Monday, December 5, 2022

நம்பிக்கைகள்

 


NAMBIKKAIGAL

                                                              நம்பிக்கைகள்
  நிலந்திருத்தி  விதைக்கும் விதை கிளர்ந்தெழு  மரமாகி  கனி கொடுக்கும்  என்பது  நம்பிக்கை.---மெய்   சோர்ந்து  உழைத்து  உறங்கி  எழும் புலரியில்  உயிர்த்து  எழுவோம்  என்பது  நம்பிக்கை ---- பயண  சீட்டெடுத்து  பஸ்ஸோ ரயிலோ  ஏறி சேருமிடம்  சேதமின்றி  சேருவோம்  என்பது நம்பிக்கை --- பாலூட்டி சீராட்டிப  பெற்றெடுத்த  பிள்ளை  பிற்காலத்தில்  நம்மைப்  பேணுவான்  என்பது நம்பிக்கை ---- நோயுற்ற  உடல்  நலம் பேண நாடும்  மருத்துவர் பிணி  தீர்ப்பார்  என்பது நம்பிக்கை ----- நல்ல படிப்பும்  கடின உழைப்பும்  வாழ்க்கையில்  வெற்றி  பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை ---வாழ்வின்  ஆதாரமே நம்பிக்கை.  நம்பிக்கைகள் பல விதம் . இருப்பினும் ,--- தாய் சொல்லி  தந்தை  என்றறியப்படுவதே  தலையாய  நம்பிக்கை.                            

10 comments:

  1. நம்பிக்கைதானே வாழ்க்கை!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கடைசியாய் சொல்லி இருக்கும்நம்பிக்கை பற்எதுவும் சொல்ல வில்லையே

      Delete
  2. உண்மை. நம்பிக்கைதான் வாழ்க்கை

    ReplyDelete
    Replies
    1. முத்தாசய்பாய் சொல்லி இருப்பதும்நம்பிக்கைதானே

      Delete
  3. நான் நல்லவன் என்று நான் நம்புவதே ஒரு நம்பிக்கைதான்!

    ReplyDelete
    Replies
    1. அது சொல்பவர்க்குநன்கு தெரியும்

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அருமை.

    நம்பிக்கையில்தான் வாழ்க்கையே ஓடுகிறது.

    ReplyDelete