Sunday, October 7, 2018

பராசக்திப் பாடல்

                   

                                           பராசக்தி பாடல்
                                           -------------------------

                                பராசக்தி படப்பாடல்
 எனக்கு ஒரு காணொளிவந்தது  இதில் என்ன செய்தி என்றிருக்கிற்தா திரைப்படப்பாடல்களை நம்மவர் மிக்ஸ் செய்து பாடுவதைஅறிவோம்பராசக்தி படத்தில்வரும் ரசிக்கும் சீமானே  பாடலைப் பலரும் கேட்டிருக்கலாம்  ரங்கூன்லிருந்துவரும்  சிவாஜி கணேசனை நடனமாடி  மயக்கும் கமலா லக்ஷ்மணனின்  நடனம் பெயர் பெற்றது அதே நடனத்தை ஒரு ஃப்ரென்ச் பெண்மணி ஆட  ஒரு ஃப்ரென்ச் ஆண் மகன் பாட வித்தியாசமாக இருந்த காணொளி பகிர வேண்டும் என்று தோன்றியது அதுவே இப்பதிவு  எனக்கு கான மயிலாட என்னும் பாடல்நினைவுக்கு வந்தது நம்மூர் பாடலும் நடனமும்  இசையும் மேற்கத்தியரால்  காப்பி  அடிக்கப்ப்டுவதும் மகிழ்ச்சி தருகிறது  என்பதும்   உண்மை  முன்பொருமுறை அமெரிக்கா வில் நம் பல்லேலக்க  பாடலைப்பகிர்ந்ததும்  நினைவுக்கு வந்தது நீங்களும்ரசிக்கலாமே

பதிவு குட்டியூண்டாக இருக்கிறது  அதனை நீட்டிக்கவும் ( நீர்க்க அல்ல)சற்று சிந்திக்கவும் கீழே சிலபகிர்வுகள்
             ஒரு காதலன் காதலிக்கு எழுதுவது.
             ------------------------------------------------
மரம் வாடினால் தண்ணீர் விடுவேன்.
இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்.
நீ வாடினால் என் உயிரை விடுவேன்.
நீ சந்தோஷப்பட அடிக்கடி இப்படி ரீல் விடுவேன்.

           சில பொன் மொழிகள்
          -------------------------------
நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன.
ஆனால் அனுபவமோ, தவறான முடிவுகளிலிருந்து
கிடைக்கிறது. --------------(பில் கேட்ஸ்.)

நீ தனிமையாய் இருக்கும்போது உனக்கு என்ன என்ன
தோன்றுகிறதோ அதுவே உன் வாழ்க்கையை தீர்மானிக்கும்.
                                                   ( விவேகானந்தர் )

மிகவும் நேர்மையாய் இருக்காதீர்கள்.ஏனெனில் நேரான
மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன. நேர்மையானவரே
முதலில் பழி தூற்றப் படுகிறார்கள். கொஞ்சம் வளைந்து
கொடுங்கள். வாழ்க்கை லகுவாய் இருக்கும்.
                                                      (சாணக்கியர் )

தவறு செய்வது மனித குணம்;அதற்கு வருத்தப்படுவது
தெய்வ குணம். மேலும் மேலும் செய்வது அரக்கத்தனம்.
                                                       ( பெஞசமின் ஃப்ராங்க்லின்)

அந்தக் காலத்தில் அவன் புத்திசாலியாக இருந்தான்.
அப்போதெல்லாம் அவன் என் அறிவரைப்படிதான் நடப்பான்.
                                                        (வின்ஸ்டன் சர்ச்சில்)

சிக்கல்கள் என்பது ஒரு ரயிலில் இருந்து பார்க்கப்படும்
மரங்களைப் போன்றது. அருகில் போனால் அவை பெரிதாகத்
தெரியும். அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகி விடும்.
இதுதான் வாழ்க்கை.             (யாரோ)

வெற்றி என்பது நிரந்தரமானதல்ல.  தோல்வியானது இறுதி
யானதுமல்ல. ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
                                                        ( யாரோ)

எல்லா விஷயங்களிலும் உண்மை நிலையை அறிந்துகொள்.
பிறகு அவற்றை உன் இஷ்டப்படி திரித்துக்கொள்ளலாம்.

                                                         ( யாரோ)

ஏதாவது தவறு நடக்க வேண்டும் என்றால் அது நடந்தே தீரும்
நியூட்டனின் மேலே செல்வது கீழே வரும் எனும் நியதி போல.
                                                          (மர்ஃபி)

வாயைப்போல் எதுவுமே அடிக்கடி தவறாகத் திறக்கப்படுவது
இல்லை.                                        ( யாரோ )

மெழுகு வர்த்திக்கு உயிர் கொடுக்க உயிர் விட்டது தீக்குச்சி.
அதை நினைத்து நினைத்து உருகியது
மெழுகு வர்த்தி.

விட்டுக்கொடுங்கள் , விருப்பங்கள் நிறைவேறும். தட்டிக்
கொடுங்கள் தவறுகள் குறையும். மனம் விட்டுப் பேசுங்கள்
அன்பு பெருகும்.

காலங்கடந்து அறியப்படும் தவற்றின் விதை  ஆரம்பத்திலேயே
விதைக்கப் பட்டது.

அறிவுக்கும் மனசுக்கும் சிக்கல் இருக்கும்போது நீங்கள் மனசு
சொல்வது மட்டும் கேளுங்கள் .ஏனென்றால் அறிவு..........சரி.
விடுங்கள்,இல்லாததைப் பற்றி ஏன் பேச வேண்டும்.?

நவீன இந்தியாவில் முன்னேறிய மாணவர்கள் ( F C ) எல்லாக்
கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

கொஞ்சம் சிரிக்க.
------------------------
மேலாளர்:-உன் தகுதி என்ன.?
சர்தார்.:-நான் Ph. D.
மேலாளர் :--Ph. D. என்றால் என்ன.?
சர்தார்:- Passed high school with difficulty.


நண்பன் 1:-நான் எது செய்தாலும் என் மனைவி குறுக்கே
                      நிற்கிறாள்.

நண்பன் 2:- காரை ஓட்டிப் பாரேன்.

     


      

24 comments:

  1. இந்த வீடியோ முகநூலிலும் வாட்சப்பிலும் சுற்றிக் கொண்டு இருக்கே! உங்கள் பொன்மொழிகள் கலெக்ஷனில் என்னிடம் உள்ளவை சிலவும் உள்ளன. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள்பார்க்காதது எதுவுமிருக்காது போல் இருக்கிறதே வருகைக்கு நன்றி மேடம்

      Delete
  2. பராசக்தி படம் இன்று வரை பார்த்தது இல்லை! :))))))

    ReplyDelete
    Replies
    1. சிவாஜியின் முதல் படத்திலிருந்தே அவரை உங்களுக்குப்பிடிக்காதா

      Delete
    2. அப்போ நான் பிறந்துட்டேனானு தெரியலை! அப்படியே பிறந்திருந்தாலும் ரொம்பக் குழந்தையாக 3,4 மாசத்துக்குள் இருந்திருக்குமோ? ஆனால் அப்புறமாத் தொலைக்காட்சிகளில் போட்டாலும் நான் பார்க்கலை! :) சந்தர்ப்பமும் வாய்க்கலை. ஆர்வமும் இல்லை!

      Delete
    3. 1952 ம் ஆண்டு வெளியானது

      Delete
  3. பாடல் பகிர்வு மிக அருமை.
    அந்த பெண்ணும் அழகாய் ஆடினார்.
    பாடியவரும் நன்கு ரசித்து பாடினார்.

    சற்று சிந்திக்க பகிர்வும் அருமை.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வித்த்யாசமாகப் படவே பகிர்ந்தேன் வருகைக்கு நன்றி

      Delete
  4. கடைசி குபீர் சிரிப்பு வெடி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. என்னிடம் ஜோக்குகளுக்கு ஒரு புன்முறுவல்தான் வரும் நன்றி ஜி

      Delete
  5. பகிர்வுகள் அருமையாய் உள்ளன

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
  6. முகநூலில் இதனைப் பார்த்தேன். குட்டியூண்டை அதிகப்படுத்துவதற்காக நீங்கள் தந்துள்ள கூடுதல் பகிர்வுகள் மிகவும் அருமை. Ph.D. ஐ அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்விருவருக்கு ஒவ்வொரு ரசனை வருகைக்கு நன்றி சார்

      Delete
  7. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  8. எல்லாமே பகிர்வுதான் சார்

    ReplyDelete
  9. ரசிக்கும் சீமான் ரசிக்க வைத்தது

    ReplyDelete
    Replies
    1. அயல் மொழிக்காரர்கள் பாடுவதும் கேட்க ரசிக்கிறது வருகைக்கு நன்றி ம்மா

      Delete
  10. எப்படியோ, எதை எழுதினாலும் ரசிக்கும்படி எழுதிவிடுகிரீர்கள். அந்த ஃபிரெஞ்ச் பாடகன் மிக அருமையாகவே பாடுகிறான் என்பதில் ஐயமில்லை. நம்மவர்கள் தியாகராஜர் கிருதியைப் பாடும்போது தெலுங்கை எவ்வளவுதூரம் கொலை செய்கிறார்கள்! - இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஒருவராவது ரசிக்கும் படி உள்ளது என்கிறீர்களே நன்றி

      Delete
  11. நல்ல தொகுப்பு. பொன்மொழிகள் அனைத்தும் சிறப்பு.

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  13. ரசிக்கும் சீமானை ரசித்தேன். பொன்மொழிகளும் சிறப்பாக இருந்தன.

    ReplyDelete