Tuesday, January 16, 2018

(புன்) நகைத்துச் செல்ல


                              (புன்)    நகைத்துச் செல்ல
                               -------------------------------

இவற்றைப்படித்து காதில் ரத்தம்வந்தால் நான்பொறுப்பல்ல
கேள்வி –எந்தப்போரில் நெப்போலியன்  இறந்தான்
பதில் – அவனது கடைசிப் போரில்
கேள்வி –சுதந்திரப் பிரகடனம்  எங்கு கயெழுத்திடப்பட்டது?
பதில் –பிரகடனப்பத்திரத்தின் கடைசியில்
கெள்வி –தோல்விகளின் காரணமென்ன ?
பதில் –பரீட்சைகள்
கேள்வி _கலைச் சிற்றுண்டியில் எதை சாப்பிட முடியாது?
பதில் –மதிய இரவு உணவுகளை
கேள்வி –அரை ஆப்பிள் மாதிரி தோன்றுவது எது?
பதில்- அதன்மற்ற பாதி
கேள்வி-சிவப்புக் கல்லை நீலக்கடலில் எறிந்தால் என்னாகும்  ?
பதில் –ஈரமாகும்
கேள்வி-ஒருவர் எட்டு தினங்கள் தூங்காமல் இருந்தால் என்னாகும் ?
பதில் –ஒன்றுமாகாது.அவர் இரவில் உறங்கலாம்
கேள்வி-உன் ஒரு கையில் நான்கு ஆப்பிள்கள் மூன்று ஆரஞ்சுகள்
மறுகையில் நான்கு ஆரஞ்சுகள் மூன்று ஆப்பிள்கள் இருந்தால் உன்னிடம் இருப்பது என்ன?
பதில் –இரண்டு பெரிய கைகள்
கேள்வி –ஒரு யானையை ஒரு கையால் தூக்குவது எப்படி?
பதில்  -- ஒருகையுள்ள யானையே கிடையாது
கேள்வி –எட்டுபேர் ஒரு சுவற்றை நான்கு மணி நேரத்தில் கட்டினால் நான்கு பேர் அச்சுவற்றைக் கட்ட எவ்வளவு நேரமாகும் ?
பதில்  நேரமே வேண்டாம் .. சுவர் ஏற்கனவே கட்டியாயிற்றே
கேள்வி-ஒரு முட்டையை காங்கிரீட்  தளத்தில் விரிசலாகாமல் போடுவது எப்படி ?
பதில் –சாதாரணமாக காங்கிரீட் தளங்கள் விசிசலாவதில்லை
கேள்வி – River Raavi  flows in which state
பதில் In fluid state

 இனி கொஞ்சம் ஆங்கில அறுவை

1)   At a movie theatre  which arm rest is yours
2)   In the word scent  is S silent or C silent
3)   If people are evolved from monkeys  why are monkeys still around
4)   Why is there a D in fridge but not in refrigerator
5)   Who knew what time it was when the first clock was made
6)   If pros and cons are opposite won”t the the opposite of progress be congress
7)   Wonder why the word funeral starts  with FUN

டிஸ்கி … இங்கு எழுதப்பட்டவற்றுக்கு நான்பொறுப்பல்ல கேட்டதும் படித்ததும்பகிரப்படுகிறது
  
   
 
  

33 comments:

  1. காதுல லேசாக ஈரம் ஒழுகியது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. துடைத்துவிட்டுக் கொண்டு ரசித்தீர்களா வருகைக்கு நன்றி ஜி

      Delete
    2. தம வாக்குக்கு நன்றி ஜி

      Delete
  2. ஓகே ரகம். எழுத்துப்பிழைகளைப் பார்த்தேன். இரண்டு கேள்விகள் சரியில்லை.

    எட்டு தினங்கள் தூங்காமல், (இது பகலைக் குறிப்பதல்ல), ஒரு யானையை ஒரு கையால் (கேள்வி, பதில் தவறு).

    மற்றபடி ஒரு பதிவைத் தேத்திவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. எடு தினங்கள் ஆங்க்லத்தில் இருந்து மொழி பெயர்த்தது எழுத்துப் பிழைகள் கவனக் குறைவு ஆமாம் நீங்கள் என்ன நக்கீரன் பரம்பரையா வருகைக்கு நன்றி

      Delete
  3. ஏற்கெனவே சமூக ஊடகங்களில் படித்தவைதாம் என்றாலும் ஆங்கிலத்தில் இருப்பவை எனக்குப் புதிதாக இருந்தன. குறிப்பாக, காங்கிரசும் பிராகிரசும் - சிரித்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு சின்ன உலகம் பகிர நினைப்பவைகள் ஊடகங்களில்வந்திருக்கலாம்வருகைக்கு நன்றி சார்

      Delete
  4. ஏற்கனவே படித்திருந்தாலும் இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசிப்புக்கும்நன்றி ஐயா

      Delete
  5. ஆங்கிலம் படிக்கவே முடியலை! மற்றப்படி இம்மாதிரிக் கேள்விகள் எம்பிஏ தேர்வில் கேட்கப் படுகிறதாக அறிந்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலம் படிக்க முடியவில்லையா எழுத்துருக்கள் சின்னதானால் இப்போது பெரிது செய்திருக்கிறேன் இம்மாதிரி கடிகேள்விகளா எம் பி ஏவில் கேட்கிறார்கள்

      Delete
  6. மாடியில் இண்டர்வ்யூ.. நேர்காணலில் ஒருவரிடம் கேட்ட கேள்வி:

    "எத்தனை படி ஏறி வந்தீர்கள் என்று தெரியுமா?"

    "தெரியும். எத்தனை படிகள் இறங்கிப் போக வேண்டுமோ அத்தனைப் படிகள் ஏறிவந்தது."

    ReplyDelete
    Replies
    1. சமர்த்தான பதில். சமத்காரமான பதில்!

      Delete
    2. @ஜீவி உங்களிடமும்சரக்குகள் இருக்கிறதோ வருகைக்கு நன்றி சார்

      Delete
    3. @ஸ்ரீ இரண்டுக்கும் வித்தியாசம் என்ன

      Delete
    4. எனது 18 வயதில் நான் சந்தித்த ஒரு நேர்காணலில் என்னிடம் கேட்கப்பட்டதும், அதற்கு நான் சொன்ன பதிலும் இது சார்.

      எப்பொழுதுமே என்னை முன்னிருத்திக் காட்டிக் கொள்ளாமல் மூன்றாவது நபரின் அனுபவம் போலவும், இல்லை கதை நிகழ்வுகளாவும் வெளிபடுத்துவது எனது வழக்கம், சார்.

      Delete
    5. உங்களை முன் நிறுத்துவது தவறல்லஎன்பது என் அபிப்பிராயம்சார்

      Delete
    6. தவறில்லாமல் இருக்கலாம். ஆனால் எனதல்லாத பிறரின் அனுபவம் என்றால் தான் வாசிப்பவருக்கும் அது பிடிக்கும். சுதந்திரமாகவும் அது பற்றிக் கருத்துச் சொல்வார்.

      Delete
  7. கொஞ்சம் நெற்றியிலும் அடித்து கொண்டேன் சார் ஐயோ என்று
    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ஐயோ என்பது யெமனின் மனைவி பெயராம் வருகைக்கு நன்றிம்மா

      Delete
  8. நானும் ஏற்கெனவே படித்து ரசித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் படிக்காதது கிடைக்காதோ வருகைக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  9. Replies
    1. ரசிப்புக்கு நன்றி சார்

      Delete
  10. Replies
    1. புன்னகைக்க வைக்கலாம் வாய்விட்டு சிரிக்க வைத்ததா. வருகைக்கு நன்றி குமார்

      Delete
  11. உங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு பல புதிய செய்திகளைத் தருகின்றன.

    ReplyDelete
  12. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றிசார்

    ReplyDelete