Monday, May 16, 2022

இவை எப்படி இருக்கு

 

அன்பெனும் மாயை
----------------- 

ஒருவன் தன் மனைவி மக்கள் தன் மீது அத்யந்த அன்பு கொண்டிருப்பதாகவும்,, அது காரணம் தன்னால் துறவு மேற்கொள்ள முடியவில்லை என்றும் ஒரு பெரியவரிடம் கூறினான். அவர் “ நீ இன்னும் விஷயத்தை உள்ளவாறு புரிந்து கொள்ள வில்லை. நான் தரும் இந்த குளிகையை சாப்பிடு.. உனக்கு எல்லாம் புரியும்  என்று கூறி ஒரு மாத்திரஒயை அவன் உட்கொள்ளக் கொடுத்தார். அவன் தன் வீட்டுக்குப் போய் அதனை உட்கொண்ட சிறிது நேரத்தில் கை கால்கள் எல்லாம் நீட்டி விரைத்து சவம் போல் ஆகிவிட்டான். திடீரென அவன் மடிந்து விட்டது கண்டு அவன் மனைவி மக்கள் குய்யோ முறையோ என்று சிறிது நேரம் கதறினர். பிணத்தை சவ அடக்கத்துக்கு வெளியே கொண்டு வர முயற்சித்தனர். கை கால்கள் விரைத்துக்கொண்டு நீட்டி இருந்ததால் வாயிலில் அதைக் கொண்டு வர இயலவில்லை. உடனே ஒருவர் கோடரியைக் கொண்டு கதவைப் பிளக்க முயன்றார். அதைப் பார்த்த மனைவி “ ஐயோ அப்படி செய்யாதீர்கள். என் தலைவிதி நான் கைம்பெண் ஆகிவிட்டேன். குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு எனக்குண்டு. இந்த நிலையில் கதவை உடைத்து விட்டீர்களானால் அதை புதுப்பிக்க என்னிடம் வசதி இல்லை. விதி வசத்தால் அவர் மாண்டு போனார்அவர் சவத்தை துண்டுகளாக வெட்டிக் கொண்டு போகலாம்” என்றாள். அந்த நேரத்தில் குளிகையின் வீரியம் குறைந்து இறந்தவன் எழுந்து நின்றான். “ என்னைத் துண்டு துண்டாய் வெட்ட வேண்டுமென்றா சொன்னாய்” என்று சொல்லிக் கொண்டே துறவியாக வெளியேறி விட்டான்.

குழந்தைகள்  கூர்மையானவர்கள்
------------------------------
ஆசிரியர்:-ராமு,இன்றைக்கு நீ ஏன்  லேட்.?
ராமு:-   நான் வருவதற்குள் மணி அடித்து விட்டார்கள்,டீச்சர்.

ஆசிரியர்:- ராமு,பெருக்கல் கண்க்குகளை ஏன் தரையில் உட்கார்ந்து செய்கிறாய்.?
ராமு:-  பெருக்கல் கணக்குகள் செய்யும்போது டேபிள்ஸ் உபயோகிக்கக் கூடாது என்று சொன்னீர்களே டீச்சர்.

ஆசிரியர்:- ராமு,CROCODILE  எப்படி ஸ்பெல் செய்வாய்.?
ராமு:- KROKODILE
ஆசிரியர்:- தவறு.
ராமு:- இருக்கலாம். நான் எப்படி ஸ்பெல் செய்வேன் என்றுதானே கேட்டீர்கள்.

ஆசிரியர்:- ராமு,தண்ணீரின் ரசாயனக் குறியீடு கூறு.
ராமூ:- HIJKLMNO
ஆசிரியர்:- என்ன உளறுகிறாய்.
ராமு:- நேற்று நீங்கள் தானே கூறினீர்கள்,H to O என்று.

ஆசிரியர் :- ராமு,இன்றுள்ளது பத்து வருடங்களுக்கு முன் இல்லாதது ஒன்று கூறு.
ராமு :- நான்.!


ஆசிரியர் :- ராமு,நாய் பற்றி நீ எழுதிய கட்டுரை சோமு எழுதியது போலவே இருக்கிறது. காப்பி அடித்தாயா.?
ராமு :- இல்லை டீச்சர். நாங்கள் இருவரும் ஒரே நாயைப் பற்றிதான் எழுதினோம்.

ஆசிரியர்.:- ஜார்ஜ் வாஷிங்டன் அவருடைய தந்தையின் செர்ரி மரத்தை தன் கோடாலியால் வெட்டினார். அதை அவரது தந்தையிடம் ஒப்புக்கொள்ளவும் செய்தார். இருந்தும் அவர் தந்தை அவருக்கு தண்டனை தரவில்லை. ஏன்.?
ராமு. :- ஜார்ஜ் வாஷிங்டன் கையில் கோடாரி இருந்தது.

ஆசிரியர்.:- ராமு,ஒருவர் எந்த ஆர்வமும் காட்டாது இருக்கும்போதும் பேசிக்கொண்டே  இருப்பவரை என்ன என்று சொல்வது.?
ராமு.:- ஆசிரியர். !         ,   

14 comments:

  1. "சம்சாரம் இல்லையென்றால் சகலமும் போச்சு" அவர்கள் அன்புடன் குழந்தைகளை வளர்த்து இருந்தாலும், தனிமைப்பட்ட ஒருவனின் வாழ்வு நடைபிணம் தான்...! இறக்கும் வரையில் புத்தகமும் நட்புமே துணை...

    ஆனாலும் 'குஜால்' ஆட்களுக்கு அவ்வாறில்லை...!

    ReplyDelete
    Replies
    1. குஜால் ஆட்கள்யார் என்று புரியவில்லை

      Delete
  2. அனைத்தும் ரசித்தேன். பெண்கள் எளிதாகச்சமாளித்துவிடுவார்கள். ஆண்கள் தனியாக வாழ்வதுதான் கஷ்டம்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. புரிந்து கொண்டால் சரி

      Delete
  3. ஜோக்ஸ் ரசித்தேன் சார்.

    கதையும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது என்று சொன்னாலும் மனைவிகளை இப்படிச் சொல்லியே பொது அபிப்ராயமாகப் பெண்கள்/மனைவிகள் என்றாலே இப்படித்தான் இப்படியான கதைகள் என்றே ஆகிவிட்டது!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தப்பாகஎடுமில்லையே

      Delete
  4. பழங்கதை அருமை ஐயா.

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை ஐயா. ரசித்தேன்.

    ReplyDelete
  6. கதை நகைச்சுவை ஒருவர் உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாம் என்ற படிப்பினை..
    ஜோக்ஸ் ரசனை.

    ReplyDelete