Tuesday, September 24, 2019

வேஷக்கார பிரதமர்


                     
       
                                                          வேஷக்கார பிரதமர்
 






வேஷக்கார  பிரதமர்  நம்மோடி
 வேஷக்கார பிரதமர்நம்மோடி  

கையை ஆட்டி காலை ஆட்டிவசீகரிக்கும்
நம்மோடி இவர் ஒரு வேஷக்கார பிரதமர்

 நாளுக்கொரு கதை பேசி
நம்மையெல்லாம்  முட்டாளாக்கும்
வேஷக்கார  பிரதமர்  நம்மோடி

நாளுக்கொரு  நாடு சென்று அங்கெல்லாம் 
நம் இல்லாத பெருமை பேசும்வேஷக்கார பிரதமர் மோடி  

  56 அங்குல மார்பே அவர் அடையாளம்
 எத்தனைதான் பொய் சொன்னாலும்
பொருந்தும்படி சொல்லியே  ஈர்ப்பவர் 
  வேஷக்கார பிரதமர்நம்மோடி       

பல்லெல்லாம்  தெரியக் காட்டி
 சொல்லும்பொய்யெல்லாம்
விதவிதமாய் சொல்லி நாட்டி
கோயபெலும்  நாணும்விதமாய்
 நம்மை எல்லாம்  நம்பவைக்கும்
வேஷக்கார பிரதமர் நம் மோடி

 அண்டை நாட்டுக்காரனை வம்புக்கிழுப்பார்
aஅவர் மீது  தீவிரவாதக் குற்றம் உரைப்பார்
ஏதும்தெரியாதென்றாலும் சர்ஜிகல் ஸ்ட்ரைக்
எனச்சொல்லி குண்டு மாரி பொழிவார்
வேஷக்கார பிரதமர் நம் மோடி 

அவரவர் கருத்து சொல்லக் கூடாது சொல்லி விட்டால்
தாய் நாட்டுப் பற்று இல்லை எனவே  ஓங்கி உரைப்பார்
சும்மா ஒரு பேச்சுக்காகவும்
- திருடனென்று சொல்லிவிட்டால்-உன்
அம்மா பாட்டி தாத்தா அனைவரையும்
திருடர் என்பார்   வேஷக்கார  பிரதமர் நம் மோடி 

கீழ்காணும்   காணொளியில்  இருக்கும் ராகத்தில் பாடிப்பார்க்கவும்  








  









  





































                                                       -----------------------------

20 comments:

  1. ஆரம்பிக்கும்போதே விஷமக்கார கண்ணன் பேஸ் என்று தெரிந்துவிட்டது.  இயை(சை)ந்து வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. எதிர்பார்த்த கருத்துக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  2. உங்களையும் தேசத்துரோகின்னு முத்திரை குத்தாமல் இருந்தா சரி:))

    ReplyDelete
    Replies
    1. என்னைப்போல் நாட்டுப் பற்று உள்ளோரும் உளரோ

      Delete
    2. //என்னைப்போல் நாட்டுப் பற்று உள்ளோரும் உளரோ// - ஆஹா... கவிதைக்குப் பொய் அழகு. ஆனால் பின்னூட்டத்துக்கும் அப்படியா?

      Delete
    3. கவிதைக்குபொய் அழகு என்பது சொல்லப்பாட்டாலும் என் என் எழுத்தில்பொய்யைத் தவிர்ப்பதே என் நோக்கம்

      Delete
  3. ஜிம்பி சார் தளத்தை ஒரு பாகிஸ்தான் காரன் ஹேக் செய்து விட்டான் போல இருக்குதே

    ReplyDelete
    Replies
    1. பாகிஸ்தானியருக்கு தமிழ் தெரியுமா

      Delete

  4. வேஷக்காரர் என்று சொன்னால் ஏதோ வேஷம் போட்டு நடிப்பவர் என்பதுமாதிரி ஆகிவிடும் அதனால் "வேஷம் போட்டு மோசம் செய்யும் மோடி ஒரு மோசக்காரர் "என்பது போல பாடி இருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. பல வெஷங்களில் கிடைத்த படத்துக்கு கேட்ட மெட்டில் எழுத முயன்றது வெறு அர்த்தமேதுமில்லை

      Delete
  5. IT ED வீட்டுக்கு வந்துடப்போவுது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். காலம் பொல்லாதது.

    ReplyDelete
    Replies
    1. நீங்களே கூப்பிடுவீர்கள்போல் இருக்குதே

      Delete
  6. பாட்டு நல்லாத்தான் இருக்குது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி ஜி

      Delete
  7. உங்க பெர்சப்ஷன்ல எழுதியிருக்கிற கவிதை பரவாயில்லாமல் வந்திருக்கு.

    ReplyDelete
    Replies
    1. மனமுவந்து பாராட்ட மனம் வராதே

      Delete
    2. //வேடிக்கையாய் பாட்டுப் பாடி
      விதம் விதமாய் ஆட்டம் ஆடி
      நாளுக்கொரு லீலை செய்யும்
      நந்த கோபால க்ருஷ்ணன் // - இது சரண ஆரம்பம் இதுக்கு ஏத்தபடி எந்த வரிகள் இருக்கு சொல்லுங்க.

      நீங்க, வெறும் கவிதைனு சொன்னீங்கன்னா அது வேறு. பாடலின் ராகத்தில் பாடுங்க என்று சொன்னால், சந்தம் சரியாக வரணும்.

      சும்மா 'பாராட்டணும்' என்றால், இதோ பிடிங்க என் 'பாராட்டை'. ஆனாலும் வரிகள் சந்தத்துல சரியா வரலை.

      Delete
    3. நான் ஒன்றும் காப்பி அடிக்க வில்லையேமொத்த பாட்டும் பாடலின் வரிகளில் தெரியும் ஸ்ரீராமின் பின்னூட்டம் பாருங்கள்

      Delete
  8. நீங்களும் ஒரு குறும்புக்காரர் தான்!

    ReplyDelete
    Replies
    1. இதை நான் ஒரு பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்

      Delete