Tuesday, November 20, 2018

சில ஆதங்கங்கள் புனைவில்



                         சில ஆதங்கங்கள்  புனைவில்
                          ---------------------------------------------
என் நெஞ்சில் ஆழ்ந்திருந்த எண்ணங்களைக் கடத்த என் புத்தியில் உதித்த புனைவே இந்த நண்பனும் என் அஞ்சலிகளும்.

         இன்று நீ நிறுவியுள்ள இந்தத் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு விழா. எங்கு   பார்த்தாலும் உன் பேச்சுஎங்கு பார்த்தாலும் உன் சாதனைகள்எங்கு பார்த்தாலும் உன் நினைவுகள்பின் எப்படித்தான் இருக்க முடியும்.? நீதான்  நீயாக இல்லாமல் உன் நினைவாக  மாறிவிட்டாயே.

         நண்பாசிந்திக்க வேண்டும்ஆழ்ந்து  சிந்திக்க வேண்டும்  என்று அடிக்கடி  சொல்வாயேநீ சிந்திக்கவில்லையா.? இல்லை சிந்தித்ததைசாதிக்கவேண்டும்,   இதற்கு  மேல் சிந்தித்தால் சாதிக்க முடியாது என்று நினைத்துப்  போய்விட்டாயா.? நீ சிந்தித்து  சாதித்ததை தொடரவும்சாதிக்கமுடியாமல் விட்டதை  சாதித்துக்காட்டவும்  நாங்கள் இல்லையா.? இந்த  வாழ்க்கைப் போதுமா உனக்கு ?. உன் நினைவு  எங்களை  வாட்டுகிறதுஎண்ண எண்ண சித்தம் கலங்குகிறது.

       அதெப்படி நண்பா உன்னால் மட்டும் அப்படி தீர்க்கமாக எண்ணமுடிந்தது.? நடக்கும் செயல்களுக்கு காரண காரியங்களைக் கண்டறிந்து, தவறுகள் திருத்தி சீராக்கி வழிகாட்டிவாழ்ந்தாயே.."சொல்வதை செய் செய்வதை சொல்என்ற  தாரக  மந்திரம்தானே உனக்கு வழி காட்டி.?

       அனாதைகளாகஇருக்கவும்ஆதரவு அற்றவர்களாக  இருக்கவும் குழந்தைகள் என்ன பாவம் செய்தன.?பிறக்கும்போதே  ஏற்ற தாழ்வுகளுடனே ஏன் பிறக்க  வேண்டும் என்று கேட்டுக்கலங்குவாயேநினைவிருக்கிறதா.அதெப்படிஇருக்கும் .நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே.

      காரணங்கள் இல்லாத காரியங்களே கிடையாது.ஆனால் காரணம கண்டு பிடிக்க முயலுவது  சிக்கலுள்ள நூல் கண்டின் முனை கண்டு சிக்கல் நீக்குவது  போலாகும .சில சமயம் முடியலாம்.சில நேரங்களில் முடியாமல் போகலாம்  என்றெல்லாம்  கூறுவாயே  சிக்கல் உள்ள நூல் கண்டு ஒன்றின் முனையாக நீ கண்டது  கல்வி  அறிவு  இல்லாமை என்று வாதாடுவாயேயார் கல்வி கற்க வேண்டாம் என்று தடுக்கிறார்கள்  ? அறியாமையின் விளைவு என்று சொன்னால் அறியாமையின காரணம் தேட வேண்டும்   என்பாயேபலரும் அறியாமை இருளில் மூழ்கி கிடப்பதே சில சாராருக்கு நன்றாக  இருந்தது அறியாமையில் கிடந்தால தானே அடக்கியாள முடியும்.அடக்கி ஆளவும்  ஆதிக்கம் செலுத்தவும் ஏதுவாக மதம் என்றும் சாதி என்றும் கூறி,மக்கள் மாக்களாக  இருப்பதே நன்று என்று இருந்தோரும் உண்டு என்றெல்லாம் நீ கூறியது  நினைவுக்கு  வருகிறதுஉனக்கு வராதுநீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே

        வாழ்வியலில் சவுகரியத்துக்காகவும் பொறுப்புகள் பகிர்ந்து கொள்ள வேண்டியும் வகுக்கப்பட்ட வர்ணாசிரம தருமங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு ,அதையே ஆயுதமாக்கி ஆண்டை என்றும்  அடிமை என்றும் காலங் காலமாக அடக்கியாண்டு அதையே நீதி என்றும் சாத்திரம் என்றும் சாற்றி, கேள்வி கேட்டால் முகம் திரிந்து நோக்குவதோடு அல்லாமல்,நாத்திகன் என்ற பட்டமும் கொடுத்து, வேறுபடுத்தும் வாழ்வியல் முறையே அறியாமையின் அஸ்திவாரம் என்று முழங்குவாயே உனக்கு நினைவு வராது.ஏனென்றால் நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே.

        இன்று கல்விக்கண் கொடுத்து அறியாமை இருள் அகல்விக்க எல்லோருக்கும் சம வாய்ப்பு என்பதோடு நில்லாமல் நேற்றுவரை அடக்கப் பட்டவனை கொஞ்சம் தூக்கிவிட சில சலுகைகள் கொடுக்கப் படும்போது முகச்சுளிப்புகளும், மனக்கசப்புகளும் காணும்போது  நம் பாட்டனுக்குப் பாட்டன் ,அவனுக்கும் பாட்டன் முதல் நம் முன்னோர்கள்  செய்த பிழைகள் அவர்களது சந்ததிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது ஒன்றும்  நீதிக்கு மாறானதில்லையே,ஆச்சரியமில்லையே என்று நியாயப் படுத்துவாயே

      வசதிகள் பல பெற்று, வாழ்க்கையின் முன்படியில் இருப்பவன், வசதி அற்றவனுக்கு கை கொடுத்து படி ஏற்றுவதுதான் நியாயம் என்றெல்லாம் வாதாடுவாயே.அப்படி படியேறி வந்தவர்களில் சிலர் இப்போது முறையற்ற வழிகளில் முன்னேறி, கடந்து வந்த பாதைகள் மறந்து போய ,ஆடும் ஆட்டம் காணும்போது மனம் நோகுதே என்று விகசிப்பாயே, நண்பா.

      சில நூல் கண்டுகளின் முனையறிந்து காரணம் கண்டாலும், அறியாத காரணங்கள் ஆயிரம் உண்டு.அதனை அறியும் முயற்சிதான் இக்குழந்தைகள் காப்பகம் மூலம் நான் செய்யும் மானுடத்தொண்டு, என்றும், என்னையே நானறியவும் பிறப்பின் காரணம் அறியவும் நான் செய்யும் முயற்சி என்று நீ கூறித் துவங்கிய இந்தக் காப்பகம் நீயின்றித் தவிக்கும் என்றாலும், கிளை பரப்பி நிழல் தரும் அளவுக்கு வளர்த்தி நீ விட்டுச் சென்றிருக்கிறாய்  இது மேலும் தழைக்கவும் மேன்மேலும் வளரவும் அறியாமை இருள் நீக்க நாங்கள் பாடுபடுவோம். சிக்கல் உள்ள நூல் கண்டுகள் பல உண்டு, அவற்றில் இது ஒன்று, இன்னும் பலவற்றின் முனை கண்டு சிக்கல் அவிழ்க்க நாங்கள் முயலுவோம். இதுவே நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறிவிட்ட உனக்கு நாங்கள் செய்யும் இறுதிக்  கடனும் அஞ்சலியுமாகும்.







22 comments:

  1. என்ன சொல்றதுனு தெரியலை!

    ReplyDelete
    Replies
    1. படித்தீர்கள் அல்லவா அதுவே போதும் நன்றி

      Delete
  2. தங்களின் ஆதங்கம் புரிகிறது ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் புரிதலுக்கு நன்றி சார்

      Delete
  3. நல்லதொரு தாரக மந்திரம் = ISO

    ReplyDelete
    Replies
    1. சரியாலப் பிரயோகப்பட்டிருக்கிறதா வருகைக்கு நன்றி

      Delete
  4. உள்ளக்கிடங்கை கொட்டி விட்டீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. அதுதான்சொல்லி இருக்கிறேனே செய்ய நினைத்து செய்ய முடியாமல் போன உள்ளக்க்கிடக்கைகள்

      Delete
  5. அறியாமை இருள் நீங்க பாடுபடுவோம் என்று சொன்னது மனதுக்கு இதம் தருகிறது.

    ReplyDelete
    Replies
    1. சொல்லி என்ன பயன் செயலில் இல்லையே

      Delete
  6. நம்மைவிட்டுச் சென்றவருடனான அன்பைப் பகிர்வதில் இதுவும் ஒரு விதமோ?

    ReplyDelete
    Replies
    1. செய்ய நினைத்ததை செய்ய முடியாமல் போகும்போது எழும் எண்ண ப் பகிர்வுகளே

      Delete
  7. சரியாக விவரம் புரியவில்லை. ஒரேயடியாக பிரிந்து சென்ற நண்பன் பற்றிய நினைவுகள் என்று புரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. செய்ய நினைத்ததைசெய்யமுடியாமல் போகும்போதுஏற்படும் ஆதங்கங்கள் என்று தோன்றவில்லையா

      Delete
  8. //மனம் நோகுதே என்று விகசிப்பாயே, நண்பா.//

    விகசிப்புக்கு அர்த்தம் மலர்தல், மகிழ்தல் போன்ற பொருள் வரும். இங்கு சரியாய் கையாளப்பட்டிருக்கிறதா தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. தவறன வார்த்தைப் பிரயோகமா தவறானால் பிழை பொறுக்கவும்

      Delete
  9. எதற்கும் இருவேறு பார்வைகள் உண்டு. உங்கள் பார்வையில் உங்கள் எண்ணங்களை எழுதியிருக்கிறீர்கள். அதற்கு மாற்றுக் கருத்தும் பக்கமும் உண்டு என்பதை மறந்துவிட்டீர்கள். ஹா ஹா

    இப்போவும் அரசியல்வாதிகள் வடிவத்தில் ஆண்டான் அடிமை இருக்கிறதே. இப்போவும் பிறப்பால் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்களாக, செல்வந்தர்களாக இருக்கிறார்களே.

    உண்மையான சமூக நீதி என்பது தன் மகனுக்கு என்ன செய்தோமோ அதையே ஏழைகளுக்கும் செய்ய முயல்வது.

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்துகள் என்னில் உதித்தவை மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று நினைத்து எழுதவில்லை உடன்பட்டால் ஓக்கே இல்லையென்றாலும் கவலை இல்லைவந்துமாற்றுகருத்துகள் உண்டு என்று சொல்லிப் போகும் உங்கள் குணம் பாராட்டவா

      Delete
  10. உணர்வு பிரவாகம்... அலசப்படும் ஆதங்கங்கள்... கொட்டித் தீர்த்து விட்டீர்கள் GMB சார்!

    ReplyDelete
    Replies
    1. வெகு நாட்களுக்குப் பின் பின்னூட்டத்தில் வந்திருக்கிறீர்கள் நன்றி மீண்டும் நினைவு படுத்த விரும்பவில்லை எப்போது பெங்களூர் விஜயம்

      Delete
  11. வாய்ப்பமையும் போது கண்டிப்பாக வருகிறேன் சார். தற்போது பெரியவனுடன்
    மும்பையில் ; சின்னவன் சென்னையில். எனவே மும்பை, ஹைதராபாத், சென்னை என ரவுண்ட்ஸ் வருகிறேன். மாமிக்கு நமஸ்காரங்கள்

    ReplyDelete
  12. சீக்கிரம் வாய்ப்பு அமைய வேண்டுகிறேன்

    ReplyDelete