செவ்வாய், 17 மார்ச், 2020

உதய கீதம்





                                     உதய கீதம்
                                      ------------------


பொழுது புலர்ந்தது மெல்லன எழுவீர்
 புள்ளினங்கள்சிறுகாலைப் பொழுதில் பறந்துதம் இரைதனை தேடவே
நாற்திசையும் பறந்து திரிகின்ற்ன
மானிடர்கள்தம் பாபம்போக்கவே   உன்சன்னதியில்
 காத்திருக்கின்றனர் உந்திரு நாமம் சொல்லியே புண்ணியம் விழைகின்றனர் உன் திருக்கண் அருள் பொழிய எழுந்தருள்வாய்  ராமா கிருஷ்ணா கோவிந்தாஎன
நாமங்களில்லா பெரும்பேரைஏதோ அழைத்தே ஏத்துகின்றனர்
நின் திருப்பெயர் பலசொல்லி  நின்னடியார் மெய் மறக்க
நின் செவியால் கேட்டருளி அவர்தம்   குறைநீக்க
எழுந்தருள்வாய
உன்னை      உறங்க விடாமல் குருவாயூர்
நிர்மால்ய தரிசனம்  காணஏங்கும்  பக்தர்க்கு  அருள
மெல்லென எழுவீர் ஆதவன் குணதிசை எழுமுன்

நீர் எழுந்தருள்வீர் ஐயா 
நேற்று   என்பது அனுபவமானால் 
இன்றைய தினம்நம்பிக்கை ஆகட்டும்
பொழுது புலர்கிறது  மெல்லென எழுவீர்

இத்துடனொரு பாடல் பகிர்வு



இன்னுமொரு பாடல் பகிர்வு 




  

சனி, 14 மார்ச், 2020

வீடு கட்டிய வரலாறு


                                           வீடு  கட்டிய வரலாறு 



 நான் பப்லிக்  செக்டர் கம்பனியில்வேலையிலிருந்ததாலும் பணியில்  இருக்கும்போது  குவார்டார்ஸ்  இருக்கும் என்பதாலும் சொந்த வீடு பற்றி நான்    நினைக்கவே இல்லை
 விஜய வாடாவில் இருந்தபோது என்மாமியார் மாமனார் தொந்தரவு தாங்காமல்  1979 ல் ஒரு மனை வாங்கிப்போட்டென்   என் எண்ண அலைகளே வேறு மாதிரி இருந்து இந்தியரின்  சராசரி வயது  60 க்கும்  குறைவு  என்பதாலும்   வீடுகட்டுமளவுக்கு என்னிடம் பணம்  இல்லாததாலும் கடன்  வாங்குவது உடன் பாடாக  இல்லாததாலும்   வீடு  அனாவசியமென்னும் நினைப்பே இருந்ததுசொந்த வீடு உள்ளவனுக்கு அது ஒன்றே இருக்கும் இல்லாதவனுக்கு  எங்கும் வசிக்கமுடியும் என்றெல்லாம்  நினைத்தேன் மீண்டும்   திருச்சி வந்த போது நண்பன் ஒருவன்   நான்நினைப்பதுதவறு  என்று என்னவெல்லாமோ கூறிஎன்னை சொந்த வீடு கட்ட வைத்தான்முதலுக்கு  எங்கே போவது  நான் இருந்ததோ திருச்சியில்  மனையோ பெங்களூரில்அப்போது மனை இருந்த இடம் சிடிக்கு வெளியில் சுற்றி இருந்தஇடம் ஒரே பொட்டல்வெளி
அப்போது தண்ணீர் வசதியு இருக்கவில்லை  ஆகவே முதலிலொரு ஆழ்கிணறு தோண்ட வேடிய அவசியம் நேர்ந்தது இருக்கும் மனையில் எங்கு தோண்டுவது  எங்கு தண்ணீர்  வரும் என்று எதுவும் தெரியாது மனையின்  ஓர் ஓரத்தில் தோண்டு வதே சரியாய் இருக்கும்   வாட்டர் டிவைனர்  உத்வி நாடலாம்  என்றார்கள் நான்குளிக்கும் போதுவேண்டு நீர் நிலைகள் நான்  குறிக்கும் இடத்தில் பிரவாகிக்கட்டும் என்றுவேண்டி ஓர் இட்த்தை என்மனைவி காட்டினாள் அது மனையில்  வீடுகட்டதொந்தரவு இல்லாமல் இருந்தது சுமர் 90 அடி ஆழத்தில் பாறை தென்பட்டது  இன்னு சிறிது ஆழத்தில் நீர் வந்தது 150 அடி ஆழம் வரை தோண்டச் சொன்னோம் நீர் நல்ல இனிப்பாக இருந்தது60 அடிக்கு 30 அடி மனை  அத ந்நடுவே ஒரு சின்ன வீடு  என் வடிவமைப்பில்  வளர்ந்தது  நாங்கள் இருந்ததோதிருச்சி வீடோ பெங்களூரில்  மாதம் ஒரு முறை வருவோம் வீடு படிப்படியாக உருவாவதை கண்டோம்வீடு கட்டின் காண்ட்ராக்டர்நம்பக மானவராய் இருந்தார்

எப்படியோ 1979 ல் வாங்கிய மனையில்  1985ல்  வீடு வந்தது வீட்டை வாடகைகு விட்டுச் செல்லலாம்  என்று முடிவு செய்தோம்வீட்டின்  ஸ்பெஷாலிடியே  கார் போட்டிகோ தான் கான்டி லிவெர் டைப் போர்டிகோ நீண்டு தொங்குவது போல் இருக்கும்  வீட்டுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே  தந்தையின் பெயரோடு  ஐஸ்வர்யமாகவும் இருக்க  மஹாதேவ்ஐஸ்வர்யா  என்று பெயர்சூட்டினோம்
பின்என் மூத்தமகனுக்கு  திருமணம்  1991ல் நடந்தது  வேலையும் பெங்களூரில் இருந்ததால்  சொந்த வீட்டுக்கே குடி வந்தனர்



வீட்டில் போர் போடும்போது  எடுத்த  படங்கள்

(தொடரும் )






                                       

புதன், 11 மார்ச், 2020

மார்ச் 2ம் தேதி



                                                   மார்ச்  2 ம் தேதி
                                                    ==============

 மார்ச் 2ம் தேதி மறக்க முடியாத நாள்என் நினைவு  பெட்டகம்  என் தந்தை மறைந்த தினம்   அது ஆயிற்று 63 ஆண்டுகள் ஒவ்வோராண்டும்  சிலநினைவுகளைப்பகிர்வதுண்டு என் பதிவுகளைப் படிப்பவர்கள்   என் தந்தைபற்றி அறிந்திருக்க வாய்ப்புண்டு
 என் தந்தை மறைந்தபோது அவரது அலுவலகத்தில்  இருந்து கொஞ்சம்பணம்  கலெக்ட்செய்து கொடுத்தார்கள் என்நண்பர்களும் ஒரு தொகையைக் கொடுத்தார்கள் அதை ஏதோ பிச்சைக்காசு என்னும் விதத்தில் உறவுகள் பேசினார்கள்அதை  நான் வாங்காவிட்டால்  உறவுகள் உதவுவார்களா என்ற என்கேள்விக்கு அனைவரும் கப் சிப்பாகி விட்டார்கள்
 என் தந்தைக்கு நானே கொள்ளி போட்டேன்  அது எனக்கு கிடைத்த் பேறா  தெரியவில்லை  இப்போது போல்  மின்  எரி வசதி அப்போதில்லை  இருந்தால் தெரியவும் இல்லை
 விறகு கரி என்று கலந்து ஒரு சூளை மாதிரி செய்தார்கள்உடல் தகனம் செய்தபோது மண்ணால் குழைத்த அடுப்புக்குள்  உடலிருந்தது  கொழுந்து விட்டு எரியுமென்றில்லை புகை என்பதே இல்லாமல் இருந்தது எனக்கு அது ஒரு சூளை மாதிரியே இருந்தது இத்தனைஆண்டுகளுக்குப் பின்  அதெல்லாம்யார் ஏற்பாடு செய்தார்கள் என்று   நினைவில்லை
 என் அப்பா இறக்கும்    முன்  எழுதிய கடைசிகடிதம் என்  அண்ணா என்னிடம் சேர்ப்பித்தார்  அதில் நான் அம்பர்நாத் உயர் பயிற்சிக்கு  தேர்வாகி இருந்ததை  மகிழ்ச்சியுடன்  குறிப்பிட்டு இருந்தார் அதைநான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன் 


jஜீவிக்கு பிடித்த பாட்டு  என் சி வசந்த கோகிலம் பாடியது 





  

ஞாயிறு, 8 மார்ச், 2020

மகளிர் தினம்



                                                                      மகளிர் தினம்
                                                                       ----------------------
 இன்று 8-3- 2020  மகளிர் தினம் இன்று காலை  என்  மனைவிக்கு happy womens day என்று வாட்ஸ் ஆப்பில்  செய்திகள்வந்திருந்தது  அவள் same to you என்று  பதில் அனுப்பினாள் இதில்  தமாஷ் என்னவென்றால்  அனுப்பியவர்களில் ஆண்களும் இருந்தனர் jokes apart நான் விழித்ததும்  அவளுக்கு வாழ்த்து சொன்னேன்  மகளிர்  தினத்தில்  வலைப்பதிவுகளில்  இருக்கும் தாய்க்குலங்களைப் பற்றி எழுதலாம் என்னும் எண்ணமும் வ்ந்தது
தமிழ் வலை உலகில்  எனக்கு தெரிந்த  என்னை அறிந்த பெண் பதிவர்களுக்கு  இப்பதிவு சமர்ப்பணம் நான்  அறியும்பெண்வலைப்பதிவர்கள் பலர் இப்போதெல்லாம் என்பக்கமே வருவதில்லை  வலைக்கு வருவது  டூ வே  ட்ராஃப்ஃபிக்  அல்லவா முன்பெல்லாம் பலரும் என்தளம் வருவார்கள்
பலரையும்நினைவு கூர இது  ஒருசந்தர்ப்பம் அல்லவா இப்பொது என் பதிவுகளில்  காணும் பெண்பதிவர்கள்  அவர்களைப் பற்றிந எழுதும்போது என்னையும் மீறி அவ்ர்கள் பற்றிய கருத்துகளூம்  வந்து விழலாம் no offence  meant  அது என்சுபாவம்   பாணி என்பதைப்பலரும் அறிவார்கள் குடத்திலிட்ட விளக்காய்  இருப்பவரை  குன்றின்   மேல் ஏற்றும்என் முயற்சி

மகளிர் தினத்தில் பேரும் புகழும் பெற்ற மகளிரைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் வழக்கமாகிவிட, எனக்கு மனசில் தோன்றியதைப் பதிவிடுகிறேன். ஆண்டவன் படைப்பில் ஆணும் பெண்ணும் சமம் என்று உரக்கக் கூறினாலும், எங்கோ  உள்ளத்தின் அடியில் பெண்களை சமமாக நினைக்கவும், நடத்தவும் இந்த ஆணாதிக்க சமுதாயம் தயாராயில்லை என்பதையே அண்மைய நிகழ்வுகள் தெளிவு படுத்துகின்றன. பெண் எனப் படுபவள் ஒரு உடைமைப் பொருள் என்றே கருதப் படுகிறாள். இல்லை என்று காட்டத்தானோ என்னவோ இந்த மாதிரி மகளிர் தின நினைவுகள் ஒரு பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப் படுகின்றன.எடுத்துக்காட்டாக புகழ் பெற்ற மகளிரைப் பற்றி பேசுகிறோம். பெண்களின் பெருமையைப் பற்றிப் எழுத நான் எடுத்துக்கொள்ளப் போவது எனக்கு நன்கு பரிச்சயமான, என்னைத்தெரிந்த பெண்களில் சிலரைத்தான். பெண் என்றாலேயே எனக்கு நினைவுக்கு வருவது என் மனைவியைத்தான்.அவள் பட்டம் பெற்றவள் அல்ல. பணிக்குச் செல்பவளும் அல்ல. எனக்காக செய்து வந்த பணியையும் துறந்து எனக்காகவே வாழ்பவள். என்னை விட அவளை நான் நேசிக்கிறேன். இது எல்லாக் கணவர்களும் சொல்வது தான் என்பதுபோல் தோன்றினாலும், நான் எழுதுவது ‘அக்மார்க்’ உண்மை. நான் பார்த்துப் பொறாமைப் படும் பெண்களும் இருக்கிறார்கள்.பதிவுலகில் என்னை பிரமிக்க வைக்கும் பெண்மணிகளின் ஒரு பட்டியலையே தருகிறேன்
1)கீதா சம்பசிவம் நான்நேரம் எடுத்துசந்தித்தபதிவ்ர் ஸ்ரீரங்கவாசிதுறை போகியவர் என்று பெயரெடுத்தவர் பழங்கதைகளை  இண்டர்ப்ரெட் செய்யும்விதமே அலாதி  எதையுமே அவருக்கு நேர்ஃந்த அனுபவம்போல் சொல்வார்ஒரு முறை திருமணம்  பற்றிய கருத்து தெர்விக்கும்போது  ஆண்பெண் திருமண்மே  இருவர் இணைவதற்கு மட்டுமான லைசென்ஸ் மட்டுமல்ல அதை யும்  தாண்டி புனிதமானதுஎன்பது போல்கருத்து தெரிவித்திருந்தார்அவரிடம் என்க்குப் பிடித்த விஷயமே ஒரு அதாரிடி  போல் சொல்வதுதான் வெகுகாலமாக  பதிவு எழுதி வருபவர் சமையல்விஷயங்களில் அவருக்கு இல்லாத  அனுபவமே இல்லை போல் இருக்கும்
செல்வி மாதங்கி மஹாலிங்கம்   சென்னையில் இரு முறை என்னை சந்திக்க வந்தவர் ஐ டி பணியில் இருந்தவர் இப்போது அடைவங்கிப்பணியில் இருப்பவர் முன்பெல்லம் என் தளட்துக்கு தவறாமல் வருவார்  வர மறந்தாலு அப்பா வரவழைப்பாராம்  முகநுலில் த லோன்  லி பேர்ட் என்னும்கவிதை எழுதி இருந்தார்  அதை நான் தமிழ்ப்படுத்தி எழுதியதை மிகவும்சிலாகித்து  எழுதி இருந்தார் என்ன இருந்தாலும்  தனக்கென ஒரு வழியில் செல்பவர்
 செல்வி அருணாசெல்வம் கவிதையில் மட்டுமே எழுதுகிறார் ஆரம்ப காலத்தில் இவர் ஆணா பெண்ணா என்னும்  கேள்வி இருந்திருக்கும்போல நான் அவரதுஆரம்பகாலத்தில் இருந்தே  தொடர்கிறேன் ஃப்ரான்ஸ் தேச  வாசி என்று  நினைக்கிறேன்
தேனம்மை லக்ஷ்மண்ன் இப்போது போட்டி போட்டு  நூல்களை மின் பதிவாக்குகிறார்என்னைக் காணவருவதாக்  எழுதி இருந்தார்  பலமுறை பெங்களூர் வந்தும் இன்னும் சந்தித்தபாடில்லைநாட்டுக் கோட்டை பற்றியும் அவர்கள்கோவில்கள்பற்றியும் எழுதி இருக்கிறார்  என்னிடம்  அவருடையசாட்டர்டே போஸ்டுக்காக எழுதக் கேட்டுஇருந்தார் கொடுத்திருந்தேன் திருமதி துளசி கோபால் நியூசி யில் இருப்பவர் ஆனால் பெரும்பாலும் க்ஷேத்ராடனம்தான் எனக்கு அவர் தேர்ந்ஹெடுக்கும்கோவில்கள் பெரும்பாலுவிஷ்ணு கோவில்களாக  இருப்பதால் அவருக்கு வைணவ bias   இருக்குமோ என்னும்  எண்ண்ம் வருவதுண்டு எல்லாமேநம்பிக்கைதான் என்று எண்ணுபவர்டீச்சர் என்று அறியப்படுகிறார் ஏன் என்றுஇன்னும் தெரியவில்லை இவரை ஒரு முறை என் வீட்டிலும் இன்னொருமுறை மதுரை பதிவர் விழாவிலும் சந்தித்து  இருக்கிறேன்பழக இனிமையானவர்என் வீட்டுக்கு  வந்ததை சிங்கத்தின்  குகையில்  என்று  எழுதி இருந்தார்
அதிரா ஏஞ்செல்  இருவரும் எனக்கு அறி முகமானதே தமாஷாகதான்   என் மீசையே என் அடையாளம்  அதைப்பார்த்துன் என்னோடு தொடபு கொள்ள தயங்கினார்களாம்அவர்களதுபடமோ முகவரியோ என்னிடம் கிடையாது நகைச்சுவை என்று நினைத்து எழுதுவதை ரசிக்கபலருண்டு  
இன்னொரு ஆதிரா உண்டு  கல்லூரியில்  ஆசிரியை சென்னையி ல் என்னை  சந்திப்பதாக  இருந்தார்  ஏனோ முடியவில்லை  சாதனைகள் பல புரிந்து அதனால்பேரும்  புகழும்பெற்றவர்  இயற்பெயர்பானுமதி

தென்றல் சசிகலாவை நான்  புதுகை  பதிவர்சந்திப்பில்பார்த்தேன்   என்னை அறி முக்ப்படுத்தி தெரிகிறதா என்று கேட்டபோது  எங்கும் நிறைந்தவன்  ஈசன் என்றால் என்னுள் நிறைந்தவள் நீயே  யன்றோ  என்னும் நான்  எழுதிய வரிகளைச்  சொல்லி என்னைபிரமிக்க வைத்தார்
 திருமதி உமாமோஹன்   பதிவுகள் ஒன்றாக வராது ஒருகாஸ்கேட்போலவரும்                    
அவர் எழுத்டி லெவலே வேறு  இதுவரை நான் கருத்திட்டது இல்லை
 திருமதி பவள  சங்கரி  நித்திலம் தளத்துக்குஉரிமையாளர்  திருஅப்பாதுரை மூலம் தெரிந்தவர் இவர்கள்தவிரான்புடன்  ம்ல்லிகா  சாகம்பரி போனறோரை பதிவுகளில்  நான் பார்க்கவில்லை  அவ்சரவருக்கு ஒரோர் பாணி
திருமதி கோமதி அரசுநான்  மயிலாடுதுறையில் சந்தித்தேன்   மல்லிகைப் பூ பொல் இட்லி கொடுத்து  அசத்தி விட்டார் நான் தமாஷாக இவரை ஒரு ஆர்நிதாலஜிஸ்ட்  என்பேன் பறவைகள் மேல் அவ்வளவுபாசம்    வேதாத்திரி சுவாமிகள் மேல் அத்தனை அபிமானம் அதென்னவோ தெரிய வில்லை  நான் சந்தித்த  பதிவர்கள்பல்ரும் என்னிலும் மிகவும் மாறு பட்டவர்கள் இதைதான்  opposite poles attract  என்கிறார்களோ  
  பானுமதி வெங்கடேஸ் வரன்   இப்போதெல்லாம்  காணொளி  மூலம்   அவ்வப்போது பதிவிடுகிறார் திரைப்படசெய்திகள்விரல் நுனியில்

 தில்லையகத்து கீதா  துளசிதரனுடன் சேர்ந்து  இயங்கு கிறார்    தற்போது  பெங்களூர் வாசி  பதிவு பக்கமே வருவதில்லைஎதையும் சுருங்கச் சொல்ல மாட்டார்
                                            

சனி, 7 மார்ச், 2020

ஒரே நாளில் இருவர் பிறந்த தினம்





                                                 ஒரே நாளில்  இருவர் பிறந்த  தினம்
                                                 -------------------------------------------------------


ஃபெப்ருவரி 28ம்  நாள் எங்கள்வீட்டில் இருவருக்குப் பிறந்த தினம் என் மருமகள்மற்றும் பெயரன்இருவரின் பிறந்த தினமும்  ஒன்றே சிரமம்  இருந்தாலும்  நானும்  மனைவியும் சென்றோம் சிறுவனுக்குமகிழ்ச்சிதான்  அவன் பிறந்த நாளுக்கு  அவன் புகைப் படங்கள்  அடக்கிய collage  ஒன்று பரிசாககொடுக்கப்பட்டதுகவனமுடன் வைத்து இருந்தால் பிற்கால்த்தில் நினைப்பெட்டகமாக விளங்கலாம் பிறத நாள் கேக் என்  மூத்தபேரன் வாங்கி  இருந்தான்  C என்றால்  சித்தி   A என்றால் அபிஷேக் அவன் பிறக்கும் போது அறுவை சிகிச்சை  தேவைப்பட்டது கடைசி நேரத்தில்கொடிசுற்றி இருந்தது தெரிந்தது பிறகு ஒரு நாள் கர்ப்பரட்சகாம்பிகை கோவில் போனது குறித்துஎழுதி இருக்கிறேன் 
collage   புகைப்படங்கள் 


பேரன்  மருமகளுடன்  

பிறந்த நாள்  கேக்
நான் என் உற்றார் சுற்றமுடன்   விசெஷ நாட்களைக் கழிக்க விரும்புவதுபொல்  என் பேரனும்  நினைக்கலாம் இல்லையா ஆகவேதான்  சிரமம் பார்க்காமல் சென்று  வந்தேன்


ஒரு வாக்கியம் முடியும்முன் வேறு ஒரு வாக்கியம் துவங்குவதை நான் ரசிப்பேன்











      

புதன், 4 மார்ச், 2020

ஒரு மாற்றம்


                         

                                                ஒரு மாற்றம்
                                                 --------------------

 இனி நான்  எழுதும்  பதிவுகள் சற்றே  வித்தியாசமாய் இருக்கும் நாம் அறிவொம்   நம்மைவிட நமமை படிப்பவர்கள் அறிகிறார்கள்போலும் எனக்கு அப்படித்தோன்றவில்லை ஒன்று மட்டு நிச்சயம்   எல்லோருக்கும் எல்லாம் தெரியும் நான் எழுதுவது பாம்பும் சாகக் கூடாது  கம்பும் உடையக் கூடாது  என்பது போல் இருக்கிறதாம்  அப்படியா நண்பர்களே  வெட்டு ஒனறு  திண்டு இரண்டு என்பதுபோல் இருப்பதாகவே என் வாசகர்கசள் நினைக்கிறார்கள் என்றே எண்ணி வந்தேன்
எனக்கு என்று  சில எண்ண்ங்கள்   பெரும்பாலும்அவையே என் எழுதுபொருளாக இருக்கும்  நம் சமூகத்தில் நிலவும்   ஏற்றதாழ்வுக்சள் தவிர்க்கப்பட வேண்டியவை  எனக்குத்தோன்றிய சில தீர்வுகளும்அதில் இருக்கும் நம்பிக்கை என்னும் பெயரில்நடக்கும்  சில நிகழ்வுகள் என்னை என்னவோ செய்யும் அவற்றுக்கு  எதிராக குரல் கொடுத்திருக்கிறேன் பலரும் பைத்தியக்காரன் என்று  நினைத்திருக்கலாம் அதை தெரிந்தே  எழுதிய வரிகள் இவை

பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ
எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?

எனக்கு பலநேரங்களில் தோன்றுவது  பலரும்  say yes when they mean no இது ஒரு பர்செப்ஷன் தான்  நிஜமாயிருக்க வேண்டும் என்றில்லை  நான் என்னைப்பற்றியே அதிகம் எழுதுவது  பலருக்கு சலிப்பேற்படுத்தலாம் முகம் காட்ட விரும்பாதபதிவர்கள்மத்தியில் ஒளிவு மறைவின்றிஎழுதுவது  என்பலமாகலாம் பலவீனமும்  ஆகலாம் 
எல்லோரும்நல்லவரெ என்று  எழுதி இருந்தேன்   கருத்து வேறுபாடுகள் இருப்பதால் நல்லவர் அல்லாதவராகி விடுவாரா நான் என்கருத்துகளை  எழுதுகிறேன் பலர் எழுதத் தயங்கலாம் ஆக என்பதிவுகள் இனி  வித்தியாயசமாய் இருக்கும் என்றேன்  நல்லதாக நான் நினைப்பதை  எழுதலாம் என்று இருக்கிறேன்  அதாவது சில காம்ப்ராமைசுகள்  செய்யலாம்  ஆனால் அதுவும்  பலரும் ஏற்கும்படியாய் இருக்காமலும் போகலாம் என் இரண்டாம் மகன்  ஒரு பொறி இயல் பட்டதாரி நல்ல உத்தியோகம்  நானெல்லாம்  படிப்பில் பட்டம் பெற்றிருந்தால் ஒரு வேளை உயரத்தில் பற்ந்தி ருக்கலாம்   பாருங்கள்மீண்டும்புலம்பலாஎன்று  கேட்பது காதில்விழுகிறது  வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் அவற்றில் நான் ஏன் அவலசம்பவங்க்களை  நினைவு கூற வேண்டும்  சரி விஷயத்துக்கு  வருவோம்
பட்டதாரிகளுக்கு பட்டம்வழங்கும் வைபவம் ஆங்கிலத்தில் கான்வொகேஷன் என்பார்கள்ன்மகனை அம்மாதிரி ஒருபட்டமளிப்பு  விழாவில் தலைமைஏற்க கூப்பிட்டிருந்தார்கள் நான் எழுதுபவன்என்னிடமென்னபேசலாம் என்றுஎன்மகன் கேட்டான் நான் என் வழக்கம்போல் பட்டம்பெற்று வெளி வருபவர்கள் சுதந்திரமாக  இருக்க பழகிக் கொள்ள வேண்டும்  என்னும்ரீதியில் எழுதிக் கொடுத்தேன் என் மகனுக்கு அது பிடிக்கவில்லை போலும் பின் என்ன நான் சொல்வதை ஏறக வேண்டுமா என்ன என்மகனே என்றாலும் என்னிடம் அதை சொல்லாமலேயே  அவனே வேறு ஒரு பேச்சைத் தயார்செய்திருந்தான்  என்னிடம் ஏதும் சொல்ல வில்லை  எல்லாம் முடிந்தபின் தான்எனக்குத்தெரிந்தது பரவாயில்லை நானதைப் பதிவிடுகிறேன் நல்ல
 விஷயங்களில் கவனம் செலுத்தினால் மனம் உற்சாகமாக இருக்க்லாம்



பட்டமளிப்பில் 



பாண்ட் முழக்கத்துடன்வரவேற்பு 





அவனது உரை ஆடியோ  அப்லோட் ஆகவில்லை அல்லது தொழில் நுணுக்கம் எனக்கு  தெரியவில்லை எதொ முயன்று  இருக்கிறேன் கீழே சொடுக்கினால்   ஆடியோ கேட்குமென்று நினைக்கிறேன் 

https://drive.google.com/open?id=19vqMbnbO_4f7KGsbY-J5O42lDxi-iFz5


மனசுக்கு மகிழ்ச்சி தரும்செய்தி பகிர்ந்து கொள்கிறேன் 








ஞாயிறு, 1 மார்ச், 2020

சில நினைவுகள்


                       
சில நினைவுகள்
 நாங்கள் ஐவர் என் தாய்க்கு நான் நான்காமவன்   எனக்கு மூத்தவர் என்சகோதரி ஒரே பெண் நான்கு சகோதரர்நடுவே ஒரே பெண் சிறுவயதில்சற்றே புஷ்டியாகiஇருப்பாள் நால்வரில் ஒருத்தியாக இருந்ததால்நாங்கள் அவளை  சூர்ப்பனகை என்று அழைப்போம் ஏன்பள்ளி கொண்டீர் ஐயா பாடலுக்குநடனமாடுவாள்  நாங்கள் தரை சொட்டயாகு என்றுகேலிசெய்வோம்  ஏனொ தெரியவில்லை அவள்நினைவாக இருக்கிறது  
யார்பாடியது தெரிகிறதா 





நான் பார்த்த தேர்கள்
நான்பார்க்க விரும்பிய  தேர்களில்திருவாரூர்  ஆழித்தேர் பார்க்க முடியவில்லை நாங்கள் திருவாரூர் ஒருமுறை சென்றபொது  தேர் மொத்தமாக பிரித்து  விடப்பட்டு இருந்தது
காசியில்பாதி கல்பாத்தி என்பார்கள்  கல்பாத்தி தேர் பிரசித்தி பெற்றது மேலும்  எங்கள் கிராமம் அருகே உள்ளது என்மனைவியைஅழைத்துக் கொண்டு தேர்காட்டப்போனேன் -தெரு முனைகளில் தேரைத்திருப்ப யானையை உபயோகிப்பார்கள்
தேரைத்திருப்ப யானை ரெடி

தேரின்  முன் என் மனைவி 


யானை தேரை முட்டி திசை திருப்புகிறது
திருப்பரங்க்குன்றத்தேர்வீதி 

Add caption



திருப்பரங்குன்றத்தேர்


அடுத்து எங்கள்கிராமத்தேர் அதில் என்பேரனை ஏற்றி அமர வைத்தேன்





என் தம்பி மனைவி வீட்டுத் தோட்டத்தில்  கொல்லங்கோடு செடியில் காய்த்து தொங்கும் பப்பாளி

பப்பாளிகள்
நான் பிறந்த ஊர் ஹலசூர் அங்கு ஆண்டுதோறும் பூப்பல்லக்குஎடுப்பார்கள்
 சுமார் 500 கேஜி மல்லிகை மலர்களால்  அலங்கரிப்பார்களிள் இளிதுதேரல்ல



பல்லக்கு கூடு அருகே நான்
திருமணத்துக்கு முன் பல்லக்கு பார்க்கப் போன நினைவு  நாங்கள்நான்கைந்து  நண்பர்கள் ஒரு சங்கிலி  வளையம் அமைத்து அதன்  உள் வீட்டு பெண்களை  பாதுகாப்பாக நடத்தி சென்றது  நினைவுக்கு வருகிறது