கள் ப்ளாக்கிலேயே பாம்பு நெளிவது போல உணர்கிறேன் பாம்பு சார்....சாரி பாலு சார்.

    ReplyDelete
  2. பாம்பு துரத்தினால் நேராகவும் , யானை துரத்தினால் வளைந்து
    வளைந்து ஓடுவதுதான் தப்பிக்கச் சிறந்த வழி என்று சிறுவயதில்
    சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்


    ....ஆலமரத்தில் பாம்பு தொங்க, விழுதென்று குரங்கு தொட்டு
    பயந்தோடி உச்சாணி கிளையில் ஏறி தன் வால் பார்த்தும்
    பாம்பென்று பயப்ப்படுமாம்.


    ......தகவல்கள் மற்றும் கருத்துக்கள் களஞ்சியமாக பதிவு இருந்தது.

    ReplyDelete
  3. நல்ல ஆழமான அலசல்

    ReplyDelete
  4. பாம்புடன் எனக்கு அதிக பரிச்சயம் இல்லை. பாம்பென்றால் பயம் மட்டுமே உண்டு.

    போதாத வேளைக்கு ...... பாம்பாச்சாம் என்ற ஒரு மாதிரியான கதை, சிறுவயதில் ஒரு பெரியவர் கூறக்கேட்டு, நினைத்து நினைத்து இன்றும் சிரிப்பதுண்டு.

    பாம்பின் கால் பாம்பறியும், பாம்புச்செவி, பாம்பென்றால் படையும் நடுங்கும் என்றெல்லாம் சில பழமொழிகள் கேட்டதுண்டு.

    பாம்பு போலவே நீண்ட நல்ல பதிவு கொடுத்துள்ளீர்கள். நன்றி. வணக்கம்.

    ReplyDelete
  5. நல்ல பதிவு. நிறைய விஷயங்கள் கொடுத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. பாம்பு என்று எழுதும்போதே எழுத்துக்கள் நெழிவது போல் இருக்கிறது எப்படித்தான் இவ்வளவு நீளபாம்ம்ம்பு கட்டுரையை எழுதினீர்களோ...

    ReplyDelete
  7. பாம்பைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையே சம்ர்ப்பித்த தங்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. சுவாரசியமான பதிவு!


    //அவை நகரங்களில
    வீட்டுக்குள்ளும் தோட்டத்துக்குள்ளும் வரும்போது//

    ஏன்? வருகின்றன...நாளும் அவற்றின் இருப்பிடங்கள், அழித்து நாம் கபளீகரம் செய்கிறோம்.நான் இலங்கையைச் சேர்ந்தவன் என் இளமையில் சுற்றிய, என் கிராமத்தை அண்டிய காடுகள்; இப்போ குடியேற்றத் திட்டமாகிவிட்டது.

    //அவைகளை
    அமைதியாய் பிடித்து, எங்கோ கொண்டுவிட நான் கற்றுக்கொண்டு
    இருக்கவில்லை.//

    உங்களுக்கென்றல்ல! நம் தேசங்களில் எவருக்குமே அதைக் கற்றுத்தரவில்லை. பாம்பு கடவுள் என்று கதை கதையாகச் சொல்லிக் கொடுத்த அளவில் இம்மியளவும் அவற்றைக் கொல்லாது; பாதுகாப்பாக அப்புறப்படுத்திவிட வேண்டுமென்பது கற்பிக்கப்படவில்லை. இன்றளவும்

    பாம்பு வழிபாடு என்பது மரணபயத்தையொட்டியது போல், மரணத்துக்குப் பயந்த மனிதன் மரணம் தரும் பாம்பையும் வணங்கிவிட்டான்.
    இவ் வழிபாடு உலகில் ஆதி வழிபாட்டு முறையான எகிப்திய;மாயா; சீன எங்கள் இந்தியா யாவற்றிலும் வியாபித்துள்ளது. சீனர் வணங்குகிறார்கள் அதே நேரம் சாப்பிடுகிறார்கள்...புரியவில்லை.

    சிங்கப்பூர் சென்றிருந்த போது அங்குள்ள அம்மன் கோவிலில் இருந்த இரண்டு நாகங்கள் படமெடுத்துக் கொண்டிருக்கும் சிலை (இப்படிச் சிலை நம் கோவில்கள் எங்கும் உண்டு)அருகே சீனர்கள்; முட்டையும்; பாலும் கொன்டுவந்து வைத்துக் கும்பிட்டார்கள்.

    மேற்குலகில் இப்போது "பசுமைப் புரட்சி" நிறுவனங்களால் ; இவற்றின் நன்மை பற்றிய விளக்கங்கள்
    மாணவப்பருவத்திலே கொடுப்பதால் , இங்குள்ள
    பிள்ளைகள் இவற்றை கொல்வதில்லை.
    பிரான்சில், நான் ஒரு தொலைக்காட்சி விபரணச் சித்திரம் பாம்புகள் பற்றிப் பார்த்தேன். இங்குள்ள அதி
    விசம் கொண்ட பாம்பு ,சுருட்டை இனம். அச்சித்திரத்தில் புதிய காட்டு நிலம் ஒன்றைப் விவசாயத்துக்கோ; வீடுகட்டவோ பண்படுத்துமுன்; இங்குள்ள பாம்புப் பிடாரியை(பரம்பரையாக நம் குறவர் போல்)அழைத்து அவர் பாம்புகள் இருந்தால் பத்திரமாகப் பிடித்து; அவற்றை வேறுகாடுகளில் கொண்டு சென்று விட்டுப் அதற்குக் கூலி வாங்குகிறார்.அப்பாம்புகளை விடுமுன் அவர் ஒரு பிரார்த்தனையும் செய்தார் "என்னை மன்னித்துக் கொள்ளவும்; உங்கள் இடம் எமக்குத் தேவையாக உள்ளது. அதனால் உங்களுக்கு வேறு ஏற்பாடு செய்கிறேன்;எங்களுக்கு கெடுதல் செய்யவேண்டாம்" என்று கூறித் தலையில் பிடித்து வைத்துள்ள பாம்புபை ஒரு முத்தமிட்டு ஒவ்வொன்றாகப் பத்திரமாக விட்டார்.

    ஐரோப்பா, அமெரிக்காவில் பாம்பைப் பலர் செல்லப் பிராணியாக வளர்க்கிறார்கள். அதில் கொடிய
    ராஜ நாகத்தைக் கூட வளர்போரும் உண்டு.
    மருத்துவ உலகில் நாக விசத்துக்கு மிக மதிப்பு உள்ளதால்;தமிழ்நாட்டில் பல பாம்புப்பண்ணைகளுக்கு
    குறவர்கள் மூலம் நாகங்களைக் கொண்டுவந்து; விசம் சேர்ப்பதைப் தொகாவில் பார்த்தேன்.

    உலகிலே அயர்லந்தில் பாம்புகள் இல்லையாம்.

    சீனர்களும்; தென்கிழக்காசியர்களுமே பாம்பு சாப்பிடுவதாகப் பரவலாக நாம் நினைக்கிறோம். ஆனால் அமெரிக்க "கவ் போய்"-(cow boys) கள், அங்குள்ள கிலுகிலுப்பைப்(rattle snakes) பாம்பை அந்த மாதிரிச் சாப்பிடுகிறார்கள்.

    EEl எனும் விலாங்கை மீன் வகையாகவே கொள்கிறார்கள்.

    வீட்டில் நாய்,பூனை; கோழி, கினிக் கோழி என்பன வளர்ப்பதுடன்; வசம்பு கரைத்துத் தெளித்தால்; பாம்பு
    நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தலாம்.

    பாம்புக்கு மண்ணெண்ணெய் தெளித்தால்; அந்த எல்லைக்கெ வரமாட்டாது.(அனுபவ உண்மை)

    ReplyDelete
  9. @சுந்தர்ஜி, சுடச்சுட உங்கள் பின்னூட்டம் பார்த்தவுடன், ஒரு புதுத் தெம்பு வந்ததுபோல் இருந்தது.மிக்க நன்றி.

    ReplyDelete
  10. @சித்ரா, சனி மற்றும் ஞாயிறுகளில் வலைப்பக்கம் வருவதில்லை என்று படித்த நினைவு, என்னை புதிய பதிவுகளை அந்த இரு தினங்களை தவிர்க்கச் செய்கிறது. நீங்கள் படிக்க வேண்டும் கருத்து தெரிவிக்கவேண்டும் என்ற என் எண்ண்ம் சரிதானே. நன்றி, சித்ரா.

    ReplyDelete
  11. @ நாகசுப்பிரமணியம் சிறிதான நறுக் கருத்துக்கு நன்றி,

    @ ரத்தினவேல். வருகைகு நன்றி. உங்கள் வலையில் புதிய பதிவுகள் காணவில்லையே.

    @ இராஜ இராஜேஸ்வரிக்கு, தொடர்ந்து வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.பதிவுகளை தொடர உங்களை இணைத்ததற்கும் நன்றி.

    @ கோபு சாருக்கு, என் பதிவுகளுக்கு தொடர்பாளராக சேர்ந்ததற்கும் கருத்துக்கும் நன்றி
    @ கோமா அவர்களுக்கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  12. யோகன்-பாரிஸ், உங்கள் முதல் வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்துக்கும் நன்றி. உண்மையில் உங்கள் பின்னூட்டத்திலிருந்து, நான் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் மேலோட்டமாகப் படித்துவிட்டுப் போகாமல், ஆழ்ந்து படித்து, எனக்கும் விஷய தானம் செய்தமைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
  13. பாம்புகளைப் பற்றி அருமையான தகவல்கள்..நன்றி..:)

    ReplyDelete
  14. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  15. பாம்புகள் குறித்து அனைத்து விவரங்களும்
    அடங்கிய விரிவான பதிவு
    பாம்புகள் நம் ஊர்களில்
    மதத்தோடும் கலாச்சாரத்தோடும்
    பின்னிப் பிணைந்து கிடப்பதையும்
    பாம்பு குறித்த மூட நம்பிக்கைகளையும்
    சொல்லிப்போனவிதம் அருமை
    விஷய கனமுள்ள நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. பாம்புகளைப் பற்றி அருமையான தகவல்கள்..

    ReplyDelete
  17. சமுத்ரா,இராஜ இராஜேஸ்வரி, ரமணி, மற்றும் மாலதிக்கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  18. அப்பப்பா! பாம்பு குறித்து இவ்வளவு தகவல்களா? மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
  19. அன்புள்ள ஐயா...

    தொடர்பயணத்தில் தாமதம் நேர்ந்துவிட்டது. பாம்புகள் பற்றி தொடர்ந்து காலந்தோறும் தகவல்கள் வந்தாலும் அவை சுவையானவை. வெகு சுவை கூட்டியிருக்கிறீர்கள். நீங்கள் சொன்ன கருத்து பாரதிதாசன் பாடல். அப்பாடல்

    கிளையினிற் பாம்பு தொங்க
    விழுதென்று குரங்கு தொடட்டு
    விளக்கினைத் தொட்ட பிள்ளை
    வெடுக்கெனக் குதித்த தைப்போல்
    கிளைதொறும் குதித்துத் தாவிக்
    கீழுள்ள விழுதை யெல்லாம்
    ஒளிப்பாம்பாய் எண்ணி யெண்ணி
    உச்சிப்போய்த் தன்வால் பார்க்கும்

    பாம்புகுறித்து இலக்கியங்கள் வெகு கவனமாய் பேசியிருக்கின்றன. சித்தர்கள் பாம்பை ஒரு குறியீடாகவே எடுத்துப் பயன்படுத்தியுள்ளார்கள். எட்டு நாகம் தனை யாட்டுவோம் கடும் விடம் உண்போம் என்றெல்லாம் தங்கள் சித்து விளையாட்டுக்களில் பாம்புகளைக் கட்டுப்படுத்தும் சொற்களைக் கவிதைகளாகக் காணமுடிகிறது. மனதைப் பாம்பிற்கு உவமைப்படுத்திப் பாடியிருக்கிறார்கள். மனமென்னும் பாம்பை அடக்கவேண்டும் எனறு கூறியிருக்கிறார்கள். பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா என்று கண்ணதாசன் பாடல் உண்டு. வாழ்வின் தருணங்களில் ஏதாவது ஒரு இடத்தில் நாமும் பாம்பாகப் பதுங்கியும் ஒளிந்தும் ஊர்ந்தும் சீறியும் அடிபட்டும் புற்றில் உறைந்தும் கிடக்கிறோம். மணிமேகலைக் காப்பியத்தில் நிலையாமை பற்றிப் பேசும்போது கரையான் புற்றுக்குள்ளே பாம்பு அடங்கியிருப்பதைப்போல மனமாகிய புற்றுக்குள் கோபமாகிய பாம்பைச் சுமந்திருக்கிறோம் என்று. பாம்பு நமது வாழ்வின் ஒரு தவிர்க்கமுடியாத அம்சம் என நினைக்கிறேன். கவனமான அதேசமயம் பொறுப்பான பதிவிது. நன்றிகள்.

    ReplyDelete
  20. மோகன் ஜிக்கு வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி, ஹரணி ஐயாவுக்கு பாரதிதாசன் பாடலோ என்று ஒரு ஐயம் இருந்தது. என்னிடமுள்ள அவருடைய பாடல் தொகுப்பில் அது இல்லாததால் முழுப் பாடலை எழுதவோ, படைப்பாளியைக் குறிப்பிடவோ இயலவில்லை. பாம்பு குறித்து மேலும் தகவல்கள் தந்தமைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  21. படிச்சு முடிச்சதும் காலுக்குக் கீழே பாம்பு ஊர்வது போல ஒரு பயம். கடைசி வரி படிக்கும் போதே பாரதிதாசனின் பாடல் நினைவுக்கு வந்தது . ஹரணி சார் முந்திக் கொண்டார்கள்.

    ReplyDelete
  22. பாம்புடன் என்னோட அனுபவங்களே தனி! கிட்டத்தட்ட ஒண்ணாக் குடித்தனம் பண்ணி இருக்கோம்! :) இங்கே நீங்க பொதுவான கருத்துக்களையே பகிர்ந்திருக்கீங்க! என்னோட தனிப்பட்ட அனுபவங்கள்! :))))

    ReplyDelete