Wednesday, November 6, 2019

பாடல் வரிகளில் பொருட்குற்றம்





                                             பாடல் வரிகளில் பொருட் குற்றம்
                                             ----------------------------------------------------
-சில ஆண்டுகளுக்கு முன்  வாழ்வியலில் சினிமா பாடல்கள் என் று ஒரு பதிவு எழுதிஇருந்தேன்   அதில் நம்வாழ்க்கை இயல்பில் சேரும் வண்ணம்   பல சினிமா பாடல்களிருப்பதைக் காட்ட  பல பாடல்வரிகளைத் தொகுத்து இருந்தேன்
அதில் ஒன்றுதான் பூமுடிப்பாள்என்னும்பாட்டு  அதற்கு பின்னூட்டமாக  டோண்டு ராகவன் கீகண்டவாறு எழுதி இருந்தார் 
dondu(#11168674346665545885)July 30, 2012 at 8:46 PM

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி இப்பாடலில் வரும் பொருட்குற்றம் பற்றி அறிய இங்கே செலவும், http://dondu.blogspot.com/2012/07/blog-post_30.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாடல்கள் பல கேட்கிறோம்  அவற்றில் ஆராய்ச்சி ஏதும் செய்வதில்லை  ஆனல் மறைந்த ராகவனின் பின்னூட்டம்  என் எண்ணத்தையே மாற்றிவிட்டது  பதிவர்களிலும் நக்கீரர்கள் இருப்பது தெரிந்தது
 பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்...
திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்

தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா...மன்.

மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க...
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர....
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர...
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க...
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க....
கொட்டியது மேளம்....
குவிந்தது கோடி மலர்...
கட்டினான் மாங்கல்யம்...
மனை வாழ்க துணை வாழ்க...
குலம் வாழ்க...

கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட

பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி.... கண்ணில் நீரெழுதி.....
P













14 comments:

  1. வேறு சில பாடல்களில் நானும் சில தவறுகள் கண்டுபிடித்து வைத்திருந்தேன்.  அது சரி, முன்னர் எழுதிய வரிகளே இல்லாமல் வேறு வரிகள் அப்புறம் (கொஞ்சம் பொருத்தமில்லாத குரலில்) இணைத்துப் பாடியிருப்பார்கள் கவனித்திருக்கிறீர்களா?

    உதாரணம் 

    ஒரிஜினல் : எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா   

    மாற்றப்பட்ட வரிகள் : எந்தன் பார்வையின் கேள்விக்கு பதிலென்ன சொலலடி ராதா 

    இன்னொரு உதாரணம் 

    அரச மரத்தின் இலைகளிலொன்று வந்துநின்றாற்போல் ஒருநினைப்பு 

    மாற்றப்பட்ட வரி :  அழகர் மலையின் இலைகளிலொன்று...

    :))) 

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லி இருப்பது மாற்றங்கள் தவறுகளல்ல வதனமே சந்த்ர பிம்பமோ முதலில் முகமது சந்திர பிம்பமாக இருந்ததாம் டோண்டுவின் சுட்டியைப் பார்த்தீர்களா

      Delete
  2. ஒரு சில பாடல்களில்/பிரபலமான பாடல்களில் கண்டு பிடிச்சிருக்கேன். ஆனால் ரொம்பவெல்லாம் ஆராய்ந்து கேட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. கண்டு பிடித்ததை பகிரலாமே

      Delete
  3. இசைக்கு ஏற்ப இசையமைப்பாளர்கள் மாற்றி விடுவது தான், இதற்கு காரணம்...

    ReplyDelete
  4. ஐயா பொருட்குற்றம் காண நாம் ஒன்றும் நக்கீரர் அல்ல, கண்ணதாசனும் பரமசிவன் அல்ல.  dondu பிளாகில் சுட்டிக் காட்டப்படுவது பொருட்குற்றமே அல்ல. திருமணம் பார்த்திப ஆண்டில் நடந்திருக்கக் கூடாதா? பாடல் காட்சியில் மெரினா கடற்கரை காட்டப்பட்டால் அது இடத் தோற்றப் பிழை என்றே கொள்ளவேண்டும். அது பாடல்வரிகளில் உள்ள பொருட்குற்றம் அல்ல.
    அண்மையில் மதராச பட்டினம் என்ற ஒரு திரைப்படம் கண்டிருப்பீர்கள்.  ஆங்கிலேயர் ஆண்ட  காலத்தில் நடந்த கதை. எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தற்போதைய சென்னையும் அங்கெங்கு தென்படும். 
    சிறியோர் செய்த சிறு பிழையாயின் பெரியோராயின் பொறுத்தல் கடனே என்று பெரியவர் தாங்கள் பொறுத்தல் வேண்டும்.

     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. பார்த்திப ஆண்டு என்பதுகாட்டப்பட்டிருந்த சூழல்களுக்குப் பொருண்டவில்லை என்படை டோண்டு அப்படிக்கூறி யிருக்கலாம் பிழைகளாக சுட்டியதைப் பகிர்ந்தேன் அவ்வளவுதன்

      Delete
  5. தோண்ட இந்த மாதிரி விஷயங்களில் மிகவும் எக்ஸ்பேர்ட்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அது பற்றித் தெரியாது டோண்டு அவர்கள் என்பதிவுக்கு இட்ட பின்னூட்டமதுவே கடைசி

      Delete
  6. எனக்குத் தெரிந்து பொருள் குற்றத்தோடு வந்த பாடல் வருஷம் 16 படத்தில் வரும்,'பூ பூக்கும் மாசம் தை மாசம்., ஊரெங்கும் வீசும் பூ வாசம்.. .' என்னும் பாடல். நம் நாட்டில் பூ பூக்கும் மாசம் என்றால் அது பங்குனி,சித்திரைதான். தை மாதத்தில் டிஸம்பர் பூதான்  பூக்கும், அதில் ஒரு வாசமும் இருக்காது. 
    மற்றபடி சொற் குற்றத்தோடு நிறைய பாடல்கள் உண்டு. பிரபலமான பாடல்கள் 'ஆயிரம் நிலவே வா..' ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..'

    ReplyDelete
  7. இதோஒரு திரைப்பாடல் அதாரிடி பிடியுங்கள் ஒரு பூங்கொத்து

    ReplyDelete
  8. //பதிவர்களிலும் நக்கீரர்கள் இருப்பது தெரிந்தது//

    ஹா.. ஹா. உண்மைதான். ஆனாலும் குற்றம் காணவும் அறிவு வேண்டும்.

    ReplyDelete
  9. நான் சொல்ல வந்ததுகுற்றம் மட்டுமே தேடும் பதிவர்கள்பற்றி

    ReplyDelete