Thursday, April 14, 2022

தூசு தட்டி

 

வலை நண்பர் ஏகாந்தன்  என் வீட்டுக்கு வந்திருந்தபோது அவர் என் பதிவுகள் சிலவற்றை பார்த்து அவற்றின் வீச்சு   தற்போதைய பதிவுக்ளில் காணோம்என் றார்   அது இன்று மேலு ம் வலுக்கவே சில பழைய பதிவுகளை தூ சு தட்டி இடுகிரேன்


                                 OLD IS GOLD.......தூசி தட்டி.....
                                 --------------------------------------



(நான் பதிவுலகில் தவழத் தொடங்கிய பொழுது எழுதியவை யார் கண்ணிலும் படாமல் போனது.இப்போது தூசி தட்டி மீண்டும், பதிவிடுகிறேன்),
                நானும் நீயும்
                -------------
 எந்தன்    உயிருக்குயிர்     நீயே
  
நாடும்    அன்பு     நானோ
  
என்   கண்ணின்  மணி   நீயே --உந்தன்
  க
ருத்தின்  ஒளியும்  நானோ
   
நற்பண்ணின்    சுவை    நீயே ---உன்
   
பாவின்   நயமும்   நானோ
   
என்    எண்ணின்   பொருள்   நீயே
   
உன்    எண்ணம்    சொல்லாதது   ஏனோ !


     எண்ணத் தறியில்
     -----------------

எண்ணத்  தறியில்  எழில்  நினைவுப் பின்னிப்
பிணைந்திழையோட  இழையோட
கன்னக்குழியில்   வண்ணக்குமிழ்  கொப்பளிக்க
பைந்தமிழ்   மொழிபேசி   மொழிபேசி
மின்னலிடையில்   மனந்திளைத்த  எனைப்
புன்னகை    ஒளிவீசி   ஒளிவீசி   
இன்னலிடை  யின்றவள்   மீட்டாள்
காதல்   பண்பாடி  பண்பாடி  |
   
  
     கொஞ்சும்  விழிகள்  வேல்போல்  தாக்க
     
   எஞ்சிய  உறுதியும்  காற்றில்  பறக்க
   
    தஞ்சமேனப்புகு   என  மனமும்  நினைக்க
    
   மிஞ்சியதென்னில்  அவள்  திருஉருவம்  |

 
அன்ன நடையழகி ஆடிஎன்முன்  நிற்க
  
பின்னிய  கருங்குழல்  அவள்   முன்னாட
  
என்ன  நினைததனோ  அறியேன்   அறிவேன்
  
பின்னர்  நிகழ்ந்தது   அதனைக்  கூறுவன்  கேளீர்  |

   
     இருமன   மொன்றாய்  இணைய _அதனால்
  
      இறுகிப் பதித்த   இதழ்கள்  கரும்பினுமினிக்க
 
       இன்சுவை  உணர   ஊறி  கிடந்தேன்
        இறுதியில்  உணர்ந்தேன்  கனவெனக்  கண்டது

    கண்ட  கனவு  நனவாக  இன்று
    
காரிகையே   அழைக்கின்றேன் அன்புக்
    
கயிற்றால்   பிணைக்கின்றேன்;  கண்ணே
  
கட்டும்  பிணைப்பும்  பிரியாது  உறுதி  |   




               நம்பிக்கைகள்
                                 --------------------

 நிலந்திருத்தி  விதைக்கும் விதை கிளர்ந்தெழு  மரமாகி  கனி கொடுக்கும்  என்பது  நம்பிக்கை.---மெய்   சோர்ந்து  உழைத்து  உறங்கி  எழும் புலரியில்  உயிர்த்து  எழுவோம்  என்பது  நம்பிக்கை ---- பயண  சீட்டெடுத்து  பஸ்ஸோ ரயிலோ  ஏறி சேருமிடம்  சேதமின்றி  சேருவோம்  என்பது நம்பிக்கை --- பாலூட்டி சீராட்டிப  பெற்றெடுத்த  பிள்ளை  பிற்காலத்தில்  நம்மைப்  பேணுவான்  என்பது நம்பிக்கை ---- நோயுற்ற  உடல்  நலம் பேண நாடும்  மருத்துவர் பிணி  தீர்ப்பார்  என்பது நம்பிக்கை ----- நல்ல படிப்பும்  கடின உழைப்பும்  வாழ்க்கையில்  வெற்றி  பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை ---வாழ்வின்  ஆதாரமே நம்பிக்கை.  நம்பிக்கைகள் பல விதம் . இருப்பினும் ,--- தாய் சொல்லி  தந்தை  என்றறியப்படுவதே  தலையாய  நம்பிக்கை. 
---------------------------------------------------------



இயலாமை
-----------------
பிறப்பொக்கும்   உயிர்க்கு,  வாய்  கிழியக்  கூறுகிறோம்
ஏனிந்த   ஏற்றத்தாழ்வு   என்றறிவோமா..?
என்ன   பிழை  செய்தான்   ஏழையாய்ப்   பிறந்தவன் ,
ஏனில்லை   வாழ்வுவாய்ப்பு , உரிமையில்  சமத்துவம் .?
இருப்பவன்   வளமுடன்  உயர்கிறான் ,
அற்றவன்   என்றும்  அடியில்  தேய்கிறான் .
மேலே  செல்வது  கீழே  வரும்,  புவி  ஈர்ப்பின்  நியதி.
கீழே  உள்ளது  மேலே  செல்ல  யாரென்ன  செய்ய.?
காலச்  சக்கரச்  சுழற்சியில்  தானே  நடக்கும் . --நம்புவோமா ..!


நான்  ஏன்  பிறந்தேன் .?
------------------------
கலாநேசன்   பதிவில்   அழைப்பொன்று ,
கவிதைப் போட்டி  காட்டுங்கள்  திறனென்று,
நான்  ஏன்  பிறந்தேன்,
மூன்று  வார்த்தைகள்  மூன்று வரிகளில்
வருதல்  வேண்டும்அதுவே  விதி.

      
சிறுவயது  முதலே  என்  தேடலின்  வரிகள்;
      
நானும்   எழுதினேன்
     "
நான்  நானாக   இருக்கையில்
      
நீ   மட்டும்  வேறாக
      
பிறந்தேன் (பிறந்து  ஏன் ) பழி தீர்க்கிறாய் "

"
நான்" நானாகவும் "நீ" என் மனமாகவும்
நான் படும்  பாட்டை  பகிரவே
வந்து விழுந்த  வரிகள்
நாமெங்கு  பிறந்தோம் நம் வரவே
ஒரு விபத்தின்  விளைவன்றோ ?
(
பார்க்க  என் பிறிதொரு  பதிவை)

       
நிலையிலா  வாழ்வில்  நான்  எங்குள்ளேன்.?
       
என்  எண்ணில் "நான்" போனால்
       
நலம்  பல விளையலாம்.

நன்கு  பழகிய  நண்பரொருவர்
நலமெலாம்  விசாரித்து  பிரிய  மனமின்றி
பிரியா  விடை  பெற்றுச்  சென்றார்.
மறுநாள்  காலை  வந்தது  சேதி ,
தூங்கச்  சென்றவர்  துயிலெழ வில்லை
நேற்றிருந்தவர்   இன்றில்லை
நிலையிலா   வாழ்வில்  என்றுமவர்   இனி
வெறும்  நினைவாகவே  திகழ்வார்.
பெயர் ஒன்று  கொண்டு  புவியில்   திரிந்தவர்
போகையிலே  வெறும்   பிணமே  வெறும் சவமே
கையில்  கடிகாரம்  கட்டினால்
காலத்தை  வென்றவர்  ஆவோமா ?
பிறப்பும்  இறப்பும்  நம் கையில்  இல்லை
இன்றிப்போது  காண்பதே  இறுதிக்  காட்சியாகலாம் .
இருக்கையில்  வேண்டுமா  காழ்ப்பும்  கசப்பும்.?

       
ஏனென்று  கேள்வி  கேள்
       
உன்னை  நீ அறியலாம்,
       
உரைத்தவன்  சாக்ரடீஸ்

       
உண்மை  உணர்வதே
       
வாழ்வின்  நோக்கம்,
       
கூறினான்  காந்தி.

      
அயலவனை  நேசி
      
உன்னிலும்  மேலாக
      
என்றவன்  ஏசு.

உண்மையும்  நேசமும்  ஒன்றாக  இணைந்தால்
பிறந்த  காரணம்  புரியலாம்  ஒருவேளை .

15 comments:

  1. எல்லாமே அருமை.  மிக அருமை.  வார்த்தைகள் அழகாய் வந்து விழுந்திருக்கின்றன.  கவிதை நடை எளிதாய்க் கைவந்திருக்கிறது.

    ReplyDelete
  2. எல்லாமே அருமை சார். கவி எழுதும் உங்களின் திறமை வியக்க வைக்கும் ஒன்று. சொல்லும் விதமும் சொற்களும் உங்களுக்கு வெகு லகுவாக வருகிறது.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. குறைந்து கொண்டே வருகிறது

      Delete
  3. மூன்று வார்த்தைகள் மூன்று வரிகள்!! அருமை.


    என் எண்ணில் "நான்" போனால்
    நலம் பல விளையலாம்.//

    எல்லாமே ரொம்ப ரசித்து வாசித்தேன் சார்.

    கீதா

    ReplyDelete
  4. Replies
    1. அந்தக் காலத்திலேயே இப்படியெல்லாம் தூள் கிளப்பி இருக்கிறீர்கள்! சபாஷ்!

      Delete
    2. இப்போது முடிபதில்லை

      Delete
  5. நீங்கள் தூசு தட்டியதால் எங்களுக்கு சிறப்பான பதிவு கிடைத்தது.

    ReplyDelete
  6. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வார்த்தைகள் உங்களுக்கு சுலபமாக கைவந்திருக்கின்றன

    ReplyDelete
  7. aஅது அந்தக்காலம்

    ReplyDelete