Tuesday, August 21, 2018

சிந்தனை செய் மனமே



                                                    சிந்தனைசெய் மனமே
       
      ஜானியின் தாயாருக்கு மூன்று குழந்தைகள்.மூத்தவன் பெயர் ஏப்ரல், இரண்டாமவன் பெயர் மே. மூன்றாவது குழந்தையின் பெயர் என்ன.?

2) எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிப்பதற்கு முன் உலகின் உயர்ந்த சிகரம் எது.?

3) இரண்டடிக்கு மூன்றடிக்கு நான்கடிக் குழியில் எவ்வளவு மண் இருக்கும்.

4) 1975-ல் ஜனாதிபதியின் பெயர் என்ன. ?

5) ஒரு ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாக வருபவனை நீ முந்தினால் நீ எந்த இடத்தில் இருப்பாய்?

6) ஒரு குடியானவனுக்கு ஒரு தளத்தில் மூன்று வைக்கோல் போற்களும் இன்னொரு தளத்தில் ஐந்து வைக்கோல் போற்களும் இருக்கின்றன. அவன் அவற்றை இன்னொரு தளத்தில் சேர்த்துவைத்தால் எத்தனை வைக்கோல் போற்கள் இருக்கும்

7) ஒரு லாரி நிறைய பொருட்களுடன் ஒரு அண்டர்பிரிட்ஜ் அடியே செல்லவேண்டும். லாரியின் பொருட்களுடனான உயரம் பிரிட்ஜின் அடிபாகத்தை உரசும். அதே வழியில்தான் செல்ல வேண்டும். அன்லோட் செய்து போகக் கூடாது. என்ன செய்வீர்கள்.?


தமிழா தமிழா..
--------------
தடுக்கி வீழ்ந்தால்மட்டும் அ.........ஆ 
சிரிக்கும்போது மட்டும் இ...........ஈ
சூடுபட்டால்மட்டும் உ........ஊ
அதட்டும்போது மட்டும் எ........ஏ
ஐயத்தின் போதுமட்டும் 
ஆச்சரியப்படும்போது மட்டும் ஒ......ஓ
வக்கணையின் போதுமட்டும் 
விக்கலின் போது மட்டும்   
என்று தமிழ் பேசி
மற்ற நேரம் வேற்றுமொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்

உன் மொழி. 

அடுத்து ஒருசிறுகதை

ஒருவன் ஒரு பெரிய கடைக்குச் சென்றான். அங்கே பல விதமான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. அதில் ஒரு வெண்கலத்தினால் ஆன ஒரு எலியின் சிலை இவன் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு சீட்டு தொங்கியது. அதில் சிலையின் விலை ரூபாய்100-/ என்றும் அது பற்றிய கதையின் விலை ரூபாய் 200-/ என்றும் எழுதி இருந்தது. நம் ஆள் சிலை போதும் கதை வேண்டாம் என்று கூறி ரூபாய் 100-/ கொடுத்து சிலையைவாங்கிக் கொண்டு  போனார்

சிறிது நேரத்தில் அவர் எதிர்பாராதவிதமாக, அவரைப் பின் தொடர்ந்து  சில எலிகள் வரத் துவங்கின. அவற்றின் எண்ணிக்கை கூடிக் கொண்டேபோய் ஆயிரங்களைத் தொட்டு அவரை மிகவும் பயமுறுத்தியது. என்னசெய்வதென்று தெரியாமல் நம்மவர் அருகிலிருந்த கடற்கரைக்குச் சென்று அந்த வெண்கலச் சிலையை கடலில் வீசி விட்டார். பின் தொடர்ந்து வந்த எலிகளும்கடலில் குதித்து மூழ்கின

நிம்மதியடைந்து திரும்பியவர் மறுபடியும் அந்தக் கடைக்குச் சென்றார். கடைக்காரர் அந்த சிலை பற்றியகதைக்காகத்தான் வந்திருக்கிறார் என்று எண்ணி கதைப் புத்தகத்தைப் பாக் செய்யலாமா என்று கேட்டார். அதற்கு நம் நண்பர்வேண்டாம். அந்த எலியின் சிலை போல ஒரு அரசியல் வாதியின் சிலை கிடைக்குமா.?” என்று கேட்டார் !.

  வாய்க் கொழுப்பு

நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றேன் என் மனைவி மகனுடன் தின்பண்டங்கள் கொடுத்து உபசரித்தபின்  நண்பரின்மனவி காஃபியா டீயா  என்று கேட்டார்  என்மனைவியும் மகனும்  எதுவானாலும்தேவலை என்றனர் ஆனால் நான் மட்டும் உங்களுகு எது  நன்றாகச் செய்ய முடியுமோ அதைச் செய்து தாருங்கள் என்றேன்  என்மனையும்  மகனுமென்னை எரித்து விடுவதுபோல் பார்த்தார்கள் எனக்கு விளங்கவில்லை  வெளியெ வரும்போது நான் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது என்றனர் எனமனைவி மட்டும்  வெளிய்ல் வந்தும்  வாய்க் கொழுப்பு மட்டும்பொகவில்லைஎன்று கூறினாள் எனக்கு ஏதோ விளங்கினாற்போல் இருந்தது  
















 






                                              -------------------------------------   

34 comments:

  1. 234 சிந்தனை செய்து கொண்டுள்ளேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. இந்நேரம்சிந்தனை முடிவு பெற்றிருக்க வேண்டுமே

      Delete
  2. சிந்தனைக்கும், அறிவுக்கும் விருந்து தந்துள்ளீர்கள். நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. எனக்குப் பிடித்தது தமிழ் மொழி பற்றியது

      Delete
  3. 1: Johnny
    2. Everest
    3, nothing
    4,
    5./second

    6 one
    7,deflate the tyre little bit. It will reduce the height just enough to go thru

    Rajan

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் ராஜன் சார்ஜனாடிபதியின்பெயர் என்றுமொன்றுதானே காலத்துக்கு ஏற்ப மாறுமா

      Delete
    2. Sir that question on President is not phrased correctly- may be I was confused.- Rajan

      Delete
  4. 1. ஜானி. 2. எவரெஸ்ட் 3. குழில எங்க மண் இருக்கும்? மண்ணை எடுத்ததனால்தானே குழி 4. ஜனாதிபதிதான். அப்போ மாத்திரம் பிரதம்மந்திரின்னா சொல்லப்போறாங்க?

    சிறுகதை வேறு வடிவத்தில் படித்த ஞாபகம்.
    சென்ற வீட்டில் அவர்களுக்கு எது சுலபமோ அதைத் தரச் சொல்வது பண்பல்லவா?

    ReplyDelete
    Replies
    1. பெயர் என்ன எனறுதான் கேட்டிருக்கிறேன் அன்றக்கு இருந்தபெயர்தான் என்றும் நான் என்வாய்க்கொழுப்பு பற்றிச்ல்ல வந்தால் பண்பாடு பற்றிபாடம்

      Delete
  5. இப்ப சிந்திக்க (எனக்கு) நேரமில்லை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. புரிகிறது ஜி ஆனால் படிவுகளுக்கு வருவதும் பின்னூட்டமிடுவதும் நிற்கவில்லையே

      Delete
    2. கிடைத்த சில நொடி ஓய்வில் பதிவுகளுக்கு வருகிறேன் ஐயா

      Delete
    3. இந்தப்பதிவுக்காக அதிகம்சிரமப்பட வேண்டாம் ஜி

      Delete
  6. எவரெஸ்டை விட உயரமான சிகரம் இருக்கே! எவரெஸ்ட் இரண்டாம் இடம். ஜனாதிபதி யாராக இருந்தால் என்ன? அவர் என்றும் ஜனாதிபதி என்றே அழைக்கப்படுவார்.ஆனால் அந்தக் கேள்வியே தப்பு! நீங்க கேட்டிருப்பது ஜனாதிபதியின் பெயர், ஆகவே அப்போதைய ஜனாதிபதியின் பெயரே அந்தக் கேள்வியின் சரியான விடை. நீங்க 1975 இல் ஜனாதிபதி எப்படி அழைக்கப்பட்டிருந்தார்? என்று கேட்டிருந்தால் இந்த விடை சரி! மற்றவை பற்றிச் சொல்ல ஏதுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஜனதிபதியின் பெயர் பற்றிதான் கேள்வி அவர் பெயர் அன்றும் இன்றுமொன்றுதானே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

      Delete
    2. Mt Everest is the highest mountain - height measured from Mean Sea level. Mauna Key is the tallest if the criterion is from base to the peak.

      Delete
  7. யோசிக்கனுமா?! இதுக்குலாம் நான் செட்டாக மாட்டேன். பை ப்பா

    ReplyDelete
  8. ஏடாகூடமாய் பேசி நானும் இப்படி திட்டு வாங்கியதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. ப்ய் சொல்லிவிடாதீர்கள் மீண்டும் மீண்டும் வர வேண்டும்

      Delete
    2. மனதில் தோன்றியதைச் சொன்னால் அவர்களுக்கு அதுஏடாகூடமாய்ப் படுகிறது

      Delete
  9. I am a late comer. Nellai Tamizhan told all answers.

    ReplyDelete
    Replies
    1. குறைந்த பட்சம் வரவாவது செய்தீர்களே நன்றி

      Delete
  10. சிந்தனைக்கு இடம் வைக்காமல் கேள்வி பதில்.. அனைத்தும் படிச்சிட்டேன்:).

    ReplyDelete
    Replies
    1. அதனல்தான் நீங்கள் ஞானி

      Delete
  11. ராஜனும் நெல்லையும் விடைகளைச் சொல்லி விட்டார்கள். மற்றவற்றையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  12. விடைகள் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள்.

    அனைத்தும் ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் ஒப்பிடுப் பார்த்திருக்கலாமே

      Delete
  13. கில்லர்ஜி போல் எனக்கும் நேரமில்லை என்பதால் தான், எனது அடுத்த பதிவிற்கான பகிர்வைப் பற்றி யோசித்து விட்டேன்... 235-யும் முடித்து விட்டேன்... 236-யை முடித்து விட்டபடியால், இன்னும் 237-யையும் விரைவில் முடித்து விட்டால் பதிவை வெளியிட்டு விடுவேன்... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. 235......236 முதலில் புரியவில்லை என்றாலும் திண்டுக்கல் தனபாலனின் பதிவு என்பதால் இவை திருக்குறளின் எண்ணிக்கையைகுறிக்கின்றன என்று யூகிக்கிறேன் வருகைக்கும் எதிர்பார்ப்பை தூண்டியதற்கும் நன்றி சார்

      Delete
  14. வலையிலும் ஒரு நீட் தேர்வா?

    ReplyDelete
  15. நீட் தேர்வு இவ்வளவு எளிமையானதா

    ReplyDelete