Monday, November 9, 2020

லலிதா சஹஸ்ர நாமம்



அண்மை காலமாக சில தோத்திரப்பாடல்களை  தமிழில்பதிவிட்டு வருகிறேன்   அந்தவரிசையில்ஸ்ரீ  லலிதா சஹஸ்ர நாமப் பாடல்
இதோ 
லலிதா சஹஸ்ர நாமம்பற்றி எழுதும் போது நாங்கள் திரு மியச்சூர்  சென்றது நினைவுக்கு வருகிற து  இப்போதெல்லாம் நினைவை நம்புவது சரி அல்ல என்றே நினைக்கிறேன் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலுக்கு வழி கேட்டபோது  பலருக்கும்  தெரியவில்லைபேரளம் சென்று  சிறிது தூரம் நடந்ததாக  நினைவு  நாங்கள் சென்ற்போது கோவில் சாத்தி இருந்தது கோவில் நேராக அக்கிரகாரம்   ஒ ரு வயதான அர்ச்சகர்எங்களை அவர் வீட்டு திண்ணையில் அமர்ந்து காத்திருக்கச் சொன்னார் கோவில் பற்றி பலவிஷயங்கள் கூறினார் நாங்கள் பெங்களூரில் இருந்துவருகிறோம் என்று சொன்னபோது அந்தக்கோவிலை பெங்களூர் காரர்  ஒருவர் சம்ரக்ஷிப்பதாக கூறினார் என்மனைவியிடம் ஒரு துண்டு சீட்டில்  ஓம் யஹ  சக்தி ஓம்  சாந்தநாயகி அபயம் என்று எழுதிகொடுத்து தினம் சொன்னால் நல்லது என்று கூறினார்  என்மனைவியும்  எல்லாஉறவுகளுக்கும் கொடுத்துசொல்லச் சொன்னார்  
திரு மீயச்சூரி ல் பெண்குழந்தைகள்சைக்கிளில் பள்ளிசெல்வது காண மகிழ்ச்சி தருவதாகும் அரசின் நலதிட்டங்கள்  அவர்களூக்கு தெரியுமாகிடைக்கிறதா என்கெட்டபோது கிராமத்து ஜனங்ளை குறைவாகஎடை போடவேண்டாம் என்றும் எப்படி அவற்றை பெருவது என்று அவர்களுக்கு  தெரியும் என்றும்சிலர் வாதாடினர்       








 

20 comments:

  1. நல்ல அனுபவங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அனுபவஙள் பதிவாகின்ற்ன

      Delete
  2. பல எடைகள் குறைவாக இருந்தாலும். கிராமத்து மக்களிடம் உண்மை இருக்கும்...!

    ReplyDelete
    Replies
    1. அவர் களை ஏமாற்றமுடியாது

      Delete
  3. //திரு மீயச்சூரி ல் பெண்குழந்தைகள்சைக்கிளில் பள்ளிசெல்வது காண மகிழ்ச்சி தருவதாகும்.// அரசின் திட்டத்தின் படி தான் குழந்தைகளுக்கு சைகிள் கொடுத்து வருவதும். எல்லாப் பெண்குழந்தைகளும் அதைத் தான் பயன்படுத்துவார்கள். பல கிராமங்களிலும் பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அதைக் காண்ப்தெ மகிழ்ச்சிதானே

      Delete
  4. லலிதா சஹஸ்ரநாமத்தின் இந்த மொழியாக்கம்/மொழி மாற்றம் நாங்கள் தினமும் தொலைக்காட்சி மூலம் கேட்டு வருகிறோம்.

    ReplyDelete
  5. எந்த சானலில் என்று சொல்ல வில்லையே நான் இதுவரை கேட்டதில்லை

    ReplyDelete
    Replies
    1. Bhakthi Channel. Hearing and seeing for the past 2 years.

      Delete
    2. பக்தி சானல் பார்ப்பதில்லைபர்க்க வெண்டு ம்

      Delete
  6. எல்லோரும் நலம் பெறட்டும் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அதுவே என் வேண்டலும்

      Delete
  7. தமிழகத்தில் பார்க்கவேண்டிய கோயில்களில் ஒன்று திருமீயச்சூர் மேகநாதர் கோயில். இது ஒரு பாடல் பெற்ற தலம். இக்கோயிலின் வளாகத்திலேயே மற்றொரு கோயில் உள்ளது. அதன் பெயர் திருமீயச்சூர் இளங்கோயில். இவ்வாறாக கோயிலுக்குள் கோயிலுக்குள் உள்ள பெருமையைப் பெற்ற இக்கோயிலில் அம்பாள் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மற்றொரு சிறப்பு கருவறையைச் சுற்றிவரும்போது அங்கு காணப்படுகின்ற கங்காதரர் சிற்பம். விக்கிப்பீடியாவில் இக்கோயிலைப் பற்றிய பதிவில், நான் எடுத்துள்ள படங்களை இணைத்துள்ளேன்.திருமீயச்சூர் மேகநாதர் கோயில் என்ற பக்கத்தினைச் சொடுக்கி அவற்றைக் காணலாம்.

    ReplyDelete
    Replies
    1. லலிதாம்பிகை கோவில் என்பதாலேயே பார்க்கப் போனோம் விக்கி பீடியாவையும் பார்க்கவேண்டும்

      Delete
  8. அருமையான நினைவுகள் சார். அந்தப் பகுதியில் உள்ள பல சிவன் கோயில்களுக்குச் சென்ற போது இது விடுபட்டுப் போனது.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்வது நானே அனுஷ்டிக்க வில்லையே plan your work and work your plan

      Delete
  9. இத்தனை நினைவு வைத்துக் கொண்டு உங்களின் நல்ல அனுபவங்களைப் பதிவிடுகிறீர்களே அதுவே பெரிய விஷயம்தான் சார்.

    திருமியச்சூர் சென்றதில்லை. இந்த ஸ்லோகம் பற்றி கொஞ்சம் தெரியும். பலரும் பேசுவதைக் கேட்கும் போது அக்கோயிலைப் பார்க்கும் ஆசை தோன்றுகிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அங்கிருந்தவர் கொடுத்தது மிகச் சிறியதுதானே

      Delete
  10. பேரளத்துக்கு மிக அருகில்தான் திருமீயச்சூர் உள்ளது .

    ReplyDelete
  11. நான் நினைவில் இருந்து எழுதியது சரியா

    ReplyDelete