Wednesday, December 28, 2011

இளைய பாரதம்-நம்பிக்கை.

                                    இளைய பாரதம் -நம்பிக்கை.
                                   ---------------------------------------

கூட்டம் அலை மோத நெரிசலில் பெண்ணொருத்தி
படும் பாடு கண்டு கொதித்தது அவன் மனசு.
பேரூந்தொன்றில் பயண்ம் செய்கிறான் அவ்விளைஞன்
சந்தடி சாக்கில் அரைக் கிழவன் ஒருவன் அப்பெண்ணின்
மேல் வேண்டுமென்றே உராய்தல் கண்டு அருகில்
வந்த நடத்துனரிடம் சுட்டிக் காண்பிக்க அவரும்
சமயோசிதமாக நடுவில் சென்று மெள்ள அக்கிழவனை
அப்புறப் படுத்துகிறார். பிறகு தன் கட்டை விரல் உயர்த்தி
இளைஞனுக்கு சமிக்ஞை செய்கிறார். பார்த்துக் கொண்டிருந்த
எனக்கு இளைய பாரதம் மேல் நம்பிக்கை கூடியது
-------------------------------------------------

2 comments: