Saturday, January 18, 2020

ரசனை பகிர்வு


                                                          ரசனை  பகிர்வு
                                                           -------------------------

  நான் ரசிப்பதைப் பகிர்கிறேன்  வாசகர்களும்  ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன் முதலில் பொங்கலுக்குஎன் மூத்தமகன்  மறு மகள் பேரன்  அவன் மனைவி  எல்லோரும் வந்தது மகிழ்ச்சி தந்ததுநமக்கு பொங்கல் எல்லாம்  பொங்கல் செய்து தின்பதோடு முடிகிறது மற்றபடி இதுவும் இன்னொருநாளே


பேரனும் அவன் மனைவியும்   எங்களுடன் 



சில நாட்களுக்கு முனொரு படம்பகிர்ந்து இருந்தேன் இலை போல் இருந்த ஒன்று தொட்டதும்பறந்து விட்டது மிதியடி ஒன்றை தோய்த்து காயப்போட்டிருந்தோம்  அதில் ஒருபூச்சி நான் பூச்சி என்று தெரியாமலேயே படம் எடுத்திருந்தேன்  எத்தனை வித ஜந்துக்கள் இயற்கையில்
இலை போல் இருந்தது 


என்ன பூச்சியோ 


இப்போதுமாமரம் பூக்கத்துவங்கி இருக்கிறது நன்மாடிக்குப் போய் அருகில் பார்த்து நாட்களாகி விட்டன  ஒரு பூ என் கவனம் ஈர்த்த கிளையில் இருந்து இல்லாமல் நேராக மரத்தண்டிலிருந்து பூ   படமாய்பிடித்து இருக்கிறேன்
மாம்பூ மரக் கிளையில்


 என்மச்சினனின்  மகன்  ஆஸ்திரேலியாவில் இருப்பவன்   மனைவி மகனுடன் வந்திருந்தான்  மகனுக்கு மூன்று பிராயம்தானிருக்கும்  செல்ஃபி வீடியோ என்று எடுத்து  ஒரே அலப்பறை  நான் மூன்று வயதாயிருக்கும் போது கண்ணாடி பார்த்து தலை சீவியதையே ஆச்சரியமாய் பார்த்த காலத்துக்கும்  இப்போதைக்கும்  எத்தனை  வித்தியாசம் …


மச்சினன் மகன் குழந்தை  மனைவியுடன் 
.!   


நான் என்பேரன் முதன்முதலில் தானாகநிற்பதை ஆவணப்படுத்தி இருக்கிறேன் சகஜமாக் நிற்பது பெரிய விஷயமாகத் தெரிவதில்லை அது போல் என்மச்சினனின்  இரட்டை குழந்தைகள்  கவிழத்தொடங்கியதும்பிடித்த படம் காணொளியாக

  












21 comments:

  1. நல்ல ரசனை.. எல்லாமும் நன்றாக உள்ளன. உறவுகளுடன் பொழுது மகிழ்ச்சியாகக் கழிந்தது குறித்து சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. வருகை மகிழ்ச்சி தருகிறது

      Delete
  2. ரசனைக்குரிய நிகழ்வுகள்தான்.  

    அந்தப்பூச்சிக்கு பெரிய மீசை இருப்பது போல இருக்கிறது.  இன்னொரு பூச்சியோ தீபாவளிக்கு வாங்கும் வண்ணத்துப்பூச்சி பட்டாசுபோல இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ நான் முகநூலில் திரு பழனியப்பன் கந்தசாமி பற்றி செய்தி பார்த்தேன் அவர் இருக்கிறரா போய் விட்டாரா என்று உறுதி படுத்த முடியவில்லை தொலை பேசியில் அழைப்பது உசித மாய் இருக்குமா தெரியவில்லை என்ன செய்ய

      Delete
  3. அனைத்தும் மிக அருமை.
    மகிழ்ச்சியான பொழுதுகள்.
    வண்ணத்து பூச்சியில் சில ரகம் இப்படித்தான் இருக்கும்.

    காணொளி மிக அருமை.
    இப்படி மகிழ்ச்சி தரும் நினைவுகளை அடிக்கடி பார்ப்பது நலம்.

    ReplyDelete
    Replies
    1. என்பொழுது போக்கே நல்ல நினைவுகளை அசை போடுவதுதானே

      Delete
  4. மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஐயா...

    ReplyDelete
  5. உங்கள் ரசனை மிகவும் அருமை ஐயா. குழந்தைகளின் போக்கிற்குச் சென்று நீங்கள் அதனை பகிர்ந்தது இன்னும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. எலோருக்கும் ர்சனை உண்டு நாபகிர்கிறென் அவ்வளவுதான்

      Delete
  6. பண்டிகை காலங்களில் நெருங்கிய உறவினர் வருகை மகிழ்ச்சியானதே. இது போன்ற சின்ன சின்ன மகிழ்ச்சிகளால் தான் முதுமையின் வெறுமை மறைகிறது. Jayakumar

    ReplyDelete
    Replies
    1. எங்கள் வீடு ஒரு முடியோர் இல்லமென்பதை இத்தகைய வரவுகள் மறக்கச் செய்கின்றன

      Delete
  7. ரசிக்க வைத்த காட்சிகளும், விசயங்களும் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வௌகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி

      Delete
  8. நிற்பதற்குக் குழந்தை செய்யும் விடாமுயற்சி பாராட்டுக்குரியது .

    ReplyDelete
    Replies
    1. எல்லாக் குழந்தைகளும் செய்வதுன் நான் கவனித்துகாணொளி ஆக்கி இருக்கிறேன்

      Delete
  9. ஒரு பூச்சி ஃபைட்டர் ஏர்க்ராஃப்ட் மாதிரி தெரிகிறது. கார் மிதியடியில் அமர்ந்திருந்த இன்னொன்று மதிமயக்குகிறது, குழப்பத்தைத் தந்து. வீட்டுத் தோட்டத்திலேயே விசித்திரங்கள் என்றால், மனிதன் தொடாத பெருங்காடுகள் உலகில் பல இருக்கின்றன. அங்கெல்லாம் என்னென்ன வகையான உயிர்களோ, பறவைகளோ?
    அதிசயமாக கிளைகளை மறுத்து மரத்தின் ட்ரங்கிலிருந்தே பூ முகிழ்த்திருப்பது ஆச்சரிய நிகழ்வு! நீங்கள் உன்னிப்பாக எல்லாவற்றையும் பார்த்ததால்தான் இந்த தரிசனம் !

    உறவினர், குழந்தைகள் வருகை சூழலுக்கு வண்ணம் தரும்..

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete
  11. இனிய பொழுதுகள்.

    ReplyDelete
  12. இலைபோல் இருக்கும் அந்த பூச்சி நான் இதுவரை பார்க்காதது ... கொள்ளை அழகு என்றே நினைக்க தோன்றுகிறது.... கார் மிதியடியில் அமர்ந்திருந்த இரண்டாவது பூச்சி எங்கள் இடத்தில வழக்கமாக உள்ளதுதான் ... இது வேகமாக அதே வேளையில் ஒரு ஒழுங்கு இல்லாமல் தாறுமாறாக பறப்பதால் நம் கண்களுக்கும் சிறுகுழந்தைகளுக்கும் என்றுமே ஆபத்து... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
  13. பகிர்வதன் நோக்கமே யாம் பெற்ற பேறு இவ்வையகமும் பெறத்தானே

    ReplyDelete