Friday, December 30, 2022

எது கல்வி

 

 

         நம் கண் முன்னே விரியும், நடக்கும், நமக்கும், ஏன்  சமுதாயத்துக்கும் ஒவ்வாத ஒவ்வொரு நிகழ்வும் மிகப்பெரிய தாக்கத்தை  ஏற்படுத்துகிறது. முடிந்தால்  இந்த  உலகத்தையே  புரட்டிப் போட்டு  மாற்ற வேண்டும்  என்ற y  எழுகிறது.      இருந்தாலும் நடப்பவைகள்  எல்லாமே  தவறானவ வேண்டத்தகாதவைகள்  அல்ல.  இன்னும்  சிறப்பாக இருக்கலாமே, நன்றாக  இருக்குமே என்ற ஆதங்கமும், விருப்பமும்தான் மனதில் தோன்றுவ⁸து .  இந்த வேகம்  மட்டும்  போதாது..இன்னும் சிறப்பாக  இருக்க என்ன  செய்யலாம்என்று எண்ணும்போது, கூடவே இருப்பதில்  எதெல்லாம்  நல்லது ,நன்மை  பயப்பது என்றும் நாம் சிந்திக்கவேண்டும்.

  
            
நூறு சதவீதக் கல்விதான் இலக்கு. ஆனால் அது இன்னும் எட்டப்படவில்லை. ஆனால் அது செயல்படுவதற்கு ஆங்காங்கே விதைகள் தூவப் பட்டுள்ளன.,என்பதை  மறுக்க  முடியாதுநூற்றாண்டுகாலமாக  இன்னாருக்குத்தான்  படிப்புஇன்னாருக்கு  அது கூடாதுஎன்ற ஆதிக்க  மனப்பான்மையில்  பெரும்பாலோருக்கு  எழுத்தறிவே  செல்ல  இயலாத  நிலை  இருந்ததுஎல்லோரும்  படித்து  முன்னுக்கு  வந்துவிட்டால், சிலருடைய  ஆதிக்கத்துக்கு  முற்றுப்  புள்ளி  வந்துவிடும் என்ற நிலையில்  ஒடுக்கி  வைக்கப்பட்ட  மக்கள்  தொகை மிகவும்  அதிகமாக  இருந்தது. ஆயிரங்காரணங்களை
கூறி  அடிமைப் படுத்தப்பட்டிருந்தனர் .காரணங்களை நான் விவரிக்க  விரும்பவில்லைஆனால் எல்லோரும்  படிப்பறிவு  பெற்றால் சுயமாக  சிந்திக்க  துவங்குவார்கள்  என்ற பயம்  ஆண்டைகளிடம்  இருந்ததுஅடிமைத்தளை  இறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அஸ்திவாரம் பலப்பட,
அவர்களது  அலுவலகப்  பணிகளுக்கு  குமாஸ்தாக்கள்  தேவைப்பட மெகாலே  கல்வி  நடைமுறைப்  படுத்தப்பட்டது. இதெல்லாம் சரித்திரம்.

             
நாம் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது சிந்திக்கத் தூண்டும்  கல்வி மறுக்கப் பட்டதே. கல்வி கற்றவர்கள் சிந்திக்கத் துவங்கி நாடு அடிமைத் தளையிலிருந்து விடுபட்டதும் வரலாறு.

             
நம்மை  நாமே  ஆளும்போது ,நாம் எல்லோரும்  சமம்  எனும்போது , வாய்ப்புகளும்  சமமாக  இருக்க வேண்டும். வாய்ப்பு  வேண்டிப்  போராட  கல்வி அறிவு  அவசியம்அதுவும் பரவலான  நூறு   சதவீதக்   கல்வி அவசியம்.  நாம் படித்தவற்றை
பகுத்தறிந்து   உணர்ந்தால் அறிவுள்ளவர்களாக  ஆவோம்படித்தவர்கள்  எல்லோரும்    அறிவுள்ளவர்கள்  அல்ல. படிக்காதவர்கள்  அனைவரும்  அறிவில்லாதவர்களும் அல்ல.
ஆனால் ஒருவனை  அறிவாளியாகக படிப்பறிவு மிகவும் உதவும்.

             
எந்த ஒரு உந்து   சக்தியும் இல்லாமல்  படித்துயர்ந்து  வந்தவர்களும்  ஏராளம்  உண்டுநகரங்களில்  வசிக்கும்  நம் கண் முன்னே படுவது  கான்வென்ட்  படிப்பும்  கூடவே வரும் அதிக  செலவினங்களும்தான் .இல்லாதவன் தன  தலைமுறைக்குப்  பிறகு  தன பிள்ளைகள்  நன்றாக   இருக்கவேண்டும்  என்று பாடுபடுவதையும்  பார்க்கிறோம்இயற்கைதானேஆனால் கான்வென்ட் படிப்பும் ஆங்கிலப்  படிப்பும்தான்  மேலானது  என்ற ஒரு மாயத் தோற்றத்துக்கு  அடிமையாகும்போதுதான்  சந்திக்கும்  இன்னல்கள்  ஏராளம்

              
எழுத்தறிவும் கல்வியறிவும்   பரவலாக்கப்பட்டால் சுயமாக சிந்திக்கும்   திறனை அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள்முனிசிபல், கார்ப்பரேஷன்  பள்ளிகளில்  படித்துப்  பெயர் வாங்கும்  சிறார்  சிறுமிகளும்  இருக்கிறார்கள்.,என்பது நமக்குத்  தெரிந்ததேநாம் எந்த   ஒரு விஷயத்தையும்  விவாதிக்கும்போது  மிடில்  கிளாஸ்  மேன்டாலிடியைத்தான் அளவு கோலாகப்  பயன்படுத்துகிறோம்ஏழை பாழைகளின்  கருத்தைக்  கேட்கவோ  எடுத்துச் சொல்லவோ  நம்மில் பலரும்  முன்  வருவதில்லை   இந்நிலையில் நூறு சதவீத எழுத்தறிவும்  படிப்பறிவும்  இருநதால்  அவர்களை  அவர்களே  மேம்படுத்திக்  கொள்வார்கள்

               . 
பசியாற  மதிய  உணவுசீருடை, மற்றும்  சென்றுவர  இலவச  சைக்கிள்  இவை எல்லாம்  கல்வியறிவு  பரவலாகச்  செய்யும்  உந்து  சக்திகள்தானே. மேலும்   தற்போது
கல்வி உரிமைச்  சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் . இதன்படி  எல்லாப்  பள்ளிகளிலும் ( தனியார் உட்பட ) 25% இடங்கள்  ஏழைகளுக்கு  ஒதுக்கப்படவேண்டும் .
கல்வி போதிக்கும்  முறையில் ஏற்ற  தாழ்வு  குறைந்து  சம வாய்ப்பு   கிடைக்கும்  ஒரு திட்டம் .ஆனால் இதை  நடைமுறைப்படுத்த  ஏகப்பட்ட  எதிர்ப்புகள்இந்த எதிர்ப்புகளுக்கு  எதிராக  குரல்  கொடுப்போம்.

            
சாதாரணமாகவே  இந்தியக்  குடிமகன்  லேசுப்பட்டவன்   அல்ல. அவனை  இன்னும் சக்தி   உள்ளவன் ஆக்க பரவலான கல்வியறிவு   அடிப்படை  அவசியம்.

            
கல்வியை  வியாபாரமாக்கும் கும்பலுக்கு  நாம்தான்   துணை போகிறோம். அரசு  பள்ளிகளை  ஆதரித்து ,அதன்  தரம்  உயர  நாம் ஏன்  பாடுபடக்கூடாது
இன்று கல்வி ஒருவனின் பொருளாதரத்தை ஆட்டிபடைக்க கூடியதாக இருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம் இல்லை. ஆனால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க யாருக்கும் துணிவும் இல்லை. சமச்சீர் கல்வி எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு இங்கு இலவசக் கல்வியும் அவசியம். கல்வியை இலவசம் ஆக்க முடியுமா என்பது அனைவருக்கும் எழக்கூடிய கேள்வியே. எல்லாம் சாத்தியாமே, சுலபம் இல்லை எனினும். தனியார் பள்ளிகளை நம்பாமால் அரசுப் பள்ளிகளை நம்பி தங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டும். ). ஆனால் அதற்கு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.முந்தைய நூற்றாண்டில் மக்களுக்காக தலைவன் போராடுவான். ஆனால் இப்பொழுதோ ஒவ்வொருவரும் தலைவர்களாகஇன்று கல்வி ஒருவனின் பொருளாதரத்தை ஆட்டிபடைக்க கூடியதாக இருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம் இல்லை. ஆனால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க யாருக்கும் துணிவும் இல்லை. சமச்சீர் கல்வி எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு இங்கு இலவசக் கல்வியும் அவசியம். கல்வியை இலவசம் ஆக்க முடியுமா என்பது அனைவருக்கும் எழக்கூடிய கேள்வியே. எல்லாம் சாத்தியாமே, சுலபம் இல்லை எனினும். தனியார் பள்ளிகளை நம்பாமால் அரசுப் பள்ளிகளை நம்பி தங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டும். (தனியார் பள்ளியில் படித்துக்கொண்டே டியூஷன் போகும் அவலம் வேறு நம் ஊரில் உண்டு). ஆனால் அதற்கு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.முந்தைய நூற்றாண்டில் மக்களுக்காக தலைவன் போராடுவான். ஒவ்வொருவரும் தலைவர்களாக  ஆனால் இப்பொழுதோ ஒவ்வொருவரும் தலைவர்களாக தங்களுக்கு தானே போராட வேண்டியுள்ளது!




           

 


9 comments:

  1. //நூற்றாண்டுகாலமாக இன்னாருக்குத்தான் படிப்பு, இன்னாருக்கு அது கூடாது, என்ற ஆதிக்க மனப்பான்மையில் பெரும்பாலோருக்கு எழுத்தறிவே செல்ல இயலாத நிலை இருந்தது.// - உங்களுக்கு நல்ல கற்பனை வளம். பல புத்தகங்களைப் படித்து, வரலாறுகளைப் படித்து இருப்பவர்கள், இந்த மாதிரி பொத்தாம் பொதுவாகச் சிந்திக்க மாட்டார்கள்.Harsh ஆக எழுதியிருந்தாலும் இதுதான் உண்மை.

    உ.வே.சா அவர்கள் எழுதிய தன் வரலாறு புத்தகத்தைப் படித்து, சென்ற நூற்றாண்டில் அதாவது 18ம் நூற்றாண்டில் கல்வியறிவு எப்படி இருந்தது என்று புரிந்துகொள்ளுங்கள். கல்வி அறிவு, யாருக்கு ஆர்வம் இருந்ததோ அவர்களிடம் மாத்திரம் இருந்தது. அதை யாசித்துச் சென்றவர்களின் தராதரம் அறிந்து (ஆர்வத்தின் அளவு, உழைப்பு) அவர்களுக்கு கல்வியறிவு ஈந்தனர். சாமிநாத ஐயர் படித்தது, மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பாண்டித்துரை தேவர் போன்றவர்களிடமிருந்து. கோனார் தமிழ் உரை போட்டவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா (உங்கள் காலம்தான்). தேவாரம் திருவாசகம்...., திவ்யப்ப்ரபந்தங்கள் பாடியவர்களில் எத்தனை பேர் எந்த எந்த ஜாதியில் பிறந்தவர்கள் என்பது தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. ஜி எம் பி ஸார் இது மாதிரியான பதில்களுக்கு நேரடியான பதில் சொல்ல மாட்டார்.  முன்னரும் (இதெல்லாம் மீள் பதிவுதானே) சொல்லி இருக்க மாட்டார்!

      Delete
  2. //அரசு பள்ளிகளை ஆதரித்து ,அதன் தரம் உயர நாம் ஏன் பாடுபடக்கூடாது. // - இது நல்லதுதான். ஆனால் நாம் எல்லோரும், அடுத்தவர்கள் இதனைச் செய்யணும் என்று எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  3. மருத்துவப் படிப்புக்கு செத்துப் போன மொழி தேவை என்ற சீரழிவு காவமும் இருந்தது... சனாதன சாக்கடை தருமம்...!

    ReplyDelete
  4. கல்வியைப் பற்றிய கட்டுரை நன்றே. ஆனால் கட்டுரை உங்களுடைய பாணியில் இருந்து சற்று வேறுபடுகிறது. 

    ஆங்கிலேயர் மெக்காலே கல்வி திட்டம் மூலம் குமாஸ்தாக்களை உருவாக்கினாலும் கல்வி வாய்ப்பை எல்லோருக்கும் கிடைக்கச் செய்தனர். 
    தனியார் மயமாக்கப்பட்ட கல்வி சந்தைப் பொருளாகி விட்டதும் உண்மை. 

    இன்றைய கல்வித் திட்டத்தில் பட்டயம் அல்லது சான்றிதழ் வாங்கினாலும் படிப்பு தரமற்றதாக அமைவது தெரிகிறது. கல்வியின் முழுமை அதை பயன்படுத்துவதில் இருக்கிறது என்று கற்றோர் உணரும் வரை இந்நிலை தொடரும்.

    சங்கை ஊதி விட்டீர்கள். காதில் விழுந்தால் சரி. 
    Jayakumar

    ReplyDelete
  5. கல்வியை இலவசமாக்கினால் பொதுமக்களே மதிக்க மாட்டார்கள்.  அவர்களுக்கு காசு அதிகம் கொடுத்த்து படித்த்தால்தான் மதிப்பு!

    ReplyDelete
  6. அனைவருக்கும் மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. இன்றைய கல்வி நிலை பற்றிநல்ல அலசல் . இதற்கு முடிவு உண்டா என்றால் ??
    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் .

    ReplyDelete