Tuesday, May 18, 2021

மலரே மலரேஒரு அஞ்சலி



 

மே மாதம் வந்தால் நான் எதிர் நோக்கும் மலர் ஃபுட்பால் லில்லி எனும் பூ தான்ஆண்டுதோறும் பூத்துமகிழ்விக்கும் மலர் இந்த ஆண்டு தலைகாட்டாததுபூக்களுக்கும்  கோரோனா வந்து மடிந்து விட்டதோஎன்று நினைக்கத் தோன்றுகிறது மாடி வீட்டுநண்பர்  அனுப்பிய காணொளி இணைக்கிறேன் சில மலர்க்ள்  நினைவலைகளஎழுப்புகின்ற்ன   

 தெச்சி மந்தாரம்துளசி பிச்சக மாலைகள் சார்த்தி குருவாயூரப்பா நின்னே கணி காணேண்ம் தெச்சி எனப்படும் பூவை நினைத்தால் மறைந்த  நண்பர் தி தமிழ் இள்ங்கோ நினைவுக்கு  வருகிறார் தெச்சிப்பூவை  இட்லி பூஎன்பார்


ஒரு அஞ்சலி 

மலரே மலரேமௌனமேன்   

தலை வணங்கி வருவோரை  வரவேற்பாய் 

 இக்காலத்தில்

யார்தான்  வருகிறார்கள் வரவேற்க

கந்தசாமி ஐயா தில்லையகத்து கீதா இன்னும்

பலருக்கும் புரியும்  இப்புலம்பல்

ஆண்டு தோறும் மே மாதம் மலரும் உன் பெயர்

தெரியாது தவித்தபொது கீதாமதிவாணன்

தான் உன்  பெயர் ஃபுட்பால் லில்லி என்று கண்டறிந்து சொன்னர்

மலரே மலரே

மௌனமேன் நீதலை வணங்கி வறவேற்கும்அழகை  உன்னை

காட்டி மகிழ்ந்தேன்அந்த மகிழ்ச்சி இனி வருமோ

கோரொனா உன்னையும்  காவு வாங்கி விட்டதோ

மலரே நீஏன்  மௌனமாய்  இருக்கிறாய் புரிகிறது 

இந்த ஆண்டு நீதான் ஜனிக்கவில்லையே எப்படி 

மரணித்து இருக்க முடியும் 




 







  

18 comments:

  1. இந்த ஆண்டு இல்லாவிட்டால் என்ன, அடுத்த ஆண்டு மலர்ந்துவிட்டுப் போகிறது...

    ReplyDelete
    Replies
    1. மேமாதம் மொக்கு விடும் இந்த ஆண்டு இதுவரை காண் வில்லை

      Delete
  2. அடுத்த ஆண்டு நிச்சயம் மலரும்

    ReplyDelete
  3. அந்த மகிழ்ச்சி விரைவில் வரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வாய் முஹூர்த்தம் பலிக்கட்டும்

      Delete
  4. அடுத்த வருடம் மலரட்டும். இந்தச் செடியின் விதை எங்கு கிடைக்கிறது என்று பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. விதை அல்ல கிழங்கு என்று நினைக்கிறேன்

      Delete
  5. மீண்டும் மலரும் சார். அதன் வேர்கள் பூமிக்குள் இருக்குமே. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் அப்போது இப்பூக்களைக் காட்டினீர்கள் நினைவு இருக்கு..

    உங்கள் வீட்டிற்கு வர இயலாத நிலை இப்போது இல்லை என்றால் வந்திருப்பேன் சார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மூன்று செடிகள் ஒரேஇடத்தில் இருந்ததுலாக் டௌன் எல்லாம் முடிந்த்போது வாருங்கள்

      Delete
  6. தெத்திப்பூவை நாங்களும் இட்லிப்பூ என்போம் சார். இக்சோரா!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எ ரோஸ் இஸ் எ ரோஸ் பை வாடெவர் நெம் யூ கால் இட்

      Delete
  7. தெத்தி, விருட்சி, வெட்சிப் பூக்களை நாங்களும் இட்லிப் பூ என்றே சொல்லி இருக்கோம். சின்ன வயசில் அதிகம் வெள்ளை நிறப் பூக்களே பார்த்திருக்கேன். பின்னர் தான் அடர் சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில்!

    ReplyDelete
    Replies
    1. குருவாயூர் கிருஷ்ணனுக்கு உகந்த பூ

      Delete
  8. பூச்செடியில் புதிய துளிர் விட்டிருக்காது. இல்லைனா சுத்தமாய் அற்றுப் போயிடுத்தோ? இருந்தால் மீண்டும் துளிர்த்து வரும்.

    ReplyDelete
    Replies
    1. முதலில்மொட்டுஜ் விடும் பூ பத்து நாட்கள் வரை இருக்கும்

      Delete
  9. மீண்டும் துளிர்க்கும்..நீங்களும் பதிவிடுவீர்கள்..நாங்களும் பார்த்துப் பதிலிடுவோம்...

    ReplyDelete
    Replies
    1. இன்றுகாலைஒரு மொட்டு தெரிந்தது பதிவிடுவேன்

      Delete