Tuesday, March 15, 2022

ஒரு சிறு கதை

 

 நாய்களைக் கண்டாலே ஒரு பாசம்  ஒரு ஞாயிறு என்று நினைக்கிறேன்   மதிய உணவுக்குப் பின் ஒரு குட்டித் தூக்கம் போடலாம் என்று இருந்தபோது ஒரு நாய் வாலை ஆட்டிக்கொண்டு சிநேக பாவத்துடன்  வந்தது பார்க்க் யாரோ வளர்க்கும் நாய் போல் இருந்தது நானும் அதைத் தடவிக்கொடுத்த போது  உரிமையுடன் வீட்டுக்குள் வந்து சோபாவில்  ஏறிப் படுத்துக் கொண்டது  மாலையானதும்சிலபிஸ்கட்டுகளைத் தின்னக் கொடுத்தேன்  சிறிது நேரமிருந்து விட்டு அதுபோய் விட்டது மறு நாளும் வந்ததுஅதேபோல் அன்றும் வாலை ஆட்டிக்கொண்டு வந்து சோபாவில் ஏறிப் படுத்துக் கொண்டது நானும் ஐயோ பாவம்வாயில்லா பிராணி என்று பேசாமல் இருந்து விட்டேன் இது இப்படியே தொடர்வது கண்டு என்மனைவி அதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கச் சொன்னாள்  யாராவதூரிமையாளர்கள் நம்மிடம்வந்து சண்டை போடலாம் என்றாள்  சிறி து யோசனைக்குப் பின்  எனக்கு ஒரு ஐடியா தோன்றியது தினமும் சிறிது நேரம் சோபாவில் படுத்து விட்டு சமத்தாக அதுவே போவது கண்டு அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய  நினைத்தேன்   அதன் காலரில் ஒரு சீட்டில்  நிகழ்வுகளை விவரித்து எழுதி கட்டி விட்டேன்  மறு நாள் என்ன ஆச்சரியம்   அதன்  காலரில் ஒருசீட்டுடன் அதுவந்தது அதை எடுத்துப் பிரித்துப்படித்தால்

சார் / மேடம்   மிக்க நன்றி . ஒரு வாயில்லா ஜீவனுக்கு அடைக்கலம்கொடுத்து தங்க அனுமதித்ததற்கு மிக்க நன்றி அது என் நாய் இங்கே என்வீட்டில் அமதியாக தூங்க முடியாமல்  அவதிப்படுமது டனக்கு ஒரு இடத்தைத்தேடிக்கொண்டது என் வீட்டில் நான்கு பிள்ளைகள் அந்தநாய்  சற்று நேரம் நிம்மதியாய் இருக்க விடுவதில்லை அதனால் தான் அது உங்கள்வீட்டைத் தேடி வந்தது நானும் அதுபடும்பாட்டை அனுபவிக்கிறேன்   எனக்கும் உங்கள்வீட்டில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்க அனுமதி கிடைக்குமா  அப்படியானால் நானும்நிம்மதி யுடன் மதியவேளையைப்போக்கலாம் நன்றியுடன்  என்று எழுதி இருந்தது

 


12 comments:

  1. வாட்ஸாப்பில் அவ்வப்போது வரும் ஒரு பார்வேர்ட்.  படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இது வாட்சப்பில் எடுத்ததல்ல

      Delete
    2. இருக்கலாம்.  ஆனால் எனக்கு பலமுறை வாட்ஸாப்பில்தான் வந்து கொண்டே இருக்கிறது!

      Delete
    3. கொடுத்து வைத்தவர்

      Delete
  2. Replies
    1. ரசிப்பு மகிழ்ச்சிதருகிற்து

      Delete
  3. நன்றாக இருக்கிறது கதை.

    ReplyDelete
  4. பாராட்டுக்கு நன்றீ

    ReplyDelete
  5. யாரோ வளர்க்கும் நாய் போல் இருந்தது நானும் அதைத் தடவிக்கொடுத்த போது உரிமையுடன் வீட்டுக்குள் வந்து சோபாவில் ஏறிப் படுத்துக் கொண்டது //

    அட!!

    ஆனால் நாய்கள் அப்படித்தான் கொஞ்சம் தடவிக் கொடுத்தால் போதும் நம்மிடம் ஒட்டிக் கொண்டுவிடும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நானும் நாய் வளர்த்திருக்கிறென்இந்த குணம் தெரியாது

      Delete
  6. ஹாஹாஹா இது ஏற்கனவே எங்கோ வாசித்திருக்கிறேன். இங்கு மீண்டும் ரசித்தேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எங்கூ என நினைவில் இல்லையா

      Delete