Thursday, April 14, 2016

கதை கதையாம் காரணமாம்


                                         கதை கதையாம் காரணமாம்
                                          ==========================
இது ஒரு கேட்டு வாங்கிப் போடாத கதை இந்தச் சிறுகதையை என் மனம் போன போக்கில் எழுதியது எங்கோ எப்போதோ கேட்ட சில வழக்கங்கள் கதைக்குக் கரு ஆயிற்று. ஆனால் கதை எழுதுவதற்கான உத்தி  சற்றே வித்தியாசம் என்று தெரிகிறது  இது எந்த பத்திரிக்கையிலும் வந்ததல்ல. அப்படி வந்திருந்தால் இது எங்கள் ப்லாகின் பதிவாகி இருக்கலாம்

( என் முதுகில் ஏதோ பாரம் ஏறியது போல் இருக்கிறது)
சேது அன்று மாலை வருவதாகத் தகவல் அனுப்பி இருந்தான்.தங்கமணிக்கு கொஞ்சம் ஆறுதல். ஏதோ இருக்க ஒரு வீடு இருந்தாலும் தினப்படி செலவுக்கு எங்கே போவது.? வயிற்றுப் பாட்டுக்கு கிராமத்தில் ஒன்றிரண்டு பட்டர் (பிராமணர்) வீடுகளில் பாத்திரம் தேய்த்து , முறிகளை அடிச்சு கோரினால்(பெருக்கி எடுத்தால்) அம்மியார் ( பிராம்மண அம்மணி) கொடுக்கும் சோறும் கூட்டானும் கொண்டு அவளும் அவளது தாயாரும் வயிறு நிறைக்கலாம். கூட இருக்கும் சகோதரி தேவானை அவள் வகையில் வீடுகளில் பணி செய்து அவளது வயிற்றுப் பாட்டைக் கவனித்துக் கொள்வாள். வாழ்க்கை என்பது வெறும் வயிற்றோடு முடிவதா என்ன.?இருக்க இடம் உண்ண உணவு மட்டும் போதுமா.?உடுத்தவும் மேனி அலங்கரிக்கவும் இன்னும் எத்தனையோ தேவைகள் இருக்கின்றனவே.. இந்த மாதிரித் தேவைகளைப் பூர்த்திசெய்ய சேது மாதிரியான  புண்ணியவான்கள் இருக்கவே இருக்கிறார்கள்.
தங்கமணிக்கு ஓரோர் சமயம் இந்த வாழ்க்கை சரியா என்ற எண்ணம் தோன்றும் சரியோ தவறோ இதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. கட்டின கணவனுக்கு என்ன காரணத்தாலோ இவளுடன் தொடர்ந்து வாழப் பிடிக்கவில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்றால் இவள் இஷ்டப்படி வாழ்வதிலும் கேள்வி வரக்கூடாது. வயசான அம்மா இருக்கும்வரை தலைக்குக் கூரை நிச்சயம். அம்மா போனாலும் இது தொடரும், கூடப் பிறந்த “ஆங்கள்” ( சகோதரர்கள்) தாயின் வீட்டில் பங்கு கிடைக்காதென்று தெரிந்து (மருமக்கத்தாயம்) அவரவர் வழிகளில் சென்று விட்டனர்.
( இந்த வேதாளம் மறுபடியும் முதுகில் ஏறிவிட்டது போல் தெரிகிறது. நிச்சயமாய் என்னிடம் கேள்வி கேட்டுக் குடையப் போகிறது. நான் எழுதுவதைப் படிக்காமல் இருக்கப் போகிறதா என்ன.?)

தங்கமணியின் வீட்டைப் பற்றிக் கூறவேண்டும். அவளது அம்மா அவரது தரவாடுபற்றி நிறையவே கூறி இருக்கிறார். இப்போது மிஞ்சி இருப்பது பெத்தப்பேர்மட்டும்தான். கூட்டுப்புறத்து வீடு என்றால் தெரியாதவர் கிடையாது. தங்கமணியின் அம்மாவுக்குக்  கூடப் பிறந்த சகோதரிகள் ஆறு பேர். அவரவருக்குக் குடும்பம் குழந்தைகள் என்று ஆனபிறகு இரண்டு கட்டுத் தரவாட்டு வீடு விற்றுப் பணமாக்கப் பட்டு பாகம் பிரிக்கப்பட்டு வந்த பணத்தில் தங்கமணியின் அம்மா இந்தக் குச்சு வீட்டைக் கட்டினாள். இவர்களும் கூட்டுப் புறத்து வீட்டின் பெயரில் அவகாசிகள் ( சொந்தம் )ஆனார்கள். இதே பெயருக்கு சொந்தம் கொண்டாட இவர்களுக்கு சந்தான சம்பத்து இல்லாமல் போயிற்று.


(வேதாளம் முதுகில் நிலை கொள்ளாமல் தவிக்கிறது. இவன் என்ன எழுத வருகிறான் என்று தெரியாமல் குழம்புகிறது என்று தெரிகிறது)
தங்கமணியின் அம்மா திண்ணையே கதி என்றிருப்பாள். திண்ணையை ஒட்டி ஒரு ரேழி . அதை அடுத்து சின்ன மித்தம் ( முற்றம்) அதன் இரு பக்கங்களிலும் இரண்டு முறிகள் ( அறைகள்) ஒன்றில் தங்கமணியும் மற்றதில் அவள் சகோதரி தேவானையும் உறங்குவது வழக்கம்.

சேது வரும் தகவல் தேவானைக்கும் தெரிந்தது. அவளுக்கு ஒரு விஷயம் தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும் போல் இருந்தது. இப்படி அடிக்கடி வந்து போகும் இந்த சேது அக்கிரகாரத்தில் இருப்பவன். தங்கமணியிடம் சம்பந்தம் வைத்துக் கொள்வானா இல்லை அவளைக் கை கழுவி விடுவானா?அவன் கொஞ்சம் பசையுள்ளவன். தொடர்ந்து வருபவனை வற்புறுத்திக் கல்யாணம் செய்து கொள்ள முடிந்தால் தங்கமணி அதிர்ஷ்டம் செய்தவள் ஆவாள். இல்லையென்றால் ......? இலையென்றால் என்ன.? நாடிவருபவர்கள் எல்லோரையும் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ன.?
தங்கமணி சேதுவை நம்பி இருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.
( வேதாளத்துக்கு இருப்பே கொள்ளவில்லை. ‘ யோவ், நீ என்னதான் சொல்ல வருகிறாய்.?என்று காதருகே குசுகுசுத்தது. வேதாளத்துக்கு எழுந்த சந்தேகம் எனக்கும் இருந்தது. நான் என்ன எழுதப் போகிறேன், சொல்ல வருகிறேன் என்று எனக்கே தெரியாதே. கணினியின் முன் அமர்ந்து தட்டச்சுகிறேன். எண்ணங்கள் கோர்வையாய் வந்தால் கதையாக்கலாம் எண்ணங்கள் கோர்வையாக வராவிட்டால் என்னும் என் எண்ணம் வேதாளத்துக்குத் தெரிந்து விட்டது. அது சொல்லியது.தோன்றுவதை கொஞ்சம் விலாவாரியாக எழுதிக் கொண்டே போ. முடியும் வரை எழுது. நாளைக்கு வேறு ஏதாவது ஐடியா கிடைக்கும். அப்போது தொடரலாம் வேதாளத்தின் உத்தியை முயன்றுதான் பார்ப்போமே.)
இந்த சேதுவை முத்ன் முதலில் எங்கு கண்டாள் என்று நினைத்துப் பார்த்தாள். ஆம். ஒரு ஆறுமாதமிருக்குமா.?அக்கிரகாரத்தில் பணிமுடிந்தபின் தங்கமணி வந்துகொண்டிருந்தாள். எதிரே சற்று தூரத்தில் ஒரு கையில் குடையுடன் மறுகையால் வேட்டியின் நுனியைத் தூக்கிப் பிடித்தபடி ,ஆஜானுபாகுவாக என்று சொல்ல முடியாது; இருந்தாலும் அந்த சந்தி வேளையில் சற்று தூரத்தில் இருந்தே தெரிந்த பட்டை விபூதி நெற்றியுடன் நல்ல உயரத்துடன் அவன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் தங்கமணிக்கு மேனியெல்லாம் என்னவோ செய்தது. மனசு குறுகுறுத்தது. ;நமக்கும் ஒருவன் வாய்த்தானே என்னும் அலுப்பும் கூடவே வந்தது. இவளைக் கடக்கும் நேரம் அவன் நின்று “ ஆ.. தங்கமணியல்லே.? எவிடெக்கா ? வீட்டிலிக்கா.?என்று ரொம்பவே அறிமுகம் ஆன மாதிரி ‘சம்சாரிக்கத்தொடங்கினான். தங்கமணிக்கு தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. வெட்கப் பட வேண்டுமா, தலையைக் குனிந்து கொள்ள வேண்டுமா ஒன்றும் புரியவில்லை. எல்லாம் கலந்த கலவையான ஒரு பாவம் வந்து போயிற்று. சேது தொடர்ந்தான் “ தங்கமணியக் கெட்டியவன் எவிடெ பணி எடுக்குன்னு.?
“ ஆ செத்தையினக் குறிச்சு ஒன்னும் கேழ்க்கண்டா சாமி என்றாள். இந்த பதில் சேதுவுக்குக் கொஞ்சம் தைரியம் கொடுத்தது..ஒன்னும் விஷமிக்கண்டா தங்கமணி. ஞங்கள் ஒக்க இல்லேஎன்று நூல் விட்டுப் பார்த்தான். தங்கமணி ஏதும் சொல்லாமல் தலையை நிமிர்த்தி பின் சரித்து ஒரு புன்னகையைத் தவழவிட்டாள்.இப்போது சேதுவுக்குத் தான் சொன்னது விளையாட்டுக்கு இல்லை உண்மைதான் என்று நிரூபித்துக்காட்ட வேண்டும் போல் இருந்தது.(கண்ணா லட்டு தின்ன ஆசையா.?)
நேர் எதிர்த் திசையில் போய்க் கொண்டிருந்தவன் இப்போது அவள் செல்லும் திசைக்கே திரும்பினான். அவளது எதிர்பார்ப்புகள் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவளது நித்திய ஜீவனம் பற்றியும் அதை அவள் எப்படி சமாளிக்கிறாள் என்றும் கேட்டுத்தெரிந்து கொண்டான். தங்கமணியிடம் பேச்சுக் கொடுத்ததில் அவளைப் போலவே அவள் தங்கை தேவானையும் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான். அவன் உள்மனது முட்டைகள் பொரியும் முன்பே குஞ்சுகளைக் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டது.
பேசிப்பேசியே தங்கமணியின் வீட்டுக்கு வந்து விட்டான். வாசலில் நின்றவன்,
‘இன்னால் ஞான் போட்டேஎன்று இழுத்தான்.
“ உள்ளிலிக்கு வரூ. காப்பி குடிச்சிட்டுப் போகாம்என்று அவளும் வலை விரித்தாள்.
“ உன்னுடன் பிறந்தவள் எங்கே “
“எவிடெயெங்கிலும் போயிரிக்கும்
“அம்மை.?
“அது ஒரு பிரஸ்னமில்லா. கண்ணும் சரிக்கி காணில்லா. உள்ளிலிக்கு வரூஎன்று அவன் கையைப் பிடித்துக் கூப்பிட்டாள். சேதுவுக்கு இருந்த கொஞ்சம் நஞ்சமுமான தயக்கமும் போய் விட்டது.
அவளது முறிக்குக் கூட்டிக் கொண்டு போனாள். கதவைத் தாழ்ப்பாளிட்டாள் ஆரம்பத் தடுமாற்றங்கள் ஏதுமில்லாமல் இருவரும் இணைந்தனர். அவனருகே படுத்திருந்தவள் சற்று ஒருக்களித்து படுத்துக் கொண்டு “சாமிக்கு என்னே இஷ்டப் பட்டோ?என்று கேட்டாள். இஷ்டப்படாமலா இவ்வளவு நேரம் நடந்தது என்று நினைத்துக் கொண்டான். “ பின்னே.....என்று ஒரு நமுட்டுச் சிரிப்பினை உதிர்த்தான். சமயமாகி. பின்னெ நாளேக் காணாம் “ என்று கூறியவன் அவள் கையைப் பிடித்து அதில் சில ரூபாய் நோட்டுகளை அழுத்தினான். கதவு திறந்து வெளியே வரும்போது அங்கே தேவானை நின்று கொண்டிருந்தாள்.சேது அவளை ஒரு நமுட்டுச் சிரிப்புடன் கடந்தான்.  
தேவானைக்குத் தடுமாற்றம். தங்கமணியைவிட தான் எந்த விதத்தில் குறைவு என்னும் எண்ணம் எழுந்தது அது என்னவோ தெரியவில்லை. நமக்குத் தெரிந்தவர்கள் ஏறத்தாழ எல்லோருமே “ பர்த்தா இல்லாதவராகவே இருக்கிறார்கள். இது ஆண்களின் பொறுப்பின்மையா, அல்லது பெண்களின் ஆதிக்கக் காரணமா.... என்ன இருந்தாலும் வாழ்க்கை என்ற ஒன்றை வாழ்ந்துதானே ஆகவேண்டி இருக்கு. இந்த சேது ஆள் நன்றாகத்தான் இருக்கிறான். அவன் எதிர்பார்ப்பை தங்க மணி கொடுக்க முடியும் என்றால் தன்னால் முடியாதா என்ன.? எண்ணங்கள் திட்டங்கள்.... ...!
வந்து போன சேதுவுக்கும் தேவானையைப் பார்த்ததும் உடலில் ஒரு சூடு பொங்கி எழுந்து அடங்கியது. தேவானையும் லட்சணமாகப் பாந்தமாகக்கிண்என்று இருந்தாள். தங்கமணியுடன் சேர்ந்தால் தேவானையை ஒதுக்க வேண்டும் என்று ஒன்றும் இல்லையே. எண்ணங்கள்....திட்டங்கள்......
தங்கமணியும் தேவானையும் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பாவிக்கத் தொடங்கினர். சேதுவோடு இருக்கும்போது “ இந்தப் பெண்ணின் நோட்டமும் பார்வையும் சரியில்லையேஎன்று சற்று உரக்கவே கூறினாள். இவனோ “ பாவம், அவளும் உன்னைமாதிரிதானேஎன்று சொன்னான். அப்படியானால் அவளிடம் சேர்வதுதானேஎன்று கோபத்தில் கூறினாள் ‘ ஆஹா இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று எண்ணியவன் “மாற்றமே வாழ்வின் சுவை
( variety is the spice of life) அனுபவிக்க என்ன செய்யலாம் என்றும் சிந்திக்கத் தொடங்கினான்( கண்ணா இரண்டாவது லட்டு தின்ன ஆசையா.?). இதற்கு ஒரே வழி இருவரும் இருக்கும் நேரத்தை ஒதுக்கிவிட்டு ஒருவர் இல்லாத நேரத்தில் ஒருவர் என்று கணக்குப் போட்டான். தங்கமணியை சந்தித்தபோது நடந்தவற்றை ரிபீட் செய்வதுதான் நல்லது என்று எண்ணி ஒரு நாள் தேவானை வேலை முடிந்து வரும்போது அவளை மடக்கினான்.இந்த சந்தர்ப்பத்துக்குத்தானே அவளும் காத்திருந்தாள். திட்டமிட்டபடி எல்லாம் நடக்க ஒரு நாள் இவன் தேவானையின் அறையில் இருந்து வெளியே வரும்போது தங்கமணி நின்றிருந்தாள். இவனைப் பார்த்ததும் மூஞ்சியை வெடுக்கெனத் திருப்பிக் கொண்டாள்.
இருந்தாலும் இருவருக்குமே வாழ்க்கையை வாழவேண்டுமென்றால் பல நேரங்களில் பல விஷயங்களையும் விட்டுக் கொடுக்க(compromise) வேண்டும் என்று புரிந்தது..
எதையும் கண்டுகாமல் சிவனே என்றிருந்த அவர்களது தாயாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உசுப்பி விட்டனர். கிழவிக்கு தன் மகள்கள் யாருடனாவது சம்பந்தம் வைத்துக் கொள்வதில் தவறு தெரியவில்லை. ஆனால் இருவரும் ஒருவனையே என்று எண்ணிப் பார்ப்பது கஷ்டமாக இருந்தது இதற்கு ஒரு முடிவு கட்டத் தீர்மானித்தாள் கிழவி.
கிழவி திண்ணையில் அரைகுறைத் தூக்கத்தில் படுத்துக் கிடப்பாள். சில நேரங்களில் சேது அவளைத் தாண்டிப்போக வேண்டி இருக்கும். ஒரு நாள் சேதுவுக்கு மகள்களில் யாரோ ஒருவருடன் கூடும் நாளும் நேரமும் பார்த்துக் காத்திருந்தாள் கிழவி. சேதுவும் கிழவிக்குக் கண்சரியாகத் தெரியாதே என்று அவளைத் தாண்டினான் உடனே “ ஐயோ... ஐயோ.. என்று கூக்குரலிட்டு வெளியே ஓடினான் கிழவி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.இனி உனக்கு இன்பம் தரும் உறுப்பின் முக்கியம்தான் இங்கு வரும்போது நினைவுக்கு வரும்தங்கமணியோ தேவானையோ (யாரோ ஒருவர்) ஏன் சேது அப்படி கத்திக் கொண்டு ஓடினான் என்று தெரியாமல் விழித்தாள்.
( உன்னைப் பார்க்கவே பயமாய் இருக்கிறது, எழுதுவதற்கு உத்தி சொன்னால் இப்படியா எழுதுவது,? இனி உன் வழிக்கே நான் இல்லையப்பா..என்று கூறிக்கொண்டேஎன் முதுகில் இருந்து அகன்றுவிட்டது.)  
 

26 comments:

  1. இது முன்னரே படித்த நினைவு!

    ReplyDelete
  2. பேராசை..

    இருந்த லட்டும் போயிடிச்சா!..

    ReplyDelete
  3. கண்ணா லட்டு தின்ன ஆசையா ?
    ஹாஹாஹ பொருத்தமான இடத்தில் கொண்டு வந்து இருக்கின்றீர்களே..... ஐயா ரசித்தேன்

    ReplyDelete
  4. வித்யாசமான கதை .

    ReplyDelete
  5. எந்த பத்திரிக்கையிலும் வந்ததல்ல. அப்படி வந்திருந்தால் இது எங்கள் ப்லாகின் பதிவாகி இருக்கலாம் என்ற கதைக்கான முன்னோட்டப் பத்தி தங்களின் மன உறுதியைத் தெளிவுபடுத்துகிறது.

    ReplyDelete
  6. ஹா..... ஹா.... ஹா... வழி கண்டு பிடித்த கிழவி. அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் அம்மாவுடனும், பெண்ணுடனும் பழகும் ஒருவன் இப்படித்தான் எக்குத் தப்பாக மாட்டிக் கொள்வான் ஒருநாள்!

    //'கேட்டு வாங்கிப் போடாத கதை' -- எங்கள் ப்ளாக்கில் பதிவாகி இருக்கலாம்.//

    :)))

    ReplyDelete
  7. அடடா! இரண்டு லட்டும் போயிற்றே....(கண்ணா லட்டு சின்ன ஆசையா...ஹஹ ரொம்பவே நல்லா இருந்தது சார்.) வித்தியாசமாக இருக்கிறது. வித்தியாசம் என்றால் சொன்ன விதம். இது போன்றவை கேரளத்தில் ஒரு பீரியடில் மிகவும் வெளிப்படையாகவே நிகழ்ந்தவை.

    ReplyDelete
  8. வித்தியாசமான கதை ஐயா
    நன்றி

    ReplyDelete
  9. வித்தியாசமான கதைதான் ...
    லட்டு (பஞ்ச்) அருமை....

    ReplyDelete
  10. விக்கிரமாதித்தன் கதையில் வேதாளம் கதை சொல்லும் கேள்வி கேக்கும். ஆனால் இங்கே உல்டாவாக இருக்கிறதே.

    கோட்டயம் புஷ்பநாத் கதைகள் படித்து இருகிறீர்களா? கொஞ்சம் அந்த சாயல் உண்டு.

    Jayakumar

    ReplyDelete
  11. கதை கதையாம் காரணமாம்
    சட்டியில் புக்கையாம்
    ஒட்டிக் கருவாடு சுட்டாம்
    சுரையிலையில போட்டு பெண்ணே
    போடி அங்கால...

    அதாவது, கருவாட்டை மறைத்த காரணத்தை அறிந்த கணவன் சாப்பிடும் வேளை மனைவியை இப்படி விரட்டுவதாக அறிந்த கதையை நானும் படித்தேன்; பகிர்ந்தேன்.

    சிறந்த பதிவு

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete

  12. @ கீதா சாம்பசிவம்
    வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  13. @ துரை செல்வராஜு
    பேராசை/இருந்த லட்டுவும் போயிடிச்சி. இனி லட்டு ஆசை வருமா?வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  14. @ கில்லர்ஜி
    பாராட்டுக்கு நன்றி ஜி/ வருகைக்கும் நன்றி .

    ReplyDelete

  15. @ தேனம்மை லக்ஷ்மணன்
    சில விஷயங்களைச் சொல்லும் போது வித்தியாசமாகத்தான் சொல்ல வேண்டி இருக்கிறதுவருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  16. @ ஜம்புலிங்கம்
    பத்திரிக்கைகளில் வந்தால்தான் கதைகளுக்கு மவுசு என்னும் என் ஆற்றாமையைத்தான் சொன்னேன் பாராட்டுக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  17. @ ஸ்ரீராம்
    தப்புத் தாளங்கள் படம் நினைவில் இல்லை.இதில் அம்மாவுடனும் பெண்ணுடனுமான உறவு இல்லை. சகோதரிகளுடனானதே உறவு. ஒரு வேளை கிழவியையும் சற்று கவனித்துக் கொண்டிருந்திருக்க வேண்டுமோ வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  18. @ துளசிதரன் தில்லையகத்து
    கேட்டுத் தெரிந்து கொண்ட சில வழக்கங்கள் கதைக்கு கருவாயிற்று.என் வாழ்வின் விளிம்பில் சிறு கதைத் தொகுப்பிலும்ஒரு கதையில் கேரளத்து சில வழக்கங்கள் கதையின் கருவாய் இருந்தது வருகைக்கு நன்றி சார் / மேம்

    ReplyDelete

  19. @கரந்தை ஜெயக் குமார்
    கதையை ரசித்தீர்கள் இல்லையா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  20. ஹா... ஹா.... மிக அருமை ஐயா...
    கண்ணா லட்டு தின்ன ஆசைய செம...
    வாழ்த்துக்கள் ஐயா...

    வேதாளம் எழுதிக்கிட்டே போ சரியாவரும்ன்னு சொன்னதும் சரிதான்.

    ReplyDelete

  21. @ அஜய் சுனில்கர் ஜோசப்
    வந்து ரசித்ததற்கு நன்றி சார்

    ReplyDelete

  22. @ ஜேகே 22384
    ஐயா வருகைக்கு நன்றி. கோட்டயம் புஷ்பநாத் யாரென்றே எனக்குத் தெரியாதுகதை சொல்லும் போது
    வழக்கத்துக்கு மாறாக இருப்பதுதான் என் இயல்பு நான் எழுதுவதைப்பார்த்து வேதாளம் ஓடியே போய் விட்டது

    ReplyDelete
  23. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    கதை கதையாம் காரணமாம் என்று துவங்கி கதை சொல்வதைக் கேட்டிருக்கிறேன் கருவாட்டை மறைத்த கணவன் மனைவியை விரட்டும் கதை தெரியாது வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  24. @ பரிவை சே குமார்
    வருகைக்கு நன்றி சார். வேதாளம்சொன்னதைக் கேட்டு நான் எழுதிப் போனதைப் பார்த்த வேதாளம் பயந்து ஓடியே போய்விட்டது

    ReplyDelete
  25. எதிர்பாராத முடிவு. அதுதானே ஒரு கதைக்கு வெற்றி. கதையை இரசித்தேன்!

    ReplyDelete

  26. @ வே நடனசபாபதி
    வேதாளத்தின் சொல்கேட்டு எழுதிக் கொண்டே போனேன் எதிர் பாரத முடிவு கண்டு வேதாளம் ஓடியே போய் விட்டது வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete