Sunday, August 2, 2020

கடைசியில் சில பக்கங்கள மிஸ்ஸிங்



             
 கடை சியில் சில பக்கங்கள்  மிஸ்ஸிங்

நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன்  இருக்கும் வரை பதிவிடுவது  கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக  முடிக்கிறார்களோ  அவர்களுக்கு ஒருபரிசு உண்டுரூபாய் ஆயிரம்  என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும்  கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே துற்றிக்கொள்ளட்டும்
காட்சி---10
இடம் –குமரேசன்  வீடு
பாதிரங்கள் ----குமரேசன்  மாணிக்கம்  சந்துரு
மாணிக்கம்---- அண்ண்னுக்கு  நான்மாலைபோடறேன் அண்ணிக்கு நீபோடு என்ன் வந்ததும்முதல்லே வலது காலை எடுத்து வசற்படியில் வைத்து நடந்து வரச் சொல்லணும் அண்ணிகிட்டெ   என்ன சந்துரு ஞாபகம் இருக்கா ( குமரெசன்வர அவனுக்கு மாணிக்கம்  மாலை போட )
சந்துரு---அண்ணா
குமரேசன் -----சந்துரு
சந்துரு ---இரு  அண்ணா அண்ணிக்கு இந்த மாலையைப்போட்டுகூட்டிவரேன்
கும---சந்துரு  அண்ணியைப்பத்தி ஒண்ணும்பெசக்கூடாது ந்னு ஜெயில்லயே உங்கிட்ட  சொன்னேனா இல்லையா
சந்துரு –ஜெயில்ல சொன்னா --- இப்பத்தான் நீ வீட்டுக்கு வந்துட்டியே ஹுக்கும் அண்ணி வரல்லயா அண்ணா
கும--- அவள்  வரக்கூடாது வர மாட்டாள்
மாணிக்கம் ---- என்னண்ணே குமரேசண்ணே நானும் மரகதமும் கூடத்தான் அடிக்கடி சண்டை போட்டுக்கறோம்  புருஷன்  பொஞ்சாதி  சண்டைபொழுது விடிஞ்சா  போச்சுண்ணே கோபததை விட்டுட்டு  அண்ணியக் கூட்டிட்டு  வா அண்ணே
  குமரே--- மாணிக்கம்   அவளைக் கூட்டுட்டு வரது இருக்கட்டும்  மொதல்ல  நான் போய் எனக்கு மறுபடியும்   வேலை கெடக்கிமான்னு பார்த்திட்டு வஏன்  (போகிறான் சந்துரு ---- அண்ணனுக்கு அண்ணி மேல என்ன கோபமோ
மாணி----ஒரு வேளை அண்ணிக்கு  அண்ணன்  மேல கோபமோ

                      
                        திரை 


14 comments:

  1. சுருக்கமாக முடித்து விட்டீர்களே...

    ReplyDelete
  2. முற்றும் போடவில்லையே மேலும் முடிக்க வேண்டியது வாசகர்களல்லவா

    ReplyDelete
  3. எப்படியும் வாசகர்களை இழுத்து உள்ளே விட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளீர்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வாசகர்கள் கலந்து கொள்ள வேண்டுஎன்பதே என் அவா

      Delete
  4. சுவாரஸ்யம் நல்ல முடிவு வரட்டும் வாசகர்களால்...

    ReplyDelete
    Replies
    1. நல முடிவோ இல்லையோஅது வாசகர்கள்கையில்தான் இருக்கிறது

      Delete
  5. நாடகத்தைத் தொடர்பவர்கள் இந்த நாடகத்தை இது வரை நடத்திச் சென்ற பெரியவரின் வசனப் பாங்கை அதே பாணியில் தொடர வேண்டும். அது தான் முக்கியமாகத் தெரிகிறது. அப்பொழுது தான் தொடர்ந்து எழுத முயற்உப்பது சோபிக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. நாடகத்தை முடிக்க வேண்டும் என்பதே கண்டிஷன் அவரவர்பாணியில் இருந்தால்தான் நன்றாக இருக்கும்

      Delete
  6. சார் இதுக்குப் பிறகு பக்கங்களைக் காணோம்...வாசகர்கள் தொடர வேண்டும் இல்லையா...

    பார்க்கிறேன் முடிகிறதா என்று.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஃஅப்படியா எண்ணுகிறீர்கள் இன்னும் சிலபகுதிகள் நானே பிரசுரிப்பேன்

      Delete
  7. எல்லாப் பகுதிகளும் வாசித்துவிட்டேன். யார் உங்கள் நடையில் பொருந்துவது போல் எழுதி உங்கள் பரிசை வெல்லப் போகிறார்கள் என்று ஆர்வம்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. என் நடையில் எழுத வேண்டும் என்றில்லை சொல்லப்போனால் கதையாகவும் இருக்கலாம் நாடகமாய் இருந்தால் நல்லது

      Delete
  8. நல்லது. இதையும் வாசித்து விட்டேன். மனம் மாறுமோ? மணமாலை கூடுமோ?!

    ReplyDelete
  9. மணமாலைதான் கூடியாயிற்றே கதையின்போக்கைப் பாருங்கள் போட்டியில் பங்கு பெறுங்கள்

    ReplyDelete