Tuesday, January 4, 2022

நான் நல்ல பையன்

 


எண்பத்து மூன்றிலும்  நல்ல பையன் நான்
கண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்


(இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)

பத்மினி,சித்தினி,சங்கினி, அத்தினிப் பெண்டிர்
பவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்
பயமாய் இருக்கிறது.. தலை தூக்கிக் கண்டாலே
காவலரிடம் புகார் செய்வரோ, என்றே அச்சம்.
அவர்களுக்கென்ன ..பாரதியே கூறிவிட்டான்
நிமிர்ந்து நடக்கவும்  நேர்கொண்டு பார்க்கவும்.

எனக்கேன் இந்த பயம்..?

பேதையோ, பெதும்பையோ
மங்கையோ மடந்தையோ , அரிவையோ தெரிவையோ
இல்லை பேரிளம்பெண்ணோ , பார்வையால்
துகில் உரியப்பட்டு பருவ பேதமின்றி சிதைக்கப்படும்
அச்சத்தின் உச்சத்தில் வளைய வரும் தாய்க்குலம்
யாரைப் பார்த்தாலும் பாம்பா பழுதையா என்றறியாது
தற்காப்புக்காக எதுவும் செய்யலாம்தானே

பாரதிதாசன் கூறியதுபோல் “ கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன் வால் பார்க்கும்.”

பாவிகள் பலரது செயல்கள்
பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க நானிருக்கிறேன்
எண்பத்து மூன்றிலும்  நல்ல பையனாக.

24 comments:

  1. நல்ல பையனா அல்லது நல்ல கிழவனா? தற்போது பாலியல் தொந்தரவு கொடுப்பதற்காக கைது செய்யப்படுபவர்கள் கிழவர்கள் தாம்.

     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ரசித்த பின்னூட்டம் ஜெயகுமார் சார்

      Delete
    2. ஜெகே அண்ணா நான் சிரித்துவிட்டேன்!!!! முடிலப்பா...

      ஜிஎம்பி சார் என்ன சொல்லப் போகிறார்னு ஆவலுடன்!!!

      கீதா

      Delete
    3. பின்னூட்டங்களுக்கு மறு மொழிசொல்ல்லாம் என்றால் பொதுவாக்என் பதிவுகளுக்கு சில காரண்ங்கள் இருப்பதுதெரியாமல்பின்னூட்டங்கள் வ்ருகின்றனஇப்பதிவுபெண்களை நம் முன்னோர் நான்குவகையாக கூறி பருருவஙகளயும் சொல்லி இருக்கிறார்கள் அவற்றை என்பதிவில் கூறி இருக்கிறேன்
      பாரதி தாசன் பாடல் ஒரு ஒப்புமைக்க்சாக

      Delete
  2. (இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)//

    ஹாஹாஹாஹா சார்! அதில் நானும் ஒருத்தி!!!

    பதிவு ரசிக்கவும் கூடவே புன்சிரிப்பையும் வர வைத்தது.

    கீதா

    ReplyDelete
    Replies

    1. ஹாஹாஹாஹா சார்! அதில் நானும் ஒருத்தி!!!ருவெளை உங்களுக்குமுடியாமலிருக்கலாம்

      Delete
  3. பின்னிய கூந்தல் கருநிற நாகம்...   பின்னாத கூந்தல் கரிய மேகம்!

    ReplyDelete
    Replies
    1. இப்போல்லாம் ஸ்ரீராம் பின்னிய கூந்தல்களை பார்த்ததில்லை போலிருக்கு. 1 அடிக்கு மேல் இருக்கும் கூந்தலே வெகு வெகு அபூர்வம் அல்லவா? இதுல கருநிற நாகம் என்று பாட்டின் வரிகளைக் கடன் வேறு வாங்கியிருக்கிறார்.

      Delete
    2. ஸ்ரீ எங்கிருந்து சுட்டது

      Delete
    3. நெற்றி கண் திற்ந்தது விட்டது

      Delete
    4. // ஸ்ரீ எங்கிருந்து சுட்டது//

      முதல் வரி அபூர்வராகங்கள் பாடல் வரி. அடுத்தது பல பாடல்களில் அவ்வப்போது வெளிப்படும் கருத்து!

      Delete
  4. நான் கூட ரொம்ப நல்லவன் தான்... அதோ போகிறாளே.. நீலக் கலர் சட்டை, கருப்பு நிற ஜீன்ஸ்... அவளையெல்லாம் நான் பார்க்கவில்லை. பேசாமல் ஒரு உபந்நியாசத்தைக் கேட்டுக்கொண்டுதான் நடக்கிறேன்.. என்று சொன்னால், என் மனைவி உடனே நம்பிவிடுவாள் (ளா? ஹா ஹா)

    ReplyDelete
  5. நல்லபையன் தான் நீங்களூம் நம்பிவிட்டேன் நானும்

    ReplyDelete
  6. Neenga eppavum nalla paiyan thaan appa... ennai maathiri....!!!!

    ReplyDelete
    Replies
    1. உங்களை போல நானும்நல்லபையதான் எனறு இருந்திருக்க வேண்டும்

      Delete
  7. ரசனையான பகிர்வு.

    ReplyDelete
  8. அது சரி இப்போது எதற்கு இந்த சுய சாதனை சான்றிதழ்?

    ReplyDelete
  9. தேவை என்று பட்டது

    ReplyDelete