எண்ணங்கள் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணங்கள் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 அக்டோபர், 2018

மாயை



                                                                              மாயை
                                                                             --------------
உலகே மாயம் வாழ்வே மாயம் 
நிலை ஏது நாம் காணும் சுகமே மாயம்
 
அலையும் நீர் மேவும் குமிழாதல் போல
 
ஆவதும் பொய்யாவதெல்லாம்
 
ஆசையினாலே
 
அரச போகமும் வைபோகமும்
 
தன்னாலே அழியும்
 
நாம் காணும் சுகமே மாயம்
 
உலகே மாயம்…
 
உறவும் ஊராரும் உற்றார் பெற்றாரும்
 
ஓடிடுவார் கூட வரார் நாம் செல்லும்
 
நேரம்
 
மறை நூல் ஓதுவதும் ஆகும் இதே சாரம்
 
மனதில் நாம் காணும் சுகமே மாயம்
 
உலகே மாயம் வாழ்வே மாயம்...
மாயை என்பது தண்ணீரில்
கிடையாக நிறுத்தி வைக்கப்படும் ஒரு கோலைப் போன்றது. என்ன தான் கோல் வளையவில்லை என்று நம் common sense சொன்னாலும் ஒவ்வொரு முறையும் நமக்கு கோல் வளைந்தே தெரிகிறது. அப்படிப்பட்டது தான் மாயை. மாயை என்று தெரிந்து கொண்டே
எல்லாவற்றையும் செய்ய வேண்டி இருக்கிறது இவ்வுலகில். மாயை என்று நாம் சொல்லும் போது
நம்மை அறியாமலேயே 'நிரந்தரம்' என்ற ஒன்றை பின்புலத்தில் கொண்டு வந்து விடுகிறோம்.

இது மாயை என்றால் மாயை against what ? ஏதோ ஒன்று பின்புலத்தில் இருக்க வேண்டும். நிஜம்
மட்டுமே கனவு காண முடியும். கனவு இன்னொரு கனவைக் காண முடியாது. எனவே மாயையின்
பின்புலத்தில் உள்ள நிஜம் என்ன என்று அறியும் முயற்சியே ஞானத்தின் தேடல் என்று நினைக்கிறேன்.மாயையை வெறுக்க வேண்டியது இல்லை.வெறுமனே விழித்துக் கொண்டால் கனவு கலைந்து விடும்.கண்ணாடியை மறைக்கும் தூசை வெறுமனே துடைத்தால் போதும். கண்ணாடியையே உடைக்க வேண்டியது இல்லை அல்லவா?
சில எண்ணங்களின்   விளைவே பதிவு எதை யெல்லாமோ நிஜம்  என்று நம்புகிறோம்   பல நேரங்களில் நிஜமே அப்ஸ்ட்ராக்ட் ஆக இருக்கிறது அல்லது மாயைபோல் இருக்கிறது
மாயக் கண்ணன் வாய்

 பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்
சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதை
மண்ணுடன் விண்ணும் நீரும் நிலமும் அண்ட அகிலமும்
கண்டே மயங்கியது மாயையின் மயக்கத்தால் அன்றோ.

மாயை தயை கொண்டு ஆயர் குலச் சிறார்களையும்
கன்றுகளையும் காணாமல் போக்கினான் நான்முகன் பிரமன்
பரம்பொருளே இடைச் சிறுவராய் கன்றுகளாய் உருவெடுத்து
எங்கும் நீக்கமற நிறைந்து நின்றதும் மாயையின் செயலன்றோ.

முன்னவன் தன் மாயையை விலக்க, மறைத்த தனைத்தும்
மறையாமல் நிற்க , பிரமனே நாரணனின் கணக்கிலா
உருவம் கண்டு அவனும் மாயையில் மூழ்கி
விளக்கம் பெற்றதும் மாயையின் செயலன்றோ
செருக்களத்தில் பார்த்தனுக்குச் சாரதியாய் சக்கரம்
கொண்டு ஆதவனை மறைத்து பூவுலகினை இருட்டாக்க
தலை தப்பியது என எண்ணி ஜயத்ரதன் தலை காட்ட
சக்கரம் மீட்டு இருள் விலக்கி அவன் தலை கொய்ய
கண்ணன் நிகழ்த்தியதும் மாயையின் செயலன்றோ/.

இல்லாதது இருப்பதுபோல் தோன்றுவதும் இருப்பது
இல்லாதது எனத் தோன்றுவதும் மாயையின்
விளைவு எனப் பொருள் புரிதல் தவறாமோ.
உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானோ
நிரந்தரம் என்பது ஏதுமில்லை,நிகழ்வுகளில் நிச்சயமில்லை.
கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை
மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்

மனத்தின்  மயக்கமே  மாயை என்றறிவோம்

உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்

தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்

பேதம் பாராமல் பகிர்ந்துண்டு  வாழ்தல்  பெருமை தரும் 

ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்

 ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்
உணர்ந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி நிச்சயம்

சில எண்ணங்களின்   விளைவே பதிவு எதை யெல்லாமோ நிஜம்  என்று நம்புகிறோம்   பல நேரங்களில் நிஜமே அப்ஸ்ட்ராக்ட் ஆக இருக்கிறது அல்லது மாயைபோல் இருக்கிறது

(சில எண்ணங்கள்   வாசிப்ப்வர்கள் அனுமானத்துக்காக  சொல்லாமல் விட்டது புரிந்து கொள்ளப்படும் என்னும் நம்பிக்கையில்  ).






சனி, 21 அக்டோபர், 2017

எண்ணக் கலவைகள்


                                        எண்ணக் கலவைகள்
                                       ------------------------------------

  எனக்கு என்னென்னவோ எண்ணங்கள் எழுத்தில் வடிக்க இயலுமாதெரியவில்லை  முதலில் வலையில் பதிவிடும்  எழுத்தாளர்கள் அனைவரையும்  தெரிந்து கொள்ள விரும்புகிறேன்  ஆனால் பலரும் அப்படித் தெரிந்து கொள்வதை விரும்புவதில்லை  காரணம்  தெரியவோ கேட்கவோ நான் யார் ? சில மாதங்களுக்குமுன்  ஒரு மின் அஞ்சல் வந்தது  இங்கி லாந்திலிருந்து ஒரு வாசகி முதலில் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை  என் பதிவுகளை கூகிள் பிளசில் வாசிப்பவராம்  விவரம் தெரிய புகைப்படம் கேட்டு எழுதி இருந்தேன்  அவர்கள் கடிதத்தில் இருந்த ஒரு வாசகம்  என்னை புகழ்ந்திருந்தது /  You are broad minded open to discussion without prejudice that's what I feel about you basically I m a micer to appreciate anyone so u can take my complement as it is எதுவும் கூட்டிச் சொல்லல :)thanks for your reply and blessings I m pleased to read your mail./ முகஸ்துதிக்கு மயங்காதார் உண்டோ  அவர்கள் ஜூலை மாதம் இந்தியா வருவதாகவும்  முடிந்தால் என்னை சந்திப்பதாகவும்   எழுதி இருந்தார்கள் தீபா கபிஷ் என்பது அவர் பெயர்  அவர்களது குழந்தையின் புகைப்படம்  மட்டும் சேமித்து வைத்திருக்கிறேன்  நாகர் கோவிலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது அவர்களுக்கு எனக்கு இங்கிலாந்தில் தெரிந்த வாசகிகள் அதிரா ஏஞ்சலின்  பெயர்களைத் தெரிவித்து  அவர்கள் எழுத்தை வாசிப்பீர்களா  என்று கேட்டிருந்தேன்   வாசித்ததுண்டு என்று பதில் வந்தது  இதற்கு மேல் அவர்களைப் பற்றி எழுதினால் ரசிப்பார்களோ தெரியவில்லை


இங்கிலாந்து வாசகி  தீபாகபிஷின்   குழந்தை  ---அதிரா 
                                ==================================
பல நண்பர்கள் ஏனோ தங்கள் முகம் காட்ட விரும்புவதில்லை  சில பதிவுகளைக் காண்ட்ரா வர்ஷியலாக எழுதும்  நானே என்னைப் பற்றிய எல்லாத்தகவல்களையும் தெரிவிக்கிறேன் ஆனால் நான் பிரபலமாகவில்லை போல் இருக்கிறது மாற்றுக் கருத்துகளைச் சொல்லும் பலரையும் போட்டுத்தள்ளும் கலாச்சாரம்  மிகுந்திருக்கிறதே  அண்ணல் காந்தியையே  ஒரு அப்பழுக்கற்ற அகிம்சாவாதியையே கொன்றுவிட்டார்கள்  அண்மையில் பெங்களூரில் கௌரி லங்கேஷ் எனும் ஒரு முற்போக்கு சிந்தனை வாதியைக் கொன்று விட்டார்கள் பேசுவோம்  கருத்துகளைப் பரிமாறுவோம்  என்பதெல்லாம் இல்லை  ஒழித்துக் கட்டிவிடுகிறார்கள்  இப்போது காந்தியை சுட்டது ஏதோ நான்காவது குண்டாயிருக்கலாம்  என்று சந்தேகமெழுப்பி  அந்த வழக்கை மீண்டும்  நடத்த ஒரு குரல் எழும்பி இருக்கிறது சரித்திர நிகழ்வுகளையே மாற்ற ஒரு கூட்டம் குறியாயிருக்கிறது தாஜ்மகால் இந்தியாவின்  பெருமைக்கு இழுக்கு தேடித்தருகிறது என்று ஒரு பி ஜே பி  எம் பி குரல் கொடுத்திருக்கிறார்  அதற்கு டூரிஸ்ட் விளம்பரம்  இல்லை என்று யாரோ எழுதி இருந்ததற்கு வரிந்து கட்டிக் கொண்டு சிலர் அது  தவறான புரிதல் என்றெல்லாம் எழுதி இருந்தார்கள் நாம் எப்போதும்  பழங்கதைகளையும்     இதிகாசங்களையும்   உண்மை என்று நம்பிஅவற்றை சரித்திர நிகழ்வுகள் என்றே நம்பிக்கொண்டிருக்கிறோம் சரித்திர நிகழ்வுகளுக்கும் வரலாறுகளுக்கும் சான்றுகள் அவசியம்வெறும் கதைகளும்  நம்பிக்கைகளும் போதாது 
                                =======================
 திருபெருமாள்முருகன்  சில வழக்கங்ளை வைத்துப்புனைந்திருந்த கதைக்கு  எதிர்ப்பு வந்திருந்தது  நானும் ஒருசிறு கதை எழுதி இருந்தேன்  அக்காலக் கேரள வழக்கங்களைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட கதை  அது பதிவில் வந்தபோது எனக்கு நானும்  சில feathers களை சீண்டி விட்டேனோ என்னும் எண்ணம் வந்தது நான்தான் பிரபலமடைய வில்லையே யாரும் கண்டு கொள்ளாமல் போய்விட்டது அந்தக் கதை
                              =============================

நிரூபிக்கபடவில்லை என்னும் காரணத்தால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர் தல்வார் தம்பதிகள்  அவர்களதுமகள்  பதினாலு வயது ஆருஷியும்  வீட்டு வேலையாளும்  2008 ல் கொலை செய்யப்பட்டிருந்தனர்  அந்தக் காலத்தில் செய்தி ஊடகங்களே வழக்கினை திசை திருப்பினவோ என்று சந்தேகம்  எழுகிறது ஒரு வேளை செய்யாத குற்றத்துக்கு நான்காண்டுகள் சிறையில்  வாடிய தல்வார்  தம்பதிகளின்  மன உளைச்சல்களுக்கு  இன்னல்களுக்கும் யார் காம்பென்சேட் செய்வது அதேபோல் சுநந்தாவின்  கொலையையும் இன்னும்  தெளிவு இல்லாத நிலையில்  சில ஊடகங்கள் முன்னாள் மந்திரியும்  சுநந்தாவின்  கணவனுமான காங்கிரஸ்  தலைவருமான சஷி   தரூருக்கு எதிராக  வரிந்து கட்டிக் கொண்டிருப்பது  தெரிகிறதுஇன்றைக்கு  சுநந்தா தங்கி இருந்த அறையை  di seal  வைக்க உத்தரவுவந்திருக்கிறது  நீதித் துறையின் மெத்தனமா காவல் துறையின்   மெத்தனமா இல்லை அரசுக்கு அடங்கிப் போகும் இவர்கள் குறையா என்ன வென்றுதெரியவிலை 
                             =================================
இன்னொன்றும்  எண்ணத்துக்கு வருகிறது சுற்றுச் சூழல் பாதிப்படைவதால் தலை நகரிலும்  இன்னும்  சில மாநிலங்களிலும்  தீபாவளிக்கு  பட்டாசு விற்பனை செய்யக் கூடாது என்னும் அரசாணையை  அப்படியே ஏற்று கொண்டிருக்கும்  நீதித்துறையும்  கவனத்தை  ஈர்க்கிறது சுற்று ச்சுழல் பாதிப்புக்கு வருடத்தில் ஒரு நாள் வரும்  தீபாவளி அன்று வெடிக்கப்படும்  வெடிகளும் வாண வேடிக்கையும்  தான்  காரணமா ஒரு நாள் தடையால் மாசுமருவற்ற சூழல் வருமா எதையோ நினைத்து  உரலை இடிப்பது போல் இருக்கிறதேஇது எத்தனை பேரின் வருவாய்க்கு முட்டுக்கட்டை என்பது தெரியவில்லையா கங்கையும்  யமுனையும்  மாசால் மங்கிக் கொண்டுஇருப்பதற்கு ஏதும் செய்யமுடியாதவர்கள்  தங்களதிகார பலத்தைக் காட்டும்   சந்தர்ப்பமா இது
                                ==========================
பெங்களூருவில் விதான சௌதா கட்டி அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன / அதற்காக ஒரு விழா எடுக்கிறார்களாம்  எப்படி தெரியுமா அங்கிருக்கும் சட்டசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும்  ஒரு தங்க பிஸ்கட் கொடுக்கப் போகிறார்கள் அங்கு பணியில் இருக்கும்  சுமர் 5000 பேருக்கு வெள்ளிதட்டுகளும் வழங்க ஏற்பாடாம்(அந்த செய்தி பரிசீலிக்கப்பட வேண்டியதேபொதுமக்களின்  எதிர்ப்புக் குரலால்   அரசின்  எண்ணங்களில் மாற்றம் வரும் என்றே தெரிகிறது) நானும் தான்  விதான சௌதா கட்டுமானப்பணியில் சம்பளம்கிடைக்காமல் ஒரு மாதம் உழைத்திருக்கிறேன் பார்க்க பூர்வஜென்ம கடன்http://gmbat1649.blogspot.com/2011/02/blog-post_09.html 
                                ============================
 சட்டசபைகளுக்கும்  பாராளு மன்றத்துக்கும் ஒரே சமயம்  தேர்தல் நடத்த வேண்டும்  என்பது மோடி அரசின் விருப்பம்.ஆனால் இப்போது ஹிமாச்சல் பிரதேசத்துக்கும்   குஜராத்துக்கும்  ஒரே  நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய சந்தர்ப்பம்வந்தும் முதலில் ஹிமாச்சல் பிரதேசத்துக்கு   மட்டும்  தேர்தலாம்  குஜராத் தேர்தல் நாள இன்னும் அறிவிக்கப்படவில்லை மோடி அரசுக்கு அதில் விருப்பமில்லாதது போல் தெரிகிறது தற்போது மோடி குஜராத்துக்கு பலசலுகைகளை அறிவிக்கும்  நிலையில் இருக்கிறார்  தேர்தல் அறிவித்தால் சலுகைகளை அறிவிப்பது முடியாது கோட் ஆஃப் காண்டக்ட் அமலுக்கு வரும் தேர்தல் கமிஷனும்  அரசுக்கு அடிபணிவதுபோல் இருக்கிறது எனக்கு ஒன்று புரிவதில்லை அரசுக்கு நீதித்துறை தேர்தல் ஆணையம்  வருவாய்த்துறை இவைஎல்லாம்  கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்  அதிகாரம் உள்ளதா. இல்லை இதில் இருப்போர் தங்களதிகாரத்தை நிலை நாட்டுவதில் விருப்பமில்லாதவர்களா
                            ==============================
  இப்போது சில ஊடகங்களில் வரும்  விளம்பரங்கள் பற்றியும் சொல்லாமல் இருக்க முடியவில்லை ஐயாயிரம்  ஆண்டு பழமையான என்று சகட்டு மேனிக்குக் கதை விடுகிறார்கள்சில நூறாண்டுகளுக்கு முன்  நிகழ்ந்தவைகளையே சரியாக இணைக்க முடியாமல் இருக்கிறோம்  ஆயுர் வேத மருந்துகள் நல்லனவாகவே இருக்கலாம்  அதற்காக  இப்படியா பணம்  பண்ணவும்  ஒரு நியதி வேண்டும் அல்லவா
                            ==================================  
  எண்ணங்களைப் பகிரவே எழுதுகிறோம் வலையில் இது  ஓரளவுக்குத்தான் செல்கிறது பத்திரிக்கைக்கு  எழுதினால் ரீச் அதிகமாக இருக்கும் தான்  ஆனால் சூடு கண்டபூனை போல் இருக்கிறேன் 2011ல் ஹிந்து பத்திரிக்கைக்கு ஒருகடிதம்  எழுதி இருந்தேன்  பார்க்க  http://gmbat1649.blogspot.com/2011/08/blog-post_08.html எழுதிய கடிதம் தணிக்கை செய்யப்பட்டு இருந்தது  அப்போது எனக்குத் தோன்றியதையும் எழுதி இருந்தேன்  நாட்டு நடப்புகளை உணர்வில் வடித்து
பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
பிரசுரம் செய்தனர். படித்ததும்
சிந்தையில் தோன்றியது சிறகு
திருத்தப்பட்ட கிளி ஒன்று.
நல்ல வேளை இக்கிளிக்கு
உயிர் இன்னும் இருந்தது.
மீண்டும்  கூறுகிறேன்   என்னென்னவோ எண்ணங்கள் எழுத்தில் வடிக்கக் காத்திருக்கிறது பார்ப்போம் 
                           ===========================

-
      
                          

.    

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

இந்திய வாழ்வியல்


                                           இந்திய வாழ்வியல்
                                          ---------------------------------

எனக்கு ஒன்று தெளிவாகப் புரிகிறது  என் ஆரம்பப் பதிவுகளில் இருந்த வீச்சு இப்போதுஇல்லை. பழைய பதிவுகளில் எழுதி இருந்த விஷயங்கள் மனதில் தோன்றிய  வலியிலிருந்து எழுந்தவை ஒரு பதிவு எழுத நிறையவே மெனக்கெடுவேன் அவற்றுக்கு வந்துகொண்டிருந்த பின்னூட்டங்களும் பதிவின்  வீச்சை தெரிவித்தது  அப்படி இருக்க நான்  ஏன் இப்போதெல்லாம் அதுமாதிரி எழுத முடிவதில்லை என்னதான் எழுதினாலும்  என்னால் எந்த ஒரு மன மாற்றத்தையும்  வாசகர்களிடம் கொண்டு வர முடிவதில்லை ஒரு வேளைப் பலரும்  முகநூல் பக்கம்  போக சீரியஸ் விஷயங்களுக்கு மதிப்பில்லாததாலும்  முக நூலில் எழுத மெனக்கெட வேண்டாமென்பதாலும்  இருக்கலாம் ஆனால் என்னால் ஏனோ தானோ என்று எழுத முடியவில்லை எந்தஒரு விஷயமும் என்னில் ஒரு சலனத்தை ஏற்படுத்தினால் மட்டுமே என்னால் எழுத முடிகிறது  அண்மையில் பதிவுகள் எழுத மிகவும் சிரமப்படுகிறேன்  மொக்கையாகவோ என்னைப் பற்றியோ எழுதி சமாளிக்கிறேன்  இது ஒரு பழைய பதிவின் சாராம்சம்  மீள் பதிவு என்று சொல்லப் பிரியப்படவில்லை.  சிலவிஷயங்கள் மீண்டும்  மீண்டும் சொல்வதனால் மதிப்பிழக்குமா.  என்னை பற்றி நான் ஆராய்வது போலவே இந்தசமூகம் பற்றியும் எண்ணுகிறென்  இந்த சமூகத்தை திருத்த என்னால் முடியாது ஆனால் அடிமேல் அடி வைத்தால் எங்காவது ஒரு சிறிய மாற்றமாவதுவராதா என்னும்  நப்பாசை எறும்பூரக் கல்லும்  தேயுமாமே    

 
லஞ்சம் ,ஊழல் , கையூட்டு, என்று நாளொரு வண்ணம் ,பொழுதொருகதையுமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன இந்த அளவுக்குப் பேசப்படும்  விஷயத்துக்கு அடிப்படைக் காரணம் குறித்து சிந்தித்த போது  சில எண்ணங்கள் தோன்றின அதுவே பதிவாகிறது  வழக்கம் போல் என்  கருத்துகள் பலராலும் ஏற்கப்படாமல் போகலாம் இருந்தாலும் அது பற்றிக் கவலை இல்லை. எதிர்மறைக் கருத்துகள் ஒரு ஆரோக்கிய சிந்தனைக்கு வழிவகுக்கும்   என்னும்  நம்பிக்கையே இதை எழுதச் செய்கிறது

 இந்தியாவில் லஞ்சம் ,ஊழல் , கையூட்டு, எல்லாமே நம் கலாச்சாரத்தின்  பரிணாமமே. நாம் லஞ்சத்தையும்   ஊழலையும் சர்வ சாதாரணமாக  அணுகுகிறோம்   எந்த ஒரு வேலையும்  இலவசமாக வராதுஎன்றும்  நினைக்கிறோம்அரசு ஊழியர்கள் செய்ய வேண்டிய அவர்கள் வேலைகளைச் செய்யவும்  லஞ்சம் கொடுக்கிறோம்   இல்லையென்றால் அதற்காக அலைய வேண்டும், இந்த அலைச்சலைத் தவிர்க்கக் கொடுக்கும்  பணம் லஞ்சமல்ல என்றும் சப்பைகட்டுகிறோம்   எந்த இனமும்  ஊழல் இனமாக இருக்க முடியாது ஆனால் கலாச்சாரமே ஊழலுக்கு வித்தாக இருக்கமுடியுமாஇருக்கும் போல்தான்   தோன்றுகிறது  

.            முதலில் இந்தியாவில் மதமே பேரம் பேசுதலை ஒப்புக்
கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. நாம், இந்தியர்கள்
கடவுளிடமே பேரம் பேசி ( TRANSACT  BUSINESS.) கடவுளுக்குப்
பணம் கொடுக்கிறோம். அதற்குப் பலனை எதிர்பார்க்கிறோம்.
இந்த முறையில் தகுதி இல்லாதவரும் பலன் பெருவதை
சாதாரணமாக நினைக்கிறோம். பணம் படைத்தவன் கடவுளுக்கு
பணமும், பொன்னும் மணியும் வாரிக்கொடுக்கிறான்.பலனை
எதிர்பார்க்காமலா.?இந்தக் காரியம் கோயில் சுவர்களுக்கு
வெளியில் நடந்தால் லஞ்சம் என்ற பெயரில்தானே அழைக்கப்
படுகிறது. கடவுளின் உண்டியலில் வாரிக் கொட்டுபவன் பசித்
திருக்கும் தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதை, வீண் என்றும் பலன் இல்லாதது என்றும் எண்ணுகிறான் 
        2009/-ல் ஒரு செய்தி பத்திரிகைகளில் இரண்டு மூன்று  நாட்கள் வந்து கொண்டிருந்தது.கர்நாடக மந்திரி ஒருவர்திருப்பதி ஏழுமலையானுக்கு ரூபாய் 45 கோடி செலவில் தங்கத்தில் வைரத்தால் இழைக்கப்பட்ட கிரீடம் ஒன்று  சாத்தினார் சிக்கினாலும் மீண்டு விடுவோம்  என்னும்  நம்பிக்கை போல் இருக்கிறது கடவுளுக்கே கையூட்டு கொடுத்தவர் தான் செய்த முறை கேடுகளில்  இருந்து தப்ப என்னதான் செய்ய மாட்டார்
கடவுளே அருளைத்தர, பணம் பெற்றுக்கொள்ளும்போது, சாதா
மனிதர்கள் காரியங்களை நடத்திக் கொடுக்க, லஞ்சம் வாங்குவது, 
தவறில்லை என்ற மனோபாவம் வளர்ந்து விட்டது. லஞ்சம் 
வாங்குவதோ கொடுப்பதோ தவறில்லை என்றும், அது அவமானப்
பட வேண்டிய விஷயம் அல்ல என்றும் சாதாரணமாகக் கருதப் 
படுகிறது. Ther is no stigma attached to being corrupt. இது வாழ்வின் இன்றி 
யமையாத அம்சம் என்ற எண்ணம் அநேகமாக எல்லோருக்கும் இருக்கிறது. Corruption has become a way of life. இல்லையென்றால் ஊழல் 
குற்றங்களுக்குப் பெயர் போய், பல குற்றச்சாட்டுகள்  நீதி 
மன்றங்களில் நிலுவையில் இருந்தும், எதுவுமே நடக்காதது
போலும், நாட்டையே ரட்சிக்க  வந்தவர் போலும்  வேடமிடும் 
ஒருவர், மக்களின் பெரு மதிப்போடு ஒரு மாநிலத்துக்கு முதல்வர் 
ஆக முடியுமா.? 

        இந்தக் கலாச்சாரக்கேடு நம் இந்திய சரித்திரத்தை புரட்டினாலேபுரியும்  நகரங்களும் நாடும் மாற்றானுக்கு அடிமைப்பட , தேவைப்பட்டதெல்லாம் கையூட்டுதான்  கோட்டையின் கதவுகள் திறந்து விடப்படும்  சேனாதிபதிகள் சரணடைவார்கள் இந்தியாவில் நடந்தபோர்களெல்லாம் ஐரோப்பா மற்றும் பழைய கிரேக்கப் போர்களோடு ஒப்பிடும்போது எப்படிப் பிசுபிசுத்ததுஎன்றுபுரியும் துருக்கியின் நாதிர்ஷாவுடன் ஆன போரின் உக்கிரம்  கடைசி மனிதன் இருக்கும் வரை நடந்ததாக சரித்திரம் கூறுகிறது இந்தியாவில் ஆயிரக்கணக்கான போர் வீரர் இருந்தாலும் அவர்களைவெல்ல  சில நூறு பேர்களே போதுமானதாக இருந்தது ஏன்  என்றால் இந்திய படைகளில் கருப்பு ஆடுகள் லஞ்ச லாவண்யதுக்கு மயங்கி மாற்றானின்  வெற்றிக்கு வழிவகுத்தனர் இந்திய சரித்திரப்புகழ் பெற்ற ப்ளாசி யுத்தம் , ராபர்ட் க்ளைவ், மீர் ஜாஃபரை தன் கைக்குள்போட்டுக் கொண்டதால் வெறும் 3000வீரர்களை வைத்துக் கொண்டு வங்காளத்தை வளைத்துப்போட்டுப் பிசுபிசுத்துப் போனது
1687-ல் கோல்கொண்டா கோட்டை ரகசியப்பின் வாசல்  திறக்கப்பட்டதால் வீழ்ந்தது முகலாயர்கள் மராத்தியரையும் ராஜ புத்திரர்களையும்  வெறும்வஞ்சத்தாலும் லஞ்சத்தாலும்   வென்ற கதைகள் நிறைய உண்டு இந்தப்  பேரக் கலாச்சாரங்கள் ஏன்  கேள்வி கேட்கப்படாமலேயே  தழைத்து வருகிறது
இந்தியர்கள் அனைவரும்  சமம் என்று எண்ணுவதில்லை எல்லோரும் முன்னேற முடியும்  என்று நம்புவதில்லை ஏன் என்றால் வாழையடி வாழையாக  அவர்கள் அப்படிப் போதிக்கப்படவில்லை  இதனாலேயே ஹிந்து மதமே பிளவுபட்டு சீக்கியம்  ஜைனம்புத்தம் என்று பிரிந்ததுசாதிமத இன வேறுபாடுகளால் நாம் ஒருவரை ஒருவர்  நம்புவதில்லை  இந்தியாவில் இந்தியர்களில்லை  ஹிந்துக்களும்  கிருத்துவர்களும்  முஸ்லிம் களும் இன்னும் பலபிரிவு சார்ந்தோரே இருக்கின்றனர் இதில் வருத்தப்படக் கூடிய விஷயம்  என்ன வென்றால் இந்த ஏற்ற தாழ்வுகளெல்லாமே சமூக மத அங்கீகாரம் பெற்றவை
இதையெல்லாம் எண்ணிப்பார்த்து ஆராயக்கூடிய கல்வி அறிவு பெரும்பாலோருக்கு மறுக்கப்பட்டுவந்திருக்கிறது இன்னவனுக்கு இன்ன வேலை என்றுவரையறுத்து அவர்களை கிணற்றுத் தவளைகளாகவே மாற்றிவிட்ட சமுதாயமிது  நிலைமை மாறி தற்போது எல்லோருக்கும்  கல்வி என்ற நிலைவரும்போது தாழ்ந்திருந்தவர்கள்  முதன்  முதலில் கற்றுக் கொள்வது இந்த சமுதாயத்தின் எல்லா சீர்கேடுகளையும்தான் மன்னன்  எப்படி மக்களப்படி  தற்காலத்துக்கு தலைவன் எப்படி தொண்டன்  அப்படி . கடந்த சமுதாயம் தற்கால சமுதாயம்  எல்லாமே  நல்லதை விட்டு  அல்லாத வற்றைப் பின் பற்றுகிறது   EXCEPTION CAN NOT BE A RULE இந்தியாவில் ஒவ்வொருவனும்  மற்றவனுக்கு எதிரி ஆண்டவனைத் தவிர என்று எடுத்துக் கொள்ளலாமா