Sunday, June 7, 2020

சில நினைவலைகள்


                                   சிலநினைவலைகள்
                                   --------------------------------

அது என்னவோ தெரியவில்லை முதன் முதலில் டாக்டர்  கந்தசாமியை சந்தித்த நினைவாகவே  இருந்தது  2011 ந் கடைசியில் என்று நினசிக்கிறேன்என் தம்பியின்  வற்புருத்தக்லுக்கு  இண்ங்கி கோவை சென்றோம்  அந்த ட்ரிப்பிலேயே  நாங்கள் வாழ்ந்த வெல்லிங்டனுக்கும் செல்ல ப்ரோகிராம் செய்தோம்  வாழ்ந்த இடம்  படித்த பள்ளி  எல்லாமே மாறி இருந்தது மாற்றம் ஒன்றுதானே  மாறாதது 
 
என் விருப்பம் பூர்த்திசெய்ய கூனூர் வெல்லிங்டன் பகுதிகளுக்குச் சென்றொம். நான் நான்கு வருடங்கள் வசித்த இடங்களையும் படித்த பள்ளியையும் முதன் முதல் வேலை பார்த்த மைசூர் லாட்ஜ் இருந்த இடங்களையும் என் மனைவிக்கும் தம்பி, தம்பி மனைவிக்கும் காண்பித்தேன்.

இதுவே நான் என் இன்னொரு தம்பியுடன் முன்புவந்திருந்ததிலிருந்து மாறி இருந்தது நான் அப்போது வந்தச்து கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயம்1998ல் என்று  நினைவு 





நான் வேலை பார்த்தமைசூர் லாட்ஜ் அனெக்ஸ்  இருந்த இடம் 



முனீஸ்வர திட்டு 


நாங்கள் இருந்த வீட்டின் முன் நான் 1998ல்





2011ல் மைசூர் லாட்ஜ் இருந்த இடம்   
மைசூர் லாட்ஜ் இருந்த இடத்திலிருந்து கூனூர் ரயில் நிலையம் 
2011ல் நாங்கள் இருந்த  வீடு ஒரு தோற்றம்
இருந்தஇ டம் குதிரை லாயமாக்கப்படுகிறது



  

 வட்டக் குடியிருப்பில் நாங்கள் இருந்த இடம் தற்போது ஒரு குதிரை லாயாமாக உருவெடுத்திருக்கிறது. அங்கு இன்னும் நினைவுகளை தாங்கி நிறுத்தும் ஒரே சின்னமாக அந்த சாம்பிராணி மரமும், முனீஸ்வரன் இருந்த திட்டும் மட்டுமே இருக்கிறது. அடுத்த முறை செல்லும்பொது , செல்ல வாய்ப்பு கிடைக்கும்போது ,அவையும் இருக்குமா என்பது சந்தேகமே. இதை எழுதும்போதே மனம் வாடுகிறது இனிஒரு முறை  அங்கெல்லாம் செல்லமுடியாது என்னும் எண்ண்மேவருத்தம் தருகிறது
இப்போதெல்லாம் பதிவு எழுதும்போது புகைப்படங்களும் இருந்தால்தான்  ரசிக்க முடிகிறது டாக்டர் கந்தசாமியைஅதுவரை பதிவுகள் மூலம்மட்டுமே  தெரிந்திருந்தேன்   அவரையும் சந்திக்கமுடிவு செய்தோம்எங்கள்வருகையை தொலை பேசி மூலம்தெரிவித்தோம்   அவர் வீட்டுக்குசெல்லும் வழியையும் விசாரித்தோம்


டாக்டர் கந்தசாமியும் நானும் அவர் வீட்டின் முன் 




இந்த பாழும்மனம் எந்தஒரு பொருளில் மட்டும் லயிப்பதில்லை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவுகிறது அப்போது பிரபலமாயிந்த  இரா ராஜராஜேஸ்வரி யும்கோவையில்ததான் இருந்தார் அவரையும் சந்திக்க விரும்பி திரு க்ந்தசாம்யிடம் கேட்டேன்  திருமதி  இரா இரா எந்தப் பதிவரையும்  சந்திக்க விரும்புவதில்லை என்றார்    நானும்  விட்டு விட்டேன்
 நாங்கள் குடியிருந்த குடியிருப்பு  அலுவலக ரெஜிஸ்தர்கள்ல்  ஒரு குதிரை லாயமாக பதிவாகி இருந்ததாம்அதற்கு வாடகையாக மாதம் ரூ  மூன்று சம்பளத்தில் இருந்து கழித்தார்கள்  நாங்கள்போய் பார்க்கும்போது அந்த இடம் மீண்டும் ஒரு குதிரைலாயமாக மாறத் துவங்கி இருந்தது அப்பர் கூனூரில்  நாங்களிருந்த இடம் ஒரு பேரிக்காய்  தோப்பின்  நடுவில் இருந்தது  அதைஅடையாளமாகக் கொண்டு நாங்கள் இருந்த இடத்தை தேடினோம் அக்கிருந்தவர்களுக்கு பேரிக்காய் தோப்பை பார்த்த நினைவே இல்லை         
ஐம்பது அறுபது  ஆண்டுகள் முன்பிருந்தச் இடமே சுத்தமாய் காணாமல் போய் விட்டது இது இப்படி இருக்கநூற்றண்டுகள்முன்பிருந்த இடங்கள் எத்தனை மாறு  தல்களுக்குஉட்பட்டிருக்கும் என்பதை நினைக்காமல்  இருக்கமுடியவில்லை


 சரித்திரங்கள்பலவும்கற்பனையின்  ஜோடிப்பாய் இருக்கலாம் என்றும் தோன்றுகிறது வட்டக் குடி இருப்பில் நாங்களிருந்த இடத்தில்  இருந்தஒரு சாம்பிராணி மரம் மட்டும் அடையாளம் காட்டியதுநாங்கள் இருந்தவீடு கொஞ்சம் பெரியது  20 க்கு 20 ஆக மூன்று அறைகள் கூடவேஒவ்வொரு அறையை ஒட்டி 20 க்கு 10என்று கூடவே இருக்கும்  கூடுதல் அறைகள் வீட்டை சுற்ற்லும் நிறையவெட்ட வெளி இடங்கள்நங்கள்அங்கே உருளை பயிரிடசிலபடகர்களுக்கு  கொடுத்திருந்தோம் உருளை அறுவடை யானால்  ஒரு அறை முழுவதும்  உருளைக் கிழங்குகள்தான்  இருக்கும் சில வருடங்களில் பனிபெய்து ஒரே வெண்மை நிறமாக தோட்டம் காட்சிஅளிக்கும்  படகர்கள் அதை கண்டப்பப்னி என்பார்கள் அது பயிர்களை கருகவைக்கும் அவர்கள் குய்யோ முறையோ என்று கூக்குரல் இடுவ்து இன்னும்  நினைவில்அவற்றை எல்லாம் ஆவண மாக்கத் தெரிய வில்லைஇருந்தும் சிலவற்றை படமாக்கி இருக்கிறேன்


சிம்ஸ்பார்க் முன்னால்  அருகேதான்  பாஸ்டியர் இன்ஸ்டி ட்யூட் 

வெலிங்டனில் இருந்ஹ வீட்டின் முன் புறம்1952ல்  எடுத்த சில புகைப்படங்கள் நினைவுக்காக்க 



தம்பிகள்
                                                                                          


     

27 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மறக்க முடியாத நினைவு அலைகள்
    அடிக்கடி வந்து போகும் - அதை
    மீட்டுப் பார்ப்பதிலொரு சுகமிருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அதுவும் வயதாகி விட்டால் வாழ்க்கையெ ஒரெ நினைவுகளில்தான் இருக்கும் போல

      Delete
  3. வயதாகும் தோறும் பிறப்பிடம் மற்றும் சிறு வயதில் ஓடி ஆடிய இடங்களைக் காண விருப்பம் தோன்றுகிறது. நீங்கள் புகைப்படங்களுடன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது நன்று. கந்தசாமி ஐயாவுடன் ஆன சந்திப்பைப் பற்றி எழுதிய பதிவு சுட்டியைச் சேர்த்திருக்கலாம். 

    ReplyDelete
    Replies
    1. இரண்டு மூன்று பதிஉகளெழுதிஒருப்பேன் பலரும் படித்ததே உங்களுக்காகஒரு சுட்டி இதோhttps://gmbat1649.blogspot.com/2014/05/blog-post_18.html வலை நட்புகளில் ஒரு நல்லவர்

      Delete
    2. உடலில் தெம்பு இருக்கும் போதே செய்து விட வேண்டும்

      Delete
  4. நினைவலைகள் ரசிக்க வைத்தன...

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததுக்கு நன்றி ஜி

      Delete
  5. 'அந்த' லாட்ஜைத் தான் என் சமீபத்திய 'உயிரில் கலந்து
    உணர்வில் ஒன்றி' பதிவில் சூசகமாகக் குறிப்பிட்டிருந்தேனே..?
    தாங்கள் கவனிக்கவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. நான்கவனிக்கப்வில்லை எனக்கு எல்லாமே நேர்பட சொன்னால்தான்புரியும்

      Delete
    2. கவனிக்கவில்லையா என்று தான் கேட்டேனே தவிர அப்படிக் கேட்பதற்கான அவசியமும் இல்லை என்று இப்பொழுது
      தெரிகிறது.

      குன்னூரைப் பற்றிய பதிவில் ரயில் நிலையத்திற்கு அருகிலிருக்கும் அந்த லாட்ஜ் பற்றிக் குறிப்பிடும் பொழுதே உங்கள் நினைவு எனக்கிருந்தது. அதனால் தான் கவனித்திருப்பீர்களோ என்று நினைத்தேன்.

      Delete
    3. கவனிக்கவில்லையா என்று தான் கேட்டேனே தவிர அப்படிக் கேட்பதற்கான அவசியமும் இல்லை என்று இப்பொழுது
      தெரிகிறது.கவனிக்கவில்லையா என்று தான் கேட்டேனே தவிர அப்படிக் கேட்பதற்கான அவசியமும் இல்லை என்று இப்பொழுது
      தெரிகிறது/ அதனால் என்ன பரவாயில்லை

      Delete
  6. சரித்திரங்கள் பலவும் கற்பனைகளின் ஜோடிப்பாய்.....மிகவும் ரசித்தேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. மனசில் பட்டதை எழுதினேன் ஐயா

      Delete
  7. எமக்கும் இப்போதெல்லாம் சிறு வயதுமுதல் வாழ்ந்த இடங்களை பார்த்து வரவேண்டும் என்ற அதிகம் வருகிறது..தங்களின் இந்தப் பதிவு அதற்கு கூடுதல் வலு கூட்டிப் போகிறது...

    ReplyDelete
    Replies
    1. நினைப்பதை செய்து விட வேண்டும் உடலில்தெம்பு இருக்கும் போதே

      Delete
  8. இனிய நினைவுகள்.   கொஞ்ச வருடங்கள் கழித்துப் போனால் நாம் இருந்த இடத்தை நம்மாலேயே  அடையாளம் காணமுடியாத அளவு மாறி விடுகிறது.   எவ்வளவு மாற்றங்கள்!

    ReplyDelete
    Replies
    1. குறுகிய கால மாற்ற ம் அதனால் தான் குறிப்பிட்டேன்

      Delete
  9. மாற்றங்கள் மட்டுமே மாறாதது என்பார்கள்.

    ReplyDelete
  10. நினைவலைகள் என்றும் இனியவை

    ReplyDelete
  11. நாங்கள் திருமண வாழ்க்கையை ஆரம்பித்த துபாய் வீட்டை, 10 வருடங்கள் கழித்து துபாய் சென்றபோது எங்கிருக்கிறது என்று தேட வேண்டியதாகப் போயிற்று. பத்து வருடங்களுக்குள்ளேயே இவ்வளவு மாற்றங்கள் இருக்கும்போது, 20+ வருடங்கள் ஆகிவிட்டதென்றால் இடத்தை அடையாளம் காணுவது மிகச் சிரமம்.

    எனக்கும் நான் சிறு வயதில் இருந்த ஊர்களுக்குச் சென்று பார்க்கவேண்டும் என்று ஆசை.

    ReplyDelete
    Replies
    1. நான் பார்த்தவரை துபாயில் எல்லாம் ஒரே மாதிரியாய் தெரியும் நினைப்பதை செய்து விட வேண்டும் பின்பு ஒரு வேளை சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாம்என்னை மாதிரி ஆனால் முடியாமல் போகலாம்

      Delete
  12. கால ஓட்டத்தில் அனைத்திலும் மாற்றங்கள். எங்கள் பழைய நினைவுகளிலோ மாற்றம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. பழைய நினைவுகளிலும் மாற்றம் இருக்கிறது நாம் இப்போது கஷ்டம் என்று நினைப்பதெல்லாம் அந்தநாட்களில் சந்தோஷமாய் இருந்தவை

      Delete