Wednesday, October 7, 2020

சில எழுத்துகளின் பின்னணி

 

 

எழுத்துகளும்  பின்னணியும் 


 
பாட்டெழுதுவது என்ன பெரிய பாடா, பாட்டா,

  என்றென் பேரன் கேட்டது ,கவிதை எழுத 

  கருவுக்காக காத்திருந்தபோது நினைவிலாடியது.
 
உணர்வினால் உந்தப்பட்டு எழுதினால்
 
அதில் உயிரிருக்கும், கவிதையும் வசமாகும்
 என்று நான் கூறியதும், உணர்வை சொல்லில்
 
குழைத்துப் பார்த்தால் உதடு உதிர்ப்பதும்
 
கவிதையாகும் என நண்பர் ரமணி எழுதியதும்
 
என் சிந்தனையில் வந்து மோதியது.


       உணர்வுகள் முட்டி மோத நிகழ்வுகள்

       நடந்திருக்க வேண்டும். மனசும் பாதிப்படைந்து

       இருக்க வேண்டும்.புனைவுகளில் சாத்தியமா.?

       எழுதும்போது சொல்லாடல் செய்து

       இல்லாததை இருப்பதாய் கற்பிதம் செய்தால்,

       எழுதும் எழுத்தில் உயிர் இருக்குமோ ,உண்மை

       இருக்குமோ , எண்ணங்கள் கடத்தப்படுமோ.?


எண்ணியதை சொல்லவே தட்டுத் தடுமாறும்
நெஞ்சம் மரபுப்படி எழுத அறிந்திருக்க வேண்டியது
என்னென்ன.?நிலவைப் பிடித்து அதன் கறைகள்
துடைத்து குறுமுறுவல் பதித்த முகம் என்று
எழுதும்போது அது புனைவுதான் என்றாலும்,
எழுதியது உருவகப் படுத்தினால் தோன்றுவதென்ன.?
பார்க்க மனம் விழையுமா, இல்லை சகிக்குமா.?

 

இன்றைய மொழியும் இன்றைய பிரச்சனைகளும் புதிது
எனவே இன்றைய கவி வடிவங்களும் மாறித்தான் ஆகவேண்டும்

விதையாகும் எண்ணம்
கதையாகும்போது
சொல்லப் படும்,
மற்றும் படிப்பவர்
மனதில் ஏறும்
வகையால்
கவிதையாகிறது!

இதுவும் இன்னபிற போதிப்புகளும் துணையாக  என்பெரன்   கவிதை எழுத முற்பட்டான்  எழுடு பொருளாக  எங்களை  எடுத்துக் கொண்டான்  அடில் ஒரு சிக்கல் இருந்தது அவனுக்கு தமிழில் எழுதப்படிக்கத் தெரியாது இல்லாவிட்டால் என்ன  அவன்  தமிழ் பேசுவானே எழுத்தை தங்கிலீஷில் எழுதினான்  நீங்களும்  பாருங்களேன்   படியுங்களேன்

 Iruvaraiyum  paarththaal kamal sridevi poola irukku.natippil alla.

Aaanaal avvalavu kaathal poruththam theriyuthu;

Avvalavu praem,ishtam,kaathal,love, pyaar

Ellaamae orae arththamthaanae. !

Ivarkal kaathal patri solla naan patikkanum Phd;

Iruvar kaathalilum unmai irukkirathu. 

Aqua guard thanni poola pyuraa irukkum.

Ivarkalaip paarththaal enakku poraamai. 

Aen enraal ennaip paarththu en paeran ippati ellaam solvaanaa. ?

Chansae illai.aen enraal naan innum kaathalikkavae illaiyae.!

Ivarkal santaiyaip paarththaal orae borethaan.no entertainment.

Angkaeyum love thaan therikirathu.

singkham poonaiyaaka mutiyumaa. ?oru unmai theriyumaa.?

Engka veettu singkaththai kutti paappaa 

Maathiriyaakkiya  perumai engka paattikkuththaan saerum.

Ivarkal chemistry paarththaal world physics aachchariyam illai.

 

Ippo naan T.R u 

ivangka rendu paerum sema pair -u

Enakkuth tharaangka  too much care u

Athaip petraal kitaikkum kick u

appuram ethukkadaa bar u

Hai tantanakkaa  tanakkunakka...!

 

    

  

 

)

17 comments:

  1. மனதில் தோன்றியதை வார்த்தைகளில் வடித்து விட்ட அன்புத் பேரன்....


    அருமை.

    ReplyDelete
    Replies
    1. இது கவிதையா முன்பு வ்ண்ட சில பின்னூட்டங்களும் சேர்க்கப்பட்ட பதிவு

      Delete
  2. மனதில் தோன்றியது வரிகளில் வந்திருக்கிறது. உங்களுக்கு வாழ்த்துகள்.

    எழுதிய பேரனுக்கு பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. இதை அவன் என்றொ எழுதியது சிலபின்னூட்டங்களும் சேர்ந்து எழுதிய பின்னணி ஆகி விட்டது

      Delete
  3. peranukku western instrument Guitar ponravai vaasikka theiyum enru ninaikkiren. athanaal thaan kavithai western pop ponru ullathu, neenkalum pop ponru paadippaarkkalaam. 


    //விதையாகும் எண்ணம்கதையாகும்போது
    சொல்லப் படும்,
    மற்றும் படிப்பவர்
    மனதில் ஏறும்
    வகையால்
    கவிதையாகிறது!//

     எண்ணங்கள் விதை (கண்ணால் காணமுடியாமல் புதைந்து உள்ளது) முளைத்து செடியாகும்போது  (காட்சியாகும்போது) கண்ணில்படும் அழகாக. அந்த அழகே கவிதை. சரிதானே. 
     கதையல்ல காட்சியே. கதையானால் அது கதையே. Jayakumar

    ReplyDelete
  4. வாழ்த்துகள் பேரனுக்கு!

    ReplyDelete
  5. அருமை ஐயா பெயரன் உங்கள் மீது பொறாமை கொள்ளும் அளவு அன்பும் இருக்கும்.

    ReplyDelete
  6. கொடுட்து வைத்தவன் நான் நன்றி

    ReplyDelete
  7. இலக்கின்றி பயணிப்பது அலைச்சல்...இலக்குத் தேடித் தேடி அலைவதே பயணம்..அடைதல் பெரிய விசயமே இல்லை..பயணம் துவங்கியப் பேரனுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் எழுத்தும் ஒரு கிரியா ஊக்உணர்வை சொல்லில்
      குழைத்துப் பார்த்தால் உதடு உதிர்ப்பதும்
      கவிதையாகும் என நண்பர் ரமணி எழுதியதும்
      என் சிந்தனையில் வந்து மோதியது

      Delete
  8. தங்களின் அன்புப் பெயரனுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  9. அருமை... பேரனுக்கு வாழ்த்துகள்

    இதை அப்படியே நகல் எடுத்து இங்கே (https://translate.google.com/) தமிழில் மாற்றி விடலாம் ஐயா...

    ReplyDelete
  10. ஐயா அது transliterate செய்யப்பட்டது. Translate செய்ய முடியாது.

    ReplyDelete
    Replies
    1. தமிழாக்கியதும் உண்டு

      Delete
  11. தங்லீஷை தமிழாக்கவா /

    ReplyDelete