Sunday, September 9, 2018

சந்தேகங்கள்


                                         சந்தேகங்கள்
                                        ---------------------

எனக்கொரு சந்தேகம்
என்ன இது சந்தேகமெல்லாம் கேட்கப்படாது வழிவழியாய் நடை முறைப் படுத்தப்பட்டு  பழகி வரும் விஷயங்களில் பொருள் இல்லாமல் போய் விடுமா  அதிகப்பிரசங்கித்தனமாய்  கேள்விகள் கேட்டுபதில்கிடைக்காவிட்டால் வருத்தப்படக் கூடாது
இருந்தாலும்  கேள்வி கேட்காமலேயே எதையும்  ஏற்றுக் கொள்ள முடியவில்லையே கேள்விகள் கேட்கப்படும் போதாவது சிலர் அதுபற்றிசிந்திப்பா
ர்கள் அல்லவா
சூரியனையும்  நவகிரகத்தில் ஒன்றாக எண்ணுவது சரியா
உன்னைத் திருத்த முடியாது நீஎழுதுவாய் எல்லோரும்  உன்னைப் படிக்கவே தயங்குவார்கள்
 என் கருத்தைச் சொல்லி விடுகிறேன்  பின் என்னைப் பற்றி எடை போடட்டும்
விண்வெளியிலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் இவற்றுக்கும் மனித வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! ஆகவே ஜோதிடம் என்பது விஞ்ஞான பூர்வமற்ற ஒரு அபத்தமே!” என்று ஆணி அடித்தாற்போல தெளிவுபடுத்தியவர்தான் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்.
 இதையே நான்  கூறினால் ஏற்க தயங்குவார்கள்
 இந்த நிலையில் அந்த ஜோதிடத்தை, விஞ்ஞானப் பூர்வ மானது என்று நிரூபிப்பதற்கும் பல்கலைக் கழகங்களில் ஒரு பாடமாக வைப்பதற்கும் வளர்ப்பதற்கும் இன்றைய பாஜக மோடி அரசு பாடாய்ப்படுகிறது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. மேலும்  ஒரு விஷயம் எந்த ஒரு செயலைச் செய்யும் முன்   ராகு காலம் பார்ப்பவர்கள் இங்கு உண்டு இதில் படித்தவர்களும் பாமரர்களும்அடக்கம்! பூமத்திய ரேகையையொட்டி பூமியின் சுற்றளவு சுமார் 40ஆயிரம் கிலோ மீட்டர். அந்த தூரத்தை 24 மணி நேரத்தில் பூமி தன்னைத் தானே சுற்றுவதன் மூலமாகக் கடக்கிறது என்றால், ஒரு நிமிடத்தில் அது கடக்கும் தூரம் சுமார் 27 கி.மீ.மேற்கிலிருந்து கிழக்காக பூமி சுழல்வதால், இந்தியாவைப் பொறுத்தமட்டில் முதலில் வரும் கொல்கத்தா விற்கும் தொடர்ந்து வரும் மும்பைக்கும் உள்ள கால வித்தியாசம் ஒரு மணி நேரம். அதே போல் சென்னைக்கும் நீலகிரிக்கும் உள்ள நேர வித்தியாசம் 15 நிமிடங்கள். இதில் இராகுகாலம் என்று நாம் குறிப்பிடும் ஒன்றரை மணி நேர காலவரம்பு சென்னைக்கும் நீலகிரிக்கும் எப்படி ஒரு சேரப் பொருந்தும் 
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள் நான் மீண்டும்  மீண்டும்  எழுதுவதன்விளைவு என்று சொல்ல மாட்டேன்  ஆனால் என் அறச்சீற்றம் அதன்  விளைவுகளை உண்டு பண்ணியிருக்கிறது ஒருமகிழ்ச்சியான விஷயமே இந்த ராகுகால  அனுஷ்டானங்கள்  சரியில்லையோ என்னு சந்தேகம் பல வலைப் பதிவர்களிடம்  தெரிவது மக்கள் சிந்திக்க துவங்கி இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்னதான் சிந்திக்கத் துவங்கினாலும்   அவர்கள் உறக்கம் தெளிந்து எழ நாட்கள் ஆகுமென்று தெரிகிறது வேறு வேறு கண்டங்களில்  வசிப்பவர்கள் அந்த கண்டங்களுக்கான பஞ்சாங்கம் கிடைக்குமா என்று தேடுகிறார்கள்  
  இன்னொரு விஷயம்   எதற்கும் சாஸ்திரம் என்று சொல்லி அடக்குவார்கள் இந்த சாஸ்திரம்தான் என்ன சம்பிரதாயம் என்றாலாவது வழிவழியாகப் புழங்கி வருவது என்று அர்த்தம்  கொள்ளலாம் கோவிலுக்கு எண்ணை எடுத்துச் செல்வதை இப்படிச் சொல்லலாம் முன் காலத்தில் மின்சாரம் கண்டுபிடிக்கும் முன்  வெளிச்சத்துக்கு எண்ணை தேவைப்பட்டது ஆனால் இப்போதும் கோவிலில் ஆண்டவனுக்கு  எண்ணை விளக்குதான் கண்ணுக்கே புலப்படாமல் இருப்பதே ஆண்டவனின் உருவம்  நேரில்தான் காண முடியாததை சிலை வடிவிலாவது காணலாம் என்றால் அதுவும்  கற்பனையாகத்தான்  காண வேண்டும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றால் நாத்திகன் என்னும் முத்திரைவிழும்இதில் வேறு  இத்தனை விளக்குக்கு  எண்ணை கொடுத்தால் புண்ணியம் என்று சொல்லி பணம்பார்க்கும் வியாபாரிகளும் உண்டு  
இன்னொரு விஷயம்  கடவுளுக்குப்படைக்கப்படும் நைவேத்தியம் நாம் உண்ணும் உணவுக்கு  ஆண்டவனுக்கு நன்றி தெரிவிக்கும்  விதமே முதலில் அவனுக்குப்படைத்துபின்நாம் உண்பது ஆனால் விளங்காத விஷயமென்னவென்றால்  இன்ன கடவுளுக்கு இன்ன உணவு என்றுதீர்மானித்து படைப்பதுதான்
தமிழர் நிலங்களைப் பாகுபாடு செய்தார்கள். அதனை அனபின் ஐந்திணை என்பார்கள். அதாவது குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்) முல்லை (காடும் காடைச் சார்ந்த இடமும்) மருதம் (வயலும் வயலைச் சார்ந்த் இடமும்) நெய்தல் (கடலும் கடலைச் சார்ந்த இடமும்) பாலை (மணலும் மணல் சார்ந்த இடமும்). இதற்கேற்றவாறு முதல்பொருள் (அதாவது நிலமும் பொழுதுகளும்) கருப்பொருள் (தெய்வம் தொடங்கி விளையும் அத்தனைப் பொருட்களும். இது அந்தந்த இடத்தைப் பொறுத்தது) உரிப்பொருள் (இது உணர்வுகளைக் குறிப்பது - இதுவும் அந்தந்த இடத்தைப் பொறுத்தது.) எனவேதான் அங்கு உருவாக்கப்பட்ட தெய்வங்களை அந்தந்த நிலப்பகுதில் விளைந்த பொருள்களால் நிவேதனம் செய்யப்பட்டு வழிபட்டமை உண்மையானது. அப்படித்தான்  நடக்கிறதா 
எது எப்படியானால் என்ன  பதிவில் வரும் பின்னூட்டங்கள்  இன்னும்  பகுத்தறிவுக்கு ஒப்புக் கொள்ளும்படியான பதில்கள் தருவதில்;லை ஒரு பதிவரின்  எழுத்துப்படி கன்வின்சிங்  ஆன பதில் கிடைக்கவில்லைஎன்பதே நிஜம்  இருந்தாலும்  ஒவ்வொரு விசேஷ நாட்களில்  நமக்குப்பிடித்த தின்பண்டங்களை செய்து ஆண்டவனுக்குப் படைப்பதாகபேர் பண்ணி நாம் உண்ணுவதால் குறை ஏதும் இல்லை என்று திருப்தி கொள்ளலாம்   
சில விஷயங்களை அடிக்கடி எழுதுவது  எப்படியாவது சிலரை யோசிக்க வைத்தால் நலமே  
 மேலே கூறப்பட்டது ஒரு பெரியவர் என்னிடம் கூறியது ஆனால் நிவேதனங்கள் என்பது அப்படிய்யா இருக்கின்றதுஎன்பதே என்கேள்வி பிள்ளையார்சதுர்த்திக்குகொழுக்கட்டையும் கிருஷ்ண ஜயந்திக்கு சீடையும்(இதுபோல் பிற நிவேதனங்களும் )அந்தந்த இடத்துக்கு தகுந்தவாறு என்பதுபொருந்துகிறதா
அண்மையில் ஒரு அவதாரக்கதையும் அதன்பின்னணியும்பற்றிஎழுதி இருந்தேன் அப்போது என் சிந்தையில் தோன்றிய சில எண்ணங்கள் இந்த அவதாரங்களைக் கொஞ்சம் ஆராய்ந்தால்  அவதாரங்களில் எங்கோ பரிணாம வளர்ச்சி தெரிவதுபோல் இருக்கிறது உலகில் உயிரினங்களில்  முதன்மையானதாக மீன் அவதாரம்   நீரில் வாழ்பவை அதன் பின்  நீர் நிலம் இவற்ற்ல் வாழும்ஆமை அவதாரம்  அதன்பின்  விலங்காக பன்றிஅவதாரம் அதன்பின் மனிதனும் விலங்கும் சேர்ந்தநர சிம்ம அவதாரம் அதன்  பின்முற்றிலும் வளர்ச்சிஅடையாத வாமன மனிதன்  அதற்குப்பிறகு குண விசேஷங்களில் மாறுபட்ட அவதாரங்கள்இவை என்னைச் சிந்திக்கச் செய்கிறது வாமன அவதாரத்துக்குப் பின் வந்த அவதாரங்களில் பரிணாம வளர்ச்சி பிடி படவில்லை இவை யெல்லாம் என் சிந்தைகளே ஏன் கற்பனைஎன்றுவேண்டுமானால் கொள்ளலாம்

எதையும்நம்பிக்கை என்னும் பெயரில் நியாயப்படுத்தும் மக்கள் மனிதர்களுக்கே கோவில் கட்டிக் கும்பிடுகின்றனர் குஷ்புவுக்குக் கோவில் புட்டபர்த்திபாபாவுக்குக் கோவில்  காந்திக்கு கோவில் வரிசையில் எம் ஜீ ராமச் சந்திரனுக்கும் கோவில் என்று தொடர்கிறது நல்லவர்களுக்கு சிலை அமைத்துஅவர்கள் நினைவை perpetuate செய்வதைஓரளவு ஏற்றுக் கொள்ளமுடியும் என்றால்மனிதர்களுக்கு கோவில் என்பதை  செரிக்க முடிகிறதா? எனக்கு முடியவில்லை  உங்கள் அபிப்பிராயம் என்ன நண்பர்களே 


                              எம் ஜி ஆர் கோவில்
                            ---------------------------------------------- 
(சில செய்திகள்  இணையத்தில் இருந்து)          
 



108 comments:

  1. உயிரின் தோற்றம், பரிமாண வளர்ச்சி பற்றி டார்வின் கண்டுபிடித்த முடிவினை வெகு காலத்திற்கு முன்பே அறிந்திருந்தவர்கள் தமிழர்கள். தசாவதாரம் என்பது உயிரின் தோற்றம் பற்றியச் செய்தியே, ஆனால் பிற்காலத்தில், தசவதாரத்தில் கடவுளர்களைப் புகுத்தி அதன் போக்கை மாற்றிவிட்டார்கள் என்று கூறுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதற்கு ஆதாரம் வேண்டுமேதசாவதாரம் பற்றிய செய்திகள் நம் ஆன்மீகத்தில் ஊன்றி விட்ட ஒன்று ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் பதிவர்களில்பலருக்கும்பல வற்றில் உடன்பாடு இல்லை என்றே தெரிகிறதுஎண்ணுவதை எழுதில் கொண்டுவந்தால் நலமாயிருக்கும் வருகைக்கும் கருத்துபகிர்வுக்கும் நன்றி சார்

      Delete
  2. நிறைய ஐயங்களை கிளப்பி விட்ட கட்டுரை ஐயா.

    இன்றைய இறை நம்பிக்கை நலிந்து போய் விட்டதற்கு காரணங்கள் பல...

    கல்லில் வடித்த உருவத்தை இறைவன் என்ற நம்பிக்கையோடு மட்டும் விழுந்து வணங்கியதோடு நிறுத்தி இருக்கவேண்டும்.

    மனிதனை சாமியார் என்ற பெயரில் கடவுள் என்கிறான்.

    மனிதனை மந்திரவாதி என்ற பெயரில் கடவுளுக்கு இணையாக்குகிறான்.

    கோவில் பூசாரியை இறைவணாக்கி காலில் விழுகிறான்.

    நேற்றுவரை குடிகாரனாகவே வாழ்ந்து இறந்து விட்ட தந்தையை இன்று போட்டோவில் இறைவனாக்குகிறான்.

    தனக்கு பிடித்த அரசியல்வாதியை கடவுளாகவே நினைத்து காலில் விழுகிறான்.

    பல பெண்களை கட்டிப்பிடித்த நடிகனுக்கு சிலை வடித்து காலில் விழுகிறான்.

    கேவலம் விபச்சாரிக்கு (நடிகை) கோவில் கட்டி வணங்கினான்.

    மெரினா சுடுகாட்டில் புதைத்தவர்களை நள்ளிரவில் போய்கூட வணங்குகின்றான்.

    இந்த அவலங்களை கண்ட தெய்வங்கள் உண்மையிலேயே (இருந்தால்) தேவலோகம் சென்று விட்டதோ என்ற ஐயம் அடியேனுக்கு உண்டு ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கைகள் என்னும்போர்வையில் பகுத்தறிவுக்குஒவ்வாதசெயல்களைப் பதிவிடுகிறேன் கோவில் கட்டிக்கும்பிட காரணம் வேண்டும் என்றால் நம்பிக்கைதான் காட்ட முடியும்

      Delete
  3. ஜி.எம்.பி சார்.... உலகில் இருவிதமான மனிதர்களுக்கு பிரச்சனையே இல்லை. கடவுள் இல்லை என்று தீர்மானமாக இருப்பவன், கடவுள் இருக்கிறார், அவன் நம்மை ஆட்டுவிக்கிறான், பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று உளமாற நம்பிக்கை உடையவர்கள். நாம இரண்டு பேரும் இந்த இரண்டு கேடகரில கிடையாது. முழு விசுவாசம், நம்பிக்கை நமக்கு இல்லை (இரண்டு கொள்கையில் ஏதாவது ஒன்றில்). அதனால்தான் உங்களுக்கு இந்த மாதிரி சந்தேகங்கள் எழுகின்றன.

    //ஆகவே ஜோதிடம் என்பது விஞ்ஞான பூர்வமற்ற ஒரு அபத்தமே!” என்று ஆணி அடித்தாற்போல தெளிவுபடுத்தியவர்தான் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்// - இந்த வெங்கட்ராமன் ஜோதிடத்தில் நோபல் பரிசு வாங்கியிருக்கிறாரா இல்லை வேறு சப்ஜெக்டிலா? ஆராய்ச்சி செய்யாத சப்ஜெக்டில் எவனோ சொன்னான் என்று அதை நீங்கள் குறிப்பிடுகிறீர்களே, அப்போ ஜோதிடம் உண்மை என்று சொல்பவர்கள் எல்லோரும் நோபல் பரிசு பெறாததால், அவர்களுக்கு மூளை இல்லை என்று முடிவு கட்டிவிட்டீர்களா? அடுத்து, அமெரிக்க அதிபரே சொல்லிவிட்டார், உணவு விலை உலக அளவில் உயர்ந்ததற்கு இந்தியர்கள் அதிகமாக உண்பதுதான் காரணம் என்று, அவரை (ஒபாமாவை) quote செய்து இடுகை போடுவீர்கள் போலிருக்கிறதே.

    நான் அனுபவத்தில் சொல்கிறேன். ஜோதிடம் என்பது விஞ்ஞானக் கணக்குகள்தான். அதற்குள்ள கடினமான கணக்குகளையும் சட்டங்களையும் முழுமையாகத் தெரிந்துகொண்டவர்கள் மிகத் துல்லியமாகச் சொல்லமுடியும், சொல்கிறார்கள். ஓரளவு காலத்தின் போக்கைக் கணித்துச் சொல்வதும் நடக்கத்தான் செய்கிறது (வேறு கிரக அமைப்பின் இன்ஃப்ளூயன்ஸ் இல்லாதவரை, அதாவது மற்ற ரூல்ஸ் இடிக்காத வரை). ஜோதிடம் பொய் என்று சொல்பவர்கள், என்னைப் பொறுத்தவரையில், 'ஒன்றும் தெரியாதவர்கள். அதாவது ஜோதிட அறிவு அவர்களுக்குப் பூச்சியம்'. விதண்டாவாதம் செய்வது என்று நீங்கள் முடிவெடுத்தால் அதற்கு எல்லையே இல்லை.

    // இன்ன கடவுளுக்கு இன்ன உணவு// - இது ஒரு பெரிய விஷயமா? ஒரு நியதி என்று இருக்கும்போது, அந்த அந்த கான்செப்டுகளுக்கு இந்த மாதிரி என்று தீர்மானித்திருக்கிறார்கள். ஏன் அனுமாருக்கு மைசூர்பாக் மாலை போடலை என்று கேட்பதே அபத்தம். பஹ்ரைன் கிருஷ்ணன் கோவிலில், ஒரு நாள் (எந்த நாள் என்று ஞாபகம் இல்லை, நான் கிளம்பி வருவதற்கு சில நாட்கள் முன்பு), கிருஷ்ண விக்ரகம் முன்பு, அங்கிருந்த பண்டிட், விளையாட்டுச் சாமான்களை வைத்து விளையாடினார்-பம்பரம் போன்றவற்றைச் சுழலச் செய்வது என்பது போல, அப்போது ஒருவர் கிருஷ்ண பக்தி கானம் மெய்மறந்து பாடினார்.. இதெல்லாம் மனதை பக்தி நிலைக்குக் கொண்டுபோவதற்கான ஒரு வழி என்றுதான் நாம நினைக்கவேண்டுமே தவிர... எல்லாம் எனக்குத் தெரியும் என்று கேள்விகேட்டுக்கொண்டே இருக்கக்கூடாது. எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன, நமக்கு அதில் எது உவப்பானது என்று பார்த்து அந்த வழியிலேயே செல்லவேண்டியதுதான். கடவுள் என்ன சொன்னார் பிரசாதங்களைப் பற்றி, 'நீ பக்தியோடு எதைக் கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்'. இதுதான் கான்செப்ட்.

    //மனிதர்களுக்கே கோவில் கட்டிக் கும்பிடுகின்றனர்// - இதுவும் உங்கள் prejudiceஐத்தான் காட்டுகிறது. நீங்கள் பார்த்தறியாத மஹாபலியைக் கொண்டாட ஓணம் பண்டிகை கொண்டாடுகிறீர்கள். அவரும் மனிதர்தானே. உங்கள் கேள்விகளெல்லாம் சந்தேகம் என்பதைவிட விதண்டாவாதமாகத்தான் இருக்கு. மனிதர்களில் உயர் நிலையை எய்தியவர்களை 'குரு' என்ற இடத்தில் வைத்துப் பாராட்டுகிறோம். அவர்களுக்கு கோவில் எடுப்பதும் வழக்கமாகத்தான் இருக்கு (ராகவேந்திரர், இராமகிருஷ்ணர், ராமதாஸ், ஷீரடி, புட்டபர்த்தி சாய்பாபா போன்று எண்ணிலடங்காதவர்கள்). அதில் என்ன தவறைக் காண்கிறீர்கள்? இவர்களோடு, 'குஷ்பூ, சிம்ரன்' ஆகியோர்களுக்குக் கோவில் கட்டியவர்களை ஒப்பிடுவதே உங்கள் ரசனைக் குறைவைத்தான் காண்பிக்கிறது. ஒன்று கடவுள் நம்பிக்கை இருக்கணும். இல்லை சுத்தமாக இருக்கக்கூடாது.

    நான் உங்களையே கேள்வி கேட்கிறேன். ஏன் உங்கள் வீட்டில் கடவுள் படத்துக்கு முன்னால் விளக்கேற்றி வைத்திருக்கிறீர்கள்? கடவுள், டியூப் லைட் வெளிச்சம் ரொம்ப அதிகமா இருக்கு, அதுனால திரி விளக்கு ஏற்று என்று உங்களிடம் வந்து சொன்னாரா?

    ReplyDelete
  4. /நாம இரண்டு பேரும் இந்த இரண்டு கேடகரில கிடையாது. முழு விசுவாசம், நம்பிக்கை நமக்கு இல்லை/ மாறுபடுகிறேன் என்னையும் உங்களில் ஒன்றாகசொன்னால் என்னால் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது கடவுள்நம்பிக்கை என்பதுபற்றி நான் பேசவே இல்லைஅட்லீஸ்ட் இந்த பதிவில் திரி விளக்கில் இறைவனை இஷ்டம் போல் கற்பனைசெய்யலாம் ஆனால் நல்ல விளக்கு வெளிச்சத்தில் காண முடியும்போது அதையும் செய்யலாமே நான்கேட்டிருக்கும் கேள்விகள்நியாயமாக எழுந்த சந்தேகங்கள் விதண்டாவாதமில்லைஎந்தஒரு விஷயத்திலும் யாரையும் நான் நோகடிக்க இல்லை ஆனால் உங்கள்பின்னூட்டம் என்னைக் குறி வைக்கிறதுயார் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என் கருத்துகளை பொது இடத்தில் இடுகிறேன் இன்னவர் இப்படி என்றுசொல்வதில்லை என் வீட்டில் விளக்கு ஏற்றுவதுபற்றிஉங்களிடம் கூறி என்னைப் பாரென்றேனா நான் நம்புவதைச் சொல்கிறேன் என் சொல்கேட்டு அதில் இருக்கும் உண்மைகள் உணரப்படவேண்டும் என்பதே என் குறி எனிடுகையை கவனித்துப் படியுங்கள் காய்தல் உவத்தல் அகற்றிப்படியுங்கள்நான் விவாதம்செய்ய வில்லை விதண்டாவாதமும் இல்லை என்கருத்துகளின் வெளிப்பாடு சிலருக்கு உடன் பாடுஇல்லாமல் போகலாம் அதை யாரும் கட்டாயப்படுத்தமுடியாது

    ReplyDelete
    Replies
    1. சார்... நீங்க எழுதியிருப்பதை வாசித்துப்பாருங்க. உங்க கருத்து 'ஜோதிடம் பொய்' என்பது. ராகு காலம் என்பதெல்லாம் கிடையாது என்பது நீங்க சொல்லியிருக்கீங்க (எனக்கு இதில் வேறுபட்ட கருத்து உண்டு. எனக்கு நம்பிக்கை உண்டு, ஆனால் எங்க குலத்துல உள்ள பெரியவர்கள் இப்படி ஒன்று கிடையாது என்று சொல்லியிருக்காங்க. அதாவது ராகுகாலம், எமகண்டம் பார்க்கக்கூடாதுன்னு. ஆனா என் அம்மா சொல்லி இது என் மனசுல பதிஞ்சுடுத்து). நாம ஒரு கருத்து சொல்லும்போது அதுல நமக்கு முதல்ல நம்பிக்கை வரணும், அதைக் கடை பிடிக்கணும். அப்படிச் செய்யாமல் நாம நிச்சயமா நம்பிக்கைகளைக் கேள்வி கேட்பதோ அதைப் பற்றி விமர்சனம் செய்வதோ சரியல்ல என்பது என் எண்ணம்.

      கோவில் விளக்கு என்பது காலம் காலமாக வருது. அதில் மாற்றங்கள் மெதுவாகத்தான் நிகழும். கடந்த சில வருடங்களாகத்தான் கர்ப்பக்ரஹத்தில் ஃபோகஸ் லைட் போடுகிறார்கள். டியூப் லைட் இதெல்லாம் போடுவதே ஆகமத்துக்கு எதிரானது என்ற மனநிலை கொண்டவர்களும் உண்டு. நீங்க கோவில் விளக்கைப் பற்றி கேள்வி கேட்கறீங்க. நாம வீட்டுல மட்டும் என்ன செய்யறோம்னு உங்களை நான் கேள்வி கேட்கறேன். நாம மட்டும் மாறத் தயாரில்லை (ஏன்னா அது நம்ம மனசுல, பாரம்பர்யத்துல ரத்தத்துல ஊறிவிட்டது). ஆனால் கோவிலை மட்டும் கேள்வி கேட்கிறேன் என்பது சரியா ஜி.எம்பி சார்? உங்களுக்கு குஷ்புவும், புட்டபர்த்தி சாயிபாபாவும், அனுஷ்காவும் ஒன்றாயிருக்கலாம். ஆனால் மற்றவர்களும் உங்களைப் போலவே இருக்கணும் என்று எதிர்பார்க்கலாமா? நீங்களே லிஸ்ட் போட்டுட்டு மத்தவங்களை நோகடிக்கலை என்று சொல்றீங்களே..

      Delete
    2. நெல்லை, ராகுகாலம், எமகண்டம், கரிநாள் என்பதெல்லாம் கடந்த நூறு, இருநூறு ஆண்டுகளில் வந்ததாய்ச் சொல்வார்கள். பொதுவாய் பிராமணர்கள் இதை எல்லாம் பார்ப்பது தவறு எனவும் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் இல்லை எனில் அவர்களைப் பார்த்து மற்றவர்களும் பார்க்க ஆரம்பிப்பார்கள் என்றுமே சொல்வார்களாம். ஆனால் இப்போ எல்லோருமே பார்க்கின்றனர்.

      Delete
    3. நெல்லைத் தமிழனின் கருத்துக்களே என் கருத்தோடு ஒத்துப் போகின்றன...

      Delete
    4. கீசா மேடம்... என் அம்மா சொல்லிக்கொடுத்து (Mother Saw Father Wearing The Turban on Sunday, Starting with 7:30 AM) எனக்கு மனதில் பதிந்துவிட்டது. என்னவோ நான் இதை ஃபாலோ செய்கிறேன். ஆனால் என் அப்பா சைடுல, என் பெரியப்பா (அவர்தான் எனக்கு மாடல்) நாள் நட்சத்திரம் பார்க்கக்கூடாது, அதுவும் ராகு காலம் எமகண்டம் பார்க்கக்கூடாது என்று சொல்வார் (னு என் தம்பி இரண்டு வாரம் முன் சொன்னான்).

      "நாளென் செய்யும் கோள் என் செய்யும்" என்பதையும் நாம நோக்கணும்.

      Delete
    5. @ நெத/என் அம்மா சொல்லி இது என் மனசுல பதிஞ்சுடுத்து)./ இதைத்தான் நன் சிறுவயதில் இண்டாக்ட்ரினெட் ஆவதுஎன்கிறேன்
      / ஆனால் மற்றவர்களும் உங்களைப் போலவே இருக்கணும் என்று எதிர்பார்க்கலாமா?/நான் அப்படிச் சொல்லவே இல்லையே எனக்குப்பட்டதைக் கூரி இருக்கிறேன் உங்களில் சிலபெரியவர்களும் கூறி இருக்கிறார்கள்நாமே செய்யாததை ஏன் வலியுறுத்த வேண்டும் காலம் மாறுகிறது அதற்கு என் எழுத்துகளும் ஒரு catalist ஆக இருக்கட்டுமே குஷ்பு சாய்பாபா காந்தி போன்றோர் மனிதர்கள்தானே கடவுள்கள் அல்லவே எனெழுத்துகள் புரிதல்களைத்தான் சொல்லீருக்கும் யாரையும் நோகடிக்க அல்ல

      Delete
    6. @கீதாசாம்பசிவம் உங்கள் கருத்து இதெல்லாம் கடந்த நூறுஇரு நூறு ஆண்டுகளில் வந்ததாய்ச்சொல்வார்கள்/ என்பதே எனக்கு புதிதான தகவல்நிறையவே விஷயங்களின் தொடக்கமே பிராமணர்களிடம் இருந்துதான் என்றுபுரிந்துகொள்ளலாமா

      Delete
    7. @ஞானி அவரவர்களுக்கு என்றுஒரு புரித்சல் வேண்டுமென்று நினைப்பவன்நான் ஊரோடு ஒத்துப்போவது சௌகரியம் என்றுவேண்டுமானல் இருக்கலாம்

      Delete
    8. @நெத/என் தம்பி இரண்டு வாரம் முன் சொன்னான்)./ இப்போது உங்கள் பெரியப்பா இருக்கும்நானும் சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்களேன்

      Delete
    9. கோபித்துக்காதீங்க ஜி.எம்.பி சார். அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தார். (அவர் ப்ரொஃபசர்). நிஜமா. அவருடையது கஷ்டமான வாழ்க்கை. நான் அவர்ட்ட சொன்னேன், எதுக்கு இப்படி கஷ்டப்படணும், கடவுள் கொடுத்துள்ள சவுகரியத்தை உபயோகப்படுத்த வேண்டாமா என்றதற்கு, அவர், 'இதை நான் கஷ்டம் என்று நினைக்கவே இல்லையே. நீ ஏன் கற்பனை பண்ணிக்கற. எனக்கு இது சவுகரியம்தான்' என்று சொன்னார். அவர் சொன்னதை அப்படியே செய்தார். (நான் ஃபாலோ பண்ணவில்லை என்பது வேறு விஷயம் ஹாஹாஹா).

      என்னோட கருத்தைத் தப்பா எடுத்துக்காதீங்க. உங்க எழுத்துல பிழை இருக்கு. ஹாஹாஹா.

      Delete
    10. //நிறையவே விஷயங்களின் தொடக்கமே பிராமணர்களிடம் இருந்துதான் என்றுபுரிந்துகொள்ளலாமா.//ஐயா, இது பற்றி நிறையத் தகவல்கள் சேகரிச்சு வைச்சிருக்கேன். ஆனால் இப்போ நேரம் இல்லை. பொதுவா பிராமணர்கள் தொடக்கம்னு சொல்ல முடியாட்டியும் அவர்களை முன்னிறுத்தியே எல்லாம் நடந்து வந்தன என்பதும் உண்மை. எவ்வளவு பெரிய அரசனாக இருந்தாலும் குருவின் வார்த்தையை மீறி எதுவும் செய்ததில்லை. ராகுகாலம், எமகண்டம் போன்றவை பாரதியார் காலத்தில் கூட இருந்ததாகத் தெரியவில்லை. இது குறித்து உ.வே.சா அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருந்ததாய் நினைவு! அதையும் தேடணும். ஏற்கெனவே புத்தக அலமாரியைச் சுத்தம் செய்ய ஆரம்பிச்சுப் பாதியிலே நிற்கிறது. இப்போ எந்தப் புத்தகம் எங்கேனே தெரியலை! :( ஆனால் ராகுகாலம், எமகண்டம் பார்க்கணும்னு எல்லாம் அவசியம் இல்லை என்பார்கள். முக்கியமாய்க் கேரளத்தில் பிராமணர்கள் அதிலும் பாலக்காட்டு பிராமணர்கள் பார்க்கவே மாட்டார்கள். என் கணவரின் சபரிமலை குருசாமி பாலக்காட்டு ஐயர் தான்! ஒவ்வொரு வருடமும் சரியான எமகண்டம் அல்லது ராகுகாலத்தில் தான் இருமுடி கட்டுவார். என் மாமியார், மாமனார் பதறுவாங்க! அவர் அதெல்லாம் பார்க்கிற வழக்கமே கிடையாது என அடித்துச் சொல்லிடுவார். நான் சொல்வது சுமார் நாற்பது வருடங்கள் முன்னரே!

      Delete
    11. என் கருதுகளைச்சொல்லும்போது எனக்கு கோபம்வராது ஆனால்பிறரது புரிதல்களொரு வித ஆதங்கதை உண்டு பண்ணும் என்பதுநிஜம்

      Delete
    12. இங்கு வெறும் கருத்துப் பரிமாற்றம் தான் ஐயா! யாரும் கோபத்துடன் எதுவும் சொல்லவில்லை. உங்களுக்குப் பிறரின் புரிதல்கள் ஆதங்கத்தை ஏன் உண்டு பண்ண வேண்டும்? அதை யாரும் ஏற்பதில்லை என்பதாலா? ஆங்கிலேயன் பிராமணர்கள் ஏழைகளாக இருந்தாலும் உயர்ந்த இடத்தில் இருப்பதைப் பார்த்து அவங்களைப் பொதுமக்களிடம் இருந்து பிரிக்க நினைத்தான். அப்படியே பணத்தாசை காட்டி பிராமணர்களைத் தன் வசம் இழுத்துக் கொண்டான். அவங்க கட்டிக்காத்த கோட்பாடுகளை பிராமண துவேஷம் என்னும் பெயரில் நாசம் செய்ய வழி செய்தான். அது இன்று நன்றாகவே வேலை செய்கிறது. நடுநிலைவாதிகள் என்னும் பெயரில் எல்லோருமே இன்று இப்படித் தான் பேசுகின்றனர். நீங்க ஒருத்தர் தான்னு நினைக்காதீங்க! இன்று அதிகமான மக்களின் கருத்து இப்படித் தான் செல்கிறது.

      Delete
    13. என் பெரியப்பா (அவர்தான் எனக்கு மாடல்) நாள் நட்சத்திரம் பார்க்கக்கூடாது, அதுவும் ராகு காலம் எமகண்டம் பார்க்கக்கூடாது என்று சொல்வார்//

      யெஸ் யெஸ் நெல்லை அது சரியே... பிரபந்தம் கற்றுக் கொடுத்த குரு மாமா அவர் அப்படித்தான் சொல்லிக் கொடுத்தார் எங்களுக்கும். அதாவது அதைக் கூட அவர் திணிக்கவில்லை. தான் சொல்வது சரி என்றோ பிறர் ஃபாலோ செய்வது தவறு என்றோ அவர் சொன்னதில்லை. அது அவரவர் நம்பிக்கை என்றுதான் சொல்லுவார். தனது எண்ணத்தைச் சொல்லியதுண்டு. அவர் சொல்லியது சரணாகதிதத்துவம். அவனை நம்பி சரணடைதல் எனவே இந்த நாள் கோள் எல்லாம் தேவையில்லை டோட்டல் சரண்டர். அவர் சொல்லிக் கொடுத்த பிரபந்தம் மீறி இதுதான் என் மனதில் ஆழமாகப் பதிந்த ஒன்று நெல்லை. அதற்கு முன்னும் என் மனதில் கேள்விகள் இருந்தன ஆனால் எப்போது குரு மாமா அப்படி சொன்னாரோ என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதுவும் அவர் ஆழ்வார்களைத்தான் உதாரணமாகச் சொல்லுவார்.

      கீதாக்கா சொன்னதையும் அவர் சொல்லியிருக்கிறார் நெல்லை. அதாவாது முன்பெல்லாம் இப்படியான நம்பிக்கைகள் இல்லை என்று. குரு மாமா மாமியுடனான அந்த நினைவுகள் நிறைய வந்தன...மிக்க நன்றி நெல்லை

      கீதா

      Delete
  5. பிள்ளையார் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை செய்வது ஏனெனில் இந்த உடலை மேல் மாவாகக் கொண்டால் உள்ளே வைக்கும் பூரணம் தான் ஆன்மா! அதை அப்படியே விநாயகருக்கு நிவேதனம் செய்து நாம் உட்கொள்வதன் மூலம், நம்மையே அவருக்குப் படைத்துச் சரணாகதி அடைவதையே சுட்டிக்காட்டுகிறது. மற்ற நிவேதனங்களும் கணபதிக்கு என உரியவை உள்ளன. அவற்றைப் பிறிதொரு சமயம் பார்க்கலாம். இன்னொரு தத்துவப்படி பிரபஞ்சம் மேல்மாவாகவும் உள்ளே உள்ள பூரணம் கோடானு கோடி உயிர்களாகவும் பாவனை செய்து கொண்டு இந்தப் பிரபஞ்சத்தில் நாமும் அடக்கம் என்பதால் நம்மை விநாயகருக்கு அர்ப்பித்துக் கொள்வதாகவும் சொல்வாஅர்கள். இது குறித்துத் தத்துவார்த்தமான பல கருத்துகள் உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. இவற்றையெல்லாம்படைத்து உண்ணும்போது அந்தநினைப்பு வருகிறதா கருத்துகள்பல இருந்தாலும் அவை எல்லாம் உணரப்படுகிறதாநான்சொல்வது தின்ப்படி யான வாழ்வின் புரிதல்களையே தத்துவங்கள் புரியப்படாமல் ஃபாலோ செய்வது கண்டே எனக்குள் சிலகருத்துகள் உதயம்

      Delete
    2. பிள்ளையாருக்கு என்று தான் நிவேதனம் செய்கிறோம். அது போதும்! எல்லோருக்கும் தத்துவம் புரியணும்னு எல்லாம் இல்லை. மஹாகணபதி ப்ரணவ ஸ்வரூபம். இந்த உலகே அவருள் அடக்கம். அதைக் குறிக்கவும் தான் கொழுக்கட்டை செய்வார்கள். இதைக் குறித்து என்னோட பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார் தொடரில் எழுதி இருக்கேன். மின்னூலாகக் கிடைக்கும். வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.

      Delete
    3. உங்களோட படிப்புக்கும் அறிவுக்கும் உள்ள உயர்ந்த சிந்தனைகள் உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் சாமானியர்களுக்கு அவை எல்லாம் புரியாது! எளிமையாகச் சொன்னாலே போதும். பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை கொடு. நிவேதனம் செய்து நீயும் சாப்பிடு, நல்லது நடக்கும் என்றாலே அவங்க வரைக்கும் அது போதும்.

      Delete
    4. சாமானியர் என்று யாரும் இல்லை சொல்வதைசொல்கிற விதமாகச்சொன்னல் யாரும் புரிந்துகொள்வார்கள்இன்னவருக்குஇதுபோதும் என்றுசொல்லியே பிறரை சிந்திக்க விடாமல் செய்துவிட்டோம்

      Delete
    5. யாரும் யாரையும் சிந்திக்கவிடாமல் எப்போதும் செய்ததில்லை. சிந்தனை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது! இதிலும் நீங்க சோஷலிசமோ, அல்லது கம்யூனிசமோ பார்க்க முடியாது! ஒவ்வொருத்தர் பார்வையும் மாறத் தான் செய்யும். அதை வைத்து சிந்திக்க விடலைனு எல்லாம் சொல்லிவிட முடியாது. இப்போது பலருக்கும் இருக்கும் வக்கிரமான சிந்தனைகளில் இருந்தே இவை தெரிகின்றன! :(

      Delete
    6. யாரிடமும் வாதம்செய்யவில்லை பிரணவ ஸ்வரூபம் என்றெல்லாம் கூறும்போது சாமானிய மனிதன்மலைத்துப்,போகலாம் சின்ன வயதில் இருந்தே சொல்லப்பட்டுவந்தசெய்திகளைமறுதளிக்கும்போது கோபம்வரலாம் நானும் இக்கதைகளைப் படித்து கேட்டு வளர்ந்தவன்தான் பலா ஆண்டுகள் ஆயிற்று சுயமாக சிந்திக்க எல்லோரு ஏற்றுக் கொள்வது சிரமம்தான் மாறுபட்ட சிந்தனைகளை வக்கிரம் என்றுஒதுக்கமுடியாது

      Delete
    7. இதே கருத்து மீண்டும் மீண்டும் சொல்வதுஇவன் சொல்லி என்ன கேட்கைருக்கிறது என்று எண்ண வைக்கலாம் என் எண்ணங்கள்பகிரப்பட்டுவிட்டனா அதுபோய்ச் சேரும் இடம் தெரிய வில்லை என்றே நினைக்கிறேன்

      Delete
    8. தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
      வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
      தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
      ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!''

      Delete
    9. விறகில் தீயினன் பாலில் படு நெய்போல்
      மறைய நின்றுளன் மாமணி சோதியான்
      உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
      முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

      Delete
    10. @கீதா சாம்பசிவம்/ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!/ என் பதிவுகளைப் படிப்போருக்குப் புரியும் இதையே உன்னுள் இருக்கிறான் ஈசன் எங்கும்தேட வேண்டாம் என்று எழுதி இருந்தது''

      Delete
    11. @ நெத கீதா சாம்பசிவம் கூறியதுதான் சற்று வேறு பட்ட வார்த்தைகளில் என்று நினைக்கிறேன் இதையெதான் உன்னுள் ஈசன் உறைகிறான் வேறெங்கு தேட வேண்டாம் என்னும் பொருளில் எழுதி இருக்கிறேன்

      Delete
    12. ஐயா, உங்கள் சிந்தனை அகண்டமான சிந்தனை! உங்களுக்குத் தத்துவார்த்தமாகப்புரிகிறது. ஆனால் ஏழை, எளியோருக்கும் பாமர ஜனங்களுக்கும்(நீங்க பாமரர்னு ஒத்துக்காட்டியும் பெரும்பான்மை அவங்க தான்) புரியணுமே! எல்லோருக்குமே ஈசன் தன்னுள் இருக்கான் என்பது புரியணும், உணரணும். ஜிலேபி இனிப்பு, கரும்பு இனிப்பு, பாயசம் இனிப்பு! ஆனால் வெவ்வேறு வகைகள்! இனிப்பை உங்களால் உணரத்தானே முடியும்! அதை வர்ணியுங்கள் பார்க்கலாம்! ஒவ்வொன்றின் இனிப்பையும் தனித்தனியாக வர்ணியுங்கள். ஈசன் உங்களுள் உறைகிறான் என்றால் நீங்கள் அதை உணர்ந்திருந்தால் இப்படி எல்லாம் எழுத மாட்டீர்கள்! கற்பனை என்றே சொல்ல மாட்டீர்கள்.

      Delete
  6. கிருஷ்ணன் பிறப்புக்குக் கண்ணன் குறும்புக்காரக் குழந்தை என்பதாலும் தின்பண்டங்களில் ஆசை மிகுந்தவன் என்பதாலும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் விதம் விதமான தின்பண்டங்களைச் செய்து அவனுக்குக் காட்டி விட்டு நாமே சாப்பிடறோம். நம் குழந்தைகளுக்குப் பிறந்த நாள் எனில் விதம் விதமாக வீட்டை அலங்கரித்து அவங்களுக்குப் பிடிச்ச சமையல் செய்து, ஸ்வீட் செய்து, புத்தாடைகள் அணிவித்து, கேக் வாங்கிக் கொடுத்து நண்பர்களை அழைத்துக் கொண்டாடுகிறோமே! இப்போவும் பல இறந்த அரசியல் தலைவர்கள் பிறந்த நாள் (காந்தி ஜயந்தி உள்பட) கொண்டாடப் பட்டு வருகிறதே! அப்போல்லாம் இம்மாதிரிக் கேள்வி கேட்க முடியாது! கிருஷ்ணன் என்றால் மட்டும் கேட்பீர்கள்! ஏனெனில் நீங்க அவன் இருப்பையே சந்தேகப்படுபவர்! :(

    ReplyDelete
    Replies
    1. தவறான புரிதல் மேடம் பொதுவாகைன்ன கடவுளூக்கு இன்ன பலகாரம் என்பது ஏனென்பதே கேள்வி என்பதிவிலேயே ஒரு நண்பர் சொன்ன விளக்கமும் எழுதி இருக்கிறேன்

      Delete
    2. உங்கள் புரிதல் மிகத் தவறு ஐயா! குழந்தை பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். அதற்குத் தான் பலகாரங்கள் செய்கிறோம். என் பேத்தியின் முதல் பிறந்த நாளை ஒட்டி என் மகனும், மருமகளும் விதம் விதமாய்ச் சமைத்தார்கள். நண்பர்கள் அங்கே இருக்கும் ஒரே உறவான எங்க மகள் குடும்பம் ஆகியோரை அழைத்து உணவு பரிமாறி மகிழ்ந்தார்கள். குழந்தையா எல்லாத்தையும் சாப்பிட்டாள்? அவள் பெயரைச் சொல்லி நாம் தான் சாப்பிட்டோம்! கிருஷ்ணன் குழந்தை என்பதால் அவனுக்கு இந்த வகையான பலகாரங்கள் என்று சொல்லி விட்டேன். மீண்டும் நீங்க கேட்ட கேள்வியையே கேட்டால் பதிலே இல்லை! :(

      Delete
    3. கன்வின்சிங்காக பதில் வேண்டும்நாம் பார்த்துமகிழும்நம் குழந்தையின் பிறந்த நாள் வேறு கற்பனையில் உதித்த கண்ணனின் பிறந்தநாள் வேறு இது தொடர்ந்தால்உங்களுக்கு கோபம்வரலாம்

      Delete
    4. தாராளமாய்த் தொடருங்கள் ஐயா! எனக்குக் கோபம் வருவது அபூர்வம்! இதுக்கெல்லாம் கோவித்தால்! :)))) எங்க வீட்டிலேயே இதை விட மோசமா இருந்தவங்களை எல்லாம் பார்த்தாச்சு! பின்னாட்களில் எப்படி மாறினாங்க என்பதையும் பார்த்தாச்சு! கண்ணன் கற்பனையில் உதித்தான் என்றால் நீங்க ஏன் அவன் கதையைப் பாடலாகப் பாதாதி கேசம், கேசாதி பாதம்னு எல்லாம் எழுதணும்? என்ன அவசியம்? கற்பனைக்கண்ணனுக்கு ஏன் முக்கியத்துவம்? அவன் படங்களை ஏன் வரையணும்? உங்களுக்குப் பிடித்தவங்க படங்களை வரையலாமே? கடவுளே கற்பனை என்பவர் வரைவதெல்லாம் கடவுளர்களின் படங்கள் தாம்! நல்ல முரண்பாடு. கோபம் உங்களுக்குத் தான் வராமல் இருக்கணும். எனக்கு இதை எல்லாம் பார்த்துச் சிரிப்புத் தான் வருது! :)))))

      Delete
    5. நீங்க கன்வின்ஸ் ஆகணும்னு நான் நினைக்கவே இல்லை. ஆகவே என்னிடம் அந்த பதிலை எதிர்பார்க்க முடியாது! இது இங்கு வரும் மற்றவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் புரிந்து கொள்வதற்காகச் சொல்வது!

      Delete
    6. நான் படம்வரைந்தது எனக்கென்று கற்பனைஉருவமிருக்க வில்லை மேலும் பார்த்துவரையக் கிடைதபடங்கள் நான் வரைந்தவை கண்ணனின் கேசாதிபாதம் எழுதி இருந்தேன்அப்போதே அது நாராயணியத்திலிருந்து எடுத்தாண்டதுஎன்று கூறி இருக்கிறேன்ஒரு பெண்ணை வர்ணித்தும் கேசாதிபாதம் எழுதி இருந்தேன் அதற்கு இன்ஸ்பிரேஷன் என் காதலி இன்றைய என் மனைவி கடவுளரின் உருவங்கள் எல்லாம் கற்பனையே என்று ஒருபதிவும் எழுதி இருந்தேன் முரண்பாடு ஏதும் இல்லை இன் ஃபாக்ட் என்னை சுற்றி இருப்பவர்கள் பலரும் உங்களை போன்றவர் களே முரண்பட்ட மனிதர்களின் எண்ணங்களிலிருந்து ஏதாவது தெரிந்துகொள்ளலாம என்பதும் என் நோக்கம் அதைத்தான் கன்வின்சிங்காகபதில் என்று எழுதி இருக்கிறேன் தொடந்துவந்துபின்னூட்மிடுவதற்கு நன்றி

      Delete
    7. நாராயணியத்திலிருந்து எடுத்தாண்டது என்கிறீர்கள். அப்போ பட்டத்திரியும் கற்பனையில் கண்ணனைக் கண்டாராமா? கண்டு இவற்றை எல்லாம் எழுதி இருக்காரா? உங்க மனைவி விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணம் செய்கிறார். அனைவரையும் அழைத்து! அதுவும் கற்பனைக் கடவுளுக்காகவா?

      Delete
    8. பட்டத்ரி கற்பனையில்தான்கண்டிருக்க வேண்டும் என்மனைவி பாராயணம்செய்வதும் கற்பனைக்கடவுளுக்காகவே நான் அவரை அவ்வாறு செய்ய தடுப்பதில்லை அது அவளது விருப்பமானால் என்மனைவிக்கும் தெரியும் என்கருத்துகள் என்கருதுகளைஅவளும் அவளதுசெயல்களைநானும்பொறுத்துக் கொள்கிறோம் வடம் விதண்டாவாதம் என்பதே இதுதான்

      Delete
  7. இன்னும் நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை ஆகியவற்றிற்கான காரணங்களும் உண்டு! அவை பின்னர்! பொங்கல் குறித்து உங்களுக்குச் சந்தேகம் வந்திருக்காது என நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரி பொங்கல் குறித்த சண்டேகம் இல்லை ஏன் என்றால் அதுபுது அறுவடைக்குப் பின் செய்வது உழவு தொழில் செய்வோருக்குப்பொறுந்தும் நகரத்தில் வாழும்நம்போன்றவர்களுக்கு அன்று பொங்கல் பொங்கி உண்டு மகிழ்வதும் கேள்விக்குரியதே என்றுவேண்டுமானாலும் பொங்கல் செய்து உண்ணலாமே

      Delete
    2. கேரளத்தில் பொங்கல் பண்டிகை கிடையாது தெரியும் அல்லவா? தீபாவளி, நவராத்திரி கொலு போன்றவையும் இல்லை! அதனால் உங்களுக்கு இந்த சந்தேகங்கள் வருகின்றனவோ என்னவோ! பொங்கல் அன்று சங்கராந்தி என்னும் பெயரில் வட மாநிலங்களிலும் கொண்டாடுவார்கள். சூரியன் வடக்கு நோக்கி நகரும் தினம்! ஆகையால் நகரத்தில் வாழ்வோரும் கொண்டாடுவார்கள். அந்தக் காலங்களிலும் நகரங்கள் இருந்திருக்கின்றன. எப்போதும் எல்லோரும் விவசாயம் செய்து கொண்டு வாழவும் இல்லை. குறிப்பிட்ட இனத்தவரே அப்போதும் இப்போதும் எப்போதும் விவசாயம் செய்து வந்தார்கள், வருகின்றார்கள், இனியும் செய்வார்கள். நீங்க எப்போ வேணாப் பொங்கல் செய்து சாப்பிடுங்க! யாரும் தடுக்கலை! அதையே உங்க மனைவியிடமும் சொல்லுங்க! எந்தப் பண்டிகையும் கொண்டாடக் கூடாதுனு! நாம வயலில் வேலை செய்து அறுவடை செய்யாததால் பொங்கல் கொண்டாட வேண்டாம்னு சொல்லிடுங்க!

      Delete
  8. ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்...
    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்..

    ReplyDelete
    Replies
    1. @டிடி இதைத்தானே நானும் நீளமாக எழுதி இருக்கிறேன்

      Delete
    2. @ஞானி வழக்கம் போல் பின் தொடர்கிறீர்கள்

      Delete
  9. ஒவ்வொரு விசயத்தின் பின்னாலும் ஒவ்வொரு காறணம் உண்டு, அவற்றை நாம் சரியாகப் புரிந்து கொள்ளாமையாலேயே நிறைய சந்தேகங்கள் குழப்பங்கள் உருவாகின்றன.

    ReplyDelete
    Replies
    1. மொபிலில் ரைப் பண்ணுவதால் எழுத்துப்பிழையாகுது.. அது காரணம்.

      Delete
    2. 2காரணம் கேட்டு எழுதீ இருக்கிறேன்சரியாகத் தெரிந்தவர் விளக்கலாமே

      Delete
    3. @ஞானி வாழ்வே பிழையாக வாழும்போது எழுத்துப்பிழை ஒரு பொருட்டல்ல

      Delete
    4. எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் நீங்கள் புரிந்து கொள்ள மறுப்பீர்கள்!

      Delete
  10. இது மாதிரி பதிவுகள் நிறைய படித்து விட்டேன். பதில்களால் சமாதானம் அடையாத இந்தக் கேள்விகள் நிரந்தரம்.

    ReplyDelete
    Replies
    1. சமாதானம் அடைய வைக்கும் பதில்கள் இல்லாமலிருப்பதே துர்லபம்

      Delete
  11. இந்தியாவைப் பொறுத்தமட்டில் முதலில் வரும் கொல்கத்தா விற்கும்தொடர்ந்து வரும் மும்பைக்கும் உள்ள கால வித்தியாசம்
    ஒரு மணி நேரம்.அதே போல் சென்னைக்கும் நீலகிரிக்கும் உள்ள நேர வித்தியாசம் 15 நிமிடங்கள்.இதில் இராகுகாலம் என்று நாம் குறிப்பிடும் ஒன்றரை மணி நேர காலவரம்புசென்னைக்கும் நீலகிரிக்கும் எப்படி ஒரு சேரப் பொருந்தும்

    ராகு காலம் என்பதை விஷயம் தெரிந்தவர்கள் அந்தந்த இடத்தின் சூரிய உதயம் எத்தனை மணிக்கு என்பதை குறித்துதான் அனுசரிப்பார்கள். உதாரணமாக சென்னையில் ஆறு மணிக்கு சூரியோதயம் என்றால், பெங்களூரில் 6:10 அல்லது 6:15 மணிக்குத்தான் சூரிய உதயம் ஆகும், திங்கள் கிழமை 7:30 டு 9:00 ராகு காலம் என்றால், என்னைப் போன்றவர்கள் பெங்களூரில் 7:40 டு 9:10 அல்லது 7:45 டு 9:15 ராகு காலம் என்றுதான் அனுசரிப்போம்.

    அவதாரங்களில் எங்கோ பரிணாம வளர்ச்சி தெரிவதுபோல் இருக்கிறது//
    இதை நான் சிறுமியாக இருக்கும் பொழுதே எங்கள் வீட்டில் விவாதித்து முடித்து விட்டோம், உங்களுக்கு இப்பொழுதுதான் புரிந்திருக்கிறது போலிருக்கிறது. ஐயோ பாவம்!

    இதைப் போல பிரசாத விஷயத்தைப் பற்றியும் யோசியுங்கள், விடை கிடைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. / ராகு காலம் என்பதை விஷயம் தெரிந்தவர்கள் அந்தந்த இடத்தின் சூரிய உதயம் எத்தனை மணிக்கு என்பதை குறித்துதான் அனுசரிப்பார்கள். உதாரணமாக சென்னையில் ஆறு மணிக்கு சூரியோதயம் என்றால், பெங்களூரில் 6:10 அல்லது 6:15 மணிக்குத்தான் சூரிய உதயம் ஆகும், திங்கள் கிழமை 7:30 டு 9:00 ராகு காலம் என்றால், என்னைப் போன்றவர்கள் பெங்களூரில் 7:40 டு 9:10 அல்லது 7:45 டு 9:15 ராகு காலம் என்றுதான் அனுசரிப்போம்/ யாரும் அனுஷ்டிப்பதாக சொல்லாத ப்தில் அறிவு ஜீவியாகக் காட்டிகொள்பவர்களுக்கே சாத்தியம்பதில் தெரிய ஒர் வாய்ப்பு இப்போது என் கேள்வியால் வாழ்த்துகள்.

      Delete
    2. /ராகு காலம் என்பதை விஷயம் தெரிந்தவர்கள் அந்தந்த இடத்தின் சூரிய உதயம் எத்தனை மணிக்கு என்பதை குறித்துதான் அனுசரிப்பார்கள். உதாரணமாக சென்னையில் ஆறு மணிக்கு சூரியோதயம் என்றால், பெங்களூரில் 6:10 அல்லது 6:15 மணிக்குத்தான் சூரிய உதயம் ஆகும், திங்கள் கிழமை 7:30 டு 9:00 ராகு காலம் என்றால், என்னைப் போன்றவர்கள் பெங்களூரில் 7:40 டு 9:10 அல்லது 7:45 டு 9:15 ராகு காலம் என்றுதான் அனுசரிப்போம்./ புரிந்து அனுஷ்டிப்பதற்கு வாழ்த்துகள் இதுவரை யாருமே சொல்லாத பதில் அறிவு ஜீவிகளுக்கே சாத்தியம்

      Delete
    3. //அறிவு ஜீவியாகக் காட்டிகொள்பவர்களுக்கே சாத்தியம்பதில் தெரிய ஒர் வாய்ப்பு இப்போது என் கேள்வியால் வாழ்த்துகள்.// இதனால் எல்லாம் யாரும் அறிவுஜீவினு சொல்லிக்க முடியாது! இது ஓர் கணக்கு. ஏறக்குறைய இதே விஷயம் ஒரு மாதம் முன்னர் முகநூலிலும் விவாதிக்கப்பட்டது. விவாகம் முதல் அனைத்துக் காரியங்களுக்கும் சூரியோதயம் குறிப்பிட்ட ஊரில் எத்தனை மணிக்கு என்பதையே கணக்கில் கொள்ள வேண்டும். ஜாதகம் கணிப்பது கூட அதை ஒட்டியே! அதனால் தான் பிறந்த ஊரை முக்கியமாய் ஜோசியர்கள் கேட்பார்கள். இந்த பதில் நானுமே சொல்லி இருக்கணும். எப்படியோ தவறி இருக்கிறது. அடுத்த முறை கோயில்கள் சென்றாலோ யாரேனும் புரோகிதர்களைப் பார்க்க நேர்ந்தாலோ கேட்டுப் பாருங்கள் சொல்வார்கள். மேலும் வாக்கியப் பஞ்சாங்கக் கணக்கும் திருக்கணிதப் பஞ்சாங்கக் கணக்கும் மாறுபடும். இந்திய அரசு திருக்கணிதத்தையே அங்கீகரித்துள்ளது. அதையே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.

      Delete
    4. //செகண்ட் ஒபினியன் என்றூ ஏதவது வ்ந்ததா ஏற்றுக் கொள்ள காலங்காலமாக சொல்லி ஏமாற்றி வந்த கதைகள்தானே?//
      இதற்கு பதிலாக அவதாரங்களில் எங்கோ பரிணாம வளர்ச்சி தெரிவதுபோல் இருக்கிறது//
      இதை நான் சிறுமியாக இருக்கும் பொழுதே எங்கள் வீட்டில் விவாதித்து முடித்து விட்டோம், உங்களுக்கு இப்பொழுதுதான் புரிந்திருக்கிறது போலிருக்கிறது. ஐயோ பாவம்!
      இது உங்கள் கண்களில் படவே இல்லையா? தசாவதாரங்களில் பரிணாம வளர்ச்சி என்பது எப்போதோ பலர் சொல்லி விட்ட விஷயம். இதை ஏதோ புதிதாக நீங்கள் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்ததை போல எழுதியிருப்பது சிரிப்பாக வருகிறது.


      Delete
  12. உங்கள் சந்தேகங்களுக்கு கீதா சாம்பசிவம் தத்வார்த்தமாகவும், நெல்லை தமிழன் அறிவார்த்தமாகவும் பதில் சொல்லி யிருக்கிறார்கள். ஆனால் இவை எதுவும் உங்களுக்கு புரிந்து விடக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன். ஏனென்றால் உங்களுக்கு புரிந்து விட்டால் நீங்கள் கேள்வி கேட்பதை நிறுத்தி விடுவீர்கள், நீங்கள் கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டால் அதைப் படிக்கும் மூணே முக்கால் பேர்களுக்கு யோசிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுமே.. அப்புறம் அவர்கள் எப்படி அறிவு ஜீவிகளாக மாற முடியும்? உங்கள் கைவசம் இருக்கும் இரண்டு கேள்விகளை விடாமல் கேட்டுக் கொண்டே இருங்கள். உலகம் உய்யட்டும்.

    ReplyDelete
    Replies
    1. புரிதலில் மிகவும் பின் தங்கி இருப்பவர்களுக்குதான் கோபம்
      வந்து தனிமனித தூற்றுதலாக முடியும் பரிதாபப் படுகிறேன்

      Delete
    2. இங்கே புரிதல் என்பது உங்களுக்குத் தான் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவங்க தூற்றவும் இல்லை! ஆதங்கப்பட்டுக்கொண்டு சொல்லி இருக்கிறார்கள்.

      Delete
    3. நன்றி கீதா அக்கா.

      Delete
    4. ரொம்ப சரி. உங்களுக்கு ஆன்மீகம்தான் புரியாது என்று நினைத்தேன், கிண்டலும் புரியாதா? கடவுளே! சாரி காரல் மார்க்ஸே! நான் உங்களைத் தூற்றவில்லை கலாய்த்திருக்கிறேன். நீங்கள்தான் என்னைத் தூற்றி, பரிதாபமாக உங்கள் இமேஜை டேமேஜ் செய்து கொண்டிருக்கிறீர்கள். வருத்தமாக இருக்கிறது.

      Delete
    5. உங்களுக்கு காமன் சென்சே கிடையாதாகலாய்க்க நானென்ன தமாஷா செய்கிறேன் கார்ல் மார்க்ஸ் பற்றி தெரிந்தவர்கஅவர் பெயரை உபயோகித்துக் கலாய்க்க மாட்டார்கள் எனிமேஜ் பற்றி நானல்லவா கவல்சைப்படவேண்டுமொருவரது கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கருத்துகளோடு மோதவேண்டும் தனிப்பட்ட முறையில்பேசக்கூடாதுஅதுதான் தூற்றலில் கொண்டு விடும்

      Delete
    6. ஏன் உங்களுக்கு காமன் சென்ஸ் வேண்டுமா? ஆங்! அஸ்கு புஸ்கு. அதற்கெல்லாம் வேறு ஆளை பாருங்கள்.
      உங்கள் இமேஜைப்பற்றி நீங்கள்தான் கவலைப்பட வேண்டும். நான் கவலைப்படுகிறேன் என்று கூறவில்லையே.

      Delete
  13. சமாதானம் அடைய வைக்கும் பதில்கள் இல்லாமலிருப்பதே துர்லாபம்...

    துர்லாபம் யாருக்கு...?

    ReplyDelete
  14. தூற்றுதல் / பரிதாபம்

    கட்டுரை வரைக...

    ReplyDelete
    Replies
    1. மேற்கண்ட கேள்விகளுக்கு நீங்களே உங்கள் வழியில் எழுதலாமே வருகைக்கு நன்றி

      Delete
  15. http://dindiguldhanabalan.blogspot.com/2012/07/Who-is-the-biggest-enemy-of-man.html

    ReplyDelete
  16. உங்களுடைய சந்தேகங்களுக்கு எந்த பதிலும் திருப்தி தராது. ஏன் எனில் நீங்கள் ஒரு திறந்த மனதுடன் இந்த சந்தேகங்களை எழுப்பவில்லை. மரத்தில் உள்ள மாங்காயை கல் எறிவது போன்றதே. இதுவரை உங்களுக்கான மாங்காய் விழவில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சரும் பகவான் ரமணரும் கற்ப்பித்த முறைப்படி இது இல்லை இது இல்லை என்று சிந்தித்து பாருங்கள். உங்களுக்கு விடை கிடைக்கும். ஆனால் அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாது. அறிவுரை என்று தவறாக எண்ண வேண்டாம். இது ஒரு பின்னூட்டம் மற்றுமே.

    ReplyDelete
    Replies
    1. /பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
      கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
      சொல்லா வசைகள் சொல்வரோ,
      சூழ்ந்து நின்று புகழ்வரோ
      எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
      ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
      மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
      மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
      கண்ணிற் காண்பது அவரவர்தம்
      காட்சி அன்றி வேறாமோ/

      Delete
    2. //மண்ணில் நானோர் ஒளிவட்டம்.//

      தன்னைப் பற்றி மிக உயர்வாக நினைத்துக் கொள்பவர்களுக்கு செகண்ட் ஒப்பீனியனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆத்திரப்படுவார்கள், புலம்புவார்கள், ஏன் அழக்கூட செய்வார்கள். நிஜமான ஞானி, அறிவாளி தன்னை அப்படி அறிவித்துக் கொள்ள மாட்டான். நாம் ஒளி வட்டமா? அல்லது வெறும் வட்டமா என்பதை சுற்றி உள்ளவர்களும், காலமும்தான் சொல்ல வேண்டும்.

      Delete
  17. பிழைப்பு நடத்துவதற்காக கிரகங்களை தம் வசதிக்கு ஏற்றபடி நம்மவர்கள் ஆட்டிக்கொண்டிருக்கின்றார்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சிலவற்றைச் சுட்டி காட்டினால் பொல்லாப்பு வருகைக்கு நன்றிசார்

      Delete
    2. யாருக்கு எனக்குத்தான்

      Delete
    3. முனைவர் ஐயா, கிரஹங்களை மனிதர்களால் ஆட்டி வைக்க முடியாது. மனிதர்களைத் தான் மனிதர்களே கிரஹங்கள் பெயரைச் சொல்லி பயமுறுத்தி ஆட்டி வைக்கின்றனர். அது தான் நடக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக ஜோதிடம் தப்பு, அது பொய் என்றெல்லாம் சொல்வதை நான் ஏற்கவில்லை! ஜோசியத்தின் பின்னே அலையவும் மாட்டேன். வலுவில் வந்து சொல்லுவதை ஏற்காமலும் இருக்க மாட்டேன்.

      Delete
  18. // மண்ணில் நானோர் ஒளிவட்டம் //

    அய்யய்யோ...!

    பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப்பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ

    சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்கசங்கம்என் றோங்குமோ தலைமைச்சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோதெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன்ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்ததுரைப்பதென் அடிக்கடி உனக்கே

    ReplyDelete
    Replies
    1. சத்துள்ள கவிதைக்கு நன்றி சார்

      Delete
    2. கண்டு பிடிக்கவும்... அடியேன் இல்லை...

      Delete
  19. கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

    மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே

    உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயேஉணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே

    சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

    ReplyDelete
  20. அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்

    பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்

    பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்பின்படு தீமையின் முன்படு கின்றீர்

    இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

    அம்மை அப்பன் யார் என்று தெரியாமல் .அற்பத்தனமான இச்சைகளிலே பற்று வைத்து.எச்சுகம் கண்டீர்... பைத்தியக்கார்ர்கள் போல் திரிகின்றீர்கரே.

    ReplyDelete
  21. பின்னூடங்களில் காழ்ப்புணர்ச்சி தெரிகிறதுபெரும்பான்மையோர் சொல்வது சரியாகதான் இருக்க வேண்டும் என்னும் அசையா நம்பிக்கை யாராவது மாற்றி சிந்திதால் ஏற்று கொள்ள முடியாதேநானோர் ஒளிவட்டம் என்று சொன்னது ஏற்கமுடியவில்லை ஏன் என்றால் அதன் பின் கண்ட வரிகள் கண்களுக்குப் புலப்படவில்லை மீண்டும் கூறுகிறேன் மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
    மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
    கண்ணிற் காண்பது அவரவர்தம்
    காட்சி அன்றி வேறாமோ/செகண்ட் ஒபினியன் என்றூ ஏதவது வ்ந்ததா ஏற்றுக் கொள்ள காலங்காலமாக சொல்லி ஏமாற்றி வந்த கதைகள்தானே

    ReplyDelete
  22. ஸார் அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. இதில் எது உயர்வு தாழ்வு என்று இல்லை.

    கீதா: துளசியின் அக்கருத்துடன், ஸார் இப்படி இல்லை என்பதற்கு ஆதாரங்கள் தேடிச் சொல்லப்படுகிறதோ அதே போன்றுதான் இருக்கு என்பதற்கும்.

    என்னதான் எல்லாவற்றிற்கும் அறிவியலை நாம் தேடினாலும் அந்த அறிவியலாலும் இன்னும் பல விஷயங்களுக்குத் தீர்வு சொல்ல முடியவில்லை. நீங்கள் கோள்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமில்லை என்று அறிவியல் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானியை உதாரணம் காட்டினால் அதற்கு எதிர்மறையாகப் ப்ரூவ் செய்யும் விஞ்ஞானமும் இருக்கத்தான் செய்யும் சார். இங்கு ஆராய்ச்சிகள் தொடரலாம்...ஆனால் அதற்கு முடிவு என்பது இல்லை என்பதை நாம் அனைவருமே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    சர்க்கரை நோய்க்கு இது சாப்பிடக் கூடாது அது கூடாது என்று ஒவ்வொரு மருத்துவரும், மருத்துவமும் சொல்லி வருகிறது. இப்போது சமீபத்தில் எல்லா பழங்களும் சாப்பிடலாம் என்று ஒரு கருத்து சொல்லப்பட்டது. அறிவிய ஆராய்ச்சிகள் மாறிக் கொண்டேதான் இருக்கும்..ஏனென்றால் கேள்விகள் கேட்கப்படுவதால்..ஆனால் அறிவியல் ஆராய்ச்சிகள் மாறிக் கொண்டே இருப்பதால் நாமும் சர்க்கரை வியாதிக்கு இது வரை சொல்லப்பட்டதை விட்டு இப்போது எல்லாம் சாப்பிடலாம் என்று சொல்கின்றனரே மூன்றுமாத ஆவரெஜ் 7 கூட இருக்கலாம் என்று சொல்கின்றனரே என்று நாம் சாப்பிட முடியுமா?

    ஆராய்ச்சிகள் என்ன சொன்னாலும் அதுவும் முழுமை கிடையாது 100% ப்ரூஃப் கிடையாது. எனவே நாம் நம் உடலை அப்செர்வ் செய்து நம் அனுபவத்தினைக் கொண்டுதான் எது சாப்பிடலாம் தவிர்க்கலாம் என்று முடிவு செய்யணுமே அல்லாமல் இப்ப எல்லாம் சாப்பிடலாம்னு ஆராய்ச்சியே சொல்லிவிட்டது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது அது போலத்தான் சார் எந்த நம்பிக்கையும்.

    அவரவர் அனுபவம். உங்கள் அனுபவம் உங்கள் பெர்செப்ஷன் அது என்றால் அடுத்தவரின் அனுபவம் வேறு. இதுதான் சரி அது தவறு என்று நாம் சொல்ல முடியாது சார்.

    எப்படி பாஸிட்டிவ் நெகட்டிவ் என்பதைத் தவிர்க்க இயலாதோ ப்ளஸ் இருந்தால் மைனஸ் இருக்குமோ அது போலத்தான் சார் கருத்துகள் எல்லாமே. இதில் யாருடைய கருத்தும் தவறில்லை.

    அவரவர் அனுபவம் புரிதல்! எதிராளி சொல்லுவது தவறு என்று சொல்லுவதை விட அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் சிந்தித்துப் பார்க்கலாம். அல்லது நமக்கு ஏற்புடையது இல்லை என்றால் அது அவர் நம்பிக்கை, கருத்து என்று அவரைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே. நாம் நம் கருத்தைச் சொல்லலாம் ஆனால் இதுதான் சரி என்று சொல்ல முடியாது சார்.

    ReplyDelete
  23. சார் இங்கு யாரும் காழ்ப்புணர்ச்ச்யுடன் சொல்லியதாகத் தெரியவில்லை. எல்லோரும் அவரவர் கருத்தை உங்கள் பதிவுக்கான கருத்துகளைத்தான் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. நெல்லை, கீதாக்கா, பானுக்கா டிடி, ஜேகே அண்ணா எல்லோருமே உங்கள் பதிவிற்கு அவரவர் கருத்துகளைப் பதிலாகக் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் விரும்புவது எதிர்வாதக் கருத்துகளை, அதாவது அருமை என்று சொல்லாமல் வாதம் இருக்கும் கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்றுதானே சொல்லுவீர்கள்? அதைத்தான் எல்லோரும் செய்திருக்கிறார்கள். அவர்களது பதிலுமே பலவற்றைச் சிந்திக்க வைக்கிறது. கேள்விகளை எழுப்புகிறது. அப்படி இருக்க நம் கருத்திற்கு எதிராக ஒருவர் கருத்து சொன்னால் அது ஒருவர் என்றில்லை பலராக இருந்தாலும் அதை நாம் தவறு என்று சொல்ல முடியாது இல்லையா?

    நீங்கள் சொல்லும் அறிவியல் ஆராய்ச்சியையே எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு பேப்பர் பப்ளிஷ் ஆகும் போதும் பல விவாதக் கருத்துகள் எழத்தான் செய்யும்.

    அப்படித்தான் இதைப் பார்க்கத் தோன்றியது. பதிவிலும் நீங்கள் பொதுவாகக் குறிப்பிட்டிருந்தால் எல்லோரும் இதே கருத்துகளைப் பொதுவாகச் சொல்லியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. நீங்கள் அதில் உங்கள் கருத்து என்று சொல்லியிருப்பதால் எல்லோரும் அவரவர் கருத்துகளை நீங்கள் சொல்லியிருப்பதைச் சொல்லி முன் வைத்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது சார்.

    யாருக்கும் இங்கு காழ்ப்புணர்ச்சி என்பது கிடையாது சார். எல்ளோருமே நல்ல மனதுடையவர்கள்தான்

    கீதா

    ReplyDelete
  24. நான் என்சந்தேகங்களை கூறி இருக்கிறேன் வழிவழியாக பின்பற்றி வருவதெல்லாம் சரி என்றுஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதிவைப் ப்டிட்துப் பாருங்கள்காய்தல் உவததல் இல்லாமல் நைவேதனம் பற்றிய ஒரு நபரின் விளக்கதையும் கூறி இருக் கிறேன்ஆனால் அதன்படி வழக்கத்தில் இல்லையே என்றும் தெரியப்படுத்தி எழுதி இருக்கிறேன் என் கேள்வி இன்ன கடவுளுக் இன்ன துபிடிக்கும் என்று தீர்மானம் எப்படி வந்தது என்பதே அத்சற்கு குழந்தைகளின்பிறந்த தினமன்று செய்யும் தின்பண்டங்களோடு ஒப்பீடு .பொதுவாக சில அனுஷ்டானங்கள் காலப் போக்கில் மாறிவருகிறது பின்னூட்டங்களில் இருந்துதெரிகிறது / எல்லோரும் அவரவர் கருத்துகளை நீங்கள் சொல்லியிருப்பதைச் சொல்லி முன் வைத்திருக்கிறார்கள் / நிஜமாக அப்படித் தெரியவில்லை மீண்டும்படித்து பாருங்கள் ராகுகாலம் என்றாலேயே வழக்கத்தில் அனுஷ்டிக்கப்படுவதை கூறி இருக்கிறேன் எத்தனை பேருக்கு அவற்றின் நேரம்பற்றிய தெளிவு இருக்கிறதுவாதத்துக்கான பதிலாக இருக்கக் கூடாது mother saw father wearing the turban என்பது அனுஷ்டானத்துக் கு சொன்ன எளிய முறை எங்கும் கால வித்தியாசம்பற்றி கூறப்படவில்லை வழக்கமாக பின் பற்றும் கருத்துகளில் சில ஏற்க முடியாததாக இருக்கிறது என்பதைத்தான்பதிவக்கினேன் எல்லோரும்விருப்பு வெறுப்பின்றிஅணுகுவார்கள் என்பதே என் எதிர்பார்ப்பு உன் வீட்டிலெப்படி என்று எதிர் கேள்வி கேட்டு மடக்குவதாகத்தெரிவது விதண்டாவாதம் என்கிறேன் /மண்ணில் நானோர் ஒளிவட்டம்.
    மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
    கண்ணிற் காண்பது அவரவர்தம்
    காட்சி அன்றி வேறாமோ/தில் எடுத்துக் கொள்ள வேண்டியது கடைசிவரிகளே உடனே என்னை ஞானியாக எண்ணுவது போல் ஒரு பிம்பத்தை கூறி காழ்ப்பினைக் காட்டுகிறார்கள் இத்தனைபெரிய மறு மொழியே ஒரு சரியான புரிதல் உஇல்லை எனக்கூறத் தான் நாளென் செயும் கோளென்செயும் என்று சொல்லிச்சென்ற கருத்துகள் ஏற்புடையதாகைருக்கலாம் அதையே நான் எம்பதைஸ்செய்தால் ஒப்புக் கொள முடியாது எல்லோரு நல்ல மனதுடையவர்கள்தான்சார்

    ReplyDelete
    Replies
    1. ஐயா, தத்துவ ரீதியாகக் கூறும் காரணங்களை உங்களால் ஏற்க முடியலை. இப்போ உடல்ரீதியாகச் சொல்கிறேன். இதில் உங்களுக்குக் கொஞ்சமானும் சமாதானம் கிட்டுமா என்பது தெரியலை. கோடை காலத்தில் வரும் ஶ்ரீராமநவமிப் பண்டிகை, வருடப் பிறப்பு போன்றவைக்குச் சமைக்கப்படும், வடைப்பருப்பு, பானகம், நீர்மோர் அந்தக் காலத்துக்கு ஏற்பத் தயாரிக்கப்படும் உணவு வகைகள். கோடைக்கு ஏற்ற நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அந்தப் பிரசாதங்களில் இருந்து கிடைக்கின்றன. சுண்டல் வகைகளில் இருந்து ப்ரோட்டீனும், பானகம் இரும்புச் சத்தையும் நீர்மோர் அஜீரணத்தையும் வாயுவையும் போக்கும் குணம் உள்ளது. நீர்மோரில் சேர்க்கப்படும் பெருங்காயம், இஞ்சி போன்றவை வாயுவைக் கண்டிக்கும். நீர்மோர் உடலுக்கு உப்புச்சத்தையும் கொடுக்கும்.
      பானகம் இரும்புச் சத்தைத் தரும்.
      அது உடலுக்குத் தேவையான பிராண வாயுவைக் கொடுப்பதோடு அல்லாமல் உடல் முழுவதும் பிராணவாயு பரவிச் செல்லவும் உதவும். கரியமில வாயுவைத் திரும்பக் கொண்டு வந்து விடும்.

      Delete
    2. இது சாதாரண விஷயம். உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை. ஆகவே இதை முதலில் சொல்லவில்லை. இப்போச் சொல்லி இருக்கணுமோ எனத் தோன்றுகிறது. நம் கடவுள் சிலைகள் அனைத்துக்கும் செய்யப்படும் அபிஷேஹப் பால், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றிலிருந்தும் நமக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். பஞ்சாமிர்தம், பொங்கல் ஆகியவற்றிலிருந்து தேவையான கொழுப்புச் சத்துக் கிடைக்கும். பஞ்சாமிர்தத்தில் உள்ள பழங்களின் சத்தைப் பற்றித் தனியாகக் குறிப்பிட வேண்டாம். இப்படி ஒவ்வொரு பிரசாதமும் ஒவ்வொரு வகைச் சத்தைத் தம்மிடையே கொண்டு அதைக் கடவுளின் பிரசாதமாக உண்ணும்போது நமக்கு உடல் மட்டுமில்லாமல் மனமும் வலிமை பெறும் அல்லவா? அதற்காகவே ஒவ்வொரு பண்டிகைக்கும் அந்த அந்தக் கால பருவநிலைகளை ஒட்டிச் செய்யப்படும் பிரசாதங்கள். ஆடிப்பால் உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும். அதேபோல் தேங்காய் சேர்த்து வெல்லம் போட்டுப் பூரணம் கிளறிச் செய்யப்படும் கொழுக்கட்டையும். மேலும் விநாயகர் உருவமே கொழுக்கட்டை போல் தானே இருக்கும்! உடலாகிய மேல்மாவில் ஆன்மாவாகிய பூரணத்தை உள்ளே வைத்து அவருக்குப் படைப்பதன் மூலம் நாம் நம்மையே அவருக்கு சரணாகதி செய்கிறோம். தேங்காய் உடைப்பதன் தத்துவமும் அது தானே. மும்மலங்களையும் முக்கண்களாகப் பெற்ற தேங்காயை உடைப்பதன் மூலம் நம் மும்மலங்களும் நீங்கி நம் தலையையே சிதறுகாய் போல் கடவுளுக்குப் படைப்பதாக நினைத்துத் தானே உடைக்கிறோம். இதன் மூலம் நம் ஆணவம், கன்மம், மாயை விலகி அகங்காரம் விலகி மனதில் அமைதி பிறக்கும்.

      Delete
    3. பெண்கள் ருதுவானாலோ அல்லது வளைகாப்புக் கொண்டாட்டங்கள் மூலமோ முளைப்பயிறைப் பெண்களுக்கு அள்ளிக் கொடுப்பார்கள். இதன் மூலம் அந்த முளைப்பயிறைச் சமைத்து உண்ணும் அந்தப் பெண்ணிற்கு அதன் சத்துக்கள் கிடைக்கவேண்டும் என்பதே பொருள். எல்லோராலும் எப்போதும் இம்மாதிரிச் செய்ய முடியாது என்பதால் ஆடி மாதம் முளைக்கொட்டு உற்சவம் நடத்தியும் இம்மாதிரி விநியோகிப்பார்கள். அப்போதைய பருவத்துக்கு அது நல்லதொரு உணவாகும். விநியோகம் என்பதால் ஏழை, எளிய மக்களும் அதைப் பெற்றுச் சமைத்து உண்ண முடியும். இப்படித் தான் ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் நடந்து வருகின்றது. இதற்கு மேலும் உங்களுக்குப் புரியலை என்றால் எதுவும் சொல்ல முடியாது.

      Delete
    4. //உன் வீட்டிலெப்படி என்று எதிர் கேள்வி கேட்டு மடக்குவதாகத்தெரிவது.// உங்களை மடக்குவதற்காகவெல்லாம் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. உங்க மனைவிக்காவது இதற்கான பதில் தெரிந்து உங்களுக்குச் சொல்லி இருப்பாங்களே என்பதற்காகக் கேட்டது தான். நீங்க அவங்களைக் கேட்டிருக்கீங்களா? மற்றவங்க கண்மூடித்தனமாகச் செய்யறாங்க. வழிவழியாக வந்தது என்னும் மூட நம்பிக்கையால் செய்யறாங்க என்று சொல்லும் நீங்கள் அதே கேள்வியை உங்க மனைவியிடமும் கேட்டிருக்கீங்களா என்பதே இங்கே விவாதிக்கப்பட்டது! மற்றபடி இதில் தனிமனிதத் தாக்குதல் எதுவும் இல்லை. எனக்குத்தெரிந்து நீங்களும் பல்லாண்டுகளாக இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! ஆனால் உங்கள் மனம் எதையும் ஏற்க மறுக்கிறது. இத்தோடு நிறுத்திக்கலாம்னு நினைக்கிறேன். நன்றி. வணக்கம்.

      Delete
    5. உங்கள் ஈடுபாட்டுடன் ஆன பிம்மூட்டங்கள் மகிழ்ச்சி தருகிறது எல்லா வகை உணவுகளிலும் ஏதோ சத்துஇருகிறது என்பது சரியே எப்படியோ நான் இன்னும் மறு மொழி எழுதி யாரையும் நோகடிக்கவிரும்பவில்லைஇத்துடன்வடங்களையோ விதண்டாவாதங்களையோ நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன் மீண்டும் உங்கள் ஆர்வமான பின்னூட்டங்களுக்கு நன்றி

      Delete
    6. என்மனைவிக்கு என் எண்ணங்கள் தெள்வாக்சத்தெரியும் நான்யாரிடமும் மனைவியாஐருந்தாலும் எதையும் திணிப்பதில்லைபொபொது வெளியில் கருத்தை வைப்பதோடுசரி யரையும் கட்டாயப்படுத்துவதில்லை சதிலும் மனசிவியை நிச்சயமில்லை எனக்கு அவளைத் தெரியும் அவளுக்கும்என்னை நன்றாகத் தெரியும்

      Delete
    7. நிறையவே தட்டச்சுப் பிழைகள் மன்னிக்கவும்

      Delete
    8. // கோடை காலத்தில் வரும் ஶ்ரீராமநவமிப் பண்டிகை, வருடப் பிறப்பு போன்றவைக்குச் சமைக்கப்படும், வடைப்பருப்பு, பானகம், நீர்மோர் அந்தக் காலத்துக்கு ஏற்பத் தயாரிக்கப்படும் உணவு வகைகள். கோடைக்கு ஏற்ற நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அந்தப் பிரசாதங்களில் இருந்து கிடைக்கின்றன.// இதே பதிலை இரண்டு வருடங்களுக்கு முன்பு கோமதி அரசு கூறிய பொழுது, "உங்களுக்கே இது நியாயமாக இருக்கிறதா?" என்று கேட்டவர் இந்த பதிவாசிரியர். இதில் என்ன அநியாத்தைக் கண்டார் என்று தெரியவில்லை.
      முருகனுக்கு ஏன் பஞ்சாமிர்தம் நைவேத்தியம் செய்கிறோம்? முருகன் கோவில்கள் பெரும்பாலும் மலையில்தான் இருக்கும். மலையில் பழங்கள் நிறைய கிடைக்கும், தேன் கிடைக்கும், தினை விளையும், அதனால்தான் இவைகளை முருகனுக்கு படைக்கிறோம். இவையெல்லாம் சாதாரண காமன் சென்ஸ். கொஞ்சம் யோசித்தால் விளங்கி விடும்.
      இதைத் தவிர ஒருவர் ஒன்றை செய்கிறார் என்றால், அதைப் பார்த்து எல்லோரும் செய்வது மனித இயல்பு. செவ்வாய் அன்று ராகு காலத்தில் விளக்கு ஏற்றுவது என்பது 1970களில் தோன்றிய பழக்கம். யாரோ ஒருவருக்கு ஏதோ பிரச்சனை வந்த பொழுது, ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி அது சரியாகி இருக்கும். உடனே அதைப் பார்த்து அடுத்தவர், அவரைப் பார்த்து வேறு ஒருத்தர் என்று பரவி இருக்கும். அதைப் போலத்தான் பிரசாதங்களும்.

      எங்கள் வீட்டில் எங்கள் அம்மா கிருஷ்ண ஜெயந்தி அன்று நிறைய பட்சணங்கள் செய்து நைவேத்தியம் செய்வதோடு ஒரு குடத்தில் சுத்தமான குடிக்கும் நீரில் ஏலக்காய் போட்டு அதையும் நைவேத்தியம் செய்வார். எல்லார் வீட்டிலும் சீடை, முறுக்கு, இவைகளை சாப்பிடும் கிருஷ்ணனுக்கு தாகம் எடுக்காதா? என்பார். அதனால் நாங்கள் எல்லோரும் கிருஷ்ண ஜெயந்திக்கு ஏலக்காய் போட்ட குடிநீர் நைவேத்தியம் செய்வோம். எங்களைப் பார்த்து எங்கள் குழந்தைகளும் அதைத் தொடர்கிறார்கள். நாம் அன்போடு கொடுக்கும் எதையும் ஆண்டவன் ஏற்றுக் கொள்கிறான்.
      மஸ்கட்டில் ஐயங்காராக இருந்து கிருத்துவ மதத்திற்கு மாறிய ஒரு பெண்மணி கிரிஸ்மஸுக்கு சீடை, முறுக்கு, எல்லாம் செய்வார். அவரைப் பார்த்து வேறு சிலர் இதை ஃபாலோ பண்ணலாம்.
      இதற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
      ஒரு மரம் இருக்கிறது என்றால், அதில் எத்தனை இலைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்வது அறிவுடைமையா? அல்லது அந்த மரத்தால் என்ன பயன்? அதை எப்படி வளர்ப்பது? என்று தெரிந்து கொள்ள விரும்புவது அறிவுடைமையா?

      Delete
  25. அதைப் போலவே உங்களுடைய பதிவுகளை படித்து விட்டு பதிவர்கள் சிலருக்கு ராகு காலம் பார்ப்பதை நம்பிக்கை போய் விட்டது என்று எழுதியிருப்பது ஜோக் ஆப் தி இயர். நான் இதைப் படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். என்னை சிரிக்க வைத்ததற்கு ரொம்ப நன்றி.

    அப்படியே சாதித்திருந்தாலும் அதை இப்படி தம்பட்டம் அடித்துக் கொள்ள மாட்டார்கள். இந்திய விடுதலைக்காக பாடுபட்ட காந்திஜியிடம் சுதந்திரம் கிடைத்தவுடன் ஒரு ஆங்கிலேயே பத்திரிகையாளர்," இதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டதும், காந்திஜி,"சொல்வதற்கு ஒன்றும் இல்லை" என்றார். நான்தான் விடுதலைப் போரை முன்னின்று நடத்தினேன், நான் சொன்னதை மக்கள் கேட்டார்கள். என்றெல்லாம் கூறவில்லை, அதனால்தான் அவர் மகாத்மா.

    ReplyDelete
  26. தமிழ் நாட்டில் தி.க., தி.மு.க போன்ற கட்சிகள் ஏதாவது பெனாத்துவார்கள், அதற்கு தகுந்த பதிலடி யாராவது கொடுத்து விட்டால் உடனே பார்ப்பான், ஆரியன் என்று லபோ, திபோ என்று கூவ ஆரம்பித்துவிடுவார்கள். அதைப் போலவே அதி மேதாவி என்று நினைத்துக் கொண்டு எப்போதும் கேட்கும் அதே கேள்வியை மீண்டும் கேட்டீர்கள். அதற்கு நான் கிண்டலாக பதில் சொன்னதும், என்னை அறிவு ஜீவி என்று கிண்டலடித்தீர்கள், காமன் சென்ஸ் இருக்கிறதா? என்று கேட்டீர்கள், காழ்ப்புணர்ச்சி என்றீர்கள். எனக்கு பொல்லாப்பு என்று புலம்பினீர்கள். ஆத்திரம் தலைக்கேற தட்டச்சுவதில் ஏகப்பட்ட பிழைகள்.

    மீண்டும் கூறுகிறேன், நிஜமான ஞானி, நிஜமான அறிவாளி தன்னை அப்படி proclaim செய்து கொள்ள மாட்டான். எப்படி ஒரு திருடன் எல்லோரையும் திருடன் என்று நினைப்பானோ, அதைப்போல ஒரு அறிவாளி எல்லோரும் அறிவாளிகள் என்றுதான் நினைப்பான். அதனால் அவனுக்கு தான்தான் இந்த உலகத்தை உய்யச் செய்ய வேண்டும் என்னும் எண்ணமெல்லாம் இருக்காது.

    உங்கள் வீட்டில் யாரிடமும் உங்கள் கருத்துக்களை திணிக்க மாட்டேன் என்கிறீர்கள், அப்போது அதே மனப்பாங்கு வெளியிடத்திலும் வர வேண்டும். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் தூங்கட்டும், வெளியில் இருப்பவர்களை எழுப்புகிறேன் என்கிறீர்களா? அசல் தமிழ் நாட்டு தி.க. ,தி.மு.க. போலவே இருக்கிறீர்களே?


    தமிழ் நாட்டில் தி.க., தி.மு.க போன்ற கட்சிகள் ஏதாவது பெனாத்துவார்கள், அதற்கு தகுந்த பதிலடி யாராவது கொடுத்து விட்டால் உடனே பார்ப்பான், ஆரியன் என்று லபோ, திபோ என்று கூவ ஆரம்பித்துவிடுவார்கள். அதைப் போலவே அதி மேதாவி என்று நினைத்துக் கொண்டு எப்போதும் கேட்கும் அதே கேள்வியை மீண்டும் கேட்டீர்கள். அதற்கு நான் கிண்டலாக பதில் சொன்னதும், என்னை அறிவு ஜீவி என்று கிண்டலடித்தீர்கள், காமன் சென்ஸ் இருக்கிறதா? என்று கேட்டீர்கள், காழ்ப்புணர்ச்சி என்றீர்கள். எனக்கு பொல்லாப்பு என்று புலம்பினீர்கள். ஆத்திரம் தலைக்கேற தட்டச்சுவதில் ஏகப்பட்ட பிழைகள்.

    மீண்டும் கூறுகிறேன், நிஜமான ஞானி, நிஜமான அறிவாளி தன்னை அப்படி proclaim செய்து கொள்ள மாட்டான். எப்படி ஒரு திருடன் எல்லோரையும் திருடன் என்று நினைப்பானோ, அதைப்போல ஒரு அறிவாளி எல்லோரும் அறிவாளிகள் என்றுதான் நினைப்பான். அதனால் அவனுக்கு தான்தான் இந்த உலகத்தை உய்யச் செய்ய வேண்டும் என்னும் எண்ணமெல்லாம் இருக்காது.

    உங்கள் வீட்டில் யாரிடமும் உங்கள் கருத்துக்களை திணிக்க மாட்டேன் என்கிறீர்கள், அப்போது அதே மனப்பாங்கு வெளியிடத்திலும் வர வேண்டும். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் தூங்கட்டும், வெளியில் இருப்பவர்களை எழுப்புகிறேன் என்கிறீர்களா? அசல் தமிழ் நாட்டு தி.க. ,தி.மு.க. போலவே இருக்கிறீர்களே?








    ReplyDelete
    Replies
    1. Last but not the least பிரசாதம், இன்ன பிற ஆன்மீக விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்தால், அதை ப்ளாகில் கேட்டுக் கொண்டிருக்க மாட்டீர்கள். அதற்கு வேறு இடங்கள் உள்ளன. அங்கு போய், கேட்கும் விதத்தில் கேட்டிருப்பீர்கள். Here you want to establish that you are an intelectual and statisfy your ego. When your ego is damaged you becom miserabe. Growing old is different, becoming mature is different. A mature person will never harm others feelings. Thanks.

      Delete
    2. Madam I differ with you. It is not a satisfaction if ego or establishing that he is an intellectual. GMB sir always start a meaningful discussion. But he is a very good lawyer! and he can discuss a matter both ways (support and oppose).It is upto you and me that to present our views and convince him.

      Try to take these discussions as pattimanrams conducted by Solomon Pappaiah.

      Nobody will change their opinions and views just by some pattimanrams.

      Please be calm.

      JK



      Delete
    3. Thank you for a clear understanding and empathy

      Delete
  27. உங்க பதிவை விட அதற்கு வந்த பின்னூட்டங்கள் டென் தவுஸண்ட் வாலா பட்டாஸ் !!!!

    ரசித்தேன்! நல்ல விவாதம் !

    ReplyDelete
  28. நீங்களும் ஏதும் கொளூத்த வில்லையா

    ReplyDelete