Thursday, November 4, 2021

தீபாவளி

 


பண்டிகைகள் கொண்டாடவே; ஆயிரம் காரணங்கள்
புராண ஆதாரங்கள் காரணம் பல காட்டினாலும்
பண்டிகைகள் கொண்டாடவே; மகிழ்வாய் இருக்கவே.
நரகாசுரன் இறக்கும்போது கேட்ட வரமோ, ராமனின்
வனவாசம் முடிந்து திரும்பும் நாளோ, சக்தியின்
கேதாரகௌரி விரதம் பூர்த்தியாகிப் பின்னர்
அர்தநாரீஸ்வரியான (ரரான) தினமோ, ஏதானால் என்ன ?
தீபாவளிப் பண்டிகை நாள் நன்று கொண்டாடுவோம்.
அகில இந்தியாவிலும் , ஏன் உலகின் பிற பாகங்களிலும்கூட
தீபாவளி கொண்டாடப் படுகிறது. சீக்கியர் பொற்கோயில்
கட்டத் துவங்கிய தினமென்றும்,  சமணர் மகாவீரர் நிர்வாணம்
அடைந்த தினமென்றும், கொண்டாட்டம் நன்று கொண்டாடுவோம்
ஆண்டில் ஒரு நாள் உற்றமும் சுற்றமும் கூடி மகிழவும்
அகத்தின் அகந்தை, பொறாமை, அறியாமை, இருள் நீக்கி
தீப ஆவளியில்  ஒளிவரிசையில் வெளிச்சம் பெற
தீபாவளிப் பண்டிகை நன்று ;கொண்டாடுவோம்.
உறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர்
ஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்
வேண்டாதன விட்டொழிப்பதை தலை முழுகுதல் எனக் கூறுவர்
கங்கா ஸ்நானமும் ஒரு தலை முழுகலே நம்மில் இருக்கும்
“நான்ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி
இனிப்பதனைப் பகிர்ந்துண்டு தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவோம்





18 comments:

  1. //ஆண்டில் ஒரு நாள் உற்றமும் சுற்றமும் கூடி மகிழவும்
    அகத்தின் அகந்தை, பொறாமை, அறியாமை, இருள் நீக்கி
    தீப ஆவளியில் ஒளிவரிசையில் வெளிச்சம் பெற
    தீபாவளிப் பண்டிகை நன்று ;கொண்டாடுவோம்//

    இந்த வரியையும், தொடரும் வரிகளையும் மிகவும் ரசித்தேன்.  ஆமோதிக்கிறேன்.  தீபாவளிவாழ்த்துகள் ஜி எம் பி சார்.  அம்மாவுக்கும் உங்களுக்கும் நமஸ்காரங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்டுக்கும் நன்றீ

      Delete
  2. வரிகள் அருமை. ரசித்தேன்.

    தங்களுக்கும் தங்களின் துணைவியாருக்கும் சுற்றத்தவருக்கும் எங்களின் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  3. ஆண்டில் ஒரு நாள் உற்றமும் சுற்றமும் கூடி மகிழவும்
    அகத்தின் அகந்தை, பொறாமை, அறியாமை, இருள் நீக்கி
    தீப ஆவளியில் ஒளிவரிசையில் வெளிச்சம் பெற
    தீபாவளிப் பண்டிகை நன்று ;கொண்டாடுவோம்.
    உறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர்
    ஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்
    வேண்டாதன விட்டொழிப்பதை ”தலை முழுகுதல்” எனக் கூறுவர்
    கங்கா ஸ்நானமும் ஒரு தலை முழுகலே நம்மில் இருக்கும்
    “நான்”ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி
    இனிப்பதனைப் பகிர்ந்துண்டு தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவோம்/

    சூப்பர் சார். இதே தான். வழிமொழிகிறேன். மிகவும் ரசித்தேன் சார்.

    வாழ்த்துகள் சார்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ரசித்து படித்த்த் தற்கு நன்றி

      Delete
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்ஹ்துக்கு நன்றி

      Delete
  5. இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  6. நல்ல கருத்து. தீபாவளி பண்டிகையை குடும்பத்தாரோடு சிறப்பாக கொண்டாடியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கொண்டாடினடே புகைப்பட பதிவாகிறது

      Delete
  7. Replies
    1. மகிழ்ச்சி தொட்டரட்டும்

      Delete