செவ்வாய், 17 ஜூலை, 2018

உன்னை அறிய உன்னை அறிய ............



                               உன்னை அறிய   உன்னைஅறிய .........
                            ------------------------------------------------------
 நான் பின்னூட்டங்களுக்கு  ஏங்குகிறேன்  என்று நண்பர் ஒருவர் கூறினார் நான்பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன் என்பது உண்மை அது ஏக்கம்போல் தோன்றி இருக்கிறது நண்பருக்கு நான் மட்டுமல்ல பலரும் அவரவர் எழுத்து எவ்வாறு வரவேற்கப்படுகிறது என்பதை அறிய ஆவலுடன் இருப்பார்கள் எழுதுவது உன்  விருப்பம்  கருத்துசொன்னாலும் சொல்லா விட்டாலும் பாதிப்பு ஏதுமில்லை என்பதே பலரது ஃபீட் பாக் (feed back )
 என்னைப் பொறுத்தவரை  பின்னூட்டங்கள்  வலை நட்புகளை புரிந்து கொள்ள வைக்கும்  சக்திபெற்றது பின்னூட்டங்கள் தவிர அதற்கு இடப்படும்  மறுமொழிகளும் வாசகர்களை புரிந்து கொள்ள உதவும் ஆனால் ப்லபின்னூட்டங்கள் மறு மொழி இடப்படாததால்  அதன் பாதிப்பு தெரியாமல் போகும் வாய்ப்புமுண்டு  நட்புகளில் பலரும்  முகமறியாத  அறிமுகங்களே  அதையும் மீறி சிலரை சந்தித்து இருந்தால் அந்தசந்திப்பின் போது  அவர்களை புரிந்துகொள்ள கொடுக்கப் படும் வாய்ப்புகள் மிகக் குறைவு
இப்போது தொலைக்காட்சியில்  காட்டப்படும் BIGG BOSS  நிகழ்ச்சி பற்றி அறியாதோர் மிகக் குறைவே அதில் அடிக்கடி கூறப்படும் வாசகம் போட்டியாளர்கள் பலரும்  ஃபேக் என்றும்   முகமூடியுடன் இருப்பவர் என்றும் கூறப்படுகிறது பதிவர்களை சந்திக்கும் போது பெரும்பாலோர் அவர்களது பெஸ்ட்முகத்தையே காட்டுகின்றனர் அது அப்படித்தான் இருக்கும் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதே
இந்நிலையில்  பதிவுகளுக்கு வரும்பின்னூட்டங்கள் அவர்களை  நன்கு வெளிப்படுத்தும்  பின்னூட்டங்களிலும் தங்களை வெளிப்படுத்த விரும்பாத பலரும் இருக்கிறார்கள்  இருந்தாலும்   வாசகர்களை அவர்களது நிலையை வெளிப்படுத்த ஒருகருவியே பின்னூட்டங்கள்

பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களை அடையாளம்  காட்டும் வாசகர்களுக்கு  தினமும்  பர்க்கும்  வாசிக்கும்  பதிவர்களின் எழுத்துகளை அடையாளம் காட்டாடுவது பெரிய வேலையல்ல

 நான்எழுதி இருந்த சில பதிவுகளுக்கு  வந்த பின்னூட்டங்களை கீழே தருகிறேன்  யார் யாருடைய பின்னூட்டம் அதுஎன்பதை அறிய முடிகிறதா பாருங்களேன்

 //வாழும் வரை ஒருவனை நல்லவனாக இருக்கக் கூறப்பயன்படும் அச்சுறுத்தல்களே இவை//

நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். அந்த விழிப்பு வந்து விட்டால் மதமும்,கடவுளுமெதற்கு?   
)
கடவுளை நம்பாதவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து தொலையட்டும்,
But
கடவுளை நம்புபவன் நியாயமாக அப்பழுக்கற்றவனாக வாழ வேண்டும்
என்தே எமது கருத்து, கொள்கை. 
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் நிறைய பேர், நல்லவர்களாக, நியாய வாதிகளாக வாழ்வதை கண்டு வருகின்றேன். ஆனால் எக் காலத்திலும் கடவுளைப் பற்றியே பேசிக் கொண்டு, ஒவ்வொரு கோயிலாக சென்று தரிசணம் செய்து வரும், பலர், நியாய வாதிகளாக இல்லாம்ல், அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுப்பவர்களாக, ஏமாற்றும் குணம் உடையவர்களாக இருப்பதை நேரில் கண்டும், அவர்களால் பாதிக்கப் பட்டும் வருகின்றேன். இந்நிலை எனக்கு மட்டுமா, அனைவருக்குமா என்று தெரியவில்லை..,,,
எனவே மனிதத்தைப் போற்றுவோம்

உண்டென்றால் அவன் உண்டு
இல்லை என்றால் இல்லை
கடவுள் மதங்கள் உண்டென்பதும் இல்லை என்பதும் அவரவர் நம்பிக்கை சார்ந்த நிறுவவும் மறுக்கவும் முடியாத விடயங்களாகவே இருக்கின்றன எனக் கருதுகிறேன் அய்யா!
தங்களது எழுத்துகள் கனமாக இருக்கின்றன.
 ஒவ்வொருவர் கருத்தும் மற்றவர் கருத்திலிருந்து மாறுபட்டே இருக்கும். கடவுளை நம்புபவர்கள் அயோக்கியர்கள் என்றே இங்கே பலரும் சொல்லி இருக்கின்றனர். இதைப் படித்ததும் சிரிப்பு வந்தது. :)))))

நம்பிக்கைகளை சற்று உரசிப் பார்த்து சரி செய்து கொள்வது தவறு இல்லையே ஐயா. உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை என்று சொலவது escapism என்று தோன்றுகிறது.  
)
Any belief sustained over a fairly long period of one's life when integrated into one's intellect, is known as faith. 

As my good web friend Dindugal Dhanabalan rightly hints, one experiences (becomes )what one believes.

U Become what U believe.

Other than this, honestly,
verbal permutations or combinations take us nowhere, I must confess.

கடவுளே இல்லை! அது ஒரு concept " என்பவருக்கு இந்த கேள்வி தேவையில்லை! கடவுள் என்பதுகருத்தியல்! கருத்து உங்கள் நினப்பு ! இவை மூளையின் நடவடிக்கை ! function of brain ! a few micro miilli of protein,nuron,electric charge etc ! pure matter ! matter is primary ! பொருள் முதல் வாதம் ! பொருள் இல்லையேல் எதுவும் இல்லை ! கடவுள் உண்டு,இல்லை என்று நினைப்பதற்கு மனிதன் வேண்டுமே ! அறிவு உணர்வு என்பதெல்லாம் அதன் பிறகு தானே  ! ஏங்ஜெல்ஸ் எழுதிய "இயற்கையின் தர்கவியல்" என்ற நூலில் விரிவாக உள்ளது! அப்பாதுரை எங்ஜெல்ஸை ஏற்கமாட்டர் ! விஷயம் அவர் ஏற்பதோடு நிற்பதில்லையே ! மிகவும் ஆழமான இடத்தை தொட்டிருக்கிறீர்கள ! விவவதிக்க வேண்டியது ,விளக்க வேண்டியது நிறைய உள்ளது ! கடவுளை ஏற்றுக் கொண்டவருக்கு உங்கள் கருத்து intelectual level ல் தடவிக் கொடுக்கலாம்! அறீவியலில் உரசிப்பார்க்கும் போது கொஞ்சம் சிரமப்படும் ! உங்கள்கருத்தை பலமாக ,எதிர்க்கிறொனோஎன்று தோன்றுகிறது ! மன்னித்து அருளுங்கள்! ---

 சார், எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் ரிச்சுவல்ஸில் நம்பிக்கை இல்லை. அதே போன்று ஆத்மா....என்று பேசப்படுவதெல்லாம்..ஸாரி சார் புரிவதில்லை. புரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. ஏனென்றால் அதில் நம்பிக்கை இல்லை. அதனால் பகவத் கீதையை எல்லோரும் மிகவும் உயர்வாகப் பேசுகல், கோர்டில் அதன் மீது சத்யப்பிரமாணம் எடுத்துக் கொளல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியய்வில்லை. பல தத்துவங்களை புரிந்து கொள்ள் அமுடியய்வில்லை. ஏன்மறுபிறவி போன்றவற்றில் நம்பிக்கை இல்லாத சுஜாதா கூட இறுதியில் தத்துவ சாராம்சம் ஃபிசிக்ஸ் கம்பைன் செய்து எழுதிவந்தார். நம்மூரில் பலரும் பேசுவார்கள். இந்து மதத்தில் இல்லாதவையே இல்லை. என்னமா நம் வேதங்கள் அப்போதே சொல்லியிருக்கின்றன. அதைத்தான் ஃபிஸிக்ஸ், வான சாஸ்திரம் எல்லாம் பேசுகின்றன என்று சொல்லுவார்கள். அவர்களிடம் ஒன்றை விளக்கச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள் அவர்களால் எதையுமே விளக்க முடியாது. தெரியமாலயே நம் கீதையில் அப்போதே சொல்லிவிட்டார். வேதம் அப்போதே சொல்லிவிட்டது என்பர்....

பல விஷயங்கள் மனிதனை நல்வழிப்படுத்த ஒரு ஒழுங்கு முறை வாழ்க்கை வாழ பயப்படுத்திச் சொல்லப்பட்டவையே. சாமி கண்ணைக் குத்தும் என்பதெல்லாம்.....

எனவே அன்புடனும், மனித நேயத்துடனும் நல்ல மனசுடனும், சாதி பாராது வாழ்ந்தால் அதுவே போதும்.

இதுபோன்ற வெளிக்காட்டும் பதிவுகள் தொடரலாமா  வேண்டாமா கருத்து வரவேற்கப் படுகிறது


   

சனி, 14 ஜூலை, 2018

வரன் தேடல் ...?

         
                                                                 வரன் தேடல்........?
                                                                  -----------------------
பெண் பார்க்கும்  படலங்கள்
இப்பதிவுக்கு தொடக்கமாக  நான்பெண்பார்த்தவிவரம் முதலில்  ஒரு நாள் மாலை நான் தங்கி இருந்த இடத்துக்கு எதிரில் ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தாள் என் நண்பர்களில் ஒருவன்  யார் அந்த அழகி என்று கேட்டான்எனக்கு ஏன் கோபம்வர வேண்டும் அவளை நான் மனதால் வரித்து விட்டிருந்தேன்  அவளைப் பற்றி யாரும் பேசுவதை நான்பொறுத்துக் கொள்ள முடியவில்லை  அப்போடுதான் அறிந்தேன் நான்காதல் வயப்பட்டிருந்ததை  அதே பெண்ணை நான் கைப்பிடித்து மணம்செய்து ஆகிறது 54 வருடங்கள்
என் மூத்த மகனுக்கு திருமணத்துக்கு  பெண் பார்த்ததும் நினைவுக்குவருகிறது குடியிருப்பில் நாங்கள் இருந்தது மேல் தளத்தில்  எங்கள் வீட்டுக்கு நேர் கீழ்  இருந்த வீட்டுக்கு ஒருபெண் அடிக்கடி சைக்கிளில் வருவாள் பெண் பார்க்கலட்சணமாக  இருக்கவே எனக்கு நாமேன் அந்தப் பெண்ணை நம் மகனுக்குப்  பார்க்கக்கூடாது என்றுதோன்றியது  கீழ் வீட்டில் இருந்த பெண்ணைப் பார்க்க வருபவள் ஆதலால் அந்தப்பெண்ணிடம்  யார் என்று விசாரித்தேன் என் நண்பன் ஒருவன் மூலம் அந்தப்பெண்ணின் பெற்றோருக்கு என் ஐடியாவைத் தெரியப்படுத்தவேண்டினேன் 
பெண்ணின் பெற்றோருக்கும்  எங்கள் வீட்டில் சம்பந்தம் வைக்க விருப்பம் என்று  தெரிந்தது ஒரு நாள் பெண்ணின்  தந்தை என் வீட்டுக்கு வந்து திருமணம்பற்றிப்பேச ஆரம்பித்தார் அவருக்கு ஜாதகப்பொருத்தம் பார்க்க விருப்பம் என்று கூறினார்  அவர்கள் பார்ப்பது எனக்கு ஆட்சேபணை இல்லை என்றேன்  அவர்கள் ஜாதகம்பார்த்து பெண்ணுக்கு இன்னும் இரண்டு மாததுக்குள்  மணம் முடிக்க வேண்டும் என்பது ஜாதகப்பலன் என்றார் இப்படியாகஒரு நல்ல நாள் பார்த்து உற்றார் உறவினர் சம்மதத்துடன்  திருமணம்  நடந்தது ஏன் இத்தனை சீக்கிரம் மணம் என்னும்  கேள்வி எழுந்தது மகனுக்கு 25 வயதே ஆகி இருந்ததுசீக்கிரம்  திருமணம் நடந்தால் அவன் ஓய்வு பெறும் வயதுவரும்போது அவனது கடமைகள்செய்து முடிக்கப்பெற்றிருக்கும்என்பதே என்பதிலாக இருந்ததுஇப்போது அவனுக்கு 52 வயது  அவனது மகன்  திருமணத்துக்கு தயார்
நானும் என் மனைவியும் வேற்று சாதி மொழி என்றுஅமைந்து விட்டது இதை அறிந்தஎன் நண்பர் ஒருவர் இதே போல் இருக்கும் ஒரு தம்பதிகளுக்கு  ஒருபெண் இருப்பதாகவும் என் இரண்டாம்  மகனுக்குப் பார்க்கலாம் என்று கூறிவந்தனர்  பெண்வீட்டார்நல்ல வசதி உள்ளவர்கள் என்றும் திருமணம் முடிந்து மாப்பிள்ளையை வெளி நாட்டில் படிக்க வைக் தயாரென்றும்  கூறி என்னை  வற்புறுத்திக் கேட்டனர்  அப்போது நான் என் இரண்டாம் மகனுக்கு திருமணத்துக்குப் பார்க்கவில்லை என்று கூறி தவிர்த்து வந்தேன்   இருந்தாலும் உற்ற நண்பரின் மனம்நோகக் கூடாது என்று பெண் வீட்டாரை சந்திக்க ஒப்புதல்  கொடுத்தேன்   இதை வெறும் சாதாரண விசிட் என்றும் கூறினேன்  இருந்தும் நாங்கள் நானும் மனைவியும்  போனபோது தடபுடல் செய்துவிட்டார்கள் பெண்பார்க்கும் படலமாகவே நினைத்தார்கள் பெண்ணைப்பார்த்தபோது மிகவும் சின்ன வயதுப்பெண்ணாகத்தெரிந்தாள் பதினைந்து வயதே ஆகி இருந்தது ஆனால் பெரிய சரீரம் பத்தாவது கூட கரெஸ்பாண்டெண்டில்  படித்து வந்தாள் வேண்டாமென்பதை பக்குவமாகக் கூறினேன் பதினெட்டு வயதுக்கு முன் திருமணம்  சட்டப்படி தவறு என்று கூறினேன்  என்நண்பருக்கு மிகவும் வருத்தம்  எந்த அளவுக்கு என்றால் அவனது திருமணம் நடந்த போது அதற்கு அவர்கள் வரவில்லை…..! நான் விருப்பஓய்வு பெற்று வந்தபோது ஒரு முறை பேரூந்தில் ஒருபெண்ணைபார்த்து அவளை என் இரண்டாம்மகனுக்கு மணம் பேச  பின் தொடர்ந்து சென்றதும் இப்போது நினைவுக்கு வருகிறது இரண்டாமவனுக்கும்   ஒருநண்பர் மூலமே மணப் பேச்சு வார்த்தை நடந்தது இங்கும்  ஜாதகப்பொருத்தம் பார்க்க  வேண்டும் என்றார்கள் எனக்கு ஆட்சேபணை இருக்கவில்லை  இரண்டு மூன்று தினங்களுக்குப் பின் ஜாதகம் பொருந்த வில்லை என்று கூறினார்கள் அதற்குப்பின்  வேறு ஒரு சோதிடரிடம் காட்டி இருக்கிறார்கள் நல்லபொருத்தம் என்று கூறி மறுபடியும் வந்தார்கள் ஒரு நாள் பெண்ணைப்பார்க்க  அவர்கள் வீட்டுக்குச்சென்றேன்  பெற்றோர் இருக்கவில்லைபெண்மட்டும் இருந்தாள் அவ்ள் நாங்கள் யாரென்று யூகித்து விட்டாள் என்வீட்டுக்கு வர அழைப்பு விடுத்தேன் என்மகன் டெல்லிக்குச் சென்றிருந்தான் என்  மூத்த மகனது  திருமண வீடியோவைக் காட்டி அதன்  மூலம் என் இரண்டாம் மகனைப்பற்றிதெரிய வைத்தேன்  
பிற்கென்ன ஜாம்ஜாமென்று திருமணம்நடந்து 24 ஆண்டுகள் ஆயிற்று இது வரை கூறியது பெண்பார்க்கும் படலங்கள் என்வீட்டு சமாச்சாரம்  இப்போதுஎன் பேரன் அவனுக்கு அவனே பெண்பார்த்துவிட்டான்  பெற்றோர்களும் ஓக்கே கொடுத்து விட்டனர்

 திருச்சி குடி இருப்பில் இருந்தபோது ஒரு நண்பரின் தங்கைக்காக பிள்ளை வீட்டாருடன் லௌகிகம் பேசச்சென்றிருந்தேன் எல்லாம் ஓக்கேயாகவில்லை திருமணத்துக்கு கட்டில்பீரோ வகையறாக்களுடன்  அவர்கள்தேவை அதிகமாக இருந்து திருமணப்பேச்சு  முறிந்தது இன்னொருமுறை  தொழிற்சாலையில் அதிகாரியாக இருந்தவருக்கு என் அண்ணா மகளுக்காக பேசச் சென்றிருந்தேன் ஜாதகம் பொருந்தி இருந்தபோதும்   பெற்றோர் மகனுக்காக விலை பேசுவது போல் இருந்தது கேரளத்தில் இருந்தனர்  சொர்ண எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்துபேச்சு வார்த்தை முறிந்தது மணப் பையனுடன் இதுபற்றிப்பேசும்போது என்னசெய்வது பெற்றோர்  விருப்பம் என்று கூறி சமாளித்தார்  

வியாழன், 12 ஜூலை, 2018

சந்நியாசம்




                                                       சந்நியாசம்
                                                        ------------------

இவனுக்கு தான் சந்நியாசம்வாங்க தடையாயிருப்பது தனக்கு தன்மனைவி மேல் இருக்கும்பிடிப்பே என்று தெரிந்தது இருந்தாலும் குருவின் மருந்தை உபயோகிப்பது என்றுமுடிவெடுத்தான்   அந்த மருந்தை உட்கொண்டசிலநிமிஷங்களில்  விறைத்த கட்டையாய் விழுந்து விட்டான் 
மனைவி குய்யோ முறையோ என்று கதறி அழுதாள் கூட இருந்தவரின்   ஆறுதலில்  தேறிஉடலை அடக்கம்செய்ய  வேண்டிய காரியங்களில் உற்றார்  முன் வர மனைவியும்  பேசாமல் இருந்தாள்  உற்றாரில் சிலர்
 உடல் விறைத்து கட்டையாய் ஆனதால் கை கால்களைக் கட்ட முடியவில்லை என்றும் வாசற் படி  வழியே உடல் வர முடியாததால்  நிலைத் தளத்தை உடைக்க வேண்டும்   இல்லாவிட்டால் உடலில் கைகால்களை வெட்டி நிலைப்படிக்குள் கொண்டு  செல்லலாம்  என்ன செய்வது
 என்று மனைவியைக்கேட்டனர்

நிலைக்கதவை உடைத்தால் மீண்டும்கட்ட செலவு அதிகம் ஆகும் என்றும்  பேசாமல் கை கால்களை வெட்டலாம்  என்றும் எப்படியும் உடலை  எரிக்கத்தானே போகிறோம் என்றும்   கூறினார்
  இவர் சொன்னதை செய்ய உறவினர் முனையும்போது  இறந்தவர் உடலில் அசைவு தெரியவே  என்ன செய்வதுஎன்று தெரியாமல் குழம்பினர் சற்று நேரத்தில் இறந்ததாகக் கருதப்பட்டவன் எழுந்து நடக்க இருந்த விஷயங்களைத் தெரிந்துகொண்டான்
உடனே குருவிடம்போய் நடந்த விஷயங்களைக்கூறி  மனம் உடைந்தான்
உலகில் அன்பு மனைவி எல்லாமே வெறும்  தோற்றங்களே என்பதை உனக்குக் காட்டவே அந்தசூரணத்தை கொடுத்தேன்  அத உட்கொண்டால் கைகால்கள்விறைப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில்மீண்டும்சகஜநிலைக்கு வருமென்பதையும்
கூறினார்

இவனுக்கு தெளிவு ஏற்பட்டு சந்நியாசம்வாங்கத் தயாரானான் 
 ஒரு அதீதக் கற்பனை கொடிகட்டிப்பறந்தது அதுவே கதையாயிற்று 
போதனை     அவரவருக்குத்தோன்றியபடி  எடுத்துக் கொள்ளலாம்  






திங்கள், 9 ஜூலை, 2018

ஒரு புலம்பல்

         

                                                    ஒரு புலம்பல்
     ஒரு புலம்பல் பதிவு
ஓய்வு பெற்று வந்தபோது இங்கு ஒரு வங்கி அக்கௌண்ட் ஓப்பென் செய்ய வேண்டி இருந்தது  வீட்டிலிருந்து ஒரு கி மீட்டருக்குள் இருந்த வங்கியில் கணக்கு திறக்க முதல் பிரச்சனை வந்தது வங்கி அதிகாரிகளுக்க்குத் தெரிந்த ஒருவர் என்னைத் தெரிந்ததாக கையெழுத்து கேட்டார்கள் நானோ ஊருக்குப் புதியவன் வங்கிக்கு தெரிந்தவர்கள் அந்த வங்கியில்  கணக்கு இருப்பவர்களைத் தேடி நான் எங்கு போக ஒரு யோசனை உதித்ததுஅப்போதைய பஞ்சாயத்து  அலுவலகம்சென்று  என் வீட்டு பத்திரங்களைக்காட்டி நான்   இங்கு வசிப்பவன் என்று கூறி அங்கிருந்த  அதிகாரிகளிடம் ஒரு கடிதம் பெற்று வந்து.ஒரு கணக்கு துவங்கினேன்   அது நடந்தது 1992 என்று நினைவு அதன் பின் பிஎச் இ எல் பணப்பட்டுவாடாவை  அந்த வங்கிக்கு மாற்றினேன்  இப்போது வயது ஏறி விட்டது ஒரு கிமீ தூரத்தில் இருந்த வ்ங்கி அலுவலகம்  நான்கு கி மீ தூரத்துக்கு மாறிவிட்டது இருந்தால் என்ன  இப்போதுதான் வீட்டிலிருந்தே  வங்கி கணக்குகளை இயக்க முடியுமாமே நெட் பாங்கிங் என்றுஎன் மக்கள்  சொன்னார்கள்  எனக்கு அதெல்லாம்  க்ரீக் அன்ட் லாட்டின்  புரிவதில்லை  என் மக்களின் உதவியோடு ஒரு மாதிரி சமாளித்து வந்தேன்   ஒரு நாள் இண்டெர்நெட்  பாங்கிங் முடங்கி விட்டது வங்கியின்தலமை அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன்  அவர்கள் என் மின்முகவரியை வங்கிக்கிளைக்குத்  தெரியப்படுத்தி கிளைக்கு எழுதச் சொன்னார்கள் எந்த பதிலும் வரவில்லை  ஒரு முறை நேரில் சென்று என் இண்டெர்நெட் அக்கௌண்ட் முடக்கப்பட்டதை கூறி அதை நேர்படுத்த வேண்டினேன் அவர்களும் சரிசெய்வதாகக் கூறி  ஒரு வாரகாலத்துக்குள்  சரியாகும் என்றும் என் விலாசத்துக்கு கூரியர்மூலம் பதில் வருமென்றும் கூறினார்கள் இதனிடையில் என் ஏ டி எம் கார்டில்பணம்கேட்டால் வரவில்லை சில பல முயற்சிகளுக்குப் பின்  பழைய ஏ டி எம் கார்டை மாற்றி கோல்டென் கார்ட் கொடுக்கப் படும் என்றும் கூறினார்கள்  ஒரு வழியாக அதைமாற்றம் செய்தேன்  ஆனால் அந்தக் கார்ட் மூலம்ரயில் டிக்கட் போன்றவை சாத்தியப்படாமல் இருக்கிறது  கேட்டால் முதலில் ஏடிஎம்   கார்டை ரெஜிஸ்டர் செய்ய வேண்டுமாம்  அது அதே வங்கியின் ஏடிஎம்கிளையில்தான் சாத்தியமாம்  ஆனால் நான்போகும் போதெல்லாம் அந்த மெஷின் பழுதில் இருப்பதாக தெரிய வருகிறது
 இன்னும்  என்  இண்டெநெட் அக்கௌன்ட் முடங்கியே இருக்கிறது  போகும் போதெல்லாம் இன்று மாலைக்குள் சரியாகி விடுமென்று கூறு கிறார்கள்

ஓரளவு விஷய ஞானம் உள்ள எனக்கே இந்தகதி என்றால்  படிப்பறிவில்லாதவர் பாடுஎப்படி இருக்கும்
பேசாமல் இந்த வங்கிக் கணக்கை மூடிவேறு ஏதாவது வங்கிக்கு போகலாமென்றால்  சில இடங்களுக்கு இந்த வங்கியையே  காட்டி இருக்கிறேன் என்பதாலும்   மாற்ற நான் இன்னும்  பாடுபட வேண்டிவரும் என்பதாலும் முழிக்கிறேன் 

புலம்பலுக்குப் பின் ஒரு மகிழ்ச்சி என்வீட்டில் பூத்த பிரம்ம கமலம்பூக்கள் ஒரு இரவுதான் மலர்ந்திருந்தன மறு நாள் தொய்ந்து விட்டது  


  

ராத்திரியில்  பூக்கும் இம்மலர்களைக் கண்டதும் ஒரு பாடல் நினவுக்கு வந்தது
புலம்பலுக்குப் பின் 


                                                  -------------------

வெள்ளி, 6 ஜூலை, 2018

ஒரு பின்னூட்டமே பதிவாய்



                           ஒரு பின்னூட்டமே பதிவாய்
                             --------------------------------


சிறுகதைகளை ஆழ்ந்து ஊன்றிப் படிக்கும்நண்பர் ஒருவரிடம் என்  சிறுகதையைவிமரிசிக்கக் கேட்டிருந்தேன் குறை நிறைகளைக் கூறிவிமரிசனம் செய்திருந்தார் அதுவே இப்போதுபதிவாகிறது எழுதுபவன் கொள்வாரில்லையோ என்று நினைக்கும்போது  இம்மாதிரியான கருத்துரைகள் உற்சாக பானம் ஆகும் என்ன கதை யார் விமர்சகர் என்பது யூகிக்க எளிது  சிறுகதைகள் சில விஷயங்களின் பாதிப்பால் எழுதப்படுபவைசில பின்னூட்டங்களுக்கு விளக்கம் கூற முற்படும்போது நாம்  எழுதியதை ஸ்தாபிக்க விரும்புவதுபோல் இருக்கும் பின்னூட்டங்கள் வாசகரின் எண்ணப் பிரதிபலிப்பு  அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் முறை சிலநிகழ்வுகள் வெவ்வேறான பாதிப்புகளை  உண்டாக்கலாம் எதையும் ஜஸ்டிஃபை செய்ய அவசியமில்லை 

சாவின் விளிம்பில், நினைவு திரும்பும் பொழுதெல்லாம் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளில் சிக்குண்டு தவிக்கும் ரங்கசாமியின் 'கதை'யை முன்னிலைப் படுத்திக் காட்டி, அதன் பின்புலமாய் வாழ்க்கையின் போற்றுதலுக்குரிய சில நெறிகளை ஆசிரியர் சொல்லிச் செல்வது தான் இந்தக் கதையின் குறிப்பிடத்தக்க அம்சம். எனக்குப் பிடித்த அம்சமும் கூட. எந்த எழுத்துக்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இதற்காகத் தான் இந்தக் கதையை எழுதினேன் என்று எழுதியவர் சொல்லாமல் இருக்கலாம். அதனால் என்ன?.. நல்ல சிந்தனை உள்ளவர் உள்ளத்திலிருந்து அவர் அறியாமலேயே இப்படிப்பட்ட நல்ல எண்ணங்கள் வெளிப்படுவது இயல்பான ஒன்று தான். சேகரம் பண்ணி தன் வாழ்க்கைக்கு மூலதனமாய் மூட்டை கட்டிக் கொள்வது தேர்ந்த வாசகரின் வேலையாகிப் போகிறது.

சாவைப் பற்றி நினைப்பதே சங்கடம் கொடுக்கக் கூடிய ஒன்று தான். அதை எதிர்கொள்கையில் பயம் மட்டும் கூடாதென்பதற்குத் தான் இந்த தேசத்து ஆன்மீக சிந்தனைகளே, மரணத்தை வெல்வோம் என்று கூறுகிறது. வெல்வோம் என்பது அந்த பயசிந்தனையிலிருந்து மீள்வோம், மீள்வதின் மூலமாக அதை வெற்றி கொள்வோம் என்கிற அர்த்தத்தில்.

நாம் எதிர்பார்க்காதவாறு இந்தக் கதையில் முன்னிலைப் படுத்துகிற பாத்திரமான ரங்கசாமிக்கு, அந்த நேரத்தில் குற்ற உணர்வு நெஞ்சத்தில் குடிபுகுந்து வாட்டியது தான் வினோதம். அந்த வினோதம், ஒருவிதத்தில் தன்னை சுயவிமர்சனப் படுத்திக் கொண்ட அவனது நேர்மையையே காட்டுகிறது. தன் தந்தை சாகக்கிடந்த நேரத்தில் அவரை பொறுப்பாக கவனித்துக் கொள்ளாதது, இந்த நேரத்தில் அவன் நினைவில் நர்த்தனமாடி குற்ற உணர்வில் குன்றிப்போக வைக்கிறது.. அதை வேறு எண்ணங்களைக் கொண்டு விரட்டப் பார்த்தாலும், மேலே மேலே வந்து அவனைத் திக்குமுக்காட வைக்கிறது. இவன் செய்யத் தவறியதையே, இவனின் இந்த நிலைமையில் இவன் மனைவி மக்களிடம் இவன் எதிர்பார்க்காது இருந்ததே இவன் செய்யத்தவறிய அந்த ஒரு தவறுக்கும் கழுவாயாகப் போய்விடுகிறது.

தான் வாழ்ந்த வாழ்க்கையில் திருப்தி இருக்கிறது ரங்கசாமிக்கு. அந்த திருப்தியை தன் தந்தையின் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து அங்கங்கே குமுறுவது, பாத்திரப்படைப்பின் மேன்மையைக் குலைக்கிறது. 'ஒரு சொட்டு தண்ணீர் தன் தந்தை கையால் கிடைக்காதா' என்று தவிக்கிற நேரத்தில், இவன் யார் எனத்தெரியாது தந்தை அமுதமென நீர் கொடுத்த மாதிரியும், யார் என்று தெரிந்த பொழுது, 'என்னைக் கொன்றவனல்லவா நீ?.. நீ எனத் தெரிந்திருந்தால் தந்திருக்கமாட்டேன்' என்று தந்தை சொல்கிற மாதிரி இவனுக்குத் தோன்றுவதும், ஏனோ செத்த பிறகும் தந்தையும், சாகும் நிலையில் தனயனும் ஒருவருக்கொருவர் குரோதம் பாராட்டுகிறார்கள். இரண்டு பாத்திரங்களையும் உயர்த்தி, ரங்கசாமியை திருப்திபடுத்தி, அவனது குற்ற உணர்வை சாக அடித்திருக்கலாம்.
யதார்த்தமாக எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்கிற ஆசையில் ஆசிரியர் கதையை ஒரு நல்ல முடிவுக்குக் கொண்டு வரும் இந்த அரிய வாய்ப்பை தெரிந்தே தவிர்த்து விட்டார் போலும்!

'
தந்தை செய்த பிழையைத் தனயன் செய்திருக்க வில்லை' போன்ற-- பல இடங்களில் ஆசிரியர் கூற்றாக வரும் செய்திகளைத் தவிர்திருந்தால் கதையின் நேர்த்தியைக் கூட்டி, சரியாகப் பொருந்துகிற மாதிரி ஒரு சட்டத்திற்குள் அடைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இறுதியாக ஒன்று சொல்ல வேண்டும். இதெல்லாம் படிக்கிற நேரத்துப் பார்வையில் பட்ட கருத்துக்களே தவிர, இப்படித் தான் இந்தக் கதையைப் பார்க்க வேண்டும் என்றில்லை.
இன்னொரு நேரத்துப் படிக்கும் பொழுது வேறு வகையான எண்ணங்கள் தோன்றலாம். இப்படியெல்லாம் சிந்திக்க வைப்பதே நல்ல கதைகளுக்கு அடையாளம். வெறும் பொழுது போக்கு கதைகளுக்கில்லாத சிறப்பும் கூட. அதனால் தான் எழுதுகிற எழுத்தின் மூலம் ஏதாவது ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்ற நினைப்புகளே எக்காலத்தும் போற்றுதலுக்குள்ளாகிறது.

குறிப்பாக இந்தக் கதையைக் குறிப்பிட்டு எழுதச் சொன்னதினால் என் கருத்துக்களைக் குறிப்பிட்டேன். என் பார்வையில் பார்த்ததே தவிர, கதையின் சிறப்பிற்கு இவையெல்லாம் எந்த விதத்திலும் குறுக்கே நிற்பவையல்ல. இரண்டு முறை தாங்கள் நினைவு படுத்தியும் இன்னும் செய்ய வில்லையே என்கிற அவசர உணர்வில் எழுதியது.

இந்தக் கதைக்கு ஒரு விமரிசனம் எழுதச் சொல்லி என்னைக் கேட்டுக் கொண்டமைக்கு மிக்க நன்றி, ஐயா!


கதை எதுவென்று யூகிக்க முடிகிறதா  பின்னூட்டமும்  யாருடையது தெரிகிறதா