Wednesday, April 14, 2021

ரசிக்கும்பாடல்

ஒரு இனிய காதல் பாட்டுடன் அனைவருக்கும்   இனிய பொஙகல் வாழ்த்துகள்              
 காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன் – அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன்

வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் – கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த்
தீயினிலே வளர் சோதியே – என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்
(காற்று)

11 comments:

  1. மிக அருமையான, இனிமையான மனதை வருடும் பாடல்.

    ReplyDelete
    Replies
    1. வருகைகும் ரசிப்புக்கும் நன்றி ஸ்ரீ

      Delete
  2. இனிமையான பாடல்...

    பொங்கல் வாழ்த்துகள்...?

    ReplyDelete
    Replies
    1. பொங்கல் வாழ்த்துகள்...?யானைக்கும் அடி சருக்கும்

      Delete
  3. இனிமையான பாடல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். புத்தாண்டுக்கு வீட்டில் சர்க்கரைப் பொங்கல் செய்தால் அது பொங்கல் வாழ்த்தாக மாறிவிடுமா?

    மிக அருமையான பாடல். மனதை வருடுகிறது.

    ReplyDelete
  5. தவறுகள் தப்புவதில்லையே

    ReplyDelete
    Replies
    1. த்2வறுகள் தப்புவதில்லையே

      Delete
  6. ரசித்ததற்கு நன்றி

    ReplyDelete