ஆயிரம்பிறை கண்டவனின் ஆயிரமாவதுபதிவு
---------------------------------------
இது என் ஆயிரமாவது பதிவு சற்றே வித்தியாசமாகப்பதிவுசெய்ய விரும்புகிறேன் வெற்றியா இல்லையா தெரியவில்லை
பிறந்த நாளும் மணநாளும் ஒரே நாள் என் மண நாளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று என் மகன் கேட்டிருந்தான் அதற்கு நான் என் மணநாளின் விளைவுகள் கூட ஒன்றாய் நாளைக்கழிக்கவே விரும்புகிறேன் என்றேன் பூர்த்திசெய்ய வாக்குறுதி கொடுத்திருக்கிறான் எனக்கு ஒரு செய்தியை என்மகன் அனுப்பி இருந்தான் அது கீழே
![]() |
பத்திரிகை செய்தி n |
அதே செய்தியை
வேறு விதமாக என் ஸ்டைலில் பதிவிட்டிருந்தேன்
பெண்களின் கண்ணீருடன்
கம்பலையும் சேரும்போது,
ஆண்களுக்குப் போக்கிடம் ஏதுமில்லை.
அறிந்து கொள்ளுங்கள் ,பொதுவாகப் புரிந்து கொள்ளப்
படுவதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது..
திருமண பந்தத்தில் ஆண் இழப்பது அப்பட்ட சுதந்திரம்..
மீறி நிலை நிறுத்த முயன்றால் முன் வருவது
பெண்களின் கண்ணீர்ப் பிரளயம்.. அதற்காகப்
போக்கிடம் ஏதுமின்றி டாஸ்மாக்கில் தண்ணீரில் மிதக்க
வேண்டாம்.
ஆண்களே குனிந்து சென்று விடுங்கள்..வழ்வில்
தேவை நிம்மதி.- சுதந்திரம்,ஆண்மை எல்லாம்
அப்பட்டப் பொய்.. பெண்ணடிமைத்தனம்,ஆணாதிக்கம்
எல்லாம் கானல் தோற்றமே;கருத்துப் பிழையும்
காட்சிப் பிழையுமே..உண்மையில் ஆணே அடிமை
அறியாமல் பெண்ணே ஆதிக்கம் செலுத்துகிறாள்.
ஆணின் சுதந்திரம் திருமணம் வரையில்-அதன்பின்
அவனது பலவீனம் பெண்ணின் பலமாக மாறும்.
கன்னியவள் கண்ணசைவிலே விண்ணையும் சாடுவான்.
அதுவே இன்பம் இன்பம் என்று மாய்ந்து மருளுவான்.
அது தவறு என்று உணரும்பொது காலம் கடந்து விடுகிறது.
உடல் வேட்கை இருபாலருக்கும் பொது.
ஆணுக்கு அது பெரிய பலவீனம்;-ஆனால்
பெண்ணுக்கோ அதுவே பெரும்பலம்.
ஆணின் ஆளுமை எல்லாம் ஆதவன் இருக்கும் வரை;
இரவு துவங்க இருவரும் இணைய இன்பம் பொதுவென்றாலும்
பெண்ணுக்கு அது ஆயுதப் பிரயோகம் செய்யும் நேரம்.
தற்காலப் பெண்களுக்கு கூடுதல் ஆயுதம் அவர்கள்
படிப்பும் பொருளீட்டும் திறனும். அழகென்பது
இன்னுமொரு ஆயுதம். மணவினைச் சிறையில்
எப்போதாவது ஆணுக்குக் கிடைக்கலாம் “ பரோல்.”
தமாஷ்போலத் தோன்றினாலும்
இதுவே அப்பட்ட உண்மை மண வாழ்வில் விட்டுக்
கொடுத்துப்போகும் மனப்பான்மை வேண்டும்
யாருக்கு யார் விட்டுக் கொடுப்பது பெரும்பாலும் ஆண்களே மண வாழ்வின் துவக்கத்தில் என் மனைவி ஒரு பச்சை மண்போல் இருந்தாள் ஆனால் நாட்பட
நாட்பட என்னையே வனைபவள் ஆகி விட்டாள் எனகு நோ ரிக்ரெட்ஸ் வயதாக ஆக நான் அவளையே சார்ந்திருப்பது கண்கூடு வாழ்க்கையை அணுகும் முறையில் நாங்கள் நேர் எதிர் நானும் என்கொள்கைகளும் என்னோடுதான் நான் திணிப்பதில்லைபதிவுகளிலும் அப்படித்தான் சொல்வேன்
கேட்டுத்தானாக வேண்டுமென்றில்லை என் ம்னைவிக்கு என் கொள்கைகள் புரியும் பல முறை
சொல்லி இருக்கிறாள் கோவில்களில் பலரது பிரசங்கங்களில் என் பேச்சையே அவர்கள் பிரதிபலிப்பதாகவும் கூறு வாள்
இனி இரண்டு exotic birds
இனி இரண்டு exotic birds
ஆயிரமாவது பதிவு அல்லவா வித்தியாசமான காணொளிகள் அவசியம் பாருங்கள்
against gravity ?