புதன், 8 ஏப்ரல், 2020

காணொளிமயம்


                                       காணொளி மயம்
                                       --------------------------
இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது  தென்பட்ட  சில காணொளிகள்



 பாம்பும் தற்கொலைளை செய்து கொள்ளுமா


சேவல் சண்டை

ஒரு யானை பிரசவிக்கிறது



ஒருபக்தி பாட்டு






சனி, 4 ஏப்ரல், 2020

ஒரு கரு கதையாகி நாடகமாகிறது



                              ஒரு கரு கதையாகி  நாடகமாகிறது
                              --------------------------------------------------------
-

 ஒரு கரு கதையாகிறது  அதுவே நாடகமாகிறது எழுதுவதற்கு விஷயங்கள் இல்லாதபோது பழைய நினைவுகள்மீட்டப்படும் அப்படி எண்ணிய போது என்நாடக அனுபவங்கள் என்னை எழுது எழுது  என்றன ஆண்மை இல்லாதவன் பற்றி எழுதினேன் அதற்கான கரு எனக்குள் இருக்கும் வித்தியாசமாய் சிந்திக்கும்  குணம்  பல இடங்களில் பலரும்   மனசாட்சி பற்றி கூறுவதைக் கேட்கிறோம் எனக்குள்ள அடிப்படை சிந்தனையே மனசாட்சிக்கு அளவுகோல் இல்லை  என்பதே இஷ்டத்துக்கு வளைக்க உதவும் ஒருசொல்லே மனசாட்சி
 இதை ஒருகதையில் கொண்டுவந்தேன் மனசாட்சிi  கதை  அப்போது நாடகங்களில் ஈடுபாடுஇருந்தசமயம் இரண்டு மூன்று நாடகங்களை  அரங்கேற்றிஓரளவு வெற்றி கண்டவன்  ஆனால் நான்மட்டும் வித்தியாசமாய் சிந்தித்தால் போதுமா பலருக்கும்  கதைஆண்மை குறைந்தவன் கதாநாயகன் என்றபோதுஅதில் பங்கேற்க தயக்கம் இருந்தது நாடகத்தை கத்தி மேல் நடப்பதுபோல் கையாள வேண்டும்நாடகத்தில் நடிக்கவே பலரும் தயங்கினர் கதைய்ன் அவுட்லைனைச் சொல்லி  தெளிவிப்பதைவிட முழுவதும் எழுதியபின் அதை காட்டியபின் தயக்கம்விட்டொழிந்தனர் கதை எழுதுவதுவேறு நாடகத்துக்கு மேடைக்கதை அமைப்பது வேறு கதையைச்சொல்ல வேறு சில பாத்திரங்களும்  நாடகக் கதைக்கு  தேவை  சில கூடுதல் பாத்திரங்களுடன்மேடைக்கதை அமைத்தேன்  நகைச்சுவை வராத எனக்கு அதையும் எழுதலாமென்று  தோன்றியதுஓரளவு வெற்றிஎன்றே நினைக்கிறேன்  நாடகம் மேடை யேறியபோது நல்ல வரவேற்பு இருந்தது ஓய்வு பெற்று வந்தபோது அவற்றை  பதிவாக்கினேன்   சில காட்சிகளை எப்படி மேடையில் கொண்டு வந்தேனென்றுபின்னூட்டக் கேள்விகள் இருந்தது மேடை எஃபெக்டை எழுத்தில் கொண்டு  வரமுயன்றேன் நாடகம் பார்க்க  ஒரே கருவை இருவிதமாக  கூறமுடியுமதையே நானொரு சிறியநாடகப் பதிவுபொல் எழுதினேன்   பார்க்க


(முக்கிய அறிவிப்பு சுட்டிகள்கொடுத்திருக்கிறேன் அதையும்வாசித்தால் தான் புரிதல் ஏற்படும்)   

நினைவுகளை மீட்டெடுக்க படங்கள் இல்லாமலா  ஒவ்வொரு படமாக  விளக்காமல்மொத்தமாக கூறுகிறேன்

ஆராமுது அசடா  காட்சிகள்
Add caption
Add caption
பல காட்சிகள் மனசாட்சி







மனசாட்சி படங்களின்  தொடர்பாக இதையும்பார்க்க வேண்டும் டிஜிடலைஸ்  செய்த படங்களை வரிசையில் வைக்கும் போது  சிறு தவறு நேர்ந்து விட்டது  







       

வியாழன், 2 ஏப்ரல், 2020

கனவுகளூம் நானும்



                                             கனவுகளும் நானும்
                                              -------------------------------
   


        கனவுகளை நான் விரும்புகிறேன்  என் இயலாமைக்சள் காணாமல் போகும் கற்பனையையும் மீறிய  சில கதைகள் கிடைக்கும் என் சென்றபதிவில்கண்ணன்   அவதாரமெடுக்க மாட்டானா  என்னும்  எண்ணம் வெளியாகி இருக்கும் கனவில்அது மெய்ப்படுவது போல் இருந்தது
அது பற்றிக் கூறும் முன்  கண்ணனின்  முதல் அவதாரம் பற்றி  சொல்ல வேண்டியது  அவசியம்   அவதாரக்கதைகளில் மிகவும் அரிதாகவே மேற்கோள் காட்டப்படுவது  முதல் அவதாரம் மீனாக  பார்க்க

 திருமாலின் அவதாரம் எத்தனை என்று கேட்டால்
      பத்தென்று கூறிவிடுவான் பத்து வயது பாலகனும
    
அவதாரக் கதைகளில் பரிணாமம் பற்றி
    
எண்ணியவர் எண்ணிக்கை எவ்வளவோ
    
யூகித்துக் கொள்ளும் எண்ணம் இல்லை எனக்கு.


நீர்வாழ் உயிரினமாக மீன் வடிவம் ,பின்
நீர்நில உயிரினம் என்றாகும் ஆமையுருவம்
அதன் பின்னே மண்ணில் வாழ் மிருகம் பன்றி,
உருவமேடுத்தவர் சீறும்  சிங்க முகம் கொண்ட
நரனாக நான்காம் அவதாரம் ,அதன் பின்னெடுத்த
அவதாரங்களும்  பரிணாமத்தின் நிலை மாற்றங்களோ
என்ற என் எண்ணம் சரியோ தவறோ தெளிந்தவனில்லை.

கனவில் பரிணாம  வளர்ச்சி  ஒரு உயிரியாக்  மாறியது கண்ணுக்குத்தெரியாத கிருமியாகத் தோற்றமளித்தது இப்போதைய கோரோனாஸ் கிருமியோ?  கண்ணனின்  பத்து அவதாரங்களில்  ஒன்பதுக்கு கதைகள் உள்ளன பத்தாவது அவதாரமாககல்கி என்கிறார்கள்குதிரைமேல் பவனி வருவாராம் என்கனவில்வந்தவர் ஊழிக்கால தாண்டவ நிலைக்கு செல்ல தயாராயிருக்கும் நம் மக்கள் நிலைகோரொனாஸ் கிருமியை அழிக்கும் பல வழிகளில்  ஒன்றாக மருந்தாகவரும் கண்ணன் பழைய மீன் அவதாரத்தில்  மறைகளை மீட்க மீன் அவதாரமென்றால்இன்று சத்தமில்லாமல் கொல்லும்  கிருமியை அழிக்க எந்தரூபமோ அந்த மீன் அவதாரத்தில்
   நான்முகனும் படைக்கும் தொழில் 
         தொடர, திருமால் முனிவருக்கும் 
        அரசனுக்கும் மூலப் பொருளை 
        உபதேசித்து அருளினார்
இனி எடுக்கப் போகும்  அவதாரம்  அடிப்படை சுத்தம்பயின்று  மிகுதியாக எல்லோரிடமும் குலாவல் ஒழிக்கும்ஏதோ வித படிப்பினையாக இருக்கலாம்

(நான் எதையோ எழுதப்போக  அவரவர் ஏதோ அர்த்தம்  கற்பிக்காமல் இருக்கவே இதனை இத்துடன் முடிக்கிறேன் )     


                              
                                          ----------------------------------

[   

திங்கள், 30 மார்ச், 2020

ஊரடங்கும் கொரோனா வைரசும்



                                ஊரடங்கும்   கொரோனா வைரசும்
                               -------------------------------------------------------------
ஊரடங்கும்
கொரோனா வைரசும்
இந்த தலைப்பில் எழுத  எனக்கு  தயக்க்ம்   இருந்தது பொதுவாகஒரு விஷயம் பற்றி எழுத சில நிச்சயமான தக்வல்கள் தேவை ஆறுகுருடர்கள்  யானையை அடையாளம்  காண முயல்வது போலிருக்க கூஊடாது  ஆனல் ஆரம்பத்திலேயே  எனக்கு இதுபற்றிய தகவல்கள் இருக்கவில்லை  கிடைத்ததகவல்களும்  பீதி ஊட்டுவதாகவே  இருந்தது  130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் ஊரடங்கு சட்டம் போர் இல்லாத நேரம்  கடைபிடிக்க  ஓரளவு பீதி ஏற்படுத்தினால் மட்டுமே முடியும்முதலில் கொரோனா வைரஸ்தாக்கியவர்யாரென்று  அடையாள்ம்  தெரிய வேண் டும் வெளிநாடுகளில்  இருந்து வருவோரையும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களையும் கண்காணிக்க துவங்கினார்கள் அதனால் நம்மக்களுக்கு இவையே ஒரு நகைச்சுவைக்கு ஏற்ற தலைப்பாயிற்றுஎங்கும் எங்கும் எதிலும்  நகைச்சுவையை கண்டவர்கள் உள்ளுக்குள் பீதியுடன் பயத்ததைபோக்கநகைச்சுவை மூலம்   விசில் அடிப்பவர்கள் ஆனார்கள்  சிலர் எதுவும் கடந்து போகும் என்று இருக்கவும் முடியாமல் எல்லாம் அவன் செயல் என்று நினைக்கத் தொடங்கினார்கள் சமூகவலைத்தளங்களோ பூஜை புனஸ்காரமே மருந்துஎன்று கூறத்தொடங்கின நம்பாரம்பரியமருந்துகளே இவற்றை எதிர்கொள்ளுமென்றும்  நினைக்கத்தொடங்கினார்க்சள் இன்னும் சிலர்ச் சோதிடர்கள் ஆனார்கள் கிரக நிலைமை  கோள்களின்  தாக்கமென்று கூறிசமாளிக்க நினைக்கிறார்கள்ஆனால் அடிப்படையில்பீதியில் உழல்கிறார்கள்  பிறந்தவன் ஒரு நாள் இறக்கத்தானே வேண்டும் ஆனால் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறர்கள்ஏன் தெரியுமா  இந்த வைரசால்  நுரையீரல் பாதிக்கப்பட்டுமூச்சுத் திணறி சாவுவருமோ என்னும் பயம்தான்     தைரியசாலிக்கு வாழ்வில் ஒருசாவு  கோழைக்கு தினம் தினம் சாவு என்றுபடித்ததே அடிக்கடிநினைவுக்கு வருகிறது
தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் இந்நோயை தடுக்கலாம் என்கிறார்கள் ஊரடங்கோடு நிறுத்தமுடியுமா அதை நடை முறைப்படுத்த வேண்டாமா  அதற்கு
மக்களை தயார் படுத்தவேண்டாமாமுகக்கவசமும் அடிக்கடி கைகழுவுவதையும் பிரசாரம்செய்கிறார்கள்முகக்கவசம் கிடைப்பதே அரிதாய் இருக்கிறது ஒருநாளில் எத்தனை முறை கைகழுவுவதுபின்பற்றப்படுவதை விடமீறப்படுவதே  அதிகம்நடக்கிறது  நகைச் சுவைக்கு நல்ல தீனி யாகிறது வாட்ஸாப்பில் வரும் கும்மிகளில் இதுவே முக்கிய அங்கம் வகிக்கிறது நானும் என்பங்குக்கு  அவற்றை ஃபார்வார்ட் செய்திருக்கிறேன்   ஒரு வேளை இடுக்கண் வ்ருங்கால் நகுகஎன்பது இதைத்தானோ

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களில் கோவிட் வைரஸானது 12 மணி நேரம் உயிருடன் இருக்குமாம். எனவே நோய் தாக்கப்பட்டவர்களுடன் கைக் குலுக்கினாலோ அருகில் நின்று பேசினாலோ கூட எளிதில் ஒரு மனிதனிடமிருந்து மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பரவிவிடும்.அந்தஸ்டேஜ் வந்தால்  கட்டுப்புத்துவதுசிரமமாம் அடை தவிர்கவே சோஷ்யல் டிஸ்டன்சிங்இதை வைத்தும் ஒரு நகைச்சுவை வாட்ஸாப்பில் வந்தது

 அரசு என்ன வெல்லாமோ சலுகைகள்  தருகிறர்கள் சீனிய சிடிசன்களுக்கு  மாதம் ரூ ஆயிரமுண்டாமே  எப்படி எங்கு பெறுவது என்று  தெரியவில்லை இந்த  ஊரடங்கு  வந்தபி எங்கள் சாலையில்போக்கு வரத்து குறைந்து  இருக்கிறதுநிமிஷத்துக்கு முன்னூறு வண்டிகள் போல் இருந்த இடத்தில் இப்போது ந்மிஷத்துக்கு  இருபது முப்பது வண்டிகள் ஓடுகின்றன 


நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன்(8)  பகவத் கீதையில்  க்ண்ண்ன்  சொன்னது கெட்டவர்கள் என்பது மாற்றி  கெட்டவைஎன்று  இருந்தால்  ஒரு வேளை  கண்ணனே அவதரித்து இந்தகொரோனாவை வெற்றி கொள்ளலாமே என்றும்  தோன்று  கிறது 
இப்போதெல்லாம்   அடுத்தவரைக் கண்டாலே இவர் மூலம் தொற்றுநமக்கும் வருமொஎன்னும் அச்சமெழுகிறது அயல்நாட்ட்லிருந்து வருவோரை  சற்றே அதிகம் கண்காணிக்க தொடங்கினார்கள்ஸ்ரீ லங்கவில் சென்னையில் இருந்து வருவோரால்  தொற்று வருமோ எறு அச்சப்படுகிறார்களாம் 
இந்த தொற்று இப்போது  இரண்டாம் கட்டத்தில் இங்கு இருக்கிறதாம்  மூன்றாம் கட்டம்போனால் அது சமூக தொற்றாகலாம்   கண்காணிக்கும் வேலை மிகவும்சிரமமாகலாம் 
வுஹான் சீனாவில் ஆரம்பித்த இந்த தொற்று அங்கு கட்டுக்குள் இருக்கிறதாம் எகனாமிக் ஆக்டிவிடி கள் சீரடைந்து  வருகிறதாம் 
எனக்கு இந்தமாதிரி  எழுதும்போது  சில குண்டக்கா மண்டக்கா  எண்ணங்கள் தோன்றும் அதையும் வலையில் பகிர்கிறேன்  இந்த சோஷியல் டிஸ்டன்சிங்  என்பது க்ணவன்மனைவிக்கும் பொருந்தினால்  ஒரு கணக்குப் படி இதுவே மக்கட் தொகையைக் கட்டுப்படுத்தலாம் இப்போதைடையகட்டுப்பாடு நீடித்தால் இந்தியாவில்எதிர்ப் வரும் நவம்பெரில் குழந்தைகள் பேறு மிகவும் குறையலாம் ,,,!!!  



iஇந்த பாட்டுகளை  கேட்டிருக்கிறீர்களா


        
  

வெள்ளி, 27 மார்ச், 2020

பல்சுவை பதிவு


                                  பல்சுவைப்பதிவு
                                 ---------------------------0



பழ மொழிகள் பலகேள்விப்பட்டு இருக்கிறோம் பலதும்பொருள்  மாறியே  அர்த்தம்  கொள்ளப்படுகிறது  உ-ம் ஆயிரம்பேரைக் கொன்றவன்  அரை வைத்தியன்   ஆனால் உண்மையிலேயே  அது ஆயிரம்  வேரைக் கொண்டவன்   என்னும்பொருளில்தான் சொல்லப்பட்டது எனக்கு இன்னும்  இரண்டு மூன்று பழமொழிகள்நினைவுக்கு வருகிறதுது வாசகர்கள் இதற்கு இன்னும் காண்ட்ரி ப்யூட் செய்யலாம் 
1 )  ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம நடத்தலாம்
அது இப்படி இருக்குமோ  ஆயிரம்  முறை போய்ச் சொல்லி அதாவது பலமுறை  அங்கும் இங்கும்  போய்ச்சொல்லி திருமணம்   நடத்துவது என்றிருக்குமோ
2) ஆடிக்காற்றில்  அம்மியும் நகரும் 
 அதாவது சித்திரை வைகாசி ஆனி  எல்லாம் போய்  ஆடி வருகிறது  ஆடிமாசம்  காற்றடிக்கும் அந்தக்காற்றில் அம்மையும்  நகரும்  என்றால் அந்ஹக் காற்றில்  வேப்பங் காற்றில்அமை நோயும்  போய் விடும் என்று இருக்குமோ
3)அற்பனுக்கு காலம் வந்தால்  அர்த்த ராத்திரியிலும் குடைபிடிப்பான் 
அதுஇப்படி இருக்குமோ  அறப்பணிக்கு  காலம் வந்தால் பாதி ராத்திதிரியிலும்கொடை கொடுப்பான்  

ஒரு ஜாலி காணொளி 

 
             
கேரள பாரம்பரிய கலைகளில் முக்கியமானது ஓட்டந்துள்ளல் என்  சிறிய தாயார் பாடியதுதான்  ந்னைவுக்கு வருகிறது ஓட்டந்துள்ளல்  துள்ள ல்  துள்ளி வரும்போள்  வீட்டில் கஞ்சி குடிக்கானில்லா  நண்பர் துளசிதரனின் மகளும் இக்கலையில் வல்லவராமே  


வயதாகும் போது சில நேரங்களில்  தனிமை  தவிர்க்க முடியாது கீழே  தனிமையிலும் இனிமை காண்பவன்   இவன்

/The longest word in any of the major English language dictionaries is pneumonoultramicroscopicsilicovolcanoconiosis

we jokingly used to say  "smiles"
that is mile between two s  



கொரொனா வைரஸிலிருந்து காத்துக் கொள்ளும் முறை டாக்டர் பவித்ரா விளக்கம்



யூ ட்யூபில்  திருமதி ரேவதி சங்கரன்  அவர்களின் சில காணொளி களைப்பார்த்துக் கொண்டிருந்தேன் வாட் எ  வெர்சடைல் லேடி  என்ற நினைப்பை தவிர்க்க முடியவில்லைஅவர் எம் எஸ் சுப்புல்க்ஷ்மி பற்றிக் கூறிய  சிலதகவல்கள்  இதுவரை தெரியாததுஅவருக்கு கிடைத்த  வருமானங்கள்  எல்லாவற்றையும்  தனக்கென ஏதும்  வைத்துக் கொள்ளாமல் பல நிறுவனங்களுக்கு  கொடையாய்க் கொடுத்து விடுவாராம் ஒருகாலகட்டத்தில் நூல் புடவையுடனும்  நகைகள் ஏதும்  இல்லாமலும் இருந்தாராம்   அப்போதுஅன்னமாசாரியரின் கீர்ததனைகளை ரெகார்ட் செய்யவேண்டி வந்தார்களாம்   இவருக்கு தெலுங்கு தெரியாமல் இருந்தாலும்  அம்மொழியைக்கற்று பாட்டுகளை ரெகார்ட் செய்தாராம்
சுமார் இரண்டு மணி நேரத்த்துக்கும்அதிகமான காணொளி  என்பதால். பதிவு செய்யவில்லை  விருப்பம் இருப்பவ்ர்கள் கீழ்காணும் சுட்டிக்குச் சென்று காணலாம் 

 https://www.youtube.com/watch?v=PexAtz6A2J4          










செவ்வாய், 24 மார்ச், 2020

வீடு மகாத்மியம்



                                                               வீடு மகாத்மியம்
                                                               --------------------------

 வீடுகட்டல் பற்றி  இரண்டு பதிவுகள் எழுதி அவற்றின்  சுருக்கம் கீழே
 நான் வீடு கட்டியகதையை ஏற்கனவே பதிவில் பகிர்ந்துள்ளேன் 1979/ ல் இடம் வாங்கி 1986-ல் வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் வாடகைக்கு விட்டேன் அப்போது நான் திருச்சியில் இருந்தேன் 1991-ம் ஆண்டின்  கடைசியில் என் மூத்த மகனை குடி யிருத்துவதற்கு வாடகைக்கு இருந்தவரைக் காலி செய்யச் சொன்னேன்  அவரும்  எந்தப்பிரச்சனையும்  தராமல் காலி செய்ய என் மகனும் மருமகளும் குடி வந்தனர் நானும் என் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று என் மகனுடன் வந்து விட்டேன் என் இளைய மகனுக்கும் இங்கே வேலை கிடைக்கவும் .அவனுக்கும் மணமுடித்தால் இந்த வீடு சிறியதாய் இருக்கும் என்று எண்ணி மாடியில் இன்னொரு வீடு கட்டினேன் 1992-ம் ஆண்டு. வீடு கட்டி முடித்தவுடன்  நாங்கள் மேல் தளத்துக்குச் சென்று கீழ் வீட்டை வாடகைக்கு விட்டோம் அதில் ஒரு டாக்டரும் அவர் கணவரும்   குடி வந்தனர்
சுமார் ஏழு ஆண்டுகள் அவர்கள் இங்கிருந்தனர் பின் சொந்தவீடு கட்டி குடிபோயினர்  அத்ற்குபின்  பலரும்வந்துபோனார்கள் சிலர் என் கதை மாந்தர்கள் ஆனார்கள்மெல் வீடு சற்றே பெரியது  அங்கு போனபின்  என் இளையமகன் திருமணம்  நடந்ததுஅதன் பின் சில நாட்களில் நாங்கள்கீழே வந்து விட்டோம்

முன்பே சொன்னது போல்  எனக்கும் ஏதும் வரவு இருக்கவில்லை வீட்டை வாடகைக்கு விட்டுஅதில் வரும் வாடகையே எங்கள்  வருவாயாயிற்று வாடகைக்கு வருபவர்களுக்காக வீட்டை புதுப்பித்து அதன் வால்யூவை அதிகரித்தேன் என்வீட்டில்டி குடி வருபவர் ஒரு ரிச்நெஸை  உணர்வார்கள் 
வீடு கட்டிய செலவை விட புதுப்பிக்கும்போது செலவு   அதிகமாயிற்று வருத்தமில்லை 
சில நினைவோட்டங்கள்  வீடு கட்டுவதே வேஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருந்தவன்  விட்டின் வாடகையே சோறு போடுகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது எண்ணங்கள் நிலையானது அல்ல என்பது புரிகிறது  முதலில் வீடு கட்டும்போது  செலவு செய்ததை விட புதுப்ப்பிக்கவும்   அதன் மதிப்பை உயர்த்தவும்செய்த செலவு அதிகம்  விட்டின் உள்ளிருந்தே  டைல்ஸ் மாற்றிய அனுபவம் முதலில்  நமக்கு வேண்டியது  தெரிந்திருக்க வேண்டியதுஅவசியம் நம்பிக்கையான ஒப்ப்ந்ததாரர் கிடைக்கவேண்டும் சிலரைநம்பவேண்டும் இல்லைஎன்றால் நாமே எல்லாவற்றுக்கும் அலையவேண்டும் எனக்கு கிடைட்தவர்கள் நம்பிக்கையானவர்கள்   
  
    

என் வீட்டி சில புகைப்படங்கள்முதலிலேயே செலவுபற்றி பேசிவிட வேண்டும்என் வீட்டி சில புகைப்படங்கள் பொறிஇயல் பற்றிய தெளிவு இருக்கவேண்டும்முதலில் காண்டி லிவெர் போர்டிகோ டிசைன் செய் திருந்தாலும்மேல்மாடி கட்டும்போதுசப்போர்டிங்  தூண்கள் கூடுதலாக  கட்டினோம் 


வீட்டின் முன்புற தோற்றம்  


பக்க வாட்டும்  மாடிக்கு போகும் படிகளும் 


மாடியிலிருந்து போர்டிகோ மேல் பாகம்
இதுபோல் இரு படுக்கை அறைகள்
  






    

உள் ஹாலும்  வாசலும் 


ஹாலின் இன்னொரு புறம் 


அடுக்களை n


பாத் ரூம் 


வீட்டின் எல்லா படங்களும்  பதிவிடவில்லை

வீடு மகாத்மியம் முற்றும்







சனி, 21 மார்ச், 2020

மஹாதேவ் ஐஸ் வர்யா வரலாறு


                                         மஹாதேவ் ஐஸ்வர்யா வரலாறு
                                         ------------------------------------------------------



                                               
 எழுத துவங்கியபோது  சுருக்கி எழுதவா இல்லை விரிவாக எழுதவா  என்னும்  சந்தேகம் எழுந்தது இதுவரை நான் எழுதிய பதிவுகள் எல்லாமே எழுத்தின் போக்கில் அமையு,ம்   அதுபோலவே இதுவும் இருக்கட்டும்  என்று நினைத்து எழுதுகிறேன்வீடு கட்ட துவங்கும்போது  இருந்த மனநிலையும் இப்போது இருக்கும் மனநிலையும் வேறுதான்என்னைப்போல் இருப்பவருக்கு  ஓய்வு பெறும்போது பென்ஷன் ஏதும்  கிடையாது அதாவது கிடைக்கும்  க்ராட்யுடிடி போன்ற சேமிப்புகள வைத்து வாழவேண்டும் சராசரிவயது  60 க்கு பக்கம் இருக்கும் என்று எண்னியவன்  80 வயதுக்கும் மேல் இருக்கிறேன்  என்னைவிடு கட்ட தூண்டிய நண்பனுக்கு நன்றி
 
செய்யாத குற்றத்துக்கு தண்டனையா
என்றே கேள்வி கேட்ட எனக்கு உருவம்
அன்றி முதுமை அளிக்கும் பரிசு-வாழ்வில்
நான் நானாக இருக்க ஒரு வாய்ப்பல்லவா

பெற்றோருக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்றவற்றுக்காக வாழ்ந்ததும்- நான்
பெற்ற கூலிக்காக உழைத்ததும் போதுமடா
சாமி. இது எனக்காக நான் வாழும் வாழ்க்கை.

 இந்த நினைப்பே என்னை விருப்ப ஓய்வு பெறச்செய்தது வம்படியாக ஓய்வுகேட்டுவந்து விட்டேன் இனி என்ன செய்வது இருக்க  இடமாக வீடு  அமைந்துவிட்டது மற்ற செலவுகளுக்காகஎன்னசெய்வது  என்னால் யாரையும் அண்டி வாழமுடியாதுஅதுஎன்  குறையாயிருக்கலாம் வரவுக்கும் பூவாவுக்கும் என்ன செய்ய  கிடைத்த பணத்தில் வீட்டில் மேல்மாடி அமைத்தேன் கிடைக்கும் வாடகை என் வருவாயாக இருக்கும்
என் மூத்த மகன் பெங்களூரில் என் வீட்டில் தங்க நானும்  வந்து விட்டேன் என் வாழ்வின்  சுருக்கத்தை எட்டெட்டாக என்று எழுதி  இருக்கிறேன் பார்க்க சுட்டி
இப்படித்தான்   எதையோ எழுதத் துவங்கி  எங்கோ போய் விடுகிறேன்


நான்வீடு கட்டும்போது  இரு படுக்கைஅறை  கொண்ட சிறிய வீடாக கட்டினேன்  சுற்றிலும்  இருப்பதற்குள்  முடிந்தவரை திற்ந்த வெளி  விட்டே கட்டினேன் நாங்கள் திருச்சியிலும் வீடு பெங்களூரிலும்  இருந்ததால் வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தோம்நல்லகுடித்தனக் காரர் வேண்டி காத்திருந்தபோது  ஒரு சிறியகம்பனி  நடத்துபவர் வந்தார் எனக்கோ அவரைத் தெரியாது ஆனால் இங்கிருந்தவர்கள் அவர் ஒரு குடிகாரர் என்று  பயமுறுத்தினர்  ஆனால் எனக்கு ஒருவரைப் பார்த்தவுடன்எடை போடு என் குணத்தில்  நம்பிக்கை உண்டு அவரை எனக்குப் பிடித்து விட்டதுநம்பிகையானவர் போல் மதிப்பிட்டேன்   என் நம்பிக்கை வீண்போக வில்லை  ஐந்து ஆண்டுசள்இருந்தார்  என் மகனுக்காக  வீடு தேவை என்றபோது  எந்த தொந்தரவும்  தராமல் காலி செய்தார் சுற்றிலும் இருந்தகாலி இடங்களில் இரு தென்னை மரம்  ஒரு கொய்யா மரம் ஒரு பாம்க்ரனேட்  மரம் ஒரு கறு வேப்பிலைமரம்   ஒரு மாமரம் மற்றும் சிலபூச்செடிகள் வைத்து பராமரித்து வந்தார்  எங்கள்வீட்டை சுற்றி இருந்தவருக்கெல்லாம்  போரிலிருநு  தாராளாமாய் தண்ணீர் வழங்கினார் நானே இருந்தால் கூட அப்படி செய்திருப்பேனா தெரியாது 

  
ஆனால் வாட் எ பிட்டி வீட்டின் முன்புறம்   இருந்த கொய்யா மரம்  நிறைய கல் அடி வாங்கியது  வெட்ட வேண்டியதாகி விட்டது இந்தவீட்டில்தான்   என் முதல் பேரன்  உண்டாகி பிறந்தான் நான் வீடு கட்டும்போது வாஸ்து ஏதும் பார்க்கவில்லைஎன் இரண்டாம்  மகனது  திருமணம்  நடந்தது  என்பேத்தி பிறந்தாள்  மொத்தத்தில் ராசியான வீடாக அமைந்தது ஐஸ்வர்யா  என்று பெயரிட்டோம்
  
பிற்காலத்தில் என் இரண்டாம்  பேரன்  வந்து  வீட்டுக்குஏ  அவன் அக்காவி பெயர் அதைமாற்றி தன் பெயரை வைக்க வழக்காடினான்அவன் அக்கா பிறக்கும் முன்பேவீட்டுக்கு பெயர் வைத்தாகி  இருந்தது  என்றுசொல்லி சமாதானப்படுத்தினோம் 


மேல் மாடி எழும்பும் முன்
முன்னால் கொய்யா மரம்  காண்டிலிவெர்  போர்டிகோ
                          
மேல்மாடி மோல்டிங்

மோல்டிங்தயார் 
மோல்டிங் ப்ரோக்ரெஸ்


மகனும் மருமகளும்