Tuesday, December 15, 2020

சேமிக்க

                                                                                    
இந்தப்படத்தில் கொவிட் அவதாரம்  இருக்கிறதா



 

 இது நான் எப்பவோ வரைந்த  கண்ணாடி ஓவியம் காயத்திரி தேவி இதுவரை பிரசுரிக்காதது

சேமிக்க

மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!
-
அவ்வை பாட்டியின் நல்வழி பாடல்.

 

1.மானம்
2.
குலம்
3.
கல்வி
4.
வண்மை
5.
அறிவுடைமை
6.
தானம்
7.
தவம்
8.
உயர்ச்சி
9.
தாளாண்மை
10
காமம்

ஆயகலைகள் 64 என்று கேள்விபட்டிருக்கிறோம்   அந்த 64 கலைகள்தான் என்ன் என்ன

1. அக்கரவிலக்கணம் - எழுத்திலக்கணம்
2.
இலிகிதம் - எழுத்தாற்றல்
3.
கணிதம் - கணிதவியல்
4.
வேதம் - மறை நூல்
5.
புராணம்தொன்மம்

6. வியாகரணம் - இலக்கணவியல்
7.
நீதி சாஸ்திரம் - நய நூல்
8.
ஜோதிடம் - கணியக் கலை


 

9. தர்ம சாஸ்திரம் - அறத்துப் பால்
10.
யோக சாஸ்திரம் - ஓகக் கலை
11.
மந்திர சாஸ்திரம் - மந்திரக் கலை
12.
சகுன சாஸ்திரம் - நிமித்தகக் கலை

14.வைத்தியசாஸ்திரம் - மருத்துவக் கலை
15.
உருவ சாஸ்திரம் - உறுப்பமைவு
16.
இதிகாசம் - மறவனப்பு
17.
காவியம் - வனப்பு
18.
அலங்காரம் - அணி இயல்
19.
மதுர பாடனம் - இனிதுமொழிதல்
20.
நாடகம் - நாடகக் கலை
21.
நிருத்தம் - ஆடற் கலை
22.
சத்தப்பிரும்மம் - ஒலிநுட்ப அறிவு
23.
வீணை - யாழ் இயல்
24.
வேணு (புல்லாங்குழல்)- குழலிசை
25.
மிருதங்கம் (மத்தளம்)
26.
தாளம் - தாள இயல்
27.
அத்திரப் பரிட்சை - வில்லாற்றல்
28.
கனகப் பரிட்சை - (பொன் நோட்டம்)
29.
இரதப் பரிட்சை - (தேர் ஏற்றம் )
30.
கஜப் பரிட்சை - (யானை எற்றம்)
31.
அசுவப் பரிட்சை - (குதிரை ஏற்றம்)
32.
இரத்தினப் பரிட்சை - மணி நோட்டம்
33.
பூமிப் பரிட்சை - மண்ணியல்
34.
சங்கிராம விலக்கணம் - போர்ப் பயிற்சி
35.
மல்யுத்தம் - கைகலப்பு
36.
ஆகருடனம் (ஆகர்ஷணம்)- கவர்ச்சியியல்
37.
உச்சாடனம் - ஓட்டுகை
38.
வித்து வேடனம் - (நட்பு பிரிக்கை)
39.
மதன சாஸ்திரம் - மதன கலை
40.
மோகனம் - மயக்குக் கலை
41.
வசீகரணம் - வசியக் கலை
42.
இரசவாதம் - இதளியக் கலை
43.
காந்தருவ வாதம் - (இன்னிசைப் பயிற்சி)
44.
பைபீலவாதம் - (பிறவுயிர்மொழி)
45.
கவுத்துவ வாதம் - மகிழுறுத்தம்
46.
தாதுவாதம் - ( நாடி சாஸ்திரம்)
47.
காருடம் - கலுழம்
48.
நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49.
மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50.
ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்--வான் செல்கை)
51.
பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52.
ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது--வான்புகுதல்)
53.
அதிரிசியம் - தன்னுறு கரத்தல்
54.
இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55.
மகேந்திர ஜாலம் - பெருமாயம்
56.
அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்--அழற் கட்டு)
57.
ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58.
வாயுஸ்தம்பம் - வளிக் கட்டு
59.
திட்டி ஸ்தம்பம் - கண் கட்டு
60.
வாக்கு ஸ்தம்பம் - நாவுக் கட்டு
61.
சுக்கில ஸ்தம்பம் - (விந்தையடக்கல்)
62.
கன்னத்தம்பம் - புதையற் கட்டு
63.
கட்கத்தம்பம் - வாட் கட்டு
64.
அவத்தைப் பிரயோகம் - சூனியம்


அறுபத்து நான்கு கலைகள் - வேறொரு பட்டியல் :

எண் - தமிழ்க் கலை - வடசொல் - English Word

1.
பாடல் - கீதம் - Song
2.
இன்னியம் - வாத்யம் - Music Instruments
3.
நடம் - நிருத்யம் - Dance
4.
ஓவியம் - சித்ரம் - Drawing Instruments
5.
இலைப் பொட்டுக் கத்தரிக்கை - பத்ர திலகம் - Art of leaf-cutting design
6.
அரிசிப் பூக்கோலம் --- Art of rice-powder drawing
7.
பூமளியமைக்கை -- ---
8.
ஆடையுடைப் பற்களுக்கு வண்ணமமைக்கை --- Art of colouring for cloths
9.
பள்ளியறை/குடிப்பறையில் மணிபதிக்கை -- Art of embedding gems in bedrooms
10.
படுக்கையமைக்கை - மஞ்சம் - Art of bed-making
11.
நீர்க்கிண்ண இசை - ஜலதரங்கம் - Art of making music with watter-filled cups
12.
நீர்வாரியடிக்கை --- Art of water-sparying
13.
உள்வரி - வேடங்கொள்கை - Art of Camaflage
14.
மாலை தொடுக்கை --- Art of making garlands
15.
மாலையணிகை --- Art of wearing Garlands
16.
ஆடையணி சுவடிக்கை --- Art of make-up with clothes
17.
சங்கினால் காதணி -- Art of making ear-rings with shells
18.
விரை கூட்டுகை --- ---
19.
அணிகலன் புனைகை --- Art of self make-up
20.
மாயஞ் செய்தல்- இந்திர ஜாலம் - Art of magic
21.
குசுமாரரின் காமநூல்நெறி - கௌசுமாரம் - Kousumar's art of kamasutra
22.
கைவிரைவு - ஹஸ்த லாவகம் - Speedy hands
23.
மடைநூல் - பாக சாத்திரம் - Art of cooking
24.
தையல் வேலை --- Art of Stiching.
25.
நூலால் வேடிக்கை -- Art of magic with strands
26.
வீணையுடுக்கைப் பயிற்சி - வீணை டமருகப் பயிற்சி - Art of handling Veena Instrument
27.
விடுகதை - ப்ரேளிகை - Art of Riddling
28.
ஈற்றெழுத்துப் பாப்பாடுகை - அந்தாக்ஷரி - Art of Play Singing(last words)
29.
நெட்டுரு சொற்றொடர் --- Art of playing with words
30.
சுவைதோன்ற பண்ணுடன் வாசிக்கை --- Reading with music rythm
31.
நாடக உரைநடை - வசனம் - Prose
32.
குறித்தபடி பாடுகை - ஸமஸ்யா பூரணம்- To sing from the word given
33.
பிரம்பால் பின்னுதல் --- Art of Caning chair objects
34.
கதிரில் நூல் சுற்றுகை --- Art of hand-spinning
35.
மரவேலை --- Carpentry
36.
மனை நூல் - வாஸ்து சாத்திரம் - Art of house construction
37.
காசு, மணி நோட்டம் - கனக,ரத்ன பரிட்சை - Gemology
38.
நாடிப் பயிற்சி - தாது வாதம் - Human Pulse reading
39.
மணிக்கு நிறங்கூட்டுகை -மணியிடமறிதல் --- Gemology/geology
40.
தோட்டக் கலை --- Horticulture
41.
தகர்ப்போர்/சேவற்போர் - விலங்கின விளையாட்டு --- Cock/Bull fights
42.
கிளிப் பேச்சு பயிற்றுவிக்கை --- Art of teaching parrots
43.
உடம்பு பிடிக்கை/எண்ணை தேய்க்கை --- Art of ordinary/oil massage
44.
குழூவுக்குறி - சங்கேதாக்ஷரங்களமத்து பேசுகை - Cryptography
45.
மருமமொழி - ரஹஸ்ய பாஷை - Code wording
46.
நாட்டுமொழியறிவு - தெசபாஷையுணர்வு - Linguistics
47.
பூத்தேர் அமைக்கை - புஷ்பரதம் - Decorating Chariat with flowers
48.
முற்குறியமைக்கை - நிமித்தம் - Observing Superstitions
49.
பொறியமைக்கை --- Making of traps
50.
ஒருகாலிற் கொள்கை - ஏகசந்தக்ராகித்வம் - With one leg
51.
இருகாலிற் கொள்கை - துவிசந்தக்ராகித்வம் - With two legs
52.
பிதிர்ப்பா விடுக்கை --- Singing about fore-fathers
53.
வனப்பியற்றல் - காவ்யம் - Writing Story songs
54.
உரிச்சொல்லறிவு - நிகண்டுணர்ச்சி - Idioms and Phrases
55.
யாப்பறிவு --- Writing poems
56.
அணியறிவு - அலங்காரம் - Sense of dressing
57.
மாயக்கலை - ஜாலவித்தை - Art of Magic
58.
ஆடையணி திறன் - உடுத்தற் சாமர்த்யம் - Sense of dresses
59.
சூதாட்டம் --- Gambling
60.
சொக்கட்டான் - கவறாட்டம் முதலியவை - Gambling with dice
61.
பாவை, பந்து வைத்தாடுதல் --- Playing with dolls / balls
62.
யானை/குதிரையேற்றம் - கஜ/துரக வாகனாதிகள் - Art of riding horse/elephant
63.
படைக்கலப் பயிற்சி --- Armed Combat
64.
உடற் பயிற்சி - தேகச் சதுர் - Physical Exercise

 

முன்காலத்தில் பெண்களை பருவ வாரியாக விவரித்தார்கள்

> பேதை : 1 முதல் 8 வயது வரை

> பெதும்பை : 9 முதல் 10 வயது வரை...

> மங்கை : 11 முதல் 14 வயது வரை...

> மடந்தை : 15 முதல் 18 வயது வரை...

> அரிவை : 19 முதல் 24 வயது வரை...

> தெரிவை : 25 முதல் 29 வயது வரை...

> பேரிளம் : பெண் 30 வயது முதல்.

 ஆண்களை விட்டு விட முடியுமா ..

Top of Form

Bottom of Form

1---7 பாலன்

8---10 மீளி

11—14 மறவோன்

15 திறவோன் 

16  விடலை

17  30 காளை

30க்கு மேல் முதுமகன்

 முக்கிய வைபவங்களில்  முக்கியமாக திருமண்ம் போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறார்கள்  16 பிள்ளை  செல்வங்கள் அல்ல பின் என்னவாம் 

1.      கல்வி

2.      புகழ்

1.       

2.      புகழ்

3.      வலி

4.      வெற்றி

5.      நன் மக்கள்

6.      பொன்

7.      நெல்

8.      நல்லூழ்

9.      நுகர்ச்சி

10. அறிவு

11. அழகு

12. பொநுமை

13. இளமை

14. துணிவு

15. நோயின்மை

16. வாழ்நாள்

 

 அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது இப்படி:-

அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் லூழ்நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)

1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி

இந்தப்பதிவாவது உபயோகமுள்ளதாய் இருக்கும் என்று நினைக்கிறேன்

                             

 

 

 

 

               











10 comments:

  1. கண்ணாடி ஓவியம் நன்றாய் இருக்கிறது.  கோவிட் அவதாரம் அல்ல, கோவிடை அழிக்க வந்தால்தான் அவதாரம்.  

    ReplyDelete
  2. கோவிட் பலரை அழிக்க வந்த அவதாரம் மச்ச அவதாரத்தில் மீனை அழிக்க வரவில்லை மீனாகத்தான் அவதாரம் இதுவே அவதார மகிமை கண்ணாடி ஓவியம் இப்போது அருகில் இருக்கும் கோவிலில்

    ReplyDelete
  3. காயத்ரிதேவி ஓவியம் மிக அருமை

    ஆயகலைகளில் பாதிக்குமேல் இன்றைய காலத்தில் பொருத்தமில்லாத்தாக இருக்கின்றன.

    கோவிடை அவதாரம் என்று சொன்னால் இறந்தவர்கள் அசுர்ர்கள் என்றாகிவிடுமே... பொருத்தமில்லையே. அதுவும்தவிர மானுடர்களில் பெரும்பகுதியை அது அழிக்கவில்லையே

    ReplyDelete
    Replies
    1. கலைகள் என்று சொல்லப்படுவதக் கூறி இருக்கிறேன் பொருதம இல்லையா என்பது அவரவர் கருத்து அவதார்க் கதைகளிலும் இறந்தவர்கள் எல்லாம் அசுரர்களா கோவிட் அவதாரம் அதன் வேலையைச் செய்கிற்தோ அசுரகள் தான் யார்யாரோ

      Delete
  4. ஔவைப்பாட்டியின் பாடலை நாங்கள் ஆரம்பப்பள்ளியில் படித்தோம். அதனை நினைவுபடுத்தியது இப்பதிவு.

    ReplyDelete
    Replies
    1. சிறு வயதில் படித்தது நினைவில் இருக்கும் என் பொர் முழக்க பாடலை பாருங்கள்

      Delete
  5. மால் என்பது இங்குண்டு...
    'விஷ்ணு' புகுத்தப்பட்ட ஒன்று...!
    அபிராமி அந்தாதி 16
    19-ல் உள்ளது திருக்குறளில்...
    அவை விரைவில்....
    அறிக நன்று...

    ReplyDelete
    Replies
    1. விள்ங்க முடியாத்படி சொல்வதும் ஒரு கலை

      Delete
  6. இப்போதெல்லாம்ஓவியங்கள் தீட்ட முடிவதில்லை கைக்ளும் கண்களும் ஒத்துழைப்பதிலை ,

    ReplyDelete