Wednesday, June 22, 2022

ரசிக்க பகிர சில எண்ணங்கள்

 


            அண்மையில் ஒரு பதிவு படித்தேன். அதில் அத்வைதம்,
துவைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற விஷயங்களை எடுத்து
அலசியிருந்தார். அந்தப் பதிவர். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மா
வுக்குமுள்ள சமன்பாடுகள் குறித்த அலசல். அதைப் பற்றி நான்
எதுவும் எழுதப் பொவதில்லை. அடிக்கடி எழும் இந்த ஜீவன்
ஆத்மாபோன்றவற்றின் பொருள் விளங்காமலேயெ அல்லது,
விளங்கிக் கொள்ளும் புத்தி இல்லாமலேயே காலம் கழிந்து
விடுகிறது. இன்று நேற்று எழுந்த கேள்விகள் அல்ல இவை.
இருந்தும் அனைவரும் புரிந்து கொள்ளும் ,அல்லது ஒப்புக்
கொள்ளும் விளக்கங்கள் இருக்கிறதா.? இல்லை என்று சொல்
வதைவிடத் தெரியவில்லை என்று சொல்வதே சரியாகும். தினம்
இறந்து ,தினம் பிழைக்கும் நாம் இருக்கிறோம் என்று சொல்வதே
உயிர் என்று ஒன்று இருப்பதால்தானே. அதுதான் என்ன.?எளிதாக
சொன்னால் காற்று எனலாமா.? அதுவும் தவறாக இருக்கும்.
பிராணவாயு ( ஆக்சிஜன் ) என்பது கூடுதல் சரியாக இருக்கும்.
மூச்சுக் காற்று உடலுக்குள்ளேயும் உடலை விட்டு வெளியும்
சென்று கொண்டிருந்தால் உயிருடன் இருக்கிறோம் என்று
புரிகிறது.ஐம்புலன்களின் செயல் இழந்து விட்டாலும் மூச்சுக்
காற்று வந்து போய்க் கொண்டிருந்தால் உயிருடன் இருக்கிறோம்
என்று உணர்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தில் வாயு மண்டலத்தில்
இருக்கும் அநேக வாயுக்களில் பிராணவாயு மட்டுமே உயிருக்கு
உத்தரவாதம் அளிக்கிறது. இந்தப் பிராண வாயுவை மின்சாரத்
துக்குஒப்பானதாக எடுத்துக் கொள்ளலாம். வாஷிங் மெஷின்,
ஃப்ரிட்ஜ்,ஹீட்டர், லேத், பல்ப், போன்றவை மின்சாரம் என்ற
சக்தி செலுத்தப் பட்டால் வேலை செய்கிறது. அதேபோல இந்த
உடல் என்னும் மெஷினும் பிராணவாயு செலுத்தப் பட்டால்தான்
இயங்கும்.கேள்வி அதுவல்ல. உயிர்தான் ஆத்மாவா.? உயிர் உள்ள
உடலில் வந்து போகும் பிராணவாயுதான் ஜீவாத்மாவா.?பிரபஞ்சத்
தில் ஊடுருவி இருக்கும் வாயுமண்டலத்திலுள்ள பிராணவாயு
தான் பரமாத்மவா?ஜீவாத்மாவால் இயங்குவது இந்த உடல் என்பது
போல பரமாத்மாவால் இயங்குவதுதான் இந்த பிரபஞ்சமா.? இப்படி
எண்ணிக் கொண்டால் இந்த ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும்
உள்ளசமன்பாடு, ஒரு FINITE NUMBER-ஆ எது.எப்படியாயினும்
இரண்டையும் இயக்குவது என்ன, யார்.?மீண்டும் BACK TO SQUARE
ONE.  இதைத்தானே நான் ஒருமுறை எழுதியிருந்தேன்.,
அறியாமை இருளிலிருப்பதே சுகம் என்று.

       முடிவு காணமுடியாத,அல்லது முடிவு காணத் தெரியாத
எண்ணங்களை விட்டு விடு மனமே.அதெப்படி விட முடியும்.?
அநாதி காலந்தொட்டு கற்பிக்கப் பட்டும், நம்பப் பட்டும் வருகிற
விஷயங்கள் எல்லாம் மனதுக்கு ஒப்புவதில்லையே.கேள்வி
கேட்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதவர் மத்தியில்
சந்தேகமே வரக் கூடாது.!
                             **********************************

      இந்த அவதாரக் கதைகளை எடுத்துக் கொள்வோம். அவதாரங்
களைக் கதைகள் என்று சொல்லுவது ஆட்சேபிக்கப்படலாம்.
என்ன செய்ய. ..கதைகளையும் கற்பனைகளையும் உண்மை
என்று நம்ப இந்தப் பாழாய்ப் போன புத்தி மறுக்கிறதே. இந்தக்
கதைகள் கற்பனைகள் என்று ஒரேயடியாய் ஒதுக்கி விட்டு அதில்
கூறப்பட்டிருக்கும் கருத்துக்களையும் போதனைகளயும் தள்ளி

விடுவதும் சரியல்ல. மனம் ஒப்புவதை ஏற்போம்.இல்லாததை
ரசித்து விட்டு விடுவோம். நம்புபவர்கள் மனம் புண் படுதத
வேண்டாமே.

      “பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
        தர்ம ஸம்ஸ்தாபனார்த்தய ஸம்பவாமி யுகே யுகே “

என்று பகவான் கீதையில் கூறியிருக்கிறார். உலகில் எப்போது
எப்போது அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போது அப்போது
அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்கிறார். இது
கிருஷ்ணாவதாரத்தில் தெரியப் படுத்தியது. இதை
அடிப்படையாய் வைத்து மற்ற அவதாரங்களை அலசினால்
அவற்றை ஏற்பது எனக்குக் கஷ்டமாயிருக்கிறது. நான்முகனின்
ஆணவத்தை அடக்க மச்சாவதரம்;ஆணவத்தால் வலிமை
இழ்ந்த தேவேந்திரனுக்கு செல்வம் சிறப்புடன் கூடிய வலிமை
பெற்றுத்தர ,அமுதமெடுக்க, திருப்பாற்கடலைக் கடைய மந்தார
மலை நிலை பிறழாமல் இருக்க எடுத்த ஆமை அவதாரம்;
வைகுண்டக் காவலர்கள் ஜயன், விஜயன் ஆகியோர்,ஆணவம்
கொண்டு சனகாதி முனிவர்களால் சபிக்கப்பட அவர்களை
மீண்டும் ஆட்கொள்ள எடுக்கப்பட்ட அவதாரங்களே பன்றி
மற்றும் நரசிம்மாவதாரம்.;கோயில் விளக்கு அணையாமல்
இருக்கத் திரி தூண்டிக் கொண்டிருந்த எலிக்கு மூவுலகும் ஆள
சிவனார் கொடுத்த வரத்தின் பயனாய் பலிச்சக்கரவர்த்தியாகப்
பிறந்து மூவுலகை ஆண்டவனின் கர்வம் அடக்க எடுத்த வாமன
அவதாரம்;தந்தை சொல் கேட்டுத் தாயை வெட்டிதந்தையின்
காமதேனு பசுவுக்காக அவரைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க
இருபத்தொரு தலைமுறை அரசர்களை அழித்த பரசுராம அவ
தாரம்;மனைவியைக் கவர்ந்து சென்ற ராவணனைக் கொன்ற
ராமாவதாரம்;உழவுத் தொழிலின் மேன்மையை உணர்த்தக்
கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராம அவதாரம்;பூமியின்
பாரத்தைக் குறைக்கவும் ( எப்படி.? கௌரவ பாண்டவர் போரில்
கணக்கற்றவர்களின் இறப்பாலா.?) சிலபல அரக்கர்களைக்
கொல்லவும் எடுத்த கிருஷ்ணாவதாரம் போன்றவற்றில் எல்லாம்
கடவுளை எங்கே காணமுடிகிறது.?கதைகளில் சொல்லப்பட்டுள்ள
சிலபல கருத்துக்கள் மனசுக்கு இதம் தரலாம். உதாரணத்துக்கு
சிறுவன் பிரகலாதனின் நம்பிக்கையை வலியுறுத்தும் நரசிம்மாவ
தாரக் கதை, தந்தை சொல் தட்டாத ராமன், நண்பனுக்கு உதவும்
ராமன், அநிதியை எதிர்க்கும் ராமன், என்று நல்ல குணங்களை
உணர்த்திச் செல்லும் ராமாயணக் கதை, பிறக்கும்போதே தான்
கடவுளின் அவதாரம் என்றுணர்ந்துஅதற்கேற்பச் செயல் புரியும்
கிருஷ்ணாவதாரக் கதை இவற்றிலிருந்து, வாழ்க்கைக்குப் பலன்
தரும் பல கருத்துக்கள் கொள்ளப்பட வேண்டியவையே தவிர
இவர்கள் எல்லோரும் அதர்மத்தை அடக்க வந்த கடவுளின் அவ
தாரங்கள் என்பது எனக்கு ஏற்றுக் கொள்வது இயலாததாய்
இருக்கிறது. அனைத்து கதைகளிலும் ஆங்காங்கே தெளிக்கப்
பட்டிருக்கும் நல்ல விஷயங்களை முடிந்த வரை பின்பற்ற
முயலுவோம். கதைகளைக் கதைகளாகவே உணர வேண்டும்.
நம்பிக்கை விளைவிக்கும் ,வாழ்வுக்கு ஆதாரமாயிருக்கும்
கருத்துக்களை உள் வாங்குவோம். மற்றவற்றைப் பதராக உதறு
வோம். எனக்குத் தெரியும், அறிந்தோ அறியாமலோ கேள்வி
கேட்காமல் பழக்கப் படுத்திவிட்ட உணர்வுகளை ஆராயத்தொடங்
கினால் எதிர்ப்புகள் பலமாய் இருக்கும் நான் என் எண்ணங்களைக்
கூறுகிறேன். இதை இன்னொரு கோணத்தில் அணுகுகிறேன்
அவ்வளவுதான்.வேறொன்றுமில்லை.
                                             *********************

         எதை எழுதும் போதும் தன்னிலைப் படுத்தாமல் பொதுவாக
எழுத முடிவதில்லை. எண்ணங்களைக் கடத்தவே எழுதுகிறோம்.
எழுதப்படும் எண்ணங்கள் பலரிடம் சென்றடைந்தால் மகிழ்ச்சியே.
பலரிடம் சென்றடைகிறதா, அதன் தாக்கம் என்ன என்று அறிய
வரும் பின்னூட்டங்களை அளவு கோலாகக் கொள்ளலாமா. ?அது
சரியென்று தோன்றவில்லை. பதிவர்களில் பலர், ஒருவருக்கு
நாம் பின்னூட்டம் எழுதினால் அவர்கள் நம் பதிவுக்கு வருகிறார்
கள். பின்னூட்டங்களின் எண்ணிக்கையில் பலவிதமுண்டு. ஒரு
பதிவுக்கு ஒருவரே ஏழெட்டு பின்னூட்ட மிடுவதை காண்கிறேன்.
சில சமயங்களில் பின்னூட்டங்கள் பதிவைவிட நீளமாகிப் போய்
விடுகிறது. அநேகமாக எல்லோரும் பாராட்டியே எழுதுகிறார்கள்
மீறிப் போய் யாராவது விமரிசனமாக எழுதினால் அது விரும்பப்
படுவதில்லை. விமரிசனம் எனும் போது எழுத்துத்தான் விமரி
சிக்கப்பட வேண்டுமே தவிர எழுதுபவரல்ல. ஒரு சிலர் சளி பிடிக்
கும் அளவுக்குப் பாராட்டில் குளிப்பாட்டுகிறார்கள் அந்தக் காலப்
பரிசில் வேண்டும் புலவர்கள் நினைவு வருகிறது. ஒரு சிலர்
பதிவிடும்போது என்ன சொல்ல வருகிறார் என்று புரிவதில்லை.
சில ABSTRACT எண்ணங்கள் சென்றடைவதில் சிரமமிருக்கிறது.
புரிந்தால் என்ன, புரியாவிட்டால்தான் என்ன.. இருக்கவே இருக்
கிறது டெம்ப்ளேட் காமெண்ட்ஸ். என்னை பொறுத்தவரை நான்
எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடாக இருக்க வேண்டும்
என்று எண்ணுவதில்லை. சிந்தனையைக் கிளறினாலேயே நான்
எழுதுவதன் பலனை அடைந்ததாக எண்ணுகிறேன். யாருடையப்
பதிவையும் யாரும் கட்டாயப் படுத்திப் படிக்க வைக்க முடியாது.
எழுத்துக்கள் வாசகரை ஈர்த்து வர வேண்டும்.என்னுடைய மெயில்
பெட்டியில் வந்து சேரும் பதிவுகள் பற்றிய தகவல்கள்
எண்ணிக்கை என்னைத் திக்கு முக்காடச் செய்கிறது

ஈர்க்கப்பட்டு நான் படிக்க விரும்பினால் அவர் பதிவின் தொடர்
பாள்னாகிறேன். அவர் எழுதும் பதிவுகள் உடனுக்குடன் தெரியும்.
சில நேரங்களில் சிலரது பதிவுக்கு நான் இடும் பின்னூட்டம்
எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்று தெரிய மீண்டும் அவர்கள்
வலைக்குச் செல்வேன். மற்ற பதிவர்களும் அப்படித்தான் என்று
எண்ணுகிறேன். சில காமெண்டுகளுக்கு எவ்வாறு REACT  செய்வது
  என்று தெரிவதில்லை. முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன்.
பதிவுகளில் நான் ஒரு I ALSO RUN  என்னும் ரகம்தான் என்று
  

                மாறுதலுக்கு இப்படியும் ஒரு சிறுகதை
                       ------------------------------------------------
தினமும் நான் செல்லும் பஸ்ஸிலேயே வருகிறான். நான்
இறங்கும் நிறுத்தத்தில் அவனும் இறங்குகிறான். என்னையே
பார்த்துக் கொண்டு வருகிறானோ.?நான் பார்த்தால் வேறு
பக்கம் பார்க்கிறான். இது இப்படியே தொடர்ந்தால் நல்லதற்கல்ல.
வீட்டில் சொல்லலாமா ? வேண்டாமா.?

நான் அவனுக்குத் தெரியாமல் கண்காணித்ததில் அவன் வேலை
செய்யுமிடம் நான் பணிபுரியும் கட்டிடத்தின் மேல் மாடியில்
இருந்தது. அவன் வீடு எங்கள் தெருவில் எங்கள் வீட்டுக்கு
மூன்றாம் வீடு.

ஒரேதெருவில் குடியிருந்தும் ,இரே கட்டிடத்தில் பணி புரிந்தும்
ஒருவரை ஒருவர் தெரியாமல் இருந்திருக்கிறோம். !!!1!!1
---------------------------------------------------------------------------

ஒரு ஜோக் படித்தேன்.ஆங்கிலத்தில் இருந்தது. தமிழாக்கினால்
சுவை போய்விடும் .அதனால் அதனை அப்படியே தருகிறேன்.
இது ஒரு "A" ஜோக். ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.


Do you speak English.?
Yes.
Name.?
Abdul al-Rhasib.
Sex.?
Three to five times a week.
No, no, - I mean , male or female.?
Yes, male female, and sometimes camel.
Holy cow.!
Yes. cow,sheep,animals in general. 
But, is it not hostile.?
Horse style, doggy style, any style.
Oh, dear.!
NO, no , deer runs too fast. 
-----------------------------------------------------


புனித தாமஸ் கேரளாவுக்கு வந்தார். அவர் ஏசு நீரின் மேல் j9
நடந்தார் என்றார்.ut

யாரும் நம்பவில்லை.

அவர் மேலும் சொன்னார்.”ஏசு நீரை வைன்( wine ) ஆக மாற்றினார்.”

பாதி கோட்டயம் கிருஸ்தவர்களாக மாறியது. !
---------------------------------------------------------------

(
                                    ================










7 comments:

  1. மூச்சு விடும் அந்த ஒரு நொடி நேரமே வாழ்க்கை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்...

    புராண புரட்டுகளில் வாழ்வின் உறுதிப் பொருளை காணவே முடியாது... இருந்தால் தானே...?

    சிறுவயது முதல் உலகின் ஒரே அற நூலை அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு இருந்தீர்கள் என்றால், தங்களுக்கு இந்த குழப்பமான பிதற்றல் வந்தே இருக்காது ஐயா... அதில் நிலையாமையும் உண்டு... வாழ்வாங்கு தெளிவுடன் வாழ வழியும் உண்டு... ம்...

    ReplyDelete
    Replies
    1. குக்ழப்ப பிதற்றல் புதிய வார்த்தையாடல் இன்று கிடைத்தது

      Delete
  2. ஜீவாத்மா பரமாத்மா எழும் கேள்விகளும் சந்தேகங்களும் சிந்திக்க வைத்தது.

    ReplyDelete
  3. அத்வைதம், துவைதம். விஷிஸ்ட்டாத்வைதம் என்று தத்துவத்தில் துவங்கி, கடவுள் மிருகமாய், மனிதனாய் எடுத்த அவதாரங்களை பற்றி அலசி, வாசகர்களின் பின்னூட்டங்கள், தன்மை, போன்றவற்றை ஆராய்ச்சி செய்து, நகர வாழ்க்கையில் எவ்வாறு "அவரவர் காரியம் அவரவருக்கு" என்ற முறைப்பாட்டை விவரிக்க ஒரு சிறுகதையும் கொடுத்து, கடைசியில் இரண்டு ஜோக்குகளுடன் (கோட்டயம் உண்மை!) முடித்த ஒரு அவியல், சுவையாக இருந்தது. பாராட்டல்ல. உள்ளத்தில் இருந்து  தோன்றியது. 

    ReplyDelete
  4. அழ்ந்து படித்தீர்கள் போல

    ReplyDelete
  5. உடலில் வந்து போகும் பிராணவாயுதான் ஜீவாத்மாவா.?பிரபஞ்சத்
    தில் ஊடுருவி இருக்கும் வாயுமண்டலத்திலுள்ள பிராணவாயு
    தான் பரமாத்மவா?//

    இப்படியும் எடுத்துக் கொள்ளலாமே ஸார்....இந்தப் பிரபஞ்சத்தின் வாயு மண்டலம் முழுவதும் பரவி இருக்கும் பிராணவாயு இருப்பதால்தானே நாம் அதை சுவாசித்து உயிர் வாழ்கிறோம். அதுவே இல்லை என்றால் மற்ற கோள்களைப் போல? உயிர் வாழ முடியாதே...எனவே நம்முள்ளும் அந்த சக்தி இருக்கிறது அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதன் படி என்று..

    கதை இப்போதைய நிலையைச் சொல்கிறது.

    கீதா

    ReplyDelete