Sunday, October 25, 2020

தமிழில் விஷ்ணு சஹஸ்ர நாமம்


 

 

விஷ்ணு சஹஸ்ர நாமம்

  உலகத்தில் தர்மத்தைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் பன்னிருவர் என்று பட்டியலிட்டுக் கூறும் பாகவதம் அப்பட்டியலில் பீஷ்மரைச் சேர்த்திருப்பதிலிருந்து பீஷ்மரின் ஆன்மிகப் பெருமை விளங்கும். அதனாலேயே மகாபாரதப் போருக்குப் பின் தர்மத்தின் நெளிவு சுளுவுகளைப் பற்றி யுதிஷ்டிரர் கண்ணனிடம் கேட்டபொழுது, 'வாஇதை பீஷ்மரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம்என்று கண்ணன் அவரைஅம்பு படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் அழைத்துச் செல்கிறார்.


யுதிஷ்திரர் பீஷ்மரிடம் ஆறு கேள்விகள் கேட்கிறார்

1.                  இறைவனைப் பற்றி விளக்கும் எல்லா நூல்களிலும் கூறப்பட்டுள்ள சிறந்த ஒரே தெய்வம் எது?

2.                 அதை அடைவதற்குரிய மேலான நிலை எது?

3.                 எந்த தெய்வத்தை அவரது குணச்சிறப்புகளைப் புகழ்ந்து பாடி மானிடர்கள் நலம் எய்துவார்கள்?

4.                 எந்த தெய்வத்தை புறத்தே அல்லது மனத்தினாலேயோ வழிபட்டு நலமடைய வேண்டும்?

5.                 எல்லா வழிபாட்டு நெறிகளிலும் சிறந்த நெறியாகத் தங்கள் விருப்பிற்கும் கருத்திற்கும் ஏற்றது எது?

6.                 எதனை ஜபித்து மனிதன் பிறப்புக் கட்டிலிருந்து விடுபடுகிறான்

இவை அத்தனை கேள்விகளுக்கும் ஒரே முடிவான விடையாக பீஷ்மர் விஷ்ணுவின் பெயர்களை தியானித்தும்துதித்தும்வணங்கியும் ஒருவன் செய்வதால் எல்லாவித துக்கங்களையும் கடந்துவிடுவான் என்று சொல்லிவிஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்கிறார்.ஆக இவ்வழிபாட்டிற்கு மூன்று வித வெளிப்பாடுகள்: அவன் குணங்களையும் உருவங்களையும் மனதிலேயே நிறுத்துவதுஅவைகளை பறைசாற்றும் நாமங்களை நாவினால் பாடுவதுசிரம் தாழ்த்தி அவனை வணங்குவது.

இவை அத்தனை கேள்விகளுக்கும் ஒரே முடிவான விடையாக பீஷ்மர் விஷ்ணுவின் பெயர்களை தியானித்தும்துதித்தும்வணங்கியும் ஒருவன் செய்வதால் எல்லாவித துக்கங்களையும் கடந்துவிடுவான் என்று சொல்லிவிஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்கிறார்.ஆக இவ்வழிபாட்டிற்கு மூன்று வித வெளிப்பாடுகள்: அவன் குணங்களையும் உருவங்களையும் மனதிலேயே நிறுத்துவதுஅவைகளை பறைசாற்றும் நாமங்களை நாவினால் பாடுவதுசிரம் தாழ்த்தி அவனை வணங்குவது.
திருமதி M.S.சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடியுள்ள விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் புகழ் பெற்றது

10 comments:

  1. எங்கள் வீட்டில் தினம் இருமுறை ஒலிக்கிறது.  பாஸ் இதையும் வேறு சில ஸ்லோகங்களையும் தினம் இருமுறை போட்டுவிட்டு, கூடவே சொல்வார்.

    ReplyDelete
    Replies
    1. தமிழில் தெர்ந்திருக்க வேண்டும்ன்று தோன்றியடாஏயே இப்பதிவு தமிழில் தெரியாதவர் தெரிந்து கொள்ளலாமே

      Delete
  2. பாடும்போதும், கேட்கும்போதும் மனம் நிறைவாக இருக்கும் ஐயா. அதனை உணர்ந்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. மொழி தெரிந்து பாடுவதும் கேட்பதும் இன்னும் நிறைவைத் தரலாம்

      Delete
  3. படித்தேன், அறிந்தேன் ஐயா
    இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்

      Delete
  4. வைணவர்கள் மட்டுமே இதை ஏற்பார்கள்.M.S. தமிழ் சுப்ரபாதம் பாடியுள்ளார்.மொழி பெயர்த்த்வர் 20 ஆண்டுக்குமுன் மறைந்த தமிழ்ப் பேராசிரியர் ஜெ. பார்த்தசாரதி.மறைமலைநகரில் வசித்தவர்.

    ReplyDelete
    Replies
    1. இனி அதையும் எழுத வேண்டும் இறையைத்தேட வைணவம் என்ன சைவம் என்ன

      Delete
  5. அருமை ஐயா... நம்பிக்கையின் பக்தியே சிறப்பு...

    ReplyDelete
  6. கருத்துக்கு நன்றி சார்

    ReplyDelete