Tuesday, March 24, 2020

வீடு மகாத்மியம்



                                                               வீடு மகாத்மியம்
                                                               --------------------------

 வீடுகட்டல் பற்றி  இரண்டு பதிவுகள் எழுதி அவற்றின்  சுருக்கம் கீழே
 நான் வீடு கட்டியகதையை ஏற்கனவே பதிவில் பகிர்ந்துள்ளேன் 1979/ ல் இடம் வாங்கி 1986-ல் வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் வாடகைக்கு விட்டேன் அப்போது நான் திருச்சியில் இருந்தேன் 1991-ம் ஆண்டின்  கடைசியில் என் மூத்த மகனை குடி யிருத்துவதற்கு வாடகைக்கு இருந்தவரைக் காலி செய்யச் சொன்னேன்  அவரும்  எந்தப்பிரச்சனையும்  தராமல் காலி செய்ய என் மகனும் மருமகளும் குடி வந்தனர் நானும் என் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று என் மகனுடன் வந்து விட்டேன் என் இளைய மகனுக்கும் இங்கே வேலை கிடைக்கவும் .அவனுக்கும் மணமுடித்தால் இந்த வீடு சிறியதாய் இருக்கும் என்று எண்ணி மாடியில் இன்னொரு வீடு கட்டினேன் 1992-ம் ஆண்டு. வீடு கட்டி முடித்தவுடன்  நாங்கள் மேல் தளத்துக்குச் சென்று கீழ் வீட்டை வாடகைக்கு விட்டோம் அதில் ஒரு டாக்டரும் அவர் கணவரும்   குடி வந்தனர்
சுமார் ஏழு ஆண்டுகள் அவர்கள் இங்கிருந்தனர் பின் சொந்தவீடு கட்டி குடிபோயினர்  அத்ற்குபின்  பலரும்வந்துபோனார்கள் சிலர் என் கதை மாந்தர்கள் ஆனார்கள்மெல் வீடு சற்றே பெரியது  அங்கு போனபின்  என் இளையமகன் திருமணம்  நடந்ததுஅதன் பின் சில நாட்களில் நாங்கள்கீழே வந்து விட்டோம்

முன்பே சொன்னது போல்  எனக்கும் ஏதும் வரவு இருக்கவில்லை வீட்டை வாடகைக்கு விட்டுஅதில் வரும் வாடகையே எங்கள்  வருவாயாயிற்று வாடகைக்கு வருபவர்களுக்காக வீட்டை புதுப்பித்து அதன் வால்யூவை அதிகரித்தேன் என்வீட்டில்டி குடி வருபவர் ஒரு ரிச்நெஸை  உணர்வார்கள் 
வீடு கட்டிய செலவை விட புதுப்பிக்கும்போது செலவு   அதிகமாயிற்று வருத்தமில்லை 
சில நினைவோட்டங்கள்  வீடு கட்டுவதே வேஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருந்தவன்  விட்டின் வாடகையே சோறு போடுகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது எண்ணங்கள் நிலையானது அல்ல என்பது புரிகிறது  முதலில் வீடு கட்டும்போது  செலவு செய்ததை விட புதுப்ப்பிக்கவும்   அதன் மதிப்பை உயர்த்தவும்செய்த செலவு அதிகம்  விட்டின் உள்ளிருந்தே  டைல்ஸ் மாற்றிய அனுபவம் முதலில்  நமக்கு வேண்டியது  தெரிந்திருக்க வேண்டியதுஅவசியம் நம்பிக்கையான ஒப்ப்ந்ததாரர் கிடைக்கவேண்டும் சிலரைநம்பவேண்டும் இல்லைஎன்றால் நாமே எல்லாவற்றுக்கும் அலையவேண்டும் எனக்கு கிடைட்தவர்கள் நம்பிக்கையானவர்கள்   
  
    

என் வீட்டி சில புகைப்படங்கள்முதலிலேயே செலவுபற்றி பேசிவிட வேண்டும்என் வீட்டி சில புகைப்படங்கள் பொறிஇயல் பற்றிய தெளிவு இருக்கவேண்டும்முதலில் காண்டி லிவெர் போர்டிகோ டிசைன் செய் திருந்தாலும்மேல்மாடி கட்டும்போதுசப்போர்டிங்  தூண்கள் கூடுதலாக  கட்டினோம் 


வீட்டின் முன்புற தோற்றம்  


பக்க வாட்டும்  மாடிக்கு போகும் படிகளும் 


மாடியிலிருந்து போர்டிகோ மேல் பாகம்
இதுபோல் இரு படுக்கை அறைகள்
  






    

உள் ஹாலும்  வாசலும் 


ஹாலின் இன்னொரு புறம் 


அடுக்களை n


பாத் ரூம் 


வீட்டின் எல்லா படங்களும்  பதிவிடவில்லை

வீடு மகாத்மியம் முற்றும்







26 comments:

  1. வீடு மஹாத்மியம் - நன்று.

    பார்த்துப் பார்த்து கட்டிய வீடு - என்றைக்கும் மகிழ்ச்சி நிலவும் இடம்.

    உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. வீட்டின் கதை என்னைக் கவர்ந்தது. எனக்கு பிடிஏவில் அரை கிரவுண்டு ஆக்‌ஷனில் வாங்கி பிறகு அதில் வீடு கட்டிக் கொடுத்தவர் என் மாமனார். பணம் கொடுத்ததோடு என் வேலை முடிந்தது.

    என் ஒபினியன்... வீட்டு வாடகை வருவது நல்லது என்றாலும் மராமத்து பணிகளுக்கு நாம் செலவிடும் தொகை அதிகம் என்பது. இன்னும் என் வீட்டில் வசிக்கும் வாய்ப்பு வரலை

    ReplyDelete
    Replies
    1. சொந்தவீடு குடி இருப்புகளில் இல்லாவிட்டால் எல்லா பணிக்கும் நாமே ஓட வேண்டும்

      Delete
  3. //எண்ணங்கள் நிலையானது அல்ல என்பது புரிகிறது//

    உண்மையான வார்த்தை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வீடு கட்டுவதான என் எண்ணக்சள் மறிவிட்டது

      Delete
  4. சொந்த வீட்டில் வசிப்பது இன்பந் தரும் ; ஆனால் ," யானை அசைந்து தின்னும் வீடு அசையாமல் தின்னும் ">

    ReplyDelete
    Replies
    1. வீடு பழையதாக ஆக நீர் சொல்வது உண்மையாகலாம்

      Delete
  5. அந்த பால்கனி மிகவும் பிடித்தது...

    ReplyDelete
    Replies
    1. போர்டிகோவின் மேல் இருக்கும்பாகம்தானே

      Delete
  6. //நம்பிக்கையான ஒப்ப்ந்ததாரர் கிடைக்கவேண்டும் சிலரைநம்பவேண்டும் இல்லைஎன்றால் நாமே எல்லாவற்றுக்கும் அலையவேண்டும் எனக்கு கிடைட்தவர்கள் நம்பிக்கையானவர்கள்//

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
    நம்பிக்கையானவர்கள் கிடைத்தால் நல்லது.


    எங்கள் வீடு புதுப்பிக்கும் வேலை பாதியில் நிற்கிறது. மாடியில் ஒரு அறை கட்டினோம், அதில் நிறைய ஏமாற்றங்களை சந்தித்தோம் .மாயவரத்திலிருந்து வந்து வந்து வேலையை கவனிக்க முடியவில்லை.
    இப்போது வாடகைக்கு விடாமல் கிடக்கிறது.

    நீங்கள் சொல்வது போல் புது வீடு கட்டுவதை விட புதுபிக்கும் வ செலவு அதிகம் தான்.

    உங்கள் பால்கனி மிக அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நாம் அவர்களையே நம்பி இருக்கிறோம் என்றா ஒப்பந்ததாரர்கள் நம்மை ஏய்த்துவிடுவார்கள்

      Delete
  7. ‘எலி வளையானாலும் தனி வளை’ என்பதுபோல் நமக்கென்று ஒரு வீடு இருப்பது அவசியம். அழகாக வீட்டைக் கட்டி, அதில் குடியிருக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. தங்களுக்கு கிடைத்திருக்கிறது, வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. அது அதற்கு சில நன்மையும் தீமையுமிருக்கும்

      Delete
  8. ரசனையாக அமைந்த இல்லம் ஐயா.

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி என்வீட்டுக்கு வாருங்களேன்

    ReplyDelete
  10. வீடு ஏதோ மெயின் ரோடில் இருக்கிற மாதிரி தெரிகிறது. கடை கண்ணிகளுக்கு ந்டுவில் இருப்பது மிகவும் நல்லது தான். வீட்டின் மதிப்பைக் கூட்டும்.

    பக்கத்துக் கடை என்ன கடை?.. எப்பொழுது எடுத்த படமோ-- அந்தக் க்டையைப் பற்றி கேட்கிறேன், பாருங்கள்.

    ReplyDelete
  11. விட்டைச் சுற்றி ஒரு கிமீ க்குள் தேவையான அனைத்துப்பொருட்களும் கிடைக்கும் விட்டிலிருந்து 700 கீட்டர் தூரட்தில்பெங்களூரின் ஒரு லாண்ட் மார்க்கான ஸ்ரீ அய்யப்பன் கோவிலுமொரு கிமீ தூரத்தில்மெட்ரோ ரயில் நிலையமுமிருக்கிற்துபுனே பெங்களூர் ஹைவே ஒருகிமீ தொலைவில் உள்ளது மொத்தத்தில்செண்ட்ரல்லி சிசுவேட்டெட்

    ReplyDelete
  12. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

    எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    ReplyDelete
  13. படுக்கை அறை, ஹால், கிச்சன் எல்லாமே அழகு.   ஹாலில் தொலைக்காட்சி வைக்கப்படும் இடமும் அழகு.

    ReplyDelete
  14. இன்னும் பெரிதாக இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்

    ReplyDelete
  15. உங்கள் வீட்டின் முகப்பு தோற்றம் மிக மிக அழகாக இருக்கிறது. ஆனந்தம் குடிகொண்டிருக்கும் ரம்மியமான வீடு. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
  16. பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete