வலை நண்பர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலை நண்பர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 டிசம்பர், 2017

சந்திப்புகள் திருச்சி மற்றும் சில இடங்கள்


                       சந்திப்புகள் திருச்சி மற்றும்  சில இடங்கள்
                       --------------------------------------------------------------------

 இந்தச் சந்திப்பு தொடர் தொடர்ந்து கொண்டே இருக்கிறதுஎப்படி எங்கு நிறுத்துவது என்பதே குழப்பம்   ஆகவே பல இடத்து சந்திப்புகளையும் இங்கு கூறப் போகிறேன்   எங்களுக்கு முன்பெல்லாம் ஒவ்வொரு ஆண்டும்  திருச்சி வைத்தீஸ்வரன்  கோவில் சிதம்பரம்  என்று போகும் வழக்கம் இருந்தது வலை உலகுக்கு வந்தபின்  அவற்றைப் பதிவாக்கி இருக்கிறேன்   ஆனால் இது வலைப் பதிவர்களை சந்தித்தது பற்றி மட்டும் இருக்கும் 2012ம் ஆண்டு திருச்சி சென்றபோது  ஒரு பிரபல வலை நண்பருக்கு அஞ்சல் அனுப்பி சந்திக்க விரும்புகிறேன்  என்று எழுதி இருந்தேன் நாட்கள் பல கடந்தும் பதில் ஏதும் வரவில்லை  வருத்தமாக இருந்தது நான் இப்போதும்  அவர் பதிவுகளை வாசித்து வருகிறேன்  2013ம் ஆண்டு பயணத்துக்கு முன்  திரு திதமிழ் இளங்கோ  வை கோபால கிருஷ்ணன்   ரிஷபன்  ஆரண்யவிலாஸ் ராம மூர்த்தி ஆகியோருக்கு தகவல் அனுப்பி இருந்தேன் திருமதி கீதா சாம்பசிவம்  அப்போதுமும்பையில் இருந்ததால் தகவல் அனுப்பவில்லை   நாங்கள் அப்போது திருச்சி பேரூந்து நிலையத்துக்கு எதிரில் இருந்த  கிருஷ்ணா இன் என்னும் ஹோட்டலில் தங்கி இருந்தோம்  தி தமிழ் இளங்கோ அவர்கள் வைகோவுடன் சந்திப்பதாகத்தெரிவித்தார் 
கோபுசார் தி தமிழ் இளங்கோவுடன் 
மாலையில் சரியாக நண்பர்கள் இருவரும்வந்து விட்டனர்  ஏதோ வெகுகாலம் பழகியவர்கள்போலஉரையாடல் இருந்தது திதமிழ் இள்ங்கோ அவர்கள் எனக்கு வாலியின் நினைவு நாடாக்கள் என்னும்  ஒரு புத்தகம்கொடுத்தார் வைகோ எங்கேயும் எப்போதும் என்னோடு எனும்  அவருடைய சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தார் ஒரு துண்டு போர்த்தினார்  ஒரு மணி பர்சில் ரூபாய் ஐந்தும் கொடுத்தார்    நான்  எழுதி இருந்த வாழ்வின் விளிம்பில் என்னும்நூலை நானும் கொடுத்தேன் நாங்கள் சற்றும்  எதிர்பார்க்காத செயல் ஒன்றை வைகோ செய்தார் ”அபிவாதயே” சொல்லி எங்களை வணங்கினார் மிகவும்  நெகிழ்ந்து விட்டோம்  சற்று கொரிப்பதில் ஈடுபாடு கொண்டவர் வை கோ என்றுதெரிந்தது ஆனால் ஹோட்டலில் ஆர்டர் செய்தது வரவே தாமதமாகிவிட்டது ஏதோ காரணத்தினால் ரிஷபனும்  ராம மூர்த்தியும்  வர இயலவில்லை என் மனைவியின் பிறந்த நாள் ஜூலை மாதம்  மூன்றாம் தேதி என்று சொன்னபோது வைகோ சாரும்  தங்கள் மணநாளும் ஜூலை மூன்றாம் தேதி என்றார்  அதன் பின் ஒவ்வொரு ஜூலை 3ம் தேதியும்  நாங்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வோம்  மீண்டும் திதமிழ் இளங்கோ வைகோ அவர்களையும்   திரு ரிஷபன் ராம மூர்த்தியோடு  திருச்சியில் இருக்கும் ஹோட்டல் ப்ரீசில் புதுகை வலைப் பதிவர் சந்திப்புக்கு போகும்போது சந்தித்தோம் புகைப்படங்கள் பகிர்வதில் திரு ரிஷபனுக்கும்  ஈடுபாடு இல்லைஒரு பதிவர் பற்றி நான் அவசியம்  குறிப்பிட வேண்டும்  அவர் தமிழ் வித்தகர் ஊமைக்கனவுகளின்  பதிவாசிரியர் ஜோசப் விஜு  அவர்களை சந்திக்க நான் விரும்பினேன்  ஆனால் அவருக்கு பதிவுலக நண்பர்களை சந்திக்க ஆர்வமில்லை ஆகவே மாலை நான்கரைக்கு முன்  வந்தால் பதிவர்கள் யாரையும் சந்திக்க வேண்டி இருக்காது என்று எழுதி இருந்தேன் ஆச்சரியமாக அவர்வந்தே விட்டார் யாருக்கும்  முகம் காட்ட விரும்பாதாவர்புகைப்படமுமெடுக்கவில்லை  என் சிறுகதைத் தொகுப்பினைக் கொடுத்தேன் ஆனால் அதற்கான விலையைக் கொடுத்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தார்  நான் இதுவரை சந்தித்தவர்களிலேயே  வித்தியாச மானவர் ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போனபோது திருமதி கீதா சாம்பசிவத்தையும் அவர்கள் வீட்டில் சந்தித்தேன்
திருமதி கீதா சாம்பசிவம்  தம்பதியினருடன் 
 நான்  பதிவர் சந்திப்புகளின்போது  வீண்விவாதங்களில் ஈடுபடுவது இல்லை  பதிவுகளில்தான்  எண்ணங்ளை ப் பகிர்கிறோமே திருமதி கீதாவைச் சந்தித்த போது  அவரும்  எழுத்துகளில் காணும்சர்ச்சைகளை ஒதுக்கி  இருந்தார்  என் மனைவிக்கு ஒருமுகராசி எல்லோரிடமும் சகஜமாகப்பழகுவார்  அது எனக்கு ஒருஅட்வாண்டேஜ்  திரு ராம மூர்த்தி எழுத்துகளில் மட்டுமல்ல நேரிலும் நகைச்சுவையாகப்  பேசுகிறார்  2013ல் திருச்சியிலிருந்து  பயணப்படும்போது கரந்தை ஜெயக்குமாருக்குத் தகவல் அனுப்பி இருந்தேன்
 கரந்தை ஜெயக்குமார் திரு ஹரணியுடன் 

என்னை பதிவுகளில் ஊக்குவித்த  ஹரணியையும்  சந்திக்க ஏற்பாடு செய்தார்  கரந்தைப் பள்ளியில் எங்களுக்காகக் காத்திருந்தவர் வழிகாட்ட ஹரணியின் வீட்டுக்குச் சென்றோம் திரு ஹரணியின் வீடு ஒரு நூலகம்போல் இருக்கிறது  ஒரு அறையில் அத்தனைப் புத்தகங்கள்  எங்களுக்காக காலை உணவு தயார் செய்திருந்தார் ஹரணி  ஆனால் அதை உண்ணும்  நிலையில் நாங்கள் இருக்க வில்லை   எப்போதும் இம்மாதிரிப் பயணங்களில்  இதுவரை சென்றிராத கோவில் ஒன்றினைப்பார்க்க  போவதை என் மனைவி விரும்புவாள்

அந்த வகையில் நாங்கள் சென்றது திட்டக்குடி குருபகவான் கோவில் அந்த நேரத்தில் கோவிலில் ஏதோ விசேஷ பூஜைகள் நடந்துகொண்டிருந்தது வழக்கம்போல் அங்கிருந்து வைத்தீஸ்வரன்கோவில் சிதம்பரம் ஆகிய இடங்களுக்குச் சென்றோம் அதற்கடுத்த ஆண்டு எங்கள் திட்டம்மயிலாடுதுறையை மையமாகக் கொண்டிருந்தது அந்தப் பயணத்தில்  நாங்கள் திருமதி கோமதி அரசுவை சந்திப்பதாக இருந்தோம்
திருமதி கோமதி. திருநாவுக்கரசு நான் 
 திருமதிஅரசு கணவருடன் ரயில் நிலையத்துக்கே வந்திருந்தார் அங்கிருந்து நாங்கள் தங்க இருந்தஓட்டலுக்கு வந்தார்கள்  அவர்கள் தயவால் நாங்கள் சென்ற இடம்    இதற்கு முன் பார்த்திராதது திருவிடைக்கழி முருகன் கோவில்  அரசு அவர்கள் நாயன்மார்கள் பற்றிய உபன்யாசமெல்லாம்  செய்தவர் என்று தெரிந்தது நன்கு படங்கள் வரைகிறார் அப்போது நான்  என் பதிவில் இது என்  ஏரியா அல்ல என்று ஒரு இடுகை இட்டிருந்தேன் முகமறியா வலை நட்புகள் வெகு காலமாகப் பழகினதுபோல் நடந்து கொண்டது மனசுக்கு இதமாய் இருந்தது. கருத்து வேறுபாடுகள் பலவும் இருந்தாலும் அவற்றை சரியான  முறையில் எடுத்துக்கொள்ளும் பக்குவம்பிடித்திருந்தது
இவர்களைத்தவிர நான் மதுரை வலைப்பதிவர் விழாவில் முதன் முதலாக சந்தித்தது தருமி என்று கூறப்படும் சாம் ஜார்ஜ்  கல்லூரி பேராசிரியர் மற்றும் திண்டுக்கல் தனபாலன் திரு முத்து நிலவன்  போன்றோரும்    பலரையும்  எதிர்நோக்கி சென்றதும்  எதிர்பார்த்தபலரும் வராததும் வருத்தமாக  இருந்தது பலரைப் பார்த்தாலும் அறிமுகமாகி இருக்கவில்லை  திரு சீனா அவர்களின் துணைவியாரையும் சந்தித்தேன்

அதன்பின் புதுகை  வலைப்பதிவர் மாநாட்டில் இன்னும் பலரையும்சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது சேட்டைக்காரன் திரு ஜம்புலிங்கம் திரு ரத்தினவேல் திரு எஸ்பி செந்தில்குமார்  திருமதி ருக்மிணி சேஷாசாயி திருமதி சசிகலா ஆகியோர் நினைவுக்கு வருகிறார்கள் திருமதி சசிகலா என் பதிவில் இருந்த ஒரு வரியைக் குறிப்பிட்டு மறக்க முடியுமா என்றார் அது நான் எழுதி இருந்த எழுத நினைத்த காதல் கடிதம் என்பதில் வரும் “எங்கும்  நிறைந்தவன் ஈசன் என்றால் என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ “என்பதைக் குறித்து பாராட்டினார் இவர்களைத்  தவிர கல்னல் கணேசனும்  அறிமுகமானார்
புலவர் இராமாநுசத்தையும்  சந்தித்தேன் அவரது இல்லம் சென்று காண வேண்டும்  என்பது இதுவரை நிறைவேறாதஒன்று 
புதுகையில் எஸ்பி செந்தில்குமார் புலவர் இராமாநுசத்துடன்  
தென்றல் சசிகலாவுடன்

திரு ஹரணி ஜெயகுமாருடன் 

 
 வலது ஓரத்தில்  கல்னல் கணேஷ் 
இன்னும் பலரையும்சந்திக்கும் ஆசை இருக்கிறது வானவில் மோகன் ஜி வெங்கட் நாகராஜ் போன்றோர் சந்திக்க  வருவதாகக் கூறி இருந்தார்கள் மோகன் ஜி அவர் வரும்போது நான் ஒரு டி ஷர்ட் வாங்கி வைத்து தர வேண்டும்  என்றிருக்கிறார்  


திங்கள், 11 டிசம்பர், 2017

சென்னையில் சில சந்திப்புகள்


                          சென்னையில் சில சந்திப்புகள்
                         -------------------------------------------------

சென்னையில் சில சந்திப்புகள்
  சென்னைக்கு பதிவர் சந்திப்புக்குப்போக முடியவில்லை என் பதிவுகளுக்குப் பின்னூட்டம்  எழுதும் மாதங்கி மாலி  என்னைக் கவர்ந்த பதிவர்  முக்கியமாக என்  பதிவு ஒன்றுக்கு அவர் இட்டிருந்த பின்னூட்டம்  என்னை மிகவும் கவர்ந்தது
ஒரு பதிவில் கர்ப்பக் கிரகம்  பெரும்பாலும்  இருட்டாகவே இருப்பதால்    
"தூரத்தில் நின்று கடவுளின் உருவை யூகிக்க வேண்டியுள்ளது".... என்று எழுதி இருந்தேன்   அதற்கு பின்னூட்டமாக மாதங்கி 

I can't help but smile! :) light or no light-- aren't we all doing the same?
என்று எழுதி இருந்தார் அப்போது அவர் தன்னைப் பற்றி கூறியதில் இருந்து அவர் ஒரு 23 வயது இளைஞி என்று தெரிந்து கொண்டேன்
பிறகு நான்  தெரிந்துகொண்டது அவரது தந்தையாரும் மஹாலிங்கம்  என்னும் மாலி  என்பதிவுகளைப் படித்து இன்ன பதிவை மிஸ் செய்யக் கூடாது என்பாராம் இவரையும் இவர் தந்தையாரையும்  சென்னையில் இரு முறை சந்தித்து இருக்கிறேன்  முதல் முறை என்  மகனது ஆஃபீஸ் கெஸ்ட் ஹௌசில் தங்கி இருந்தோம்  அவர்கள் எங்களுக்காக சிறிது நேரம்காக்கவேண்டி இருந்தது இவரதுதந்தையார்  என் பதிவு ஒன்றைப் பாராட்டினாராம்   வாழ்வியல் பரிமாற்றங்கள் என்னும் தலைப்பில்   I am ok you are ok என்னும்  ஆங்கிலப் புத்தகத்தின் சாராம்சம்


திரு மஹாலிங்கம்   நான்  மாதங்கி 

 இரவு எட்டுமணிக்கு  மேலாகியும் எங்களுக்காக காத்திருந்ததுநெகிழ்வாக இருந்தது
எரிதழல் வாசன் 
பிறிதொரு சந்தர்ப்பம்  2013ம் வருட முடிவில் சந்திப்பு நடந்தது  வேளச்சேரியில்  என் மகன்வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால் எல்லாப் பதிவர்களையும் ஒரே நேரத்தில் சந்திக்கமுடியவில்லை அந்த சந்திப்புக்கு மாதங்கி மாலி அவரது தந்தையாருடனும் வலை உலகில்வாத்தியார் என்று பேசப்படும்  பாலகணேஷ் , திடங்கொண்டுபோராடுசீனு , ஸ்கூல் பையன்  கார்த்திக் கவியாழி கண்ணதாசன்  ஸ்ரீராம் செல்லப்பா  நடன சபாபதி  எரிதழல் வாசன் முங்கில்காற்று  முரளிதரன்  ஆகியோர் வந்திருந்தனர் ஆனால் எல்லோரும் ஒரே நேரத்தில் வரவில்லை நான் அப்போது எழுதி வெளியிட்டிருந்த புத்தகம் வாழ்வின் விளிம்பில் என்னும்  ஒரு நாவல்  அதை அங்கு வந்திருந்தவர்களுக்குக்  கொடுத்தேன் சில படங்கள் எடுத்தேன் ஆனால் ஒருவரது படம்வெளியிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அவரை மட்டும்  நீக்கிப் படம் போடும் டெக்னிக் எனக்குத் தெரியவில்லை இன்னொரு முறை பதிவர்களை சந்தித்தேன்   அப்போது  நான் ஒரு சிறுகதையைப் பாதி எழுதி மீதியை முடிக்கும் படி வாசகர்களை வேண்டிக் கொண்டிருந்தேன்  நான் நினைத்த முடிவைச் சொல்பவருக்குப் பரிசு என்றும்  கூறி இருந்தேன்  அதை ஜட்ஜ் செய்ய திரு பாலகணேஷிடம்  கேட்டுக் கொண்டேன்   என் முடிவையும்  முதலிலேயே அவரிடம் கொடுத்திருந்தேன்  ஆனால் என் முடிவை ஒத்து யாரும்  எழுதி இருக்கவில்லை எல்லோருக்கும் கதைகள் சுபமாக வெகு சாதாரணமாக இருக்கவே விரும்புகிறார்கள்  பால கணேஷிடம் அவருக்கு பிடித்த முடிவுக்குப்பரிசை அறிவிக்கக்கேட்டுக் கொண்டேன்   அந்த சந்திப்புக்கும்  பால கணேஷ் சீனு கார்த்திக்  செல்லப்பா போன்றோர் வந்த நினைவு  நான் எப்போது சென்னைக்குச் செல்வதானாலும் பலருக்கும் அழைப்பு அனுப்பி சந்திக்க வேண்டுவேன்  பல தடவைகள் எதிர்பார்த்தவர்கள் வராததால் ஏமாற்றமடைந்து இருக்கிறேன்   கடைசியாக சந்தித்தபோது  நடன சபாபதி ஜீவி கீதா பானுமதி போன்றோர் வந்து சிறப்பித்தனர்  ஸ்ரீராமும் முன்னதாகவே வந்து சென்றுவிட்டார் வருகிறேன் என்று சொல்லி வராதவர்களே அதிகம் அவர்கள் பெயர்கள் வேண்டாமே
திரு பால கணேஷ்

திரு செல்லப்பா திடங்கொண்டு போராடு சீனு 
திரு செல்லப்பா நான் முரளிதரன் 
திரு ஜீவி
திரு நடன சபாபதி




இதைத் தவிர  பானுமதியின்  பெண் திருமணத்துக்குச் சென்றிருந்தோம் பானுமதியின்  கணவர் வெங்கடேஸ்வரன் எனக்கு தம்பி முறை என் சித்தப்பா மகன்  அங்கிருந்து சுப்புத்தாத்த வீடு சொற்ப தூரமே திருமணத்தின் ஒரு இடைவெளியில் அவரைப் பார்க்கப் போயிருந்தோம்  நன்கு படித்த வர் நிறைய விஷயங்கள் தெரிந்திருப்பவர் நான் எழுதி இருந்த நூலைக் கொடுக்க அந்தசந்தர்ப்பத்தை நான் உபயோகித்தேன் சூரி சிவாவின்  மனைவிதான்  திருமதி மீனாட்சி எங்கள் திருமணம் பற்றிக் கேட்டுதெரிந்து கொண்டார்  புத்தகங்கள் படிப்பதில் ஈடுபாடு கொண்டவர் என்றார்  நான் எழுதி இருந்த கடவுள் அறிவா உணர்வா என்னும்பதிவு பற்றி கேட்டார்  நான்சொல்ல வந்ததைத்தான்  பதிவில் எழுதி விட்டேனேஎன்றேன்  அடுத்து எங்கள் ஐம்பதாவது ஆண்டு மண நாளுக்கு அழைப்பு விடுத்தேன் கண்டிப்பாக வருவேன் என்றார்  வரவில்லை  அவர் பதிவில் வாழ்த்தி இருந்தார் வரும்போது ஒரு ஆங்கில நூல் ஒன்றைக் கொடுத்தார் இன்னும்படிக்கவில்லை சென்னையில் இன்னும்பதிவர்கள் பலரை சந்திக்க வேண்டும்  முடியுமா தெரியவில்லை
 என் நூலுக்கு வாழ்த்துரை எழுதி இருந்த தஞ்சைக் கவிராயரை அவரது இல்லத்தில் ஊர்ப்பாக்கம்சென்று சந்தித்ததும் இங்கே சொல்லப்பட வேண்டும் 


தஞ்சைக் கவிராயர் பேரனுடன்  நான் என்மனைவி 
திருமதி பானுமதி நான் ஜீவி நடனசபாபதி 




  


   



வியாழன், 7 டிசம்பர், 2017

பதிவர் சந்திப்பு -4



                                                பதிவர் சந்திப்பு -4
                                               ---------------------------
  நான் சென்று சந்தித்த பதிவர்கள் - மதுரை 
2013ம் ஆண்டு என்ற நினைவு  நான் கோவைக்கு என்  தம்பியைக் காணச் சென்றிருந்தேன் அவன் மதுரைக்கு சென்றிராததாலும்   எனக்கு இந்த சந்தர்ப்பத்தை பதிவர்களை சந்திக்க உபயோகிக்கவும் ஒரு நாள் அவனது காரில் கோவை சென்றோம் எனக்கு usst venkat  என்பவரின்  முகவரி இருந்தது இப்போது அவர் வலைப்பக்கத்தில் எழுதுவது நின்று விட்டது  அவர் யாதோ ரமணியின்  உற்ற நண்பர்  மதுரையில் சரவணன் பழக்கம் அவர் மூலம் சீனா ஐயா பரிச்சயம் இவர்க;ளுடன்  சிவ குமாரனும் தெரியும்   இவர்களை எல்லாம் சந்திக்க வேண்டும்  என்னும் ஆவல் இருந்தது  கோவையில் டைம்ஸ் என்னும் ஹோட்டலில் தங்கினோம் ஒரு நாள் எல்லோரும்வரும்படி ஏற்பாடு இதில் மகிழ்ச்சியான  ஆச்சரியம் என்ன என்றால் தமிழ்வாசி பிரகாஷும்  வந்திருந்தார் சிவகுமாரன்  சற்று தாமதமாக வந்தார்  பலபெயர் பெற்ற பதிவர்களை சந்திக்கப் போகிறோம் என்னும்  மகிழ்ச்சி.  என்னுடன்  தம்பியும் அவன் மனைவியும் என் மனைவியும் இருந்தார்கள் ஒரு வேளை அவர்களுக்கு இது அத்தனை மகிழ்ச்சி தருவதாய் இருக்காது என்பதால் அவர்களை
மதுரை நாயக்கர் மகாலில் நடைபெற்றுக் கொண்டிருந்த  லைட் அண்ட் சௌண்ட் நிகழ்ச்சிக்கு அனுப்பி பதிவுலக ஜாம்பவான்களை எதிர் நோக்கி இருந்தேன்  வலைப் பதிவு ஒன்றேஇணைப்புப்பாலமாக இருந்தது என்ன பேசுவது எதைப் பேசினால் யாரும்  வருத்தப்பட மாட்டார்கள் என்னும் சிந்தனையே எனக்கிருந்தது பொதுவாக சிறிது நேரம் பேச்சு நடந்தது நானோ அப்போது எழுத்தில் என்னை வெளிப்படுத்திக் கொள்ள தீவிரமாய் இருந்தேன் எனக்கு பதிவர்களின்  சொந்த பந்தங்களை அறிந்து கொள்ள கேட்டுத் தெரிய சங்கோஜம் பொதுவாகச் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரவர் வேலையை கவனிக்கப் போய் விட்டார்கள்  ரமணி சார் இன்னும் கூட நேரம் செலவு செய்தார் அவரிடம் நீண்ட நேரமுரையாடினேன்  அவரையும்  அழைத்துக் கொண்டு இரவு உணவு உண்ண ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம்
  என்னுடன் வந்திருந்தவர்களும்  திரும்பி இருந்தனர் முன்பொரு முறை மதுரை வந்திருந்தபோது மதுரை சுங்கிடி புடவை என்  மனைவி வாங்கி இருந்தாள் ஆனால் எங்கு என்ன என்னும்  விஷயங்கள்மறந்து போக வலை நண்பரிடம் கூறினாள் அவரும்  சுங்கிடி புடவை கிடைக்கும் இடதுக்குக் கூட்டி போவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார் ஏற்கனவே பல இடங்களுக்குப் போய் வந்த களைப்பு அவர்களுக்கு  நடந்தோம்  நடந்தோம்  நடந்து கொண்டே இருந்தோம் கடைசியில் அங்கிருந்த போத்தீஸ் கடையைக் காண்பித்தார் இந்த மாதிரி போத்தீஸ் கடைகள்தான் கோவையிலும்  சென்னையிலுமிருக்கிறதே மதுரைச்சுங்கிடி கேட்டால்  போத்தீசுக்கு  அழைத்து வந்தாரே என்னும் ஏமாற்றம்
 அவர்களுக்கு இருந்தது அந்த மதுரைப் பயணம்பற்றிய நினவுகள்  வரும்போதெல்லாம் இந்த நிகழ்வும்  அநியாயத்துக்கு நினவுக்கு வருகிறது இதைக் குறிப்பிடாமல் இருக்கலாமோ இதையெல்லாம் எழுதாமல் இருந்திருக்கலாமோ  
 சிறிது நேரதுக்குப் பின்  சிவகுமாரன் வந்தார்  அவரது கவிதைகள் எனக்குப் பிடிக்கும் யாருக்குத்தான் பிடிக்காது ?  ஒரு முறை மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது பற்றி எழுதியதற்கு நான்  பின்னூட்டமாக எழுதியது அவருக்குப்பிடிக்கவில்லை  என்னிடமிருப்பது பேனாதான்  ஏகே 47 துப்பாக்கி இல்லையே என்று மறு மொழி கூறி இருந்தார்
 

  இந்த நிகழ்வுக்குப் பிறகு இவர்கள் எல்லோரையும்  மதுரை பதிவர் விழாவில் சந்தித்தேன் இவர்களைத் தவிர தேவக்கோட்டை கில்லர் ஜி மற்றும் ஜோக்காளி பகவான் ஜி திண்டுக்கல் தனபாலன்    போன்றோரையும்  மதுரை பதிவர் விழாவில் சந்தித்தேன் 
ரமணி சாரின் பின்னூட்டம்  எல்லாம்  ஒரே நேர்மறையாக  இருக்கும் ஒரு முறையேனும்  மாறாக இருக்காது எனக்கு நேர் எதிர்  நான் மனசில் பட்டதைச் சொல்லி விடுவேன் நோ என்று நினைத்து யெஸ் என்று என்னால் சொல்ல முடியாது இருந்தாலும்  எழுதுபவரைக் குறை சொல்லாமல் எழுத்தைப்பற்றியே என்  கருத்து இருக்கும்   ஆனால் பரவலாக நான்  புகழ்ந்து எழுதுவதில்லை என்னும் கருத்து பதிவர்களிடையே   நிலவுவது எனக்குத் தெரியும் 
வெங்கட் தமிழ்வாசி சரவணன்  சீனா ரமணி 
தமிழ்வாசி பிரகாஷ், சரவணன் நான்   சீனா ரமணி

சிவகுமாரன் 

   
        
   

வியாழன், 30 நவம்பர், 2017

நான் சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் -3

                           நான்  சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள்-3
                          ----------------------------------------------------
சந்தித்தபதிவர்களில் முதலாவதாக என்னை என்  வீட்டில் சந்தித்தவரகளைப்பற்றியே  எழுதுகிறேன்  பல்வேறு இடங்களிலும்  நான் பதிவர்களை  சந்தித்திருக்கிறேன்  அது பற்றி பின் எழுதுவேன்

திரு செல்லப்பா யக்ஞசாமியை பலமுறை சந்தித்து இருக்கிறேன்சென்னையில் ஒரு முறை மனைவியுடன்  வந்திருந்தார்இந்தியா ஆறு மாதம்   அமெரிக்கா ஆறு மாதம்  என் பொழுதைக் கழிப்பவர்  சில நாட்களாகப் பதிவுப் பக்கம் வராதவர் நலம்கேட்டு எழுதி இருந்தேன்   அவர் பெங்களூர்  வர இருப்பதாகக் கூறினார் அவரை என்  வீட்டிலேயே தங்கும் படி வேண்டிக் கொண்டேன்  அவரும் ஒப்புதல் தந்து ஒரு நாள் இருந்தார்  அது  இந்த உகாதிப் பண்டிகைக் காலம்  என்னையும் அழைத்துக் கொண்டு அவரது நண்பரின் அலுவலகத்துக்குச் சென்றார்  அப்போதெல்லாம் என்னை தனியாக எங்கும்  என்  மனைவி விடுவதில்லை. செல்லப்பவுடன் செல்ல அனுமதி  கிடைத்தது  நேரம்  ஆகி விட்ட படியால் மனைவி  பலதொலைபேசி அழைப்புகளை அனுப்பி விட்டார் கடைசியில் அவரது நண்பருடன்  வந்தோம்சென்னையில் எப்போதும் சந்திக்க வருவார்  கடந்த முறை அமெரிக்காவில் இருந்தார் வரமுடியவில்லை  என்னிடம் மிகவும் சகஜமாக இருப்பார் பின்னூட்டங்களிலும்  தெரியும் 
திரு செல்லப்பா என்வீட்டில் பெங்களூரில்

திரு செல்லப்பா  சென்னையில் மனைவியுடன்   

அயல் நாட்டிலிருந்து என்னைச் சந்திக்க வந்தவர்களுள்  திரு அப்பாதுரை முக்கியமானவர் மிகவும் சுவாரசியமானவர் ஏறத்தாழ எங்கள் எண்ணங்கள் ஒருபுள்ளியில் சந்திக்கும்   ஆனால் எழுத்தில் மிகவும்  வல்லவர் என் மனைவிக்கு அப்பாதுரையின்  கதைகள் மிகவும் பிடிக்கும்   அவரதுகற்பனைகளே அலாதி. பெங்களூரில் வைட் ஃபீல்டில் தங்கி இருந்தவர் போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டு மிகவும் நொந்து போனார் எங்களுடன்  சொற்ப நேரமே தங்கி இருந்தார் என்றாலும் மதிய உணவை  எங்களுடன் உண்டார் .  பொழுது மிக நன்றாகப் போனது இன்னுமொருமுறை பெங்களூர் வந்தபோது என்னை சந்திக்க முடியாமல் போக இந்த போக்கு வரத்தே காரணம்  என்றார் அவருக்கு அவரது தாயையும்   பாட்டியையும்  ஹிமாலய யாத்திரைக்குக் கூட்டிப்போக வேண்டுமென்னும் ஆசை இருந்தது  நிறவேறிற்றா   தெரியவில்லை  அவரது கலர் சட்டை என்னும் தளத்தில் இருந்த சில வாக்கியங்களை நான் அவர் அனுமதி இல்லாமலேயே பயன் படுத்தி இருக்கிறேன் 


திரு அப்பாதுரை என் வீட்டில்

அப்பாதுரை அவரது கைக் கணினியில் 
நியூசிலாந்து பதிவர் துளசி கோபால் என்  வீட்டுக்கு வரும்போது அருகில் வந்தும் வீடு கண்டு பிடிக்க முடியாமல் தடுமாறி இருக்கிறார். கணவர் மைத்துனர் துணைவியர் சகிதம் வந்திருந்தார்  அது என்னவோ தெரிய  வில்லை வருகிறவர்கள் எல்லோருக்கும் என்  மனைவியைப் பிடிக்கிறது திருமதி கோபால் அவர்கள் போகாத கோவில் இல்லை எனலாம் திவ்யதேசக் கோவில்களுக்கு முக்கியத்துவம் அவரை நான் மதுரை பதிவர் சந்திப்பிலும் மீண்டும் சந்தித்தேன்   இவரது பிரக்யாதி பிரச்சித்தம்  


திரு கோபால், துளசி




துளசி  கோபால் சகோதரர் மனைவியுடன் நானும் 


என்னை என் வீட்டில் சந்தித்தவர்களுள்  இவரைப் பலருக்கும் அடையாளம் தெரியவில்லை  ஒரு பதிவு எழுதி இவரது புகைப்படமும் வெளியிட்டிருந்தேன்  வலையுலகில் இன்காக்னிடோ வாக  வளைய வருவதால் இந்த சங்கடம்   திரு ஏகாந்தன் அவர்கள் புதுக் கோட்டை பதிவர் விழாவில் என்னை சந்தித்தார் இல்லையென்றால் எனக்கும் அடையாளம் தெரிந்திருக்காது  டெல்லி வாசியாக இருந்தவர் தற்போது பெங்களூர் வாசி  இவர் என் வீட்டுக்கு வந்ததில் பெரிதும்மகிழ்ந்தேன்  மறுபடியும் வருகிறேனென்றார் அவர் இன்னும் வந்து கொண்டிருக்கிறார்  என் பதிவுகள் சிலவற்றைப் படித்தவர் முன்பு போல் இப்போதுஎன்  எழுத்தில் ஃப்லோ இல்லை என்கிறார் சரி என்றே தோன்றுகிறது  நிறைய பிரயாணம் செய்தவர் நிறைய படிக்கிறார் இன்னும்நிறைய விஷயங்கள் இவரை  பற்றி உண்டு  இப்போது வலையில் பிரசித்தி பெற்றுவருகிறார்    

திரு ஏகாந்தன் என்வீட்டில்

இது தவிர தில்லையகத்து துளசிதரனும்  கீதாவும்  என்னை என்வீட்டில் சந்தித்து இருக்கின்றனர் ஒரு குறும் படத்தில் என்னையும் நடிக்க வைக்க வந்தார்கள் நான்புகைப்படமப்போது எடுக்க வில்லை. வேண்டாமென்று திருமதி கீதா தடுத்து விட்டார்கள்



பாலக்காட்டில் துளசியை சந்தித்தபோது





ஞாயிறு, 26 நவம்பர், 2017

நான் சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் -2


                           
                                 நான் சந்தித்த  என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் -2
                                  -----------------------------------------------------

அடுத்ததாக என்னை என் இல்லத்தில் சந்தித்தவர்கள் திருமதி  ஷைலஜாவும் திரு அய்யப்பன் கிருஷ்ணனும்  . திருமதி ஷைலஜா  ஒரிஜினல் ஸ்ரீரங்க வாசி தற்போது வசிப்பது பெங்களூரில் எழுத்துலகில் பலரும் இவருக்கு உறவுகளே சமுத்ரா என்னை பற்றி உயர்வாகக் கூறி இருந்தார் என்று சொன்னார் வலையுலகில் தானும்  இருப்பதாகக் காட்டும்  சில பதிவுகள் எழுதி வருகிறார் இவரும் பாடக்கூடியவரே இவரும்திரு கிருஷ்ணனும் பாட அதை நான்  டேப்பில் எடுத்திருந்தேன்  இவர்களை  நான் மீண்டும்பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பில்தான் சந்திக்க முடிந்தது கம்பராமாயணம் முழுதும் படிக்கஎன்று முயற்சி செய்தார் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை
தமிழ்சங்கமத்தில் சந்தித்தப் பலரையும் பின் எப்பவுமே சந்திக்க முடியவில்லை    வலைப்பதிவுகளில்  எழுதி வருகிறார்களா தெரியவில்லை எங்கள் ப்ளாகில்  அய்யப்பன் கிருஷ்ணனின் கதை ஒன்று கண்டேன்   பெங்களூர் தமிழ் சங்கம காணொளி  ஒன்று இடுகிறேன்  காணொளியில்  திருமதி ஷைலஜா  திருமதி ராம லக்ஷ்மி திருமதி ஷக்திப்ரபா ஆகியோரைக் காணலாம்  


tதிருமதி ஷைலஜா, திரு அய்யப்பன்

நான் இந்தத் தொடரில் முதலில் என் வீட்டுக்கு விஜயம் செய்த பதிவர்களைப்பற்றி மட்டும் முதலில்  எழுதுகிறேன்

என்னை என் இல்லத்தில் சந்தித்த மூத்த வலைப்பதிவர் டாக்டர் கந்தசாமி முக்கியமானவர் என்னை விட முதியவர்  என்வீட்டுக்கு வருவதாக எழுதியவரை நான் ரயிலடிக்குச்சென்று  வீட்டுக்குக் கூட்டி வந்தேன் இவரை நான் இதற்கு முன்பே கோவையில் அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறேன்   மிகவும் சுவாரசியமானவர்  இந்த சந்திப்பு பற்றி முன்பே எழுதி இருக்கிறேன்

 திருச்சியில் பதிவர் வை கோபால கிருஷ்ணன் வீட்டுக்கு வந்தவரை என்  அழைப்பு இங்கு வர வழைத்தது இவரை மீண்டுமொரு முறை என் வீட்டில் சந்திக்கும் பாக்கியமும் கிடைத்தது இந்தமுறைமனைவியுடன்வந்திருந்தார் அவரை நான் பதிவர் மாநாட்டிலும்  சந்தித்தேன் பதிவர் மாநாடு பற்றிய என் பதிவு ஒன்றில் ஒரு படம் வெளியிட்டு இருந்தேன்    அது பிறர் மனதை சங்கடப்படுத்தும் என்றும் அகற்றி விடுமாறும் கூறி இருந்தார் அவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அதை  நான் அகற்றினேன்  இப்போதும் எனக்கு அந்தப் படம் தவறான  நோக்கத்துடன் பதிவிடவில்லை என்றே தோன்று கிறது  மூத்தவர் வாக்குக்கு மதிப்பு கொடுத்தேன் 

  

தலைப்பே ஒரு மாதிரியாக இருக்கிறதே  நான்சந்தித்த பதிவர்கள் அதிகம்   பயணித்து சந்தித்தவர்களைப் பற்றி இப்போது எழுதவில்லை என்வீட்டில் வந்துசந்தித்தவர்கள்  பற்றிய தொடர் முதலில்      (தொடரும் )


  

வியாழன், 23 நவம்பர், 2017

நான்சந்தித்த என்னை சந்திக்க வந்த வலைப் பதிவர்கள் ---1


                                    நான் சந்தித்த என்னை சந்திக்க வந்த  வலைப் பதிவர்கள்
                                     --------------------------------------------------------------------------------------
 2010ம் ஆண்டு இறுதியில் வலைப் பக்கம் ஆரம்பித்தேன் அப்போதெல்லாம் வலையில் எழுதுபவர்களை எப்படியாவது சந்தித்து நட்பை வளர்க்க எண்ணினேன்  பலருடைய பதிவுகளையும்  படிக்க ஆரம்பித்தேன்  மதுரையில் தலைமை ஆசிரியராய் இருக்கும்   மதுரை சரவணன் அவர்கள்பெங்களூர் யுனிவர்சிடிக்கு ஆங்கில மேம்பாட்டுக்க்கான பயிற்சிக்கு வருகிறார் என்று அவர் வலைப் பதிவின் மூலம் அறிந்தேன் அவரை சந்தித்து என்வீட்டுக்கு வரவழைக்க முடிவு செய்தேன்  முன்பின்பார்த்திராதவர் ஆனால் என் எழுத்துகளை அப்போதே ஊக்குவித்தவர் என்னும் முறையில் சரவணன் எனக்குப் பிரத்தியேக மாகத் தெரிந்தார் என் வீட்டிலிருந்து சுமார் 15 கிமீதூரமிருந்த யுனிவர்சிடி  வளாகம்சென்று அவரை சந்தித்து  அவருடன்  அங்கேயே மதிய உணவு உண்டு அவரையும்  என்வீட்டுக்கு அழைத்து வந்தேன் என் இளைய மகனை விட வயதில் சிறியவர் தன் பணியில் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்டவர்  அவரை என் வீட்டில் தங்கிச் செல்ல வேண்டினேன் ஆனால் அதில் சிரமங்கள் இருக்கிறதென்று சொன்னார்  இரவு உணவாக என்மனைவி அவருக்கு தோசை வார்த்துக் கொடுத்த நினைவு அப்போதெல்லாம்  நான் ஒரு தனித்தாளில் எழுதி வைத்துப் பின்  தட்டச்சிடுவது வழக்கம்  அவர் நேராகவே தட்டச்சுக்குச் செல்வார் என்று அறிந்தது ஆச்சரியமாக இருந்தது ( இப்போது நானும் நேராகவே தட்டச்சு செய்கிறேன்   முதலில் வேர்ட் ஃபார்மாட்டில் எழுதி பின்  காப்பி பேஸ்ட் செய்கிறேன்  ) அன்று மாலை அவர் மதுரையிலிருந்த சீனா ஐயாவுக்குத் தொலை பேசி என்னையும்  அறிமுகம் செய்து வைத்தார் அவரை பேரூந்தில் ஏற்றி அனுப்பி வைத்தேன்  என்னை முதன் முதலில் சந்தித்த வலைப்பதிவர்  மதுரைசென்றதும்  என்னைப் பற்றி அவரது வலையில் எழுதி இருந்தது நெகிழ வைத்தது  பார்க்க  


மதுரை சரவணன்  


மதுரை சரவணன் என் வீட்டில் என்னுடன் 
அடுத்ததாக நான் சந்தித்தபதிவர் சமுத்ரா (என்னும் மது ஸ்ரீதர் )

முன்பெல்லாம் அதாவது ஓராண்டுகாலம்  முன் வரை  வலைத்தளத்தில்  எழுதிக்கொண்டிருந்தார்ஏனோ தெரியவில்லை  இப்போதுமுகநூலில் எழுதி வருகிறார் எதில் எழுதினால் என்ன அவர் ஒரு அறிவு ஜீவி  என்னை அவர் சந்திக்க வேண்டினேன் அப்போது  பெங்களூரில் இருந்தார்  இப்போது சென்னை வாசி அவர் கலிடாஸ்கோப் என்றும் அணு அண்டம்  அறிவியல் என்றும்  தலைப்பில் எழுதிக் கொண்டிருந்தார்  அவரது  மேதமை எனக்குப் பிடித்திருந்தது  சந்திக்க விரும்பி தெரிவித்தேன் என்னைக் காண வந்தே விட்டார் அவரது எழுத்துக்களைக் கொண்டு அவரை ஒரு பௌதிக பேராசிரியர், குறுந்தாடியுடன் இருப்பார் என்றெல்லாம்  கற்பனை செய்து வைத்திருந்தேன்  ஆனால் நேரில் கண்டபோது என்ன ஆச்சரியம் திருமணமே ஆகாத இளைஞர் அவரது பன்முக ஆளுமை என்னை ஆச்சரியப்பட வைத்தது அவரென்னவெல்லாமோ எழுதி இருந்தாலும்   என்னைக் கவர்ந்தது அவர் எழுதி இருந்த ஒரு சிறுகதை  கோவிலில் கூட்டிப் பெருக்கும் ஒரு மூதாட்டிபற்றிய  கதை அதன் கருத்து எனக்குப் பிடித்திருந்தது என் வீட்டுக்கு வந்தபோது என்மனைவி அவரைப்பற்றி கேட்டார் கோவையில் தந்தை இருப்பதாகச் சொன்ன நினைவு  அடிக்கடி ஓஷா சொன்னதாகச்  சில கருத்துகள் வெளியிடுவார். அவரது கலேடாஸ்கோப் விரும்பிப் படிப்பேன்  அணு அண்டம் அறிவியல் மிகவும் கனமான தலைப்புகள் கொண்டது  எனக்குப் புரியாதது அதையும்  அவரிடம் சொல்லி இருக்கிறேன்  கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர் போல் தெரிந்தது  ஒரு பாடலையும் பாடினார்  டேப் செய்திருந்தேன்   ஆனால் ரெகார்டர் பழுதானபின்  போட்டுக் கேட்க முடியவில்லை நினைப்பது அதிகம்  நினைவில் வருவது சொற்பம்  என்னைப் பற்றி சிலாகித்துச் சொன்னதாக திருமதி ஷைலஜா கூறி இருந்தார் 
மது ஸ்ரீதருடன் நான் 


மது ஸ்ரீதரனென்னும்  சமுத்ரா

தலைப்பே ஒரு மாதிரியாக இருக்கிறதே  நான்சந்தித்த பதிவர்கள் அதிகம்  பயணித்து சந்தித்தவர்களைப் பற்றி இப்போது எழுதவில்லை என்வீட்டில் வந்துசந்தித்தவர்கள்  பற்றிய தொடர் முதலில்




 ( இன்னும்  தொடரும்  )