Thursday, November 14, 2019

நீங்கள் தான் உங்கள் brand



                                 நீங்கள்தான் உங்கள் ப்ராண்ட்
                                ----------------------------------------------


நீங்கள்தான் உங்கள் BRAND
ஒரு பொருள் விளம்பரப் படுத்துவதால் சேர வேண் டியவர்க்கு  போய்ச்சேருமென்பது நம்பிக்கை  ஒரு விதத்தில் நாமும் ஒரு ப்ராண்டே
 நம் எண்ணங்கள் நம்பிக்கைகள் எவ்வாறு பிறரால் அங்கீ கரிக்கபடுகிறதோ  அதுவே நம் ப்ராண்ட் கடத்தப்படும் எண்ணங்கள் என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதே நம் ப்ராண்டின்  வலிமையோ பலவீனமோ நம் பலங்களை நாம் கொட்டி முழக்க வேண்டும் ஆனால் அது அடுத்தவனின் செவிப்பறையை கிழிக்காதிருக்க வேண்டும்நீங்கள் உங்களை சரியாக ப்ராண்ட் செய்யாவிட்டல் மற்ற்வர் உங்களை தவறாக ப்ராண்ட்  செய்யக் கூடும்உங்களின்   நம்பகத்தன்மை  உங்கள் செயல்களின் மூலம்  வெளிப்பட வேண்டும் உங்கள் செயல்கள் உங்களைப்பற்றிய பெர்செப்ஷனுக்கு அடிகோலும்
மற்றவரிடமிருந்து வித்தியாசமாய் இருங்கள் மற்றவர்களிடம்  கூட இருங்கள் நீங்கள் நீங்களய் இருங்கள்மெய் பேசுவதால் தவறுகள் குறையலாம்  நீங்கள் என்னவாக அறியப்பட வேண்டுமோ  அது குறித்து உங்கள் செயல்கள் இருக்கட்டும் உங்களை பிறரிடமிருந்து பிரித்துகாட்டுவது எது என்பதை முதலில் அனுமானிக்க வேண்டும்உங்கள் குறிக்கோள் மிகவும் முக்கியம் அது பற்றிய சிந்தனை எப்போதும் கொழுந்து விட்டு எரிய வேண்டும்
உங்கள் ப்ராண்ட் உங்களைப் பற்றிய  தொகுப்பாக இருக்க வேண்டும் மற்றவர்கல்டமிருந்து எங்கு வித்தியாசப்படுகிறிர்கள் என்பது உங்களுக்கே விளங்க வேண்டும்   உங்களை பிறர் கவனிக்க வேண்டும் சொல்வதை ப்ழக்கப்படுத்துபவராக இருத்தல் அவசியம் உங்களை நீங்களே ரேட் செய்யுங்கள்  தவறு என்று தெரிந்தவற்றை   திருத்திக்கொள்வதுஅவசியம்   ஆனால் அது உங்கள் தவறை எல்லோருக்கு ம் தெரிவிக்கும்  விதமாக வேண்டாம்   க்ரெடிபிலிடி  குறைய வாய்ப்பு உண்டு  
ஒருவனுக்கு இல்லாத குணத்தை  இருப்பதாக காட்டுதல் கூடாது உனக்கு எது  உரியதோ அதைப்பெற நினைப்பது தவறல்ல உங்கள் ப்ராண்ட் உங்களைப்பற்றிய புரிதலைக்கூட்ட வேண்டும் உங்களைப் பற்றிய ப்ராண்ட் வளர்க்கும் போது  முக்கியமாய் கருத்தில் கொள்ள வேண்டியது  உண்மையாய் இரு புத்திசாலித்தனமாயிரு ஒரிஜினலாய் இரு  வித்தியாசமாய் இரு
சரியாகச் சொல்   மாற்றிச்சொல்லாதே  தனித்துவமாய் இருஒரேபோல் கருத்துடையவனாக இரு  எதுபற்றிகருத்திட வேண்டும்  என்பதில் தீர்மானமாய் இரு  எதன் வழியே கருத்திட வேண்டு என்று தீர்மானி உங்கள் ஆடியென்சை புரிந்து கொள்குறிப்பிட காலத்தில்தொடர்பில் இரு
சொல்ல வேண்டியதை  கவனமாகச் சொல் விருப்பு வெறுப்பு இல்லாமல் சொல் சொல்வதற்கு முன்  யோசி வார்த்தைகளில் கவனமாக இரு ன் கருத்துகளுக்கு  ரெஸ்பாண்ட் செய்வோருக்கு  மனம் புண்படாதபடி பதிலளி  
 உனக்கு தெரியாதவற்றை சொல்லாதே உன் குறைகளையும் தெரிந்துகொள் பலருக்கும் ருசிக்காத கருத்துகளைத்தவிர்   தனிப்பட்ட முறை தாக்குதல்களை தவிர் பிறர் கருத்துகளை திருடாதே
 உன் சக்தியை உணர் என்ன செய்ய விரும்புகிறய் என்பதில் தெளிவாய் இரு சொல்ல விரும்புவதை நீயாகச்சொல்  உன்னை மறுபடி மறுபடி  புரிண்டு கொண்டு வெளிப்படுத்து
 நான்பதிவெழுத தொடங்கிய காலகட்டத்தில் எழுதியவை இன்றும்  ரெலெவ்ண்ட் ஆக இருப்பதுபோல் இருக்கிறது
எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இடு.

மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.

எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு.

வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொடு.

நான் படும் வேதனைகளை, வலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால் அதனை அக்கணமே மூடிவிடு.

அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே
 
நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வை.

நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.


 


28 comments:

  1. அருமையான கருத்துரைகள், எண்ணங்கள்.    எல்லோரும் பின்பற்றவேண்டியது.

    ReplyDelete
    Replies
    1. சற்று வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்று எழுதியது நன்றி ஸ்ரீ

      Delete
  2. /கடத்தப்படும் எண்ணங்கள் என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது//

    இந்த எண்ணத்தை வைத்துதான் இரண்டு நாட்களுக்குமுன் நாலுவரி எழுதி வைத்துள்ளேன்!

    ReplyDelete
  3. //நீங்கள் உங்களை சரியாக ப்ராண்ட் செய்யாவிட்டல் மற்ற்வர் உங்களை தவறாக ப்ராண்ட்  செய்யக் கூடும்//
    "நான் சொன்னதற்குதான் நான் பொறுப்பு.  நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதற்கல்ல" என்றொரு வாசகம் உண்டு.  அது நினைவுக்கு வருகிறது! <> ))

    ReplyDelete
    Replies
    1. உண்மை, நாம் சொல்லுவதைப் பிறர் எப்படி எடுத்துக்கறாங்க என்பதற்கெல்லாம் நாம் பொறுப்பு ஏற்க முடியாது. நல்லதொரு பகிர்வு.

      Delete
    2. @ஸ்ரீ ராம் தவறாக ப்ராண்ட் செய்தால் வியாபாரம் படுத்து விடும் பிறர் நினைப்பதும் முக்கியம் வியாபாரத்திலும்சரி பதிவுலகிலும் சரி கடை விரிப்பதே பிறர் கொள்ளத்தானே

      Delete
    3. @கீதா சாம்பசிவம்
      நம் கருத்துகள் நமதுதானே எண்ணங்களைக் கடத்துவது தானே குறிக்கோள்

      Delete
  4. நீங்கள் கூறியுள்ள அனைத்தும் அனைவராலும் கடைபிடிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு நன்றி சார்

      Delete
  5. அனுபவங்களின் மூலமாக அறிந்து பகிர்ந்திருக்கும் எண்ணங்கள் யாவும் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அனுபவப்பகிர்வுதான் வருகைக்கு நன்றி மேம்

      Delete
  6. அருமையான எண்ணங்கள்
    அனுபவ மொழிகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

      Delete
  7. உண்மை. அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை. நன்றி

    ReplyDelete
  8. இது ஒரு வகையான சுயமதிப்பீடு என்றுகூட கொள்ளலாம் ஐயா.

    ReplyDelete
  9. மிகவும் அருமை ஐயா...

    ReplyDelete
  10. //உண்மையாய் இரு புத்திசாலித்தனமாயிரு ஒரிஜினலாய் இரு  வித்தியாசமாய் இரு// கண்டிப்பாய் எல்லோரும் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள்.
    //மாற்றிச்சொல்லாதே  தனித்துவமாய் இருஒரேபோல் கருத்துடையவனாக இரு// இது சாத்தியமா? ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நம்மை மாற்றிக் கொண்டே இருக்க, அதனால் நம் அபிப்ராயங்களும் மாறாதா?

    ReplyDelete
    Replies
    1. நேரத்துக்கு ஏற்றார் போல் மாறாதே என்பதே சரி

      Delete
  11. //நம் எண்ணங்கள் நம்பிக்கைகள் எவ்வாறு பிறரால் அங்கீ கரிக்கபடுகிறதோ அதுவே நம் ப்ராண்ட் கடத்தப்படும் எண்ணங்கள் என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதே நம் ப்ராண்டின் வலிமையோ பலவீனமோ நம் பலங்களை நாம் கொட்டி முழக்க வேண்டும்,, //

    மாணிக்க வரிகள். வாழ்வில் ஜெயிக்க நினைப்பவர்களுக்கு வழிகாட்டியான வார்த்தைகள்..

    //எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
    என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இடு... //

    //எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
    நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு.//

    பின் ஏன் இந்த தடைக் கற்கள்?..



    ReplyDelete
  12. என் குறைகள் எனக்குத் தெரிய வேண்டுமல்லவா

    ReplyDelete
    Replies
    1. குறைகள் நமது அனுபவச் சறுக்கலுக்குப் பிறகு அல்லது பிறர் சுட்டிக் காட்டத் தானே தெரியும்?..

      எண்ணங்களை வெளிப்படுத்தாமல் ஓட்டுக்குள் (shell) புகுந்து கொள்வதில் என்ன லாபம்?..

      Delete
  13. குறைகள் பிறர் சுட்டிக்காட்டத்தான் தெரியும் என்பது அவசியமில்லை வெள்ப்படுத்தக்கூடிய எண்ணங்கள் வெளிப்பட்டு தான் இருக்கும்

    ReplyDelete
  14. ஒரே எண்ணம் மனிதனை மூடனாக்கி விடும்... நன்றி ஐயா...

    உங்கள் எண்ணம் சிறப்பு...

    உங்களின் தேடல் தொடரட்டும்...

    ReplyDelete
  15. ஒரே எண்ணம் மனிதனை மூடனாக்கி விடும் காண்டெக்ஸ்ட் புரிய வில்லை

    ReplyDelete