Thursday, December 9, 2010

இயலாமை

இயலாமை
-----------------
பிறப்பொக்கும்   உயிர்க்கு,  வாய்  கிழியக்  கூறுகிறோம்
ஏனிந்த   ஏற்றத்தாழ்வு   என்றறிவோமா..?
என்ன   பிழை  செய்தான்   ஏழையாய்ப்   பிறந்தவன் ,
ஏனில்லை   வாழ்வு, வாய்ப்பு , உரிமையில்  சமத்துவம் .?
இருப்பவன்   வளமுடன்  உயர்கிறான் ,
அற்றவன்   என்றும்  அடியில்  தேய்கிறான் .
மேலே  செல்வது  கீழே  வரும்,  புவி  ஈர்ப்பின்  நியதி.
கீழே  உள்ளது  மேலே  செல்ல  யாரென்ன  செய்ய.?
காலச்  சக்கரச்  சுழற்சியில்  தானே  நடக்கும் . --நம்புவோமா ..!
---------------------------------------------------------------------------,

4 comments:

  1. Ithatku Thamizhaga Mudalvar Chemozhi Chemmal Spectrum Chakravarthi Dr.Kalaignar thanathu Murasoli'yil vidai koorinaal nandraaka irrukkum aiya.....

    ReplyDelete
  2. உயர்வதற்கு தெம்பும்,உதவ கரங்களும் இருந்தால் எழுச்சி சாத்தியமே...

    ReplyDelete
  3. நம்புவோம்.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பல பிணிகள் உள்ளன. பார்பனியம் என்ற பிணி மூல வேர். வேறு எந்த நாட்டிலும் யாரும் ஏற்று கொள்ள முடியாத மனு நீதி இங்கு உள்ளதே காரணம்.
    இதனை காலம் எல்லா இடத்திலும் இருந்து இங்கு என்ன தேனும் பாலுமா ஓடுகிறது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை கிடைத்து விட்டால் நிலைமை சரியாகலாம்.

    ReplyDelete