Wednesday, May 20, 2020

ஒரு ஆருடம்



                                      ஒரு ஆருடம்
                                        -------------------



இந்த கொரோனா தொற்று வ்ந்தாலும் வந்தது ஆலயங்கள்எல்லாம்  மூடப்பட்டு விட்டன  ஆனால் என்ன பக்த கோடிகளின்   பிரார்தனைக்கு குறைவே இல்லை நம் கையை மீறிப்போய்விட்டால் நடப்பது அவன் சித்தம் நல்லதே நடக்க்  பிரார்த்திபோம்என்று கருதுகிறார்கள்  என் சிந்தனை சற்று  வித்தியாசமானது  அவனுக்கு தெரியாததா ஒன்பது  அவதாrரங்கள் எடுத்து  அவனியை ரட்சித்தவனுக்கு தெரியாதா உலகை அழிய விடமாட்டான்   உலகு அழியும் குறிகள் எல்லாம் காட்டுகிறான்     அனாத  ரட்சகன் அல்லவா  கடைசி நேரத்தில்வருவான் இப்போதுஇருப்போரின்   பிரார்த்தனைக்கு செவி சாய்க்க கடைசியில் இருக்கும் சிலருக்கு உலக அழிவின்  பயத்தை ஏற்றி மீண்டும்  ப்டைப்பு தொழிலை துவங்கி அவதார நோக்கினை நிறை வெற்றுவான்  நம் இன்றைய பிரார்த்தனை நாளைதான்   நிறைவேறலாம்
 அரசு தொற்று பரவாமல் இருக்க எடுக்கும்  நடவடிக்கைகளை எல்லாம் இதழிலோடும்  புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறாrர் அரசுக்கு  வேண்டியது செய்வது போல் இருக்கும்செயல்தானே கைகளைக் க்ழுவுவதோ  முகமூடி அணிவதோ  தொற்றை தவிர்க்கும் என்னும் நம்பிக்கை மட்டும் இல்லை கடவுள் மேல் பாரத்தை  நாம் போடுவோம்   நடப்பது நன்றாக நடந்தது இனி நடப்பதும் நன்றாகவே நடக்கும் என்று கீதையில்கண்ணன்  சொல்லாததை எல்லாம்   சொன்னது போல்  பாவிப்போம்  ஆனால் நம்பிக்கை என்னும் வார்த்தையை அடிக்கடி கூறுவோம் நான் சொல்வது ஏதோ ஆருடம்போல் இருக்கும்
 என்மகன்  2020 ம் ஆண்டு  சந்துஷ்டியாக இருக்கும்  என்று சொன்ன     சோதிடனை தேடிக் கொண்டு இருப்பதாக கூறுகிறான் அதிகம் சொல்லி அது நடக்காமல் போனால். என்னையு ம் பலர் தேடலாம்

நான் இதுவரை தொற்றுக்காக  எடுக்கும்  பரிசோதனை மற்றும் கோரண்டைன்   எல்லாம்  இலவசம் என்று நினைத்திருந்தேன்   ஊரடங்கு  தளர்த்தப்ப்ட்டு விட்டதே ஒரு எட்டு வந்து போயென்   என்று மகனிடம்  சொன்னேன்  வந்து போவது எளிதல்ல என்றான் அதற்கு அனுமதி  வாங்க வேண்டும்   நாள் ஒன்றுக்கு ரூ 1800 கட்டி கோரண்டைனில் இருக்க வேண்டும்  என்றான்  இருபது லட்சம் கோடி ரூபாய எப்ப்டிஎல்லாமோ செல்விடும் அரசு  எப்படி எல்லாம்  பணம்  வசூலிக்,கிறர்கள் என்று சொல்வதில்லை  சில நாட்களுக்கு முன்  ரயிலில் புலம் பெயர்ந்தார்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து போராடினதும்நினைவுக்கு வந்தது 

  நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன்(8) கீதை அத்தியாயம்  4  சுலோகம் எட்டு
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே "எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை எடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக" அதர்மமேநிலை பெற்று  விட்டதாகத்கோன்றியதால் எழுதியபதிவு   i


           -
      

47 comments:

  1. //நம் இன்றைய பிரார்த்தனை நாளைதான் நிறைவேறலாம்//

    உண்மைதான் ஐயா. நலமே விளையட்டும்

    ReplyDelete
    Replies
    1. தினமும் எழுந்து நாளை என்றால்

      Delete
  2. கோவிந்தும் கோவிட்டும் ஒரே போல் பெயர்  ஆகவே கோவிந்தன் தான் இந்த வைரஸ் என்று எனக்கு ஒருவர் அனுப்பியிருந்தார். சம்பவாமி யுகே யுகே? ?

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை அதர்மத்தை அழிக்க கோவிந்தனின் திருவிளை யாடலோ

      Delete
  3. "அதர்மமேநிலை பெற்று விட்டதாகத்கோன்றியதால்" நீங்கள் எழுதியதைப் படித்தேன். இவ்வளவு சீக்கிரம் அதர்மம் எப்படி நிலைபெற்றுவிட முடியும்? இன்னும் எவ்வளவோ பேர் பிரதமர் மற்றும் முதல்வர் கனவுகளுடன் வலம் வருகிறார்களே அவர்கள் நிலை என்னாவது? பொறுத்திருந்து அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே!

    நிற்க, நீங்கள் வெளியில் போகாமல் இருப்பதுதான் நன்மை என்பதை மறக்கவேண்டாம். வயதானவர்களை கொரோனாம்பிகைக்கு மிகவும் பிடிக்கும் என்று ஆங்கில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதுவும் ஒரு வித கரந்தொடுக்கலோகடவுள்நின்று கொல்லும் என்பார்கள் அதற்கு இப்படியா நான்நினைத்தாலும் எனக்கு வெளியே போக முடியாது நான் கோரண்டைனில் ஊரடங்குக்கு முன்பே இருக்கிறேன்

      Delete
  4. அவன் வருவான் ஐயா. மேலும் உங்களைப் போன்றோரின் ஆசிகளும் நல்ல விடியலைத் தரும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு ஒரு பாடம் புகட்டி பிந்தான் வருவான் என்று தோன்றுகிறது

      Delete
  5. அனைத்தும் ஒரு நம்பிக்கையே... நல்லதே நடக்கட்டும்... நடக்கும்...

    ReplyDelete
    Replies
    1. அதற்குள் பல உயிர்கள்பலியாக வேண்டுமா

      Delete
  6. நல்லதே நடக்கட்டும் ஐயா

    ReplyDelete
  7. இலவசமாக இப்போது எல்லோருக்கும் கிடைப்பது கொரோனா மட்டுமே மற்ற எல்லாவற்றிற்கும் காசு பணம் துட்டு வேண்டும் அதுவும் இலவசமக வந்ததை திருப்பி அனுப்ப

    ReplyDelete
  8. அதை ஏற்கனவே பாதிக்க பட்டவர்தான்கொடுக்க வேண்டும் போல

    ReplyDelete
  9. >> நமது இன்றைய பிரார்த்தனை நாளை தான் நிறைவேறலாம்..<<

    எப்படியோ நிறைவேறட்டும்...
    எல்லாருடைய எதிர்பார்ப்பும் அதுவே!..

    ReplyDelete
    Replies
    1. தினமும் நாளை என்று சொல்லிக்கொண்டிருக்க வேண் டுமா

      Delete
  10. கோயில்கள் எதுவும் மூடப்படவில்லை. அந்த அந்த நாளைக்கு உரிய கால வழிபாடுகள் எல்லாம் ஆகம முறைப்படி நடந்து கொண்டிருக்கின்றன. திருவிழாக்களும் நிறுத்தப்படவில்லை. பக்தர்கள் வருகைக்குத் தான் தடை! கோயில்களை அப்படி எல்லாம் மூடி வைக்க முடியாது. மூடி வைக்கவும் கூடாது. பிரார்த்தனைகளைக் கோயிலுக்குப் போய்த் தான் நிறைவேற்ற வேண்டும் என்பது இல்லையே! எங்கே வேண்டுமானாலும் நிறைவேற்றிக்கொள்ளலாம். இப்போது அனைவரின் எதிர்பார்ப்பே இந்தக் கொரோனா தொற்றில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும் என்பதே!

    ReplyDelete
    Replies
    1. பக்தர்கள் இல்லாத கோவில்கள்?வருமுன் காக்க வேண்டும் இல்லை என்றால் கோவிட் சாவா மூச்சுத்திணறல் இருக்குமாமே நினைத்துப் பார்க்க இயலவில்லை சீக்கிரமே வந்தால் விரட்ட ஒரு மருந்துதேவை

      Delete
  11. க்வாரன்டைன் மருத்துவமனைகளில் இருந்தால் தான் காசு என நினைக்கிறேன். வீட்டிலேயே தனிமைச்சிறையில் இருப்பவர்களுக்கு இல்லை என நினைக்கிறேன். இது விஷயம் சரியாத் தெரியலை. விசாரிக்கணும். எப்படி இருந்தாலும் உங்கள் மகன் சென்னையிலிருந்து வருவதாக இருந்தால் ஈ-பாஸ் கிடைத்து வரவேண்டும். கொஞ்சம் கஷ்டம் தான்.

    ReplyDelete
    Replies
    1. அரசாகவே வந்து சோதித்தாலும் நாம்பணம் கட்ட வேண்டுமா நானும் யாராவது நம்பகமான பதில் தருவார்க்ள் என்று எதிர்பார்க்கிறென்

      Delete
  12. Replies
    1. பரிசோதனை தவறு பரிசோதிப்பு சரி என்கிறிர்களா

      Delete
    2. எனது கணினியில் சிறிய பரிசோதிப்பு ஐயா.

      Delete
    3. பரிசோதிப்பு முடிந்து விட்டதா ஜி

      Delete
  13. இந்தச் சின்ன கொரோனா விஷயத்துக்கு எல்லோரும் பயப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. உலகம்முழுவதும் பரவி இருக்கும் கொரோனா சின்ன விஷ்யமா நாளுக்கு நாள் அதிகரிக்கு உயிர்பலி சின்ன விஷயமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை

      Delete
  14. நேர்மறை எண்ணங்கள்  வளர்த்தால் அதுவே நலம்.  மனதுக்கு பீதியாவது இல்லாமல் இருக்கும்.  எங்கள் தெருவில் இருக்கும் சிறு பிள்ளையார் கோவிலை மாலை வேளைகளில் மட்டும் திறந்து வைத்து உட்கார்ந்து கொள்கிறார் அர்ச்சகர்.  

    ReplyDelete
    Replies
    1. நேர்மறைற எண்ணங்கள் என்று இருக்கும் நிலையை நினைக்காமல் இருக்க முடியுமா

      Delete
  15. ithaiyum paarungal

    https://tamil.oneindia.com/news/bangalore/bangalore-quarantine-hotel-rooms-asking-more-money-and-no-cleanliness/articlecontent-pf458583-386067.html

    ReplyDelete
    Replies
    1. ஒரு கேள்விக்கு பதில்கிடைத்தது இன்னொரு கேள்வி பரிசோதனை அவர்களாகச் செய்தால் நாம் பணம்கட்ட வேண்டுமா

      Delete
    2. No Idea.I think there is no testing done. Straight to quarantine. Recently BSY has announced that no person from Tamil nadu, Kerala, Gujarat, Maharashtra are permitted to enter Karnataka even with E-pass.

      Delete
    3. என் கேள்வி அயல் மாநிலங்கள்ல் இருந்து கோரண்டைனுக்கு வருபவர் பற்றிஅல்லபொதுவாக தொற்று இருக்கிறதா என்பதற்கு செய்யும் சோதனை பற்றியே

      Delete
    4. ஆமாம் நீங்கள் சொல்லும் மாநிலங்களில் இருந்து இங்கு யாரும் என்டர் செய்யக் கூடாதுனு சொல்லறாங்க. ஆனால் ஃப்ளைட், ரயில் எல்லாம் இன்றிலிருந்து தொடக்கம் என்று செய்தி அடிபடுகிறதே.

      கீதா

      Delete
  16. https://www.dnaindia.com/india/report-lockdown-40-karnataka-bans-entry-of-people-from-gujarat-maharashtra-kerala-tamil-nadu-till-may-31-2825194

    ReplyDelete
  17. அதே [போல் வேற்று மாநிலங்களும் கர்நாடகாவிலிருந்து செல்வோரை அனுமதிப்பதில்லையா

    ReplyDelete
    Replies
    1. No idea. Andhra and Telangana people can go to Karnataka.

      In Kerala People from other states having e-pass are allowed. They should remain in house quarantine. Test will be done (no fees). If the test is positive they will be admitted in hospitals.

      Delete
    2. பதில்களுக்கு நன்றி

      Delete
    3. இப்போது இங்கு உள்ளூரில் பஸ் இயக்குகிறார்கள் ஆனால் இத்தனை நாள் முடக்கி வைத்ததற்கும் சேர்த்து காசு வாங்குறாங்க போல அதுவும் பாஸ் வைத்திருப்பவங்க மட்டும்தான் பொலாம்னு சொல்லிட்டு 30 பேர்தான் அனுமதி ஒரு பஸ்ஸில் சோசியல் டிஸ்டன்ஸ் என்று சொல்லிவிட்டு இப்போது பஸ் பிதுங்கி வழிந்து கூட்டம் எங்கள் ஏரியாவிலிருந்து மெஜெஸ்டிக் செல்லும் பஸ்ஸில். டிக்கெட் ரூ 70 குறைந்த அளவு டிஸ்டன்ஸ் என்றாலும்....முன்பும் டே பாஸ் ரூ70 தான் பல பஸ் மாறி பல இடங்களுக்குச் சென்று வரலாம். ஏசி பஸ் தவிர. ஆனால் இப்போது கட்டணமெ ரூ 70. பிற கட்டணங்கள் இல்லை. எங்கள் ஏரியாவிலிருந்து மெஜஸ்டிக் செல்ல நார்மலாக ரூ22 இப்ப அதெல்லாம் இல்லை.

      நாங்கள் கூடியவரை தவிர்க்க முடிந்த வரை எந்த ரிஸ்கும் எடுக்கத் தயாராக இல்லை.

      கீதா

      Delete
    4. இதுவரை க்ரீன் ஜோனாக இருந்த எங்கள் ஏரியா இப்போது ஊரடங்கு தளர்ந்த நிலையில், தொற்று வந்துவிட்டது.

      கீதா

      Delete
    5. நோய் வராமல் தடுக்க அடிக்கடி கை கழுவவும்

      Delete
    6. இது வரை விட்ட பணத்தை எடுக்க வேண்டுமே

      Delete
  18. // இப்போதுஇருப்போரின் பிரார்த்தனைக்கு செவி சாய்க்க கடைசியில் இருக்கும் சிலருக்கு உலக அழிவின் பயத்தை ஏற்றி மீண்டும் ப்டைப்பு தொழிலை துவங்கி அவதார நோக்கினை நிறை வெற்றுவான் நம் இன்றைய பிரார்த்தனை நாளைதான் நிறைவேறலாம்.//


    நீங்கள் சொன்னது நடக்கலாம் ஐயா. இந்த ஊரடங்கு நேரத்தில் கணவன்மார்கள் வீட்டில் இருப்பதால் அடுத்த ஆண்டு புதி வரவுகள் அதிகம் இருக்கும் என்கிறார்கள் சிலர்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் சோஷியல் டிஸ்டன்ஸ் வீட்டிலும் இருந்தால் வாய்ப்பே இல்லை

      Delete
  19. நல்லது நடக்க வேண்டும். உலகம் எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அந்த நாளை நம்பிக்கையுடன் எதிர்நோக்கும்வோம் சார்

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வதார புருஷனை வேண்டுவோம்

      Delete
  20. நல்லதே நடக்கும் என்று நம்புவதுதான் இப்போதைக்கு வாழும் வழியாக இருக்கிறது.

    ReplyDelete
  21. கடவுள் உலகை அழிய விடமாட்டன் என்பது என்னவோ உண்மைதான் ... ஆனால் இந்த மனித சமூகம் உலகத்தை விரைவிலேயே அழித்துவிடும் போலுள்ளது ஐயா !!! ....

    ReplyDelete