Friday, February 25, 2022

நான் யார்

 நான்  யார்


பொழுது புலர்ந்தது  மெல்லென எழுவீர்

யாரோ மென்  குரலில்பாடி என்னை எழுப்புவதுபோல்  இருந்தது  கண்விழிப்பு வ்ந்ததும்   கற்பனையும் கனவு என்று தெரிந்தது அதுசரி ஏன்  அந்தமாதிரி  ஒரு கற்பனைக் கனவு என்று  ஆராய்ந்தால் கனவே கற்பனையின்  காரணம் என்றுநினைக்க முடிந்தது  கனவில் நான்  என்னை   நான் ஒரு ஜகதலப் பிரதாபனாகக்கனவு கண்டிருக்கிறேன்

நிஜம் என்ன வென்றால்  வீட்டில் பாட்டுப்பெட்டியில் கௌசல்யா சுப்ரஜா ராமா சந்தியா பிரவர்த்ததே  என்று ராமனை துயில் எழுப்பும்  பாடலை என் மனைவி போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பாள் தினமும்  ராமனைத் துயில் எழுப்பும்  என்மனைவி ஏன் என்னைத் துயிலெழுப்புவதில்லை  என்னை ஏன்  துயில் எழுப்பவேண்டும்   நான்தான்  எப்போதும்அரை உறக்கத்தில்தானே இருக்கிறேன் அருகில்படுத்திருக்கும்  அவள்  சிறிது அசைந்தாலும்   விழித்துக் கொள்வேன்   அது போல்தான் அவளும் இருந்தாலும்  என்னைப் பாட்டுபாடி எழுப்பாதது ஒருகுறையாகத் தெரிகிறது மனைவியிடம் சொன்னால்  போங்கன்னா  என்பாள்  மேலும் இல்லாத ஒருவரை துயிலெழுப்புவது சரி இல்லை  என்று சொன்னால் அது அவளுக்குப் பிடிக்காது ஒருவருக்குப் பிடிக்காததை செய்யாமல் இருப்பதே  சுமூக மண வாழ்வுக்கு நல்லது என்பது நான் கற்ற பாடம்

நான் என்னை ஒரு ஜகதலப் பிரதாபனாக கற்பனையில் இருந்தேன்   மிகுந்த சின்ன வயதில் ஜகதலப்பிரதாபன் படம் பார்த்திருக்கிறேன் முழு கதை நினைவுக்கு வர வில்லை  இணையத்தில் தேடினால்ஆச்சரியமாக இருந்தது ஜகதலப் பிரதாபன் ஒரு ராஜ குமாரன்   அவனுக்கு   நான்கு தேவகன்னியரோரு வாழ விருப்பம் இதை கேட்ட அவன்  தந்தை அவனைச் சிரசேதம்செய்ய உத்தரவிடுகிறார்  ஆனால் தாய் அவரைத் தப்பிக்க விடுகிறார்அவ்வை  எனுமொரு தெய்வத்தாயின் பராமரிப்பில் ப்ரதாபனும் அவரதுநண்பரும் இருக்கிறார்கள் ஒரு நாள் அருகே இருக்கும் குளம் ஒன்றில் ஒரு அழகிகுளித்துக் கொண்டிருப்பதைக் காணுபிரதாபன்  அப்பெண்ணின்  புடவயை எடுத்து மறைத்துக் கொள்கிறார்  புடவை தேடி வரும் அழகிகாணாதிருக்க அவ்வை பிரதாபனை ஒரு குழந்தையாக மாற்றி விடுகிறார் நாளாவட்டத்தில்  அழகி அக்குழந்தையை நேசிக்கிறார்  விரைவில்குழந்தைஉருவம் மாற ப்ரதாபனும்  அந்த அழகியும்மணம் புரிண்டுவாழ்கின்றனர்

அவர்கள் வாழும் நாட்டின் அரசன்   பிரதாபனின் மனைவியிடம் மனம் பறி கொடுத்து பிரதாபனை தனக்கு இல்லாத ஒரு நோய்க்கு  மருந்து தேடி கொண்டுவர நாக லோகத்துக்கு அனுப்புகிறார்   பிரதாபனோ வேலையை கச்சிதமாக முடித்துமேலும் மூன்று அழகிகளோடு திரும்பி வந்து இனிதே வாழ்கிறார்  என்பதாகக் கதை

 ஒரு வேளை  ஆழ்மன ஆசைகளே கனவாக வருகிறதோ ஆனால் நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நான் நல்லபையன்  அது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்

 

து

 

 


9 comments:

  1. சுவாரஸ்யமான கற்பனை, கனவு!

    ReplyDelete
    Replies
    1. ஆனால் என்க்கு அப்படி தோன்ற்வில்லையே

      Delete
  2. என்னுடைய அப்பா (இப்போது இல்லை)  ஜகதலப்ரதாபன் சினிமாவை 24 முறை பார்த்ததாக கூறுவார்.

     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நானும் சின்ன வயதில் பர்த்திருக்கிறேன்அப்பொதுவேறு பொழுதுபோக்கு இல்லை அல்லவா

      Delete
  3. சார் பெரும்பாலும் ஆழ்மன ஆசைகளே தான் கனவாக...

    ஆனால் நீங்கள் நல்ல பையன் தான் சார்!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங் க ளுக்கு இம்மாதிரி கனவுகள் வருமா

      Delete
  4. இறுதியில் சொன்ன "நான் நல்ல பையன்" ரசிக்க வைத்தது ஐயா

    ReplyDelete