Friday, December 20, 2019

சில நினைவுகள்


                                      சில நினைவுகள்
                                      ---------------------------

 விஜயவாடாவில் இருக்கும் போது  என்மனைவியின் கைகளில் சில மருக்கள் (பாலுண்ணி என்றும் சொல்வார்கள்) தோன்றின  அங்கே இருந்த மருத்துவர் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மூலம்நீக்கிவிடலாம் என்றும்  அப்படியே விட்டாலும்பாதகமேதும் இல்லை என்றும் கூறினார்  நாங்களும் அப்படியே விடமுடிவெடுத்தோம்விஜயவாடாவிலிருந்து மீண்டும்  திருச்சி  வந்தபோது பி எச் இ எல் மருத்துவ மனை தோல் நிபுணரை அணுகிக் கேட்டொம் அவர் இதற்கு மருத்துவம் எதுவும் தேவைஇல்லை  வைத்தீஸ்வரன்  கோவிலுக்கு சென்று  வேண்டி உப்பும் மிளகும்  குளத்தில் கரைத்தால் போதும்  போய்விடுமென்றார்  அதற்கு முன் அக்கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை  பிறகென்னகொவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தோம் பின் அதைப் பற்றி மறந்தும்  விட்டோம்   ஆனால் ஓரிரு வாரங்களில்அந்த மருஇருந்த இடம் தெரியாமல் போயிருந்தது அப்படிதுவங்கியஅந்தக் கோவிலுக்கு போகும் வழக்கம்2014 வரை தொடர்ந்தது  கூடவே  சிதம்பரம் திருவரங்கம் திருவானைக்கா  சமயபுரம் போன்ற இடங்களுக்கும் ஆண்டுக்கொருமுறை போய் வருவதைவழக்கப்படுத்திக்கொண்டோம்   பெரும்பாலும் என் மனைவியின்  பிறந்த நாள் சமயம்  ஏதாவது கொவிலில் இருப்போம் 2014 ம் ஆண்டு வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து வெள்யே வரும்போது நான்  விழுந்து விட அந்தமாத பயணம் அரை குறையாகப் போயிற்று பிறகு வருடம் தோறும் இருந்தபயண்ம்   தடைபட்டது முதன் முதல் வைத்தீஸ்வரன்    கோவில் போனபோது  வைத்தியநாத அஷ்டகம் பற்றித் தெரிய அதை நான் கூற வேண்டுமென மனைவியின்  கட்டாயத்தின்பேரில் படித்ததுஇப்போது நினைவுக்கு வர  பொருள் தெரியாமல் சம்ஸ்கிருதத்தில் இருந்ததை பொருளோடு எழுத முயன்றதின் விளைவே இப்பதிவு            

Sree rama soumithri jatayu veda,
Shadanadithya kujarchithya,
Sree neelakandaya daya mayaya,
Sree vaidyanathaya namasivaya.
ஸ்ரீராம சௌமித்ரி ஜடாயுவேத
ஷடாநாதித்ய  குஜார்சித்ய
ஸ்ரீ நீலகண்டாய  தயா மயாய
ஸ்ரீ வைத்யநாதாய  நமசிவாய  
மருத்துவர்களின் அரசனாகியவனை  தயையின் மாற்று உருவமானவனை நிலநிறக்கழுத்துடையவனை  ராமலக்ஷ்மணர்களாலும் ஜடாயு சுப்பிரமணியன்  வேதங்கள்சூரியன் அங்காரகன்பொன்றோரால் பூஜிக்கப்பட்டோனும்  ஆன சிவனை வணங்குகிறேன்       
I salute that God Shiva, Who is the king among physicians,Who is worshipped by Rama and Lakshmana,Who is woshipped by Jatayu, Who is worshipped by the Vedas, Who is worshipped by Lord Subrahmanya, Who is worshipped by the Sun God, Who is worshipped by the Mars God, Who is having a blue neck, and who is the personification of mercy.



Ganga pravahendu jada dharaya,

Trilochanaya smara kala hanthre,
Samstha devairapi poojithaya,
Sree vaidyanathata namasivaya.
கங்கா ப்ரவாஹேந்து ஜடா தராய
த்ரிலோசனாய ஸ்மர கால ஹந்த்ரே
ஸ்மஸ்த தேவைரபி  பூஜிதாய
ஸ்ரீ நீலகண்டாய  நமசிவாய

கங்கையையும் சந்திரனையும்  சிரசில் தரித்திருப்பவனும் முக்கண் உடையவனும் சாவையும்காமனையும்   அழித்தவனும்  தேவர்களால் பூஜிக்கப்படுபவனும் ஆகிய மருத்துவ அரசன்  சிவனை வணங்குகிறேன் 
 ,Bhaktha priyaya, tripuranthakaya ,
Pinakine dushta haraya nithyam,
Prathyaksha leelaya manushya loke,
Sree vaidyanathaya namasivaya.
பக்தப்ப்ரியாய  த்ரிபுராந்தகாய
பினாகினே துஷ்ட ஹராய நித்யம்
பிரத்தியக்‌ஷ லீலாய  மனுஷ்ய லோகே
ஸ்ரீ வைத்திய நாதாய நமசிவாய 
மருத்துவர்களில் அரசன்  பக்தர்களை  நேசிப்பவன் திரிபுரம் எரித்தவன் பினாகம் என்னும் வில்லை உடையவன்  துஷ்ட நிக்கிரகன் மாந்தரொடு நிதமும் லீலை புரிபவன் அவன்  நாமத்டை வணங்குகிறேன்   
I salute that God Shiva, Who is the king among physicians, Who is the lover of his devotees, Who has destroyed the three cities, Who holds the bow called Pinaka, Who destroys bad people daily, and who plays in the world of humans

Prabhootha vadadhi samastha roga,
Pranasa karthre muni vandhthithaya,
Prabhakarennd wagni vilochanaya,
Sri vaidyanathaya nama sivaya.
ப்ரபூத வாதாதி சமஸ்தரோக
ப்ரனாசகர்த்ரே  முனி வந்தித்தாய
ப்ரபாகரேந்த  வக்னி  விலோசனாய
ஸ்ரீ வைத்யநாதாய நமசிவாய
மருத்துவரில் முதன்மையானசிவனை வணங்குகிறேன் வாதம் முதலான அனைத்து நோய்களையும்  குணப்படுத்துபவன்  முனிவர்களால்  துதிக்கப்படுபவன் சூரிய சந்திர அக்னி முதலானியவரை  கண்களாகக் கொண்ட  சிவனை வணங்குகிறேன்
 I salute that God Shiva, Who is the king among physicians, Who cures all great diseases like rheumatism and arthritis, Who is saluted by great sages,and to whom, the Sun god, Moon and God of fire are eyes
.
Vakchrothra nethrangiri viheena jantho,
Vakchrothra nethrangiri sukha pradaya,
Kushtadhi sarvonnatha roga hanthre,
Sri Vaidyanathaya nama sivaya.
வாக்ரோத்ர  நேத்ராங்கிரி  விஹீன ஜந்தோ
வாக்ரோத்ர நேத்ராங்கிரி  சுகப்ப்ரதாய
குஷ்டாதி சர்வோன்னத ரோக ஹந்த்ரே
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய
மருத்துவரில் வேந்தன் கண்கேளாதோர்  செவி கேட்காதோர் நடை தளர்ந்தோர் குறை தீர்ப்பவன் குஷ்டம்முடலான ரோகங்களுக்குநிவாரணம் தருபவனான  சிவனை வணங்குகிறேன்  
I salute that God Shiva, Who is the king among physicians, Who blesses those beings who have lost their speech, hearing, sight and ability to walk, With these abilities and who provides cure for devastating diseases like leprosy

Vedantha vedhyaya jagan mayaya,
Yogiswara dhyeya Padambujaya,
Trimurthy roopaya sahasra namne,
Sri vaidyanathaya nama sivaya.
 வேதாந்த வேத்யாய  ஜகன் மயாய
 யோகீஸ்வர த்ரேய  பதாம்புஜாய
த்ரிமூர்த்தி ரூபாய  ஸஹஸ்ர நாம்னே
ஸ்ரீ வைத்யநாதாய நமசிவாய
நோய்தீர்க்கும்அரசன்  எங்கும்நிறைந்தவன் ரிஷிகளால் தாமரைப் பாதங்களை பூஜிக்கபடுபவன்  ஆயிரம் நாமங்களுடையவன் அந்த சிவனை வணங்குகிறேன்     
I salute that God Shiva, Who is the king among physicians, Who can be known through vedantha, Who is spread throughout the universe, Who has a lotus feet that is meditated upon by great sages, Who is of the form of the holy trinity and who has thousand names.

Swatheertha mrudbasma brudanga bajam,
Pisacha dukha arthi bhayapahaya,
Athma swaroopaya sareera bajaam,
Sri Vaidyanaathaya namasivaya
ஸ்வதீர்த்த  ம்ருதுபஸ்ம ப்ருதுங்க பஜாம்
பிசாச துக்க அர்தி பயப்பஹாய
ஆத்மஸ்வரூபாய  சரீரபஜாம்
ஸ்ரீ வைத்யநாத நமசிவாய
துஷ்ட  ஆவிகளால் விளையும்  சங்கடங்களையும் பயத்தையும் கோவில் குளத்தில் குளித்து கோவில் விபூதி தரித்து வேப்பமரத்தடியில் இருக்கும்  மண் உருண்டைகளை உண்டு ஆத்மசொரூபியான சிவனை  வணங்குகிறேன்  
I salute that God Shiva, Who is the king among physicians , Who removes all sufferings Caused by bad spirits, sorrows and fears by dip in his holy tank, by the holy ash in the temple, and by the mud below the Neem tree of the temple, and who is the personification of soul,Occupying human body.

Sree neelakandaya vrushaba dwajaya,
Sarakkanda basmadhya abhi shobithaya,
Suputhradarathi subagyathaya,
Sri vaidyanathaya nama sivaya.
ஸ்ரீ நீலகண்டாய விருஷப த்வஜாய
சரகண்ட பஸ்மாத்ய  அபி  ஷோபிதாய
சுபுத்ரத்ர்த்தி சுபாக்யதா
ஸ்ரீவைத்யநாதாய  நமசிவாய
நீலகண்டனும்காளையைக் கொடியில் கொண்டவனும்விபூதி சந்தணமும் 
மலர்களாலும் அர்ச்சிகப்படுபவனும் நல்ல மனைவி மக்களைத்தருபவனும்மருத்துவரில் முதன்மையானவனும் ஆன சிவனை  வணங்குகிறேன்
I salute that God Shiva,Who is the king among physicians,Who has a blue neck,Who has the the bull on his flag,Who shines by flowers, sacred ash and sandal, Who grants good children and good wife and who blesses us with all good luck

. Balambikesa vaidyesa bava roga haredisa,
Japen nama thrayam nithyam maha roga nivaranam.
பலாம்பிகேச வைத்யேச பவ ரோக  ஹரெதிச
ஜபேன் நாம த்ரயம் நித்யம்  மஹரோக  நிவாரணம்
பாலாம்பிகை சமேத  வைத்யநாதரை  பக்தியுடன் தினம் மும்முறை  இதைக் கூறி வணங்குபவருக்கு மரணபயம்நீக்கி அனைத்து உடல் உபாதைகளில் ருந்து குணம் தந்துஅருள்  கிடைக்கும்
Those who recite this prayer thrice a day with devotion and pray the Lord Vaidyanatha, Who is with his consort Balambika, and who removes the fear of birth and death would get cured of all great diseases
.





.

25 comments:

  1. நல்ல பதிவு. வைத்தியநாத அஷ்டகம் படித்தால் ரொம்ப நல்லது என்பார்கள். யாருக்கானும் ரொம்ப முடியாமல் போனால் படிப்பதும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. பொருள் தெரிந்து படிப்பதுநல்லது என்று தோன்ற்யதன் விளைவே பதிவு

      Delete
  2. நல்ல பதிவு.  வைத்தீஸ்வரன் கோவில் வேண்டுதல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  நானும் என் பாஸ் பிறந்த நாள் சமயம் அவர் விருப்பப்படி ஏதாவது கோவில் சென்று வருவது வழக்கம்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு ஆண்டும் ஒருபுதுக்கோவில் செல்வது என்பதும்வழக்கமாகி விட்டது ஓ அது அந்தக்காலம்

      Delete
  3. விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  4. இறைப்போலவே நைனார் கோவிலிலும் நேர்த்திக்கடன் செய்வார்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நைனார் கோவில்சென்றதில்லை

      Delete
  5. மருத்துவர் கோயிலுக்குப் போகச் சொன்னது விநோதம்

    ReplyDelete
    Replies
    1. Doctor has refereed him to a specialist doctor Vaidyanathan (expert doctor).

      Delete
    2. @கரந்தை ஜெயக்குமார் அது அவரது நம்பிக்கையோ

      Delete
  6. Replies
    1. சில நச்ம்பிக்கைகள் கேள்விகளுக்கு அப்பாற்ட்டது

      Delete
  7. நான் வைத்தீஸ்வரன் கோவில் சென்றதில்லை. விபரங்கள் இங்கே தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  8. வைத்தீஸ்வரன் கோவில் அங்காரகனின் செவ்வாயின் தலமாக கருதப்படுகிறது மேலும் இங்கு நாடி ஜோஸ்யம் பிரபலம்

    ReplyDelete
    Replies
    1. நாடி ஜோஸ்யம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய பார்த்ததில்லை. அதற்கு வாய்ப்பு வருமோ ?

      Delete
    2. எனக்குநம்பிக்கை இல்லை பார்த்ததில்லை

      Delete
    3. ஏகாந்தன், உங்களுக்கு நாடி பார்க்கணும்னு இருந்தால் தான் அதுக்கெல்லாம் போக முடியும். நான் பலமுறை நாடி ஜோதிடரிடம் போயிருக்கேன், மத்தவங்களோடு! ஆனால் ஒருமுறை கூட எனக்காகப் பார்த்துக் கொண்டதே இல்லை. அதில் ஆர்வமும் இல்லை. ஆனால் வைத்தீஸ்வரன் கோயிலில் நாடி ஜோதிட வியாபாரம் தான் நடக்கிறது என உறுதியாகச் சொல்லுவேன். அங்கே எல்லாம் போய்ப் பார்க்காதீங்க. என் பதின்ம வயதில் ஓர் வள்ளுவன்(ர்) எனக்கு நாடி பார்த்துச் சொல்லி இருக்கார். அது எல்லாம் அப்படியே நடந்திருக்கிறது. அதே போல் எங்க வீட்டுக் குடும்ப ஜோசியரும் சொன்னது நடந்தது. அப்படி எல்லாம் எவ்விதமான பிரதிபலன்களும் எதிர்பார்க்காமல் சொல்லுபவர்கள் இப்போ இல்லைனே நினைக்கிறேன்.

      Delete
    4. வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ஒரு நாடி ஜோதிடரிடம் எனது கேரள நண்பர் ஜோதிடம் பார்க்க விரும்பியபோது அவருக்கு மொழிபெயர்ப்பாளராக சென்றிருந்தேன். எப்படி அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை எனது வலைப் பக்கத்தில் ‘நம்பலாமா நாடி ஜோதிடத்தை என்ற தலைப்பின் நான்கு பதிவுகள் ஏப்ரல் 2011 இல் எழுதியிருக்கிறேன் .

      Delete
    5. சுட்டி கொடுத்திருக்கலாமே

      Delete
    6. எனது பதிவுகளுக்கான சுட்டிகளை கீழே தந்துள்ளேன்.

      நம்பலாமா நாடி சோதிடத்தை? 1
      https://puthur-vns.blogspot.com/2011/04/1.html

      நம்பலாமா நாடி சோதிடத்தை? 2
      https://puthur-vns.blogspot.com/2011/04/2.html

      நம்பலாமா நாடி சோதிடத்தை? 3
      https://puthur-vns.blogspot.com/2011/04/3.html

      நம்பலாமா நாடி சோதிடத்தை? 4
      https://puthur-vns.blogspot.com/2011/04/4.html

      Delete
    7. சுட்டிகள் வழியே சென்று படித்தேன் நன்றாக அலசி உள்ளீர்கள் பொதுவாக என்க்கு இந்த ஜோதிஅங்களில் நம்பிக்கை இல்லை உல்க்ல் இருப்போரின் நாடிகள் எல்லா ஓரிடத்தில் இருப்பதே அவநம்பிக்கைதருவது நானே ஆர்வம்முமிகுந்து chiegos palmistry படித்து சிலருக்கு கை ரேகை பார்த்து ஆருடம் சொன்னதுண்டு அவற்றை நம்பி ப்லரும் என்னை ஒருகைரேகை நிபுணனாக எண்ணியகாலம் உண்டு எனக்கல்லவோ தெரியும் அதுவெறும் வாய்ஜாலம் என்று

      Delete
  9. மருத்துவர் இறை நம்பிக்கை உள்ளவர் போல் உள்ளது. போற்றத்தக்க பணி.
    இறை நம்பிக்கை இல்லாதவர் இச்சூழலில் என்ன செய்திருப்பார் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

    ReplyDelete
  10. என்ன செய்திருப்பார் அவருக்கு தெரிந்த மருத்துவம் பார்த்திருப்பர்

    ReplyDelete
  11. வைத்தீஸ்வரன் கோவிலில் வேண்டிக்கொண்டால் பிணிகள் தீரும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். வைத்யநாத அஷ்டகத்தின் பொருளை விளக்கியமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே ஏதோ நம்பிக்கைதான் ஐயா

      Delete