Wednesday, May 3, 2017

எண்ணத் தறியில் எட்டுமணி நேரங்கள்





எண்ணத் தறியில் எட்டு மணி நேரங்கள்
-------------------------------------------------------------------------

 இந்தப் பதிவை நான் வலையுலகில்    இருந்த ஆரம்பநாட்களில் எழுதியது  ஒரு    தொழிலாளியின்  எண்ண ஓட்டங்களைப் பகிர்வது போல் எழுதி இருந்தேன்  அதுவே என் எண்ணங்கள் சிலவற்றையும் கடத்த உதவியாய் இருந்தது ஆரம்ப காலத்தில் நான் பணியில் இருந்தபோது பலரது எண்ண ஓட்டங்கள் இருந்த நிலையை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்    இந்த முன்னுரை  இதைப் படித்தவர்கள்  ஒருவேளை ஏற்கனவே படித்தது என்று கூறினாலும்   எழுதி இருக்கும் செய்திகள் இப்போதும்  ரெலெவெண்டாக இருப்பதுபோல் இருக்கிறது  ஆகவே இதை மீள் பதிவாக்குகிறேன் 
    என்னுடைய  ஆங்கிலப்  பதிவான  RANDOM  THOUGHTS  IN  EIGHT HOURS - 
தமிழில்  மொழி  மாற்றம்  செய்து  எழுதியது.ஆங்கிலப்பதிவினைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இன்னும் இங்கே   

             மனித இயந்திரங்களை இயங்க வைக்கும் ஆலைச் சங்கு ஊதுகிறது. ...! சங்கோசையால்  கட்டுப்படுத்தப்படும் வாழ்க்கையும்  ஒன்றா.? விரக்தி ஏற்படுவதால்  என்ன பயன். .?வேலையைத் துவங்க வேண்டியதுதான்....நடக்கட்டும்மெஷினை   ஆன் செய். கருவிகளை  சுத்தம்  செய். திருத்தப்பட  வேண்டிய  பாகம்  மெஷினில்   பொருத்தப்படட்டும். ஹூம்..!  " ட்ரேசர்ஊடுருவும்  வழியில் பாகமும்   கடையப்படும் .

            மாற்றங்கள் இல்லாத, கட்டாயப்  படுத்தப்படும்  சங்கோசையால் கட்டுப்படுத்தப்படும் , இயந்திர வாழ்க்கை. அப்படி இல்லையென்றால்  யாருமே  வேலை

செய்ய மாட்டார்கள். காலையில் "பஞ்ச" செய்வதற்கு ஓடிவரும் ஆட்களைப் பார்க்கிறாய். அந்தக் கட்டாயமும் கட்டுப்பாடும் இல்லையென்றால் நேரத்துக்கு வேலைக்கு வருவார்களா.?"பஞ்ச" செய்ய வேண்டாத சூப்பர்வைசர்களும்   அதிகாரிகளும் எத்தனை முறை எவ்வளவு நிதானமாக வருகிறார்கள். நீள்பாதை  போட வேண்டியவர்களே  கிட்டப்  பார்வையினராகிறார்கள் . போதாக்குறைக்கு  "டிசிப்ளின்பற்றி  எல்லோரும் பாடம்  நடத்துகிறார்கள்.

            மெஷினில் வேகம் கூடுதலாக உள்ளது. சரிசெய். ஹூம் ! என்ன நினைத்துக் கொண்டிருந்தாய். டிசிப்ளின், ஒழுங்கீனம் அல்லது கட்டுப்பாடின்மை இதற்கு என்ன காரணம். ஒன்று தோன்றுகிறது. வேலைக்கு மூன்று நிலைகளில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.தொழிலாளி, மேற்பார்வையாளர், அதிகாரி.-- இவர்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள்.கிட்டத்தட்ட ஒரே நிலையில்  இருப்பவர்கள்மொழிஇனம்கலாச்சாரம்பின்னணிவயசு  போன்றவற்றில்  மெத்த  மாறுதல்  இல்லாதவர்கள்வித்தியாசம்தான்  என்ன.? சிலபல  ஆண்டு  படிப்பறிவு. .-- இது  எவ்வளவு  பெரிய  மாற்றத்தை  ஏற்படுத்துகிறதுபுத்திசாலியானசூட்டிகையான

கடினமாக  உழைக்கும்   இளைஞர்கள்  கீழ்  மட்டத்தில்  நிறைந்த  அளவிலும், .- எல்லா
விதத்திலும்   சாதாரணமான  அல்லது  அதற்குச்  சற்றே  குறைவான, ஆனால்  கொடுத்து  வைத்த  இளைஞர்கள் உயர்  மட்டத்தில் நிறைந்த  அளவிலும் .-- இரண்டு   குழுவிலும்  அனுபவம்  இல்லாத, சூடான  இரத்தமுள்ள, மன  முதிர்ச்சியடையாத   இளைஞர்கள்இங்கு ஒழுக்கமும்  கட்டுப்பாடும்  எப்படி  காயப்படுத்தப்  படுகிறது.? தொழிலாளிக்கு  உள்ள  பிரச்சனைக்குத்  தீர்வு  கொடுக்க  வேண்டியது  மேற்பார்வை  யாளரின்  கடமை. அவருக்கு  ஏற்படும் தொல்லைகளுக்கு  தீர்வு  காண்பது  அதிகாரிகளின்   கடமை . ஆனால்  தொழிற்சாலைகளில்  மூன்றாண்டு , ஐந்தாண்டு  தொழிற்கல்வி  பட்டப்படிப்பு  வெறும்  ஏட்டுச்சுரைகக்காயதானே.? பிரச்சினைகளுக்கு  தீர்வு  காணும்  அனுபவம்  எங்கே.? அனுபவம்  ஏற்படும்  முன்னே உயர் பதவி --படிப்பின்  அடிப்படையில் அமர்த்தப் படுகிறார்களே. வேண்டுமானால்  பிரச்சினையை  எடுத்துச்  சொல்லும்  முறையில்  மாறுதல்  இருக்கலாம். தொழிலாளி  தமிழில்  சொன்னால்   அதிகாரி  ஆங்கிலத்தில்  சொல்லுவார். கீழ்மட்டத்  தொழிலாளிகளால்  சொல்லப்படும்  பிரச்சினைகள்  அநேகமாக  தொழில்  ரீதியில்  தீர்க்கப்  படாமலேயே  இருக்கும் . தேவைகள்   மாற்றி  அமைத்துக்  கொள்ளப்படும் . காம்ப்ரமைஸ்  செய்யப்படும் .தொழிலாளிக்கு  இது  புரிந்தாலும்  காட்டிக்கொள்ள  மாட்டான். அவனுக்கு  மேலதிகாரிகளின்  தயவு தேவை..தாமதமாக  வர, சீக்கிரம்  போக, ஓவர்டைம்   வேலை  கிடைக்க..- சலுகைகள் தேவை. தனிப்பட்ட  முறையில் அதிகாரிகளும்  ஆட்களை  இந்தச சில்லரைப் பிச்சைகள்  மூலம்  அடக்கி  வைக்கின்றனர். அதிகாரிகளிடம்  மதிப்பு, மரியாதை, விசுவாசம்  தேய்கிறது. அதிகாரிகுறி, இலக்கு இவற்றுக்கு  கொண்டு  செல்பவனாக  இல்லாமல்  உத்தரவு  பிறப்பிப்பவனாக  இருக்கிறான். எங்கிருந்து  ஒழுங்கு  வரும், எங்கிருந்து  கட்டுப்பாடு  வரும் . மேலிருப்பவன்  முன்  மாதிரியாக  இருக்கவேண்டும். எல்லோரும்  ஏனோதானோ  என்று  இருக்கிறோமே  தவிர, கட்டுக்கோப்பாக  சரியான  முறையில்  சிந்தித்து  செயல்படுவதில்லை.

          இவையெல்லாம்  விவாதத்துக்கு  உட்பட்டவையாக  இருக்கலாம்சில  நேரங்களில்  விவாதங்களினால்  நல்ல  தீர்வுகள்  கிடைக்கிறதோ  இல்லையோ , ஆற்றாமையை  வெளிப்படுத்திய  திருப்தியாவது  கிடைக்கும்இன்னுமொரு எண்ணம்.

பதவி உயர்வு..! எங்கிருந்துதான்   இவர்களுக்கு   இப்படி ஒரு கொள்கை கிடைத்ததோ.  இன்ன   பதவியில்  இவ்வளவு  வருடங்கள்  கழித்தால்  பதவி உயர்வு. அதுவும்  எப்படி?.
உயர்  மட்டத்தில்  மூன்று  நான்கு  ஆண்டுகளில்  பதவி உயர்வும்தொழிலாளிகளுக்கு  எட்டு  பத்து  ஆண்டுகளுக்குப் பிறக்குமாம்ஒரு தொழிலாளி  வேலை செய்து  குறைந்தது  நான்கு ஐந்து  பதவிகள்  பெற  முடிந்தால்தான்  ஒரு மேற்பார்வையாளராக   வர முடியும்.. இதற்குள்  அவன் தலை  நரைத்துபல்  போய  படு கிழவனாகி  விடுவான்இதற்கெல்லாம்  அடிப்படை  காரணம்  என்ன. ? மூன்று, ஐந்து  ஆண்டுகள்  படிப்பா.? என்ன இது. ? என்னதான்  வேலை செய்தாலும்  முன்னேற  முடியாத  முட்டுக்கட்டை.

             மெஷினில்   பொருத்தப்பட்ட   பாகம் முடிவடைந்து விட்டதுஅதை   எடுத்து   கருவிகளை   சுத்தம் செய். இன்னுமொரு  திருத்தப்பட  வேண்டிய   பாகம்   பொருத்தப்  படட்டும். " ட்ரேசர்ஊடுருவட்டும். கவனமாகப்   பார்த்துக்கொள்கொஞ்சம் இருஒரு  சிகரெட் புகைத்து  விட்டு  வரலாம்யாராவது   நண்பன்  கிடைப்பான். எவ்வளவோ   சங்கதிகளை   விவாதிக்கலாம். 


             கோவிலில் சிலைகளை கும்பிடுவது  பற்றி என்ன   எண்ணுகிறாய்.. விசேஷமாக   எதுவுமில்லைஇது  விவாதிக்கக் கூடிய  விஷயமல்லமுடிவு  ஏற்பட  முடியாத  விவாதங்களும்   பிரயோசனமில்லை. ஆனால் தனிப்பட்ட  முறையில்   சிலைகள் வணங்கப்  படுவது  குறித்து  எனக்கு  ஆட்சேபனையில்லைவணங்குதல்  அல்லது  தொழுதல்  அல்லது   வேண்டுதல்  என்றால்  என்ன.? யார்  யாரை  வேண்டுகிறார்கள்.? சுலபமானதுகோவிலில்  வேண்டுபவன்  அவன் ஆத்மா  விடுதலைக்காகவும்மன நிம்மதிக்காகவும்  தொழுகிறான்அவன் ஆத்ம  விடுதலை   யார் செய்ய  முடியும்.? அவனேதான். அவன் அவனைத்தான் அவன் விடுதலைக்காக   வணங்க  வேண்டும் .! குதர்க்கமாகத்  தோன்றலாம்ஆனால் அதுதான்   வேதங்களும்   ஞானிகளும்  கூறுவதாகத்  தோன்றுகிறதுஒரு சிலையோ  படமோ  ஒருவனின்  பிரதிபலிப்பைத்தான் தோற்றுகிறது. உண்மையில்  ஒரு பூவோ பழமோ  நிவேதனமாக   வைத்து   ஆராதிக்கையில்   வேண்டுபவனும்  வேண்டப்படுபவனும் ஒரே  நிலையில் நிறுத்தப்படுகிறார்கள். சிலையோ படமோ தன  உள்ளத்தின்  மெல்லிய திரையிடப்பட்ட  பிரதிபலிப்பேயாகும்அந்நிலையில்  எண்ணத்தின்  வாயிலாக  அகமும் புறமும்  ஒன்றோடோன்று  கலந்து  தேடுபவனும்  தேடப்படுபவனும்  ஒன்றாகிறதுஇந்நிலையில்  ஒரு  கண்ணாடி  முன் அமர்ந்து , " நீதான்  அது, " என்று   தன பிரதிபிம்பத்தைப்  பார்த்து  சொல்லமுடிந்தால் , படம் ,சிலை , பிம்பம்  எல்லாம்   ஒன்றுதான்.. ...! இதெல்லாம்  சற்று  கூடுதலோ. .நமக்கு  ஒத்து  வராதுசிலையை   வணங்குபவர்  வணங்கட்டும்மற்றவர்  வேண்டாம்.


            சிகரெட்   புகைப்பதில் நேரம் செலவாகி  விட்டது. வேலை தொடரவேண்டும். இரண்டாவது   பாகம் முடிந்ததா..? இன்று செய்து முடிக்க  வேண்டியது  ஏழு  பாகங்களா. ? முடிக்கலாம்.


            ஏன் சிகரெட் புகைக்கிறாய். ? உன்னையே  தெரிந்தவன்  படித்தவன்  பகுத்தறிவு   உள்ளவன்  என்று பீற்றிக்கொள்பவன் உடலுக்குக்  கெடுதல்  என்று   தெரிந்தும்  ஏன்   புகைக்கிறாய்.? புகைத்துச்  சாகிறாய்.?  புகை பிடிப்பவர்கள்  அனைவரும்  அதனால்  சாகிறார்களா.? ஆனாலும்  ஏன் புகைக்கிறாய் ? பழக்கத்துக்கு   அடிமை  ஆகிவிட்டாயா.? இல்லை.. ஏதோ  ஒரு சிறிய  இன்பம்நரம்புகளை கிளுகிளுக்கச் செய்து புத்துணர்வு  ஊட்டுகிறது. என்றைக்கானாலும் சாகத்தானே வேண்டும். இந்த சில்லறை   இன்பங்களையாவது   அனுபவிக்கக்கூடாதா.? .... எவ்வளவு   விந்தையான அடி முட்டாள்தனமான   எண்ணங்கள்உன்னை எப்படித்  திருத்துவதுஉன்னை நம்பி  எத்தனை  பேர்  இருக்கிறார்கள். நீ  ஒரேயடியாக   சாகாமல் நொடி நொடியாகச் செத்தால்  யார்  அவதிப்படப்  போவது..? உனக்கு  மன  உறுதியில்லைவெறும்  பேச்சுத்தான்கட்டுப்பாடு  கிடையாதுஉன்னை  நீயே  ஏமாற்றிக் கொள்கிறாய்இல்லை.  என்னால்  புகை  பிடிப்பதை  நிறுத்த முடியும்இது  சவால்.! பார்க்கலாம்.


             மெஷினில்  பொருத்தப்பட்ட  பாகம் முடிந்ததா, சரியாகப் போகிறதா என்று   பார்ப்பதுதான்  வேலை. எல்லாம்  இயந்திரத்தனமானது. வாழ்க்கையே   மாற்றமில்லாத   இயந்திர கதியில் ஓடுகிறது. இல்லை. ..வாழ்க்கை இயந்திரமானது   அல்லஅப்படி  ஒரு எண்ணம்  ஏற்பட சூழ்நிலையும்   அணுகுமுறையும்தான்   காரணம். வேலை  செய்பவன்  மாற்றமில்லை  என்று  ஏங்குகிறான். இல்லாதவன் வேலையே  இல்லை  என்று மறுகுகிறான். " கும்பி கூழுக்கு  அழுகிறது, குடுமி  பூவுக்கு   அழுகிறது."  பொருத்திய  பாகம்  முடிந்தது. மாற்று. 


             பஞ்சசீலம்  பாண்டுங்  மாநாட்டில்  பிரஸ்தாபிக்கப்பட்டது  என்பார்கள்இங்குள்ள  பஞ்சசீலம்  என்ன தெரியுமா.. காலையில்  பஞ்ச இன் ,காபி  இடைவேளைஉணவு  இடைவேளை, தேநீர்  இடைவேளை, மாலையில்  பஞ்ச அவுட். இந்த முக்கியமான  ஐந்து குணங்கள் வழிமுறைகளாக   அப்பழுக்கற்று   கடை பிடிக்கப்படுகிறது. 


             இதோ வருகிறார் குட்டி  அதிகாரி. ஏதாவது   கேட்பாரோ. ...இல்லை. .அவருக்கு  வேண்டியது  ஒரு வணக்கம். அதுவும்  கூழைக்  கும்பிடாக  இருநதால்  இன்னும்  நல்லதுஇவர் அதற்குத்  தகுதி  உள்ளவரா.? மரியாதையும்  மதிப்பும்  கடைப்பொருளா   வாங்குவதற்கு. ? கொடுத்துப்  பெற  வேண்டியது  அல்லவா..?  மேலதிகாரி  என்ற  ஒரே  தகுதி  போறுமா. ? அடடா.. .. நீ கேள்வி  கேட்காத  இடமே  இல்லையா.? அவருக்கு  வேண்டிய  வணக்கத்தைக்  கொடுத்து  ஆளை  விடுவாயா.. அதில்லாமல்... .. மேலதிகாரிகள்  என்று  சொல்லும்போது  எத்தனை பேர். எத்தனை  வகை   இவர்களுக்கெல்லாம்  உண்மையிலேயே  என்ன  வேலை.. உற்பத்தி  ஏன்      பெருகவில்லை  என்று எல்லோரும்  கேட்கிறார்களே  தவிர  உண்மையான  காரண   காரியங்களை  ஆராய்ச்சி  செய்து  மாற்று  நடவடிக்கைகள்  எடுப்பதில்லைஎந்த   நேரத்திலும்  அவர்களைத்  தவிர   மற்றவர்கள்தான்  தவறுகளுக்குப்  பொறுப்பு.


            உண்மையிலேயே   உற்பத்தி  ஏன்  பெருகவில்லை.. அதிகாரிகள்   கூறும்   காரணங்கள் பணமுடக்கம், கச்சாப் பொருட்கள்  இல்லாமைஊழியர்களிடம்   ஒழுங்கின்மை  இத்தியாதி   இத்தியாதி . ஆனால்  நடைமுறையில்  நாம்  பார்ப்பது  ஒரு  வருடத்தில்  ஐம்பது  சதவீதத்துக்கும்  மேல் கடைசி  இரண்டு  மூன்று  மாதங்களில்தான்   உற்பத்தியாகிறது. கடைசி  இரண்டு  மூன்று  மாதங்களில் மட்டும் மூலதனமும்கச்சாப்பொருள்   தட்டுப்பாடும்   ஊழியர்களின்   ஒழுங்கீனமும்   மாயமாய்   மறைகிறதா. 

யார் காதில்  பூசசூடுகிறார்கள் ? இந்த அவசர  அடிவேலையில்  பாதிக்கப்  படுவது   உற்பத்திப்  பொருளின்  முக்கிய  அம்சமான  தரமல்லவா,?

             இந்த நிலையில் நாம் பீற்றிக்கொள்வதில்  மட்டும் எந்தக் குறையும்  இல்லைதொழில் நுட்ப தேர்வு  பெற்ற, உயர் கல்வி  பயின்ற  வல்லுனர்களை  மூலாதாரமாக   உபயோகித்து  முன்னேறுகிறோம்  என்று முழங்குகிறோம்ஆனால் நாம்  காணும்  தொழில் நிலையும் ஒழுக்க  நிலையும்உற்பத்தி   நிலையும் நமக்குச்  சொல்லும்  செய்தியே  வித்தியாசமாக  அல்லவா  இருக்கிறதுஇங்கு  வெடிக்கும்  உண்மைதான்  எது. ? ஆராயலாமா.?


              எங்குதான்  பிரச்சினை. ?  அரசாங்க  நிலையிலாநிர்வாக நிலையிலாஊழியர்கள் நிலையிலா, .?யார்தான்  இதற்குப்  பொறுப்பு.?  எங்குதான்  பாட்டில்நேக்

(BOTTLE  NECK ).? ஆம். . கேள்வியிலேயே   பதில் தெரிவதுபோல்  தோன்றுகிறதே. .சீசாவின்   கழுத்து  மேல்   பாகத்தில்தானே.. . புரிந்ததா..?  விவாதிக்கலாமா..?


              இதுவரை நான் என்ன செய்தேன்  என்று கேள்வி கேட்கிறார்   என்  மேற்பார்வையாளர . எண்ணிப்  பார்க்கிறேன் . ஏழு  செய்ய  வேண்டிய  இடத்தில்  எட்டு.  ஷொட்டு கொடுப்பாரா. ? ஊஹூம் ..! வீண்  எதிர்பார்ப்பு.. அனைவரையும்  இயக்கும்  ஆலைச் சங்கு  இனிமையாக  ஒலிக்கிறதுஆஹா .. வீடு  நோக்கி  ஓடு. .!     

===========================================












                             

28 comments:

  1. மனதில் எழும் எண்ண ஓட்டத்தை அழகாக கேள்விக்கணைகளோடு எழூதி இருக்கின்றீர்கள் ஐயா

    அடடா... நீ கேள்வி கேட்காத இடமே இல்லையா ?

    இந்த வரிகளை மிகவும் இரசித்தேன்

    செல்லில் எழுதுவதால்..........

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது ஜி கேள்விகளைக் கேட்டு தெளிவுபெற விழையும் குணம் வருகைக்கு நன்றி

      Delete
  2. ஆலையில் நுழைந்து 8 மணிநேரங்களுக்கு மனிதனும் இயந்திரன்தான் ...அருமை ..எத்தனை கேள்விகள் ..விடை கிடைத்ததா

    ReplyDelete
    Replies
    1. ஆனால் மனிதனுக்கு சிந்தனை என்ற ஒன்று இருக்கிறதே ஆங்கிலப் பதிவை வாசித்தீர்களா அதுதன் ஒரிஜினல்

      Delete
  3. எண்ண ஓட்டம்.... ரசித்தேன்.

    தமிழ் மணம் - சுற்றிக்கொண்டே இருக்கிறது! பார்க்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. வந்து ரசித்தமைக்கு நன்றி சார்

      Delete
  4. ஆகா, அந்த நாட்களிலேயே தத்துவார்த்தமான மனநிலையில் இருந்திருக்கிறீர்கள்! பணியாளார்- அதிகாரி உறவுமுறை பற்றி நீங்கள் எழுதுவதெல்லாம் நான் Management Books இல் MBA வில் தான்படித்தேன். (2) கணக்கு ஆண்டின் இறுதி மாதங்களில்தான் அதிக உற்பத்தி காட்டப்படும் என்பது முதலாளித்துவத்தின் ஓர் அம்சமே. அதைவைத்தே அதிகாரிகளின் பதவி உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் சீராக உற்பத்தியைக் கொண்டுவந்தால் என்ன? செய்யமாட்டோம். (3) பஞ்ச சீலம் என்பது நேரு காலத்துக் கொள்கை. இப்போதைய வாசகர்களுக்குத் தெரியாது. அரதப் பழசான விஷயம். ஆனால் உங்கள் நிறுவனத்தில் "பஞ்சசீலம் என்றால்.. காலையில் பஞ்ச்-இன், காபி இடைவேளை, உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை, மாலையில் பஞ்ச்-அவுட். இந்த முக்கியமான ஐந்து குணங்கள்" என்று அழகாக விளக்கினீர்கள். இன்று அனைத்து நிறுவனங்களிலும் இதே நிலைமைதான். வேலை செய்பவன்தான் செய்துகொண்டிருக்கிறான். OB அடிப்பவன் OB அடித்துக்கொண்டுதான் இருக்கிறான். நல்லவேளை நாம் ஒய்வு பெற்றுவிட்டோம். இனி யாரையும் குறைசொல்லவேண்டாம்!

    ReplyDelete
    Replies
    1. தத்வார்தம் ஒன்றுமில்லை சார் நிகழ்வுகளின் பிரதிபலிப்பை பகிர முயன்றிருக்கிறேன் யாரையும் குற்றம் சொல்ல அல்ல இதுஆங்கிலப் பதிவை வாசித்தீர்களா அதுதான் முதலில் எழுதியது

      Delete
  5. தனக்குள்ளேயே இறைவனைத் தேட வேண்டும் என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் எல்லோராலும் முடியாத ஒன்றல்லவா?

    ReplyDelete
    Replies
    1. தன்னுள் இருக்கு இறைவனை மறந்து பிற இடங்களில் தேடுவது கண்ட ஆதங்கம்தான் இது வருகைக்கு நன்றி மேம்

      Delete
  6. எட்டு மணி நேரம் நடக்கும் விசயத்தை, ஒரு போஸ்ட்டில் கொண்டு வருவதென்பது மிகக் கடினமானதே, இருப்பினும் அழகா கட்டுரை வடிவில் சொல்லிட்டீங்க..

    ReplyDelete
    Replies
    1. இதன் ஆங்கிலப் பதிவி ந் தலைப்பைப் பார்த்தீர்களா Random thoughts in eight hours வருகைக்கு நன்றி அதிரா

      Delete
  7. உங்களுக்கு வோட் போட்டு விட்டேன், நீங்கள் போடப் பழகிட்டீங்களோ?.. சகோ டிடி யைக் காணவில்லை எனத் தேடினால்ல்ல்.. கில்லர் ஜி பக்கத்தில் தலை தெரியுது:).. உதவி தேவை எனில் பிடியுங்கோ டிடியை.

    ReplyDelete
    Replies
    1. முதலில் நன்றி எனக்கு ஓட்டுப் போடத் தெரியவில்லை/முடியவில்லை எனக்கே வோட் போடுவதில்லை

      Delete
  8. எண்ணக் கோவைகள் மனதைப் போலவே குறுக்கும் நெடுக்கும் போகின்றன.

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் ஆங்கிலத்தில் Random thoughts in eight hours என்னும் தலைப்பு நன்றி சார்

      Delete
  9. எண்ணவோட்டத்தை ரசித்தேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஐயா

      Delete
  10. என்ன ஓட்டம்! உங்கள் எண்ண ஓட்டம்! மனம் அங்கும் இங்கும் அலைபாய்வதை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். பதிவை இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. எட்டு மணிநேரப் பணி புரியும் போது எழுந்த சிந்தனைகளே பதிவாயிற்று ரசித்ததற்கு நன்றி ஐயா

      Delete
  11. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
    நுணுக்கமான செய்திகளை விடாமல் பகிர்ந்துகொள்ளும் உங்கள் பாணி எங்களை வியக்க வைக்கிறது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் எழுத்து மகிழ்ச்சி தருவதில்லை. முன்போல் சிந்தனையும் வருவதில்லை. இருந்தாலும் எழுதுவேன் தொடர்ந்து வந்து ஊக்கப் படுத்துங்கள் ஐயா

      Delete
  12. எதனையும் மாற்று சிந்தனையில் யோசித்து விவாதம் செய்யும் உங்கள் வழி எப்போது தனி வழிதான். அது உங்களது பதிவாகட்டும் அல்லது சிறுகதையாகட்டும் எதிலும் எதிரொலிக்கக் காண்கிறேன்.

    // மாற்றங்கள் இல்லாத, கட்டாயப் படுத்தப்படும் சங்கோசையால் கட்டுப்படுத்தப்படும் , இயந்திர வாழ்க்கை. அப்படி இல்லையென்றால் யாருமே வேலை செய்ய மாட்டார்கள். //

    மேலே, வேலையில் இருந்தபோது நீங்கள் நாளும் சிந்தித்தவை, மே தினத்தை முன்னிட்டு எழுத்துவடிவம் பெற்று இங்கு வரிகளாகி விட்டன என நினைக்கிறேன். . பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு வந்து விட்டாலும், இன்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் தொடங்கிய ஆலைச்சங்கின் ஓசை இன்றும் தொடர்கின்றது; நீங்கள் சொல்வதுபோல அந்த சங்கோசைதான் இன்றும் கட்டுப்படுத்துகிறது.

    // சிலையை வணங்குபவர் வணங்கட்டும். மற்றவர் வேண்டாம்.//

    ’ தெய்வம் என்றால் அது தெய்வம்; வெறும் சிலை என்றால் அது சிலைதான். உண்டு என்றால் உண்டு; இல்லையென்றால் அது இல்லை’ என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகள் தான் வந்து போயின. இதுதானே உண்மை. இருந்தாலும் வெற்றிடத்தை நினைத்துக் கொண்டு, இறை வணக்கம் செய்வதை விட ஒரு குறியீடாக இருப்பதும் நல்லதுதான்.

    பல்வேறு தொழிலாளர்கள் உள்ள ஒரு பெரிய தொழிற்சாலையில்

    // எங்குதான் பிரச்சினை. ? அரசாங்க நிலையிலா, நிர்வாக நிலையிலா, ஊழியர்கள் நிலையிலா, .?யார்தான் இதற்குப் பொறுப்பு.? எங்குதான் பாட்டில்நேக் (BOTTLE NECK ).? ஆம். . கேள்வியிலேயே பதில் தெரிவதுபோல் தோன்றுகிறதே. .சீசாவின் கழுத்து மேல் பாகத்தில்தானே.. . புரிந்ததா..? விவாதிக்கலாமா..?//

    என்று விவாதத்தை தொடங்கி வைத்தாலும், நீங்களே, BOTTLE NECK என்று தீர்வும் சொல்லி விட்டீர்கள். ஆனால் ஒருவர் மீது ஒருவர் பழி போட்டு தப்பும் விசாரணகள்தான் இங்கு அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. எது மாற்றுச் சிந்தனை என்பதே விளங்கவில்லை.எல்லோரும் சிந்திக்காமல் பழைய போட்ட பாதையிலே பயண்ம் செய்வதைப் போல் இல்லாமல் எழுதுகிறேனா அதுவா.?உண்டு என்றால் உண்டு இல்லையென்றால் இல்லை என்று எப்படியும் யோசிக்கலாம் என்பதுபோல் என்னால் இருக்க முடியவில்லை இருந்தாலும் கடவுள் வழிபாட்டிலும் சீரான எண்ணங்கள் வேண்டும் என்று நினைக்கிறேன் பிரச்சனை எங்கு இருக்கிறதுஎன்று தெரியாமல் இல்லை. தெரிந்ததை எழுதி இருக்கிறேன் யாரும் விவாதிக்கவோ மாற்றுக் கருத்ட்க்ஹு கூறவோ முன் வருவதில்லை. என் கருத்தாவது பதிவில் இருக்கட்டுமே என்றுதான் என் தீர்வாக எழுதி இருக்கிறேன் அதுவும் பாட்டில்நெக் என்னும் வார்த்தை பிரயோகமப்படியும் சிந்திக்க வைத்தது வருகைக்கு நன்றிசார் .

      Delete
  13. //இதோ வருகிறார் குட்டி அதிகாரி. ஏதாவது கேட்பாரோ. ...இல்லை. .அவருக்கு வேண்டியது ஒரு வணக்கம். அதுவும் கூழைக் கும்பிடாக இருநதால் இன்னும் நல்லது//
    இந்த சிந்தனை அதாவது கீழ்நிலையில் இருப்பவர் அதிகாரிக்கு வணக்கம் தெரிவிக்கவேண்டும் மேலதிகாரி தலையை மட்டும் ஆட்டி வணக்கத்தை ஒழுங்காக கூட சொல்வதில்லை.
    மேலை நாடுகளில் மேலாளர் தொழிலாளிக்கு வணக்கம் தெரிவிக்கலாம், யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்கள் வணக்கம் தெரிவிப்பது முறை...பதவியோ வயதோ தடை அல்ல..
    இந்தியாவில் மட்டும் ஏன் சார்.. இந்த் அவழக்கம் இதர்கு ஏதாவத் காரணம் உண்டா சார்?

    ReplyDelete